Re: [MinTamil] எது பக்தி?

323 views
Skip to first unread message

N. Kannan

unread,
Aug 24, 2009, 7:07:10 PM8/24/09
to mint...@googlegroups.com
என்ன இது கரிசல் காட்டில் பெய்த மழை மாதிரி!

ஒரே மடலில் சர்க்கரை மழை!

என்ன சொல்லுங்கள் ரங்கன். மனது இம்மாதிரி சத் விஷயங்களில் நிலைக்கவும்
கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் ஆழ்வார்கள், வியாக்கியானம்,
பக்தி என்றெல்லாம் சொற்களைப் போட்டவுடன் எப்போதும் பிளவுகளின் விரிசலில்
நர்த்தனம் புரியும் மனது மீண்டும் பிளவுகளை நோக்கியே ஓடத்தொடங்கிவிடும்.

ஆழ்வார் சொன்னால் என்ன? வாதவூரார் சொன்னால் என்ன? ரங்கன் சொன்னால் என்ன?
இல்லை வீட்டில் வளைய வரும் தன் மகளே சொன்னால் என்ன? `காதலாகிக் கண்ணீர்
மல்கி` என்பது மிக ஆழமான உளப்புரிதல் அல்லவா. மழை பெய்து விட்ட வானம்
போல் பின் தெளியும் அனுபவம் வந்தால் அன்றோ இது புரியும்.

அவன் அருளால் அவன் தாள் வணங்க, அவன் அருளுக்குக் காத்திருக்கும் சாதகப்பறவையாய்...


2009/8/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

> சரி  அப்படியே   ஒரு  நடை    ஆண்டாளிடம்   போனால்   'எற்றைக்கும்  ஏழ் ஏழ்
> பிறவிக்கும்   உன்தன்னோடு    உற்றோமே   ஆவோம்   உனக்கே    நாம்   ஆள்
> செய்வோம்.---  மற்றை   நம்   காமங்கள்    மாற்று'     'உன்தன்னோடு    உறவேல்
> நமக்கு  இங்கு   ஒழிக்க   ஒழியாது'    அது  என்ன    மற்றை  நம்   காமங்கள்?

devoo

unread,
Aug 24, 2009, 10:36:05 PM8/24/09
to மின்தமிழ்
Aug 25, 4:07 am, "N. Kannan"
> என்ன இது கரிசல் காட்டில் பெய்த மழை மாதிரி! //

ஆம், மரு பூமியில் மழை பெய்தாற்போல்தான்
இருக்கிறது. இந்த மழை நின்று விடக் கூடாது.
ஒழிவி்ல் காலமெல்லாம் ஓய்வின்றித் தொடர வேண்டும்.
திண்ணையின் ஓரத்தில் ஒண்டிக் கொள்கிறேன்.

தேவ்

N. Kannan

unread,
Aug 24, 2009, 11:55:11 PM8/24/09
to mint...@googlegroups.com
2009/8/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> பிள்ளைத்   திருநறையூர்   அரையரும்   அவருடைய     சிறு
> பிள்ளையும்    துருக்கப்   படையெடுப்பின்  போது    கர்ப்பகிரகத்தில்
> பெருமாள்  திருமேனிக்குக்     சூழும்  தீயின்    வெப்பம்   உறைக்காமல்
> இருக்கக்  கட்டிக்  கொண்டு   கிடக்கிறார்கள்.   இவர்களை
> சூறையாடுகிறது    நெருப்பு.    வேகிறது   உடல்.    அரையருக்கு    அந்தச்
> சிந்தனை  எல்லாம்  இல்லை.    பெருமாளின்  திருமேனிக்கு    நோகுமே!
> சிறுவன் என்ன  செய்வான்    பாவம்!     'நாயன்!      உடல்
> நோகிறதே!    தாங்கமுடியவில்லையே'  என்றானாம்.    அரையர்,    'குழந்தாய்,
> சற்றுப்  பொறுத்துக்  கொள்ளடா!    இதோ   விரஜா    நதிக்கு   சமீபத்தில்
> வந்துவிட்டோம்.   ஆற்றைத்   தாண்டினால்    வைகுந்தம்'
> .......அடப்போய்யா.....    இதல்லாம்   எழுத  முடியாது........
> இருந்தா    பக்தி   இருக்கணும்      ......   சும்மா
> வெத்துக்கு   எழுதிண்டு.......
> ஹரி    ஹரி   ஹரி


மெய்சிலிர்க்கிறது!
அது என்ன நிலை?

காக்கும் தெய்வம் கண்ணன் எனில் அத்தெய்வத்தைக் காக்கும் இத்தெய்வங்களை
பற்றி எப்படி எழுத முடியும்?

நரகங்களைப் பற்றி நமக்கு நிறையவே தெரிகிறது. இழை, இழையாய் எழுதுவோம்.
ஆனால் இந்நிலை பற்றி..பேசக்கூட துணிவில்லை என்பதுதானே நம் நிலை?

திருவரங்கன் உலா என்றொருவர் (வேணுகோபாலன்) நாவல் எழுதினார். அதற்குப்பின்
இது பற்றிப் பேசக்கூட திராணி அற்று அல்லவோ எழுத்துலகம் நிற்கிறது.
”எழுத்தை தவம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்” எனும் ரெ.காவின் கூற்று இங்கு
சரியாகப் பொறுந்துகிறது. எத்தவம் பெற்றால் இதை உய்த்துணர முடியும்?

“சிறுவன் என்ன செய்வான் பாவம்! 'நாயன்! உடல் நோகிறதே!
தாங்கமுடியவில்லையே' என்றானாம். அரையர், 'குழந்தாய், சற்றுப்
பொறுத்துக் கொள்ளடா! இதோ விரஜா நதிக்கு சமீபத்தில்
வந்துவிட்டோம். ஆற்றைத் தாண்டினால் வைகுந்தம்”

கொஞ்சம் கிட்ட வருகிறார் வெள்ளிவிழா (தங்க?) நாயகர் கமல், தம் தசாவதாரம் படத்தில்!

பாரதி கூட கிட்டத்தான் வருகிறான்..

நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்.

ஆனால் அது தேசியம் குறித்தது. தேசியம் பற்றிய கருத்தாக்கம் சுதந்திர
இந்தியாவில் இழுபடுகிறது. ஆனால், நம்பற்குரிய அரையர்கள்
இருந்திருக்கின்றனர்! தம் நல்லுயிர் ஈந்து அரங்கனைக் காத்திருக்கின்றனர்.
அரங்கனைக் காத்தால் அவன் நம்மைக் காப்பான் எனும் திடபக்தியில்.

ஜோசப் கேம்பல் பேசுவார், `விட்டில் தீபத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது.
ஒரு நொடி! சட்டச்சடசட! விட்டில் எரிபட்டுப் பொசுங்கும் காட்சி. விட்டில்
தீபமாகிவிடுகிறது!` என்று.

ஏதோ ஒருவகையில் பென்னேஸ்வரனின் தேடலுக்கும் இம்மடலில் பதில் இருப்பதாகப்
படுகிறது. எங்கென்று துழாவினால் வேதாந்த விசாரம் தொடங்கும்!

தேவ் சொல்வது போல் `ஒழிவி்ல் காலமெல்லாம் ஓய்வின்றித் தொடர வேண்டும்`.

தேவர்' கட்டளை கடத்தற் கரிதே!!

க.>

>
> (  ' தேவர்'   கட்டளை   கடத்தற்  கரிதே )
> >
>

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Innamburan Innamburan

unread,
Aug 25, 2009, 12:03:52 AM8/25/09
to mint...@googlegroups.com
"இல்லை வீட்டில் வளைய வரும் தன் மகளே சொன்னால் என்ன?"

இது மிக நுட்பமான கேள்வி. அப்படி தானே மாலை சூட்டிக்கொண்டு, பெருமாளுக்கு அழகு சேர்த்தாள், கோதாப்பிராட்டி. பக்தி உள்ளத்தில் பெருகும் வெள்ளம். அந்த பிரவாகத்தை கட்ட அணை உண்டோ? அல்லது, "பண்டையுணர்வு மூண்டெழ...ஆளுடைய பிள்ளைக்கு, துணைமுலைகள் பொழிகின்ற பாலடிசலை பொன் வள்ளத்து ஊட்டின.." ஜகன்மாதாவை சொல்லவா? அல்லது குணங்குடியாரின் 'மோனமவுன மூடிவைத்த பெட்டகத்தை' சொல்லூவதா?

இன்னம்பூரான்

2009/8/25 devoo <rde...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Aug 25, 2009, 4:24:27 AM8/25/09
to mint...@googlegroups.com
ஆஹா
 
என் அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே

 

6.            பக்தி     

 

பாமாவுக்கும் ருக்மணிக்கும் போட்டியொன்று

முளைத்தது -பக்தியில் சிறந்தவள் யாரென்று

தலைகேறிய கர்வம் தடுமாறும் மனது

கண்ணன் முன் நின்றார் இருவருமே-

யார் என்று

 

நமுட்டுச் சிரிப்புடனே மாயக் கண்ணனவன்

கனமான கர்வத்தை எளிதாக்க எண்ணம் கொண்டு, கற்பனைத் தலைவலியால் துடி துடித்தான்,தாளமுடியதது போல் நடித்தான்

 

மறையோதும் முனிவரவர் கண்டுகொண்டார்

மறை பொருளின் மனப் பொருளை

தானும் கண்ணனுக்குத் துணையாக

நடிக்கத்தான் திட்டமிட்டார்

 

தலைவன் கண்ணனவன் தலவலி தீரவேண்டி

தாரம் இருவருமே கலங்கி நின்றார்

கண்ணனுக்காய் -வலி தீர வழி கேட்டு

மயங்கி நின்றார் மன்னனுக்காய்

 

தீராத் தலைவலி தீரவேண்டி தரமான

மருந்தொன்று  சொல்லிவைத்தார்-முனிவருமே

தருக்கில்லா மாந்தரவர் தன் தாள் கொண்ட

பாத தூளி கண்னன் தலை மேலே

 

பற்றாய்ப் போட்டால் தாங்கவொண்ணாத்

தலைவலி தானே மறையும் என்றார்

தாரமவர் மனவலியும் தானே குறையும்

என்றார்- யார் தயார்  ?

 

பதறிப் போனார் அனைவருமே அபசாரம்

அபசாரம் க்ருஷ்னனவன் தலைமேலே

பாத தூளி  அபசாரமென்ரெண்ணி

தர மறுத்தார் தாரமவர்

 

அபசாரம் செய்வதனால் அன்பனவன்

தலைவலி தீருமென்றால் -உபசாரம்

தேவை இல்லை -தான் தருவேன்

தன் பாத தூளி என்று சொல்லி

 

தன் பாவம் சேர்ந்தாலும் பரவாயில்லை

கண்ணனின் தலைவலி இனி இல்லை

அது போதும்  என்று சொல்லி

அன்பாய்த் தடவி விட்டாள் தன் பாத தூளி

அன்போடு பரவி விட்டாள் கண்ணனின்

தலை மேலே ருக்குமணி

 

கண்ணன் திரும்பிப் பார்த்தான்

தலை குனிந்தார் தேவியர் இருவருமே

 

 

அன்புடன்

தமிழ்த்தேனீ

 
 
 
 
 
 
 
 


 

Geetha Sambasivam

unread,
Aug 25, 2009, 5:02:18 AM8/25/09
to mint...@googlegroups.com

அன்போடு பரவி விட்டாள் கண்ணனின்

தலை மேலே ருக்குமணி//

ராதைனு வந்திருக்கணுமோ???


2009/8/25 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Aug 25, 2009, 2:09:15 PM8/25/09
to mint...@googlegroups.com
அறிவைப்  பூரணமாக   உள்வாங்கியது   பக்தி  என்பது  என்று   நமக்குப்  புரியத்   தொடங்குகிறதோ   அன்று   நமக்குக்  கிழக்கு  வெளுத்தது  என்று  பொருள்.
 
இதைவிட பக்திக்கு பொருள் யாராலும் சொல்ல முடியாது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
On 8/25/09, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:
>அரங்கனைக் காத்தால் அவன் நம்மைக் காப்பான் எனும் திடபக்தியில். < 
 
அரங்கனைக்  காப்பதா?  ...  இல்லை ..
இல்லை   கண்ணன்    நமக்கு    பக்தி   புரியாது.   வியாபாரம்    லவலேசம்   இருந்தாலும்    பக்தி    புதிர்தான்.  ஏதோ  படித்தரங்கள்  எல்லாம்  சொல்கிறார்கள்.    சும்மா ஏமாற்று.   எனக்குக்  கூட   கத்த  வேண்டும்  போல்  தோன்றுகிறது.    அரையரைப்  பார்த்து,   ஏனய்யா?   அறிவிருக்கிறதா?    நீதான்   ஏதோ   பைத்தியமா   நடந்துக்கறன்னா   அது   சின்ன  குழந்தையா?   அதை  ஏன்யா   போயி...? 
ஒரு  சமயம்    கண்முன்  தெரியாத   கோபம்  பொங்குகிறது.    அடுத்த   கணம்   அழுகிறேன்.........  என்ன  உத்திரவாதம்   கண்ணன்?   ஆற்றைத்  தாண்டினால்   வைகுந்தமாம்.    சற்றுப்  பொறுத்துக்  கொள்.
மடையர்கள்  என்று  திட்டுகிறீர்களா   இவர்களை?   ஐயோ எனக்கு   ஒரே  குஷி.  இது எல்லாம்  மூடநம்பிக்கைன்னு    ஜட்ஜ்மண்ட்   பாஸ்  பண்றேங்களா?    குஷி.   ஆனா   ஒன்றை  மாத்திரம்  எனக்குச்  சொல்லி விடுங்கள்.   அவர்கள்  அந்தக்  கணத்தில்,   அழிவு   சிறுகச்  சிறுக  அவர்களைத்  தின்ற  அந்தக்  கணத்தில்   அப்பனும்  பிள்ளையுமாக  என்னத்தையா   பார்த்துத்  தொலைத்தார்கள்?   அரங்கன்  காப்பத்துவான்னா?    அட   போய்யா!    ஆத்துல  உட்கார்ந்துண்டு     தச்சி  மம்மு   சாட்டுண்டு   பேசிண்ட்ருக்காங்கன்னு   நினைச்சீங்களா?   சுற்றிலும்  தீ   விக்ரகத்தை  எட்டும்   நாக்குகள்   இவர்களின்  உடல்  கவசத்தைப்  பற்றுகிறது.   இந்த  விபத்து   உங்களுக்கு   கோரமாகப்  படலாம்.  ஆனால்   அதைத்  தாண்டி    அவர்கள்   பார்த்தது  என்னைப்  படுகுலையாக   உலுக்குகிறது.   ஒருவருடைய    மரணத்தின்   கோரத்தை  வைத்து   நம்பிக்கையை   வளர்க்க  முயலாது   சநாதனம்.   எனவேதான்    இந்த   நிகழ்வுகளைப்  பதிந்ததற்கு  மேல்    இதைப்  பற்றி   எதுவும்   தத்துவ   ரீதியாகப்  பெரிது  பெரிதுபடுத்துவதில்லை   ஸ்ரீவைஷ்ணவ  சம்ப்ரதாயம்.   காரணம்   அவர்கள்  பக்தியின்  உலகில்  வாழ்ந்தார்கள்.   ஆனால்   நாம்   பக்தி  என்ற  பெயரில்   மிஞ்சிப்  போனால்   நம்பிக்கையை   வளர்ப்போம்.   அது  யாராவது ஏதாவது  கேள்வி  கேட்டால்   உடனே   சொத்தென்று  உட்கார்ந்துவிடும்.    உடனே    அடுத்த   கேள்விக்கும்   கேள்வி  கேட்பவரைக் கண்டும்   பயப்பட   ஆரம்பித்து  விடுவோம்.    கேள்வி  கேட்காத     ஒத்துப்  போகின்ற     சமத்தான   ஆட்களாகப்  பார்த்து   சத்சங்கம்  என்ற  பெயரில்   குதுகுதுன்னு   நமக்குள்   பேசிக்  கொள்வோம்.   இதுதான்   நாம்  முக்கி  முக்கி   அடையும்  பக்தி,  நம்மைப்  பொறுத்தவரை.   
 
அறிவைப்  பூரணமாக   உள்வாங்கியது   பக்தி  என்பது  என்று   நமக்குப்  புரியத்   தொடங்குகிறதோ   அன்று   நமக்குக்  கிழக்கு  வெளுத்தது  என்று  பொருள்.
 
அவர்கள்    பக்தியின்  உலகில்   வாழ்ந்தார்கள்  என்று  சொன்னேனே   எப்படி என்று    கேட்கிறீர்களா?   திருமலையில்   ஸ்ரீராமானுஜரின்   சீடர்   அநந்தாழ்வான்   நந்தவனம்   கைங்கரியம்   செய்துகொண்டு  இருந்தார்.    அவர்  பாட்டுக்குப்  போகிறவரை    ஒரு   சர்ப்பம்  தீண்டிவிட்டது.    அனைவரும்  அலறுகிறார்கள்.    ஸ்வாமி   ஸ்வாமி  என்று   அவரோ    நிச்சிந்தையாக    பகவத்  ஸ்மரணத்தில்    போகிறார்.     அலறல்  உரைத்ததும்    நின்று என்ன  என்று  கேட்கிறார்.     அய்யோ   அங்கு  பாரும்    உம்மை   அரவம்  தீண்டிவிட்டது.   உடனே   வைத்தியம்  பார்க்கவேண்டும்.    வாரும்.   சீக்கிரம்.   கிளம்புங்கள்.  
 
அதற்கு  நேரமில்லை.   திருவேங்கடமுடையான்    கைங்கரியமாகச்  செல்கிறேன்.    கடித்த  பாம்பு   விஷம்   மிக்கதாகில்    விரஜா  நதியில்   தீர்த்தமாடி   வைகுந்த  நாதனை  ஸேவிக்கிறேன்.   கடியுண்ட   பாம்பு   விஷம்  மிக்கதாகில்    திருக்கோனேரி  தீர்த்தத்தில்   தீர்த்தமாடி   திருவேங்கடமுடையானை   ஸேவிக்கிறேன்.  என்று  சொல்லிவிட்டு    போய்க்கொண்டே    இருக்கிறார்.    நமது   அளவுகோல்கள்,   கட்சிகட்டல்கள்,    பூஜை   புனஸ்காரம்,   அறிவுத்  தீவிரம்,  படிப்பு,  உளவியலைப்  பற்றிய   ஆழ்  ஆய்வு  எல்லாம்  அப்படி   ஓரமாக    விக்கித்துப்   போய்     பார்த்தபடி  இருக்கின்றன,    மிதியுண்ட     பாம்பு  போல்   நினைவிழந்து!!!    தயவு  செய்து  சொல்லுங்கள்   எது   பக்தி?   ஏதாவது    உங்களுக்குப்  புரிகிறதா?  என்னைக்  கேட்காதீர்கள் எனக்குத்  தெரியாது. 
 
ஸ்ரீரங்கம்  வி  மோகனரங்கன்
 


 
2009/8/25 N. Kannan <navan...@gmail.com>

ஆனால் அது தேசியம் குறித்தது. தேசியம் பற்றிய கருத்தாக்கம் சுதந்திர
இந்தியாவில் இழுபடுகிறது. ஆனால், நம்பற்குரிய அரையர்கள்
இருந்திருக்கின்றனர்! தம் நல்லுயிர் ஈந்து அரங்கனைக் காத்திருக்கின்றனர்.
அரங்கனைக் காத்தால் அவன் நம்மைக் காப்பான் எனும் திடபக்தியில்.

ஜோசப் கேம்பல் பேசுவார், `விட்டில் தீபத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது.
ஒரு நொடி! சட்டச்சடசட! விட்டில் எரிபட்டுப் பொசுங்கும் காட்சி. விட்டில்
தீபமாகிவிடுகிறது!` என்று.

N. Kannan

unread,
Aug 25, 2009, 7:06:09 PM8/25/09
to mint...@googlegroups.com
2009/8/26 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

>>அரங்கனைக் காத்தால் அவன் நம்மைக் காப்பான் எனும் திடபக்தியில். <
>
> அரங்கனைக்  காப்பதா?  ...  இல்லை ..
> இல்லை   கண்ணன்    நமக்கு    பக்தி   புரியாது.   வியாபாரம்    லவலேசம்
> இருந்தாலும்    பக்தி    புதிர்தான்.  ஏதோ  படித்தரங்கள்  எல்லாம்
> சொல்கிறார்கள்.    சும்மா ஏமாற்று.   எனக்குக்  கூட   கத்த  வேண்டும்  போல்
> தோன்றுகிறது.    அரையரைப்  பார்த்து,   ஏனய்யா?   அறிவிருக்கிறதா?
> நீதான்   ஏதோ   பைத்தியமா   நடந்துக்கறன்னா   அது   சின்ன  குழந்தையா?   அதை
> ஏன்யா   போயி...?

அரங்கன்:

நீங்கள் அறியாதது அல்ல. மனித ஜீவிதம் அறிவு, உணர்வு இரண்டும் கலந்தது.
நீங்கள் சொல்லும் காட்சியில் உணர்ச்சி அதிகம். அறிவை உள்வாங்கி பக்தி
நிற்பது என்பதற்குப் பதில் அறிவு நிற்கிறது என்றே சொல்லிவிடலாம். அறிவு
பக்தியைப் புரிந்து கொண்டது போல் காட்டுகிறது என்று பாசாங்கு
வேண்டுமானால் செய்யலாம். ஆனால் உண்மையில் முடியாது. இரண்டில் ஒன்றுதான்
நிற்க முடியும். இதுவொரு Quantum state. As the electrons exist either
as wave or particle. ஏதாவது ஒன்று இருக்கும் போது ஒன்றிருப்பதில்லை.

நீங்கள் சொல்லும் காட்சி எல்லா சமயங்களிலும் உண்டு. Holy Grail கதைகள்
வாசித்தால் புரியும். உயிர் ஒரு பொருட்டே இல்லை ரங்கன். இல்லையெனில்
ஜிகாத் எப்படி செயல்படுகிறது. ஈழம் சமரில் சுயக்கொலை எப்படி
சாத்தியப்பட்டது? கொள்கை! கொண்ட கொள்கை! ஒருவகையில் அறிவு வென்றுவிட்டது
என்று உங்களைப் போன்ற அறிவுஜீவிகள் ஆனந்தப்படலாம். ஏனெனில் கொள்கைகளை
உருவாக்குவது அறிவுதான். அதை உணர்வின் மீது எட்டுக்கட்டி ஏவி விடுகிறது
;-)

அறிவியலாருக்கு இன்னும் புரியாத புதிர் என்னவெனில், தெருவில் ஓடும்
குழந்தையைக் காக்க எந்த உறவும் இல்லாத ஒரு நடைப்பயணி தன் உயிரைப் பணயம்
வைத்துப் பாய்வதேன்? என்பதே! ஒருபுறம் ஜீவிதத்தை நடத்துவது selfish gene
என்று சொல்லுவார்கள். இன்னொருபுறம் இப்படியான தயாளகுணம் மனிதனுக்குள்
ஒளிந்து கொண்டு தன்னுயிர் ஈந்தும் கொடியினைக் காக்கும்
மாண்பு...இருக்கிறது. நீங்கள் புரியவில்லை என்று சொன்னதே சரி.

அங்கு அரையருக்கு என்ன காட்சி என்று யார் கண்டது? அவர் கொண்ட கொள்கைதான்
நின்றதா? இல்லை வேறேதும் கண்டாரா? மரணம் துச்சம் ரங்கன். வீரபாண்டிய
கட்டபொம்மன் வசனத்தில் வருவது போல், `மரணத்திற்குப் பயந்தவரே
உட்காருங்கள்!` என்று உட்கார வைத்து பக்தி பற்றி லெக்சர் அடிக்கலாம்.
சத்சங்கம் போயிருக்கிறீர்களா? அங்கு அவர்கள் காணும் காட்சியை அறிவு
முழுதாய் உள்வாங்கிக்கொள்ளுமா?

ஜோசப் கேம்பல்தான் மீண்டும் நினைவிற்கு வருகிறார். விட்டிலும், தீபமும்!

அத்வைதம் என்பதே நிறை காட்சி.

க.>

N. Kannan

unread,
Aug 25, 2009, 9:48:29 PM8/25/09
to mint...@googlegroups.com
2009/8/26 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> எனக்குப்  புரியவில்லை  என்பதே  உண்மை.  சொல்லுங்கள்    கேட்கிறேன்.
>
>

ஹ.ஹ்.ஹா! சொன்னால் புரிந்துவிடுமா? என்ன!!

க.>

devoo

unread,
Aug 25, 2009, 10:01:00 PM8/25/09
to மின்தமிழ்
Aug 26, 6:23 am, srirangammohanarangan v
எனக்குப் புரியவில்லை என்பதே உண்மை. சொல்லுங்கள் கேட்கிறேன்.//

”மத் ஸேவாயாம் து நிர்குணா..” இது கண்ணனே கூறுவது.
அவனுக்குச் செய்யும் கைங்கர்யம் புதிய பரிமாணம் பெறுகிறது.
அது ஆரம்ப நிலையில் ஒரு சடங்குபோல் தோன்றும்; மூடநம்பிக்கை என்றும்
பொருள் கொள்வர்.பாதிப்புரிதல் ப்ரமிப்பை ஏற்படுத்தும்.மற்று
இருப்பவர்களுக்கு அறியலாகாது.அவனை மட்டுமே உணர்ந்து கொண்டால்
ஸாத்யம்தான்.கூப்பிடு தூரம்.
இல்லையெனில் ஸ்ரீபேரத்தைக் கட்டிக்கொண்டு மடுவில் குதிக்கத் தோன்றுமா ?

தேவ்

Venkatachalam Subramanian

unread,
Aug 26, 2009, 12:09:51 PM8/26/09
to mint...@googlegroups.com
ஓம்.
எள்ளுதான் எண்ணெய்க்காகக் காய்கிறது வெயிலில்; எலிப்பிழுக்கைக்கு என்னவந்தது?

இதுஒரு நாட்டுப்புறச் சொற்றொடர். முக்கியமான பணியாகிய எண்ணெயின்
தேவைக்காக எள் வெயிலில் காயும்போது அத்துடன் சேர்ந்து எலிப்பிழுக்கையும்
வெயிலில் உலரும்.

’எது பக்தி’ என அன்புடையோர், வல்லோர், நல்லோர் அனுபவத்துடன்
உரையாடிக்கொண்டிருக்கையில் திருவில்லிப் புத்தூரின் அன்னை ஆண்டாளின்
தகைமையில் ஆட்பட்டேன்.

(*) ஆண்டாள் திருவருள்புரியும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலின் முன்புறம்
உள்ளது ஒரு தீர்த்தம். கடுமையான பஞ்ச காலத்தில் கூட நீர் வற்றுவதில்லை.
இந்த நீர் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பது இன்றும் புரியாத புதிர்.

(*) ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயத்தில் ஆண்டாள் கருவறையிலேயே பெரியதிருவடி
(கருடன் விக்ரஹம்) இருப்பதைக் காணலாம். தன் திருமணத்திற்காகத் திருமாலை
விரைவாகச் சுமந்து வந்த கருடாழ்வாருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரை
மாப்பிள்ளைத் தோழனாக வீற்றிருக்கச் செய்துள்ளார் ஆண்டாள்.

(*) அன்னையின் கரத்தினில் ஒரு கிளியினைக் காணலாம். இது தினமும்
புதுப்பிக்கப்படும் கிளி.. ஆமாம! தினந்தோறும் இந்தக் கிளி
மாற்றப்படுகிறது. இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் ஆகிறது.
தினமும் இது பக்தர் யாருக்காவது பிரசாதமாக வாங்கப்படுகிறது.
அரங்கமன்னாருக்கும் தனக்கும் இடையில் தூது சென்ற, கிளிமுகம் கொண்ட
சுகப்பிரும்ம மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று, இவ்வாறு, ஆண்டாள் தினமும்
கிளியைத் தரிக்கிறார்.

(*) தான் சூடிக்கொண்ட மாலையுடன் ஆண்டாள் தினமும் அங்குள்ள கிணற்று நீரில்
தன் பிம்பத்தைப் பார்த்துக் கொள்வது வழக்கம். அதனால் அக்கிணறு கண்ணாடிக்
கிணறு என்று வழங்கப்படுகிறது.

(*) உற்சவ காலங்களில் ஆண்டாளுக்குச் சாற்றுவதற்கென அபூர்வமான தைலம்
தயாரிக்கப்படுகிறது. நல்லெண்ணெய், நெல்லிக்காய் உட்பட அறுபது மூலிகைகளைக்
கொண்டு தயாரிக்கப்படும் இந்தத் தைலம் அன்னைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு
பக்தர்களுக்கும் வினியோகிக்கப்பட்டு அனைத்து நோய்களையும் தீர்க்கும்
அருமருந்தாய் போற்றப்படுகிறது.

(*) தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராகத் திகழ்கிறது ஆண்டாள் அன்னையின்
திருத்தேர். நுணுக்கமான வேலைப் பாடுகள் கொண்ட இத்தேரில் இராமாயண, மஹா
பாரதக் காட்சிகளும், பல்வேறு தேவதைகளின் திருவுருவங்களும் இடம்
பெற்றிருக்கின்றன.
ஆடிப்பூரத் திருவிழாவில் அரங்கமன்னாரோடு தேரில் உலாவரும் ஸ்ரீ ஆண்டாள்,
தேர் நிலையை அடைந்ததும் கோயில் முகப்பில் உள்ள சிங்கம்மாள்
குறட்டுக்கும், பின்னர் திருப்பூர் மண்டபத்துக்கும் தன் நாதனோடு
எழுந்தருளி திருமஞ்சனம், திருவாராதனம் ஏற்கிறார்.

(*) பங்குனி உத்திரத் திருவிழாவின் ஐந்தாம் நாள் ஸ்ரீவில்லிப்புத்தூரில்
பஞ்ச கருட சேவை நடைபெறுகிறது. ஆண்டாளை மணம்கொள்ள வடபத்ரசயனர்,
திருத்தங்கல் அப்பன், சுந்தரராஜர், ஸ்ரீநிவாசன் மற்றும் அரங்க மன்னார்
ஐவரும் தனித்தனியே கருடன் மீது ஆரோகணித்து வந்ததாக ஐதீகம்.

ஆனால், முதலில் வரும் அரங்கமன்னார் என்னும் அரங்கநாதனையே அன்ன வாகனத்தில்
வரும் ஆண்டாள் மணமுடிக்கிறார். ஆண்டாளை மணம் முடிக்கவருபவர்களை
பெரியாழ்வார் உபசாரம் செய்யும் விழாவே பஞ்ச கருட சேவை. ஏழாம் நாளன்று
ஸ்ரீ ஆண்டாளின் மடியில் தலைவைத்து அரங்கமன்னார் கொள்ளும் சயனத்
திருக்கோலம் தரிசிக்கப்படவேண்டிய கண்கொளாக் காட்சியாகும்.

(*) பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் தினமும் இரவில் வடை, தேன்குழல்,
அப்பம்,புட்டு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பால் என்று ஏழுவிதமான
நிவேதனங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இவற்றை அரவணைப் பிரசாதம் என்று
அழைக்கிறார்கள்.

(*) ஸ்ரீ கள்ளழகர் வைகையில் இறங்கும் சித்திரா பௌர்ணமி விழாவுக்கு ஸ்ரீ
ஆண்டாள் திருக்கோயிலிலிருந்து திருக்குடையும், வைஜயந்திமாலையும்
வருடந்தோறும் அளிக்கப்படுகின்றன.
-=-=-=
ஓம். வெ.சுப்பிரமணியன்

2009/8/26 devoo <rde...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Aug 26, 2009, 2:54:53 PM8/26/09
to mint...@googlegroups.com
திரு  ஓம் சுப்ரமணியம் அவர்களே
 
எங்கள்  ஆண்டாள் கோயில் பற்றியும்,
எங்கள் ஸ்ரீவில்லி புத்தூர் பற்றியும்
 
கூறியதற்கு நன்றி
 
எள்ளு எண்ணெய்க்காய் காயும்
 
அந்த எள்ளலிருந்து எண்ணெய் இறக்கியவுடன்
 
அந்தச் சக்கைக்கு  புழுக்கை என்று பெயர்
 
அந்தப் புழுக்கை  புண்ணாக்கு ஆக்க வெய்யிலில் காயவைப்பார்கள்
 
அதனால் எள்ளூம் காயலாம்
 
புழுக்கையும் காயலாம்
 
 காய்கிறதுதான்  காய்கிறோம்
 
ஆண்டாள் பிறந்த மண்ணில் காய்ந்தால் பேறுதானே
 
 
புழுக்கையும் காயுமே
 
வழுக்கையும் காயுமே
 
இழுக்கைக் களைய
 
அழுக்கைக் களைய
 
எண்ணெயையாய் மாறி ஆண்டாள் கோயிலின் திருவிளக்கில்
 
தீபம் எரிய  விளக்கிலும் காயுமே
கொடுப்பினை இருந்தால்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 
 
 
 


 

Venkatachalam Subramanian

unread,
Aug 26, 2009, 10:10:26 PM8/26/09
to mint...@googlegroups.com
ஓம்.
எலிப்பிழுக்கை என்று என்னை எண்ணியிருந்தேன்.
அதைத் தைலப் புழுக்கையாக மாற்றித் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
வழுக்கை என்பது கொப்பரைத் தேங்காயையா?

ஓம்.
வெ.சுப்பிரமணியன்

2009/8/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Aug 27, 2009, 3:58:13 AM8/27/09
to mint...@googlegroups.com
ஆமாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

N. Kannan

unread,
Aug 27, 2009, 5:17:24 AM8/27/09
to mint...@googlegroups.com
பெரியோர் அடக்கத்துடன் அப்படிச் சொன்னாலும்
எம்மைப் போன்றோர் (தேனீயாரையும் சேர்த்து) அதில் ஆழ்பொருள் காண்போம் ;-)

நிறையச் சொல்லுங்கள்.

பக்தி என்பது மனப்பக்குவமே!

மனம் கனியும் போது கல்லும் பேசும்.
அதுவரை அதுவும் கல்! இவனும் கல்!

க.>

2009/8/27 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>:

N. Kannan

unread,
Aug 28, 2009, 8:20:04 PM8/28/09
to mint...@googlegroups.com
2009/8/27 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> கண்ணன்   நலம்தானே?

அரங்கன் நலம்தானே?
சபையில் இன்னும் சில பேர் உட்கார்ந்து இருக்கின்றனர். ஆண்டவன் கட்டளையைக் கேட்க ;-)

devoo

unread,
Aug 28, 2009, 10:36:06 PM8/28/09
to மின்தமிழ்
ப்ராக்ருத விஷயங்கள் சற்றே தாமதமானாலும் சலிப்பைத் தரும்.
பகவத் விஷயத்திற்காகச் சாதகம்போல் காத்திருப்பதும் ஒரு ஸுகாநுபவம்.
அதையும் ஓர் ஆநுஷங்கிக ஸுக்ருதமாக்கி மடிமாங்காயிட்டுக் கொள்ளுவன் பரம
க்ருபாளுவான எம்பெருமான்.

அடியேன் கூறுவதில் பிழையுண்டோ ?

தேவ்

N. Kannan

unread,
Aug 28, 2009, 10:40:53 PM8/28/09
to mint...@googlegroups.com
தேவ்:

இந்த வேங்கடேஷ் திருவாய்மொழிக்காக நெடும் காலம் நிற்க வைத்துவிட்டாரே!

அவன் நிற்கிறான் என்றான், அவனுக்கு பலமிருக்கு!

நமக்கேது ஸ்வாமி பலம்? ஆலாய் பாயும் மனதிற்கு அமுதன்ன சொற்களன்றோ மாமருந்து!

அரங்கரும், வேங்கடவரும் விரைவில் பிரசன்னமாக!

க.>

2009/8/29 devoo <rde...@gmail.com>:

karth...@gmail.com

unread,
Aug 28, 2009, 11:06:29 PM8/28/09
to மின்தமிழ்
இன்றைக்குத்தான் இதனைப் படித்தேன். இந்தக் கீழ்க்காணும்
பத்தியில் நீங்கள் என மனநிலையைப் பிரதிபலிக்கிறீர்கள்.
கேள்வி என்பது ஒரு நிலைக்குமேல் "எரிச்சல்" படுத்திவிடுகிறது
அல்லவா? அப்போது பட்டென்று தலையில் தட்டி உட்கார
வைக்கத்தான் முடிகிறது. நான் receiving end-இல் இருந்து வாங்கிக்
கட்டிக் கொண்டிருக்கிறேன்.

ரெ.கா.


On Aug 26, 1:57 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> ஆனால் நாம் பக்தி என்ற பெயரில் மிஞ்சிப் போனால்


> நம்பிக்கையை வளர்ப்போம். அது யாராவது ஏதாவது கேள்வி கேட்டால் உடனே

> சொத்தென்று உட்கார்ந்துவிடும். உடனே அடுத்த கேள்விக்கும் கேள்வி


> கேட்பவரைக் கண்டும் பயப்பட ஆரம்பித்து விடுவோம். கேள்வி கேட்காத

> ஒத்துப் போகின்ற சமத்தான ஆட்களாகப் பார்த்து சத்சங்கம் என்ற
> பெயரில் குதுகுதுன்னு நமக்குள் பேசிக் கொள்வோம். இதுதான் நாம்
> முக்கி முக்கி அடையும் பக்தி, நம்மைப் பொறுத்தவரை.
>


Tthamizth Tthenee

unread,
Aug 29, 2009, 10:20:57 AM8/29/09
to mint...@googlegroups.com
என்ன   பக்தி  என்பது   புரிகிறதா ?    புரியவில்லையென்றால்    கவலைப்  படாதீர்கள்.   நீங்க   நம்ம   ஸெட்டு.  
 
இங்கதான்  ரங்கன்  பரிமளரங்கன் ஆகிறார்
 
முத்திரை பதிப்பது  நித்திரை கொள்ளும் அரங்கனுக்கு
 
ஸ்வபாவம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
On 8/29/09, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:
எனக்குப்  புரியவில்லை.  புரிந்தவர்  சொல்லுங்கள்   என்று  ஒதுங்கினால்   கண்ணனும்  தேவும்   விடுவதாக  இல்லை.   கண்ணன் ஏதோ  சொல்லப்  போகிறார்   என்று  பார்த்தால்   நீ ஏன்  நிறுத்திவிட்டாய் என்று   நம்மைச்  சாடுகிறார்.   அதெல்லாம்   இல்லை.   தொடர்வதற்கான   திருக்குறிப்பு   இப்பொழுதான்    தென்பட்டது.    செல்லும்வரை  செல்க.
 
 
ரெ கா  வேறு  வந்துவிட்டாரா?   பின்  அனைவரின்  உற்சாகத்திற்கும்    குறை  இருக்காது.
 
பக்தி என்பது என்ன  என்று என்னால்   சொல்ல  முடியுமா  தெரியவில்லை.     ஆனால்   அது என்ன  இல்லை  என்பது    எனக்கு    வெட்ட  வெளிச்சமாகத்   தெரிந்த   ஒன்று.     நிச்சயம்    அது   உணர்ச்சிகள்    அன்று.   பக்திக்கான   அத்தனை   புற   சேஷ்டைகளும்   உணர்ச்சிகளுக்கும்   ஏற்படலாம்.    ஆனால்  எத்தனைதான்   உணர்ச்சிகளைக்  கொட்டிக்  கவிழ்த்தாலும்   அந்தப்  பெருக்கம்   உள்ளே   அந்தர்முகத்தில்    பக்தி  என்ற   நிலையாகப்  பரிணமிக்காது.
 
நாம்  சொல்லிக்கொண்டிருந்த   விஷயத்தையே  எடுத்துக்  கொண்டால்    ஆத்மஹத்தி,   அதன்   முகாந்தரமாக  எழும்   உணர்ச்சிகள்    பக்திக்கு  எந்த  விதத்திலும்   சம்பந்தமற்றது.    தீக்குளிப்பவர்கள்   கூட  அல்ப  காரணங்களுக்கு   பொசுக்கென்று   எரிந்து  விடும்  போது   இந்த   மாதிரி  புற   நிகழ்குலைவுகள்   பக்திக்குப்  பதிலாக   நம்  கவனத்தில்  இடம்  பெற்றுவிடும்  அபாயம்  உண்டு.  எனவேதான்    பூர்வாசாரியர்கள்    மிகக்  கவனமாக   இந்த    மாதிரி  நிகழ்வுகளை   வைத்து    எந்தக்   கருத்தமைப்பும்  உருவாக்குவதில்லை.    அதனால்தான்    நான்  கூறியது,  'அறிவைப்   பூரணமாக   உள்வாங்கியது   பக்தி என்று    புரியாதவரை    நாம்   அரிச்சுவடியைக்   கூட   அறியாதவர்களே'  என்று.   அறிவுக்கும்   பக்திக்கும்    எட்டாம்   பொருத்தம்   ஆயிற்றே  எப்படி   அறிவை   பக்தி   உள்வாங்கும்,   அதுவும்   முழுக்க  உள்வாங்கும்  என்றெல்லாம்   எண்ணங்கள்  எழும்.   நீங்களும்    தியானம்  செய்யுங்கள்    அந்த எண்ணங்கள்  மீது.   நானும்    சற்று   கடந்த  பின்னர்     பதில்   அளிக்கின்றேன்.    ஆனால்   இங்கும்   ஒன்று    அறிவுக்குச்  சம்பந்தப்  படாதது,  எதிரானது   பக்தி  என்று  சொல்வது    சுத்த  அபத்தம் என்பதில்   எனக்கு  எள்ளளவும்    சந்தேகம்    இல்லை.   ஆனால்    நேர்முகமாக   அது என்ன   என்று  சொல்வதில்தான்    அதன்  பரப்பையெல்லாம்  உள்வாங்கி  உரைக்க   சட்டென்று  முடிவதில்லை.   அவ்வாறு  அறிவுக்கு எதிராக    பக்தி என்று    கூறிக்கொள்வதெல்லாம்     மக்கள்   தாமே  வளர்த்துக்கொண்ட   ஏதோ  நம்பிக்கைகள்,   உணர்ச்சிகள்   இவைகளைத்தாம்.   நம்பிக்கைகள்   உணர்ச்சிகள்    இவைகளுக்கும்   பக்திக்கும்    சிறிதும்  சம்பந்தம்  இல்லை.   இது எனக்குக்  கையிலங்கு   நெல்லிக்கனி.    சரி   அதுதான் என்ன  என்று   கேட்டால்    ப  ப  ப என்று  தடவ   வேண்டியிருக்கிறது.    பரமஹம்ஸராகவோ,   பராங்குசராகவோ,   பூர்வாசாரியராகவோ    இருந்து   தொலைத்திருந்தால்  பரவாயில்லை.    பாமரனாய்    இருந்துகொண்டு    பாதி   புரிந்து   பாதி  புரியாத    அவஸ்தை.   அமைதியாக  இருந்து    கௌரவத்தைக்   காப்பாத்திக்  கொள்ளலாம் என்று    பார்த்தால்   அது  பொறுக்கவில்லை  சில  புண்ணியவான்களுக்கு.  
 
இந்த   பக்திதான்  எப்பொழுது  ஏற்படும்?    நாம்     நமக்குக்   கைகண்ட    'நிகழ்வுகளை   ஊடுருவிப்  புரிந்து  கொள்ள  முயலுதல்'   என்ற   அரைகுறை    வழியிலேயே   செல்வோம்.  
 
ஒரு   பல்லக்கு.    ஸ்ரீமான்     ஒருவர்   அமர்ந்து   செல்கிறார்.    தெருவில்    ஒரு  காட்சி.   ஒருவன்  வீட்டு   வாசலில்   கிடந்து   காக்கும்   நாயை    மற்றொருவன்    கொன்றுவிட்டான்.   நாய்க்கு  உரியவன்   அவனைக்   கொன்றான்.    பின்பு    கொலையில்  முடிந்த   தன்  செய்கை  தனக்கு   தண்டனை   வாங்கித்தராமல்    போகாது  என்ற  உணர்வு  வர   தானும்  தன்னைக்   கொன்று  உயிர்  முடிந்தான்.    ஒரு   அரைமணி   நேரம்   நிகழ்ச்சி   நடந்திருக்கலாம்.   பார்த்துவிட்டு    'ச்சொ  ச்சொ' என்று  சொல்லியபடி    போயிருக்கலாம்.   ஆனால்   பல்லக்கு    ஸ்ரீமான்     தன்னுணர்த்தியில்    வேறு எங்கோ   போய்விட்டார்.
 
ஒரு     க்ஷுத்ர   ஜந்து.    அது   தன்   வாசலைப்  பற்றிக்  கிடந்தது  என்ற   ஒரே   காரணம்   பற்றி   அதன்     மரணத்துக்     பொறாத   எசமானன்,   ஒரு    தேகாத்ம   அபிமானி,    அவன்   செய்த   செய்கை,   தன்     உயிரையும்    குடித்த    அவன்   செய்கை,    உடலே    பிரதானம் என்று    வேறு  சிந்தையற்ற   ஒருவன்   அவ்வாறு   தன்னை  அண்டிய   ஒரே   காரணத்திற்காக   ஒரு   அல்பப்  பிராணிக்கு    இப்படிப்   பரிந்து   வருவானேயானால்...............என்ன    தவறு   செய்தோம்    இதுநாள்?.........நம்மைக்   காப்பாற்றிக்கொள்ள    நாமா?   .......   தூங்கும்  போது   நிலை  குலைந்து     மறந்து    யார்  கல்லைத்   தூக்கிப்  போட்டாலும்   கேள்வி  கேட்பாரற்றுத்   தூங்குகிறோமே    நாமா    நமக்கு   ரட்சகன்?............வயிற்றில்    நாம்   நிர்மூடமாக     கைகால்   விரிக்க   வழியிலாதே      கிடந்தோமே     அதுகால்   நமக்கு    உணவும்   உயிரும்    வைத்துப்  பந்தல்   பரிமாறியது   யார்?    நாமா    ரட்சித்துக்  கொண்டோம்?.......இப்பொழுது     நன்றாய்   இழுத்து  இழுத்து   மூச்சு  விடுகிறோமே    இது   நம்   யத்தனம்தானோ?.......தூக்கம்  வந்து    நம்மை  அழுத்தும்  போது    சோர்ந்து  விழுகிறோமே  (  ஓடுகிற   வண்டி என்றும்  பார்க்காமல்    அடுத்தவன்  தோளில்   பத்துக்கு   இருபது  தடவை  விழுந்து    மன்னிப்பு   கேட்டு  கேட்டு   பின்  மீண்டும்  விழுகிறோமே)    அதுவும்  நம்   சங்கல்பம்  தானோ?    உயிர்நிலை,   உயிர்ப்புநிலை,   தூக்க  நிலை,   உணவுநிலை   என்ற   அடிப்படையான  எதுவுமே   நம்   ரட்சகத்தில்    இல்லாமல்    நம்மை   நாம்    காக்க   புறப்பட்டோமே ......  இந்தப்   பேதைமை......  தேகாத்ம   அபிமானியான     ஒரு   சேதனன்   வாசலைப்   பற்றிக்கிடந்த    ஒரு   நாய்   அந்த  அறிவிலியின்    இந்த   ரட்சகத்துக்கு    இடமாகும் என்றால்    .......அந்தப்   பரம  சேதனனின்     வாசலைப்   பற்றிக்   கிடந்தால்    இந்த   சைதன்ய   வஸ்துவைக்   காப்பாற்ற    அவன்  ரட்சகம்    தப்பும்   வழி  எதுவுமே   இல்லையே!    ஈதுணராது     போக்கினேன்     வாழ்நாள்!.......இல்லை    வாழா  நாள்....என்னுடைய    வியாபாரம்,  இயக்கம்  என்பது   என்ன   தேருகிறது?..... 
 
 
இன்னும்   அந்தப்    பெரியவர்    ஆழ்ந்து   சிந்தனையில்  சிந்தை  இறந்த   நிலையில்தான்   இருக்கிறார்.  எனக்குத்தான்   கொஞ்சம்  மூச்சு   முட்டுகிறது.   வந்துவிட்டேன்.   என்ன  ஆயிற்று?    ஸ்வ  வியாபாரம்  விட்டார்.   தானாக   இயங்கும்   இயக்கெல்லாம்    கழண்டது.    கைகால்   அசைக்கவும்    தன்  சங்கல்பம்  எதுவும்    அற்ற   நிலை.  எல்லாம்   ஒரு  சில  நொடிகளில்.    பல்லக்கிலிருந்து    இறங்கவும்     பெரும்  பாடு.    யார்  இறங்குவது?   யாருக்கு   அதிகாரம்?  ஏதோ   ஆய்விட்டது என்று   மற்றவர்கள்  எடுத்துவைத்திருப்பார்கள்  போல.      அப்படியே    தேய்த்து  தேய்த்து  நகர்ந்து     திருக்கண்ணமங்கை    கோயில்   மரத்தடியை   அண்டியவர்தான்.......இப்பொழுதும்  அங்குதான்   இருப்பார்.    பல  நூறு  ஆண்டுகள்   ஆகிவிட்டன.   நாம்  பார்க்கிறோம்  என்ற  ஸ்வவியாபாரத்தை  விட்டுக்  காட்டவே   கண்டால்   தென்படுவார்   போலும். 
 
என்ன   பக்தி  என்பது   புரிகிறதா ?    புரியவில்லையென்றால்    கவலைப்  படாதீர்கள்.   நீங்க   நம்ம   ஸெட்டு.    

devoo

unread,
Aug 29, 2009, 12:39:04 PM8/29/09
to மின்தமிழ்
Aug 29, 6:58 pm, srirangammohanarangan v

அறிவுக்குச் சம்பந்தப்படாதது, எதிரானது பக்தி என்று சொல்வது
சுத்த அபத்தம் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.
எனக்குப் புரியவில்லை. புரிந்தவர் சொல்லுங்கள் என்று
ஒதுங்கினால் .....//

புரியாதவர் பேசுவது போலவா இருக்கிறது !
ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்தியே பக்தி; ஞானத்தின் முற்றிய நிலையே
ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்தி என்பதைத் தெற்றென விளக்கி விட்டீர்கள்
அனைவருக்கும் புரியும்படியான நடையில்.


தேவ்

N. Kannan

unread,
Aug 29, 2009, 7:57:34 PM8/29/09
to mint...@googlegroups.com
பஜகோவிந்தம் இசைப்பேழையின் முன்னுரையில் இராஜாஜி சொல்வது நினைவிற்கு வருகிறது.

ஏதோ பேசவாவது முடிகிறதே! அதற்கே முதிர்ச்சி வேண்டும் போலுள்ளதே! ;-)

”உயிர்நிலை, உயிர்ப்புநிலை, தூக்க நிலை, உணவுநிலை என்ற


அடிப்படையான எதுவுமே நம் ரட்சகத்தில் இல்லாமல் நம்மை நாம்

காக்க புறப்பட்டோமே ...... ”

நம்மை, நாம் எனும் செயற்பாடுகளும் அவனுக்கு புறப்பாற்பட்டதோ? உண்பது,
களிப்பது, உறங்குவதுமாகிய செயல்களையும் செய்து சம்சார வியாபாரத்தை
நடத்துவது யார் எனும் கேள்வி எழுகிறது.

அரங்கன் சந்நியில் தீயிற்கு தன்னை இரையாக்கிய பெருமகனாருக்கும்
இவருக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவிலை. ஒன்றில் உடனே உயிர் போனது,
மற்றதில் “மற்றோர்” கவனிப்பில் கிடந்ததால் நாள் கழித்து போனது.
இவையெல்லாம் நமக்கொரு பாடம். பேசுபொருள் அவ்வளவே.

”தெரியவில்லை” எனத்தாங்கள் சொல்வதை நிராகரிப்பு என எடுத்துக்
கொள்ளக்கூடாது என்று புலப்படுகிறது. அதுவொருவகையான ஏக்கம். அவ்வேக்கமே
உயர்நிலை உந்துதல். ஹரி!


க.>

2009/8/30 devoo <rde...@gmail.com>:

karth...@gmail.com

unread,
Aug 29, 2009, 8:46:58 PM8/29/09
to மின்தமிழ்
ஆம்! இது பகிர்ந்து கொள்ள முடியாத அனுபவமாகத்தான் இருக்கிறது.
பகிர்ந்து கொள்ள முயன்றாலும் கேட்பவரால் புரிந்து கொள்ள முடியாத
அனுபவம்தான்.

Apperception என்ற ஒன்றை இலக்கிய விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள்.
ஒரே இலக்கியப் படைப்பை வாசிக்கும்போது ஒவ்வொரு வாசகனுக்கும்
ஏற்படுகின்ற உணர்வு.

பக்திக்கும் இதைச் சொல்லலாம். காதலுக்கும் இதைச் சொல்லலாம்.
புணர்ச்சிக்கும் சொல்லலாம். குழந்தையைக் கொஞ்சுவதற்கும் சொல்லலாம்.

இப்படிப் பார்க்கும்போது பக்தியை மட்டும் ஏன் விஷேசமாகக் கருதவேண்டும்
என்ற கேள்வியும் ஏற்படுகிறது.

அவரவர் உணர்வதை அவரவர் அவரவருக்குள் வைத்துக் கொள்ளவேண்டும் போல.
"அந்தர்முகம்" மிக முக்கியம்.

ரெ.கா.

On Aug 29, 9:58 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
>>
> பக்தி என்பது என்ன  என்று என்னால்   சொல்ல  முடியுமா  தெரியவில்லை.     ஆனால்
> அது என்ன  இல்லை  என்பது    எனக்கு    வெட்ட  வெளிச்சமாகத்   தெரிந்த


> ஒன்று.     நிச்சயம்    அது   உணர்ச்சிகள்    அன்று.   பக்திக்கான   அத்தனை

> புற   சேஷ்டைகளும்   உணர்ச்சிகளுக்கும்   ஏற்படலாம்.    ஆனால்  எத்தனைதான்
> உணர்ச்சிகளைக்  கொட்டிக்  கவிழ்த்தாலும்   அந்தப்  பெருக்கம்   உள்ளே

N. Kannan

unread,
Aug 29, 2009, 11:25:26 PM8/29/09
to mint...@googlegroups.com
உண்மை ரெ.கா:
 
பக்தி என்பது காதல்தான்.
 
அதை ஏன் சிறப்பித்துச் சொல்கிறார்கள் என்றால் 'காதல்' என்பது அனைத்து ஜீவனுக்கும் ஆதாரமாக உள்ளது. எனவே அனைத்திற்கும் பொது. பொதுவான காதற் பேச்சே பக்தி.
 
கவலை என்றால் என்னவென்று யாராவது விளக்கமுடியுமா? ஆனால், ஒருவர் 'கவலை'யாய் இருக்கேன் என்று சொன்னால் உடனே இரங்கி ஆறுதல் சொல்கிறோம். ஏன் எனில் அக்கவலை எனக்கும் பொது. அது என்னவென்று உள்ளுணர்வாகப் புரிகிறது. பக்தியும் அவ்வாறே. ஒரு உட்புரிதல். ஆனால் விளங்கிக்கொள்ளுதல் கொஞ்சம் கடினம்.
 
முதன்முறையாக என்னுள் ஒரு சின்ன கல்லைப் புரட்டிப் போட்டது மதுரை கூடல் அழகர் சந்நிதியில். அப்போது எங்களுடன் சுந்தர்ராஜன் என்ற பேராசிரியர் முனைவர் பட்ட ஆய்விற்கு சின்னப் பசங்களான எங்களுடன் ஆய்வகத்தில் ஆய்வு செய்தார். எங்கள் சகாவான சுப்புராஜ் என்ற நாயக்கர் பையனுக்கும், ஒரு தேவர் பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணிவைக்கும் பொறுப்பு எங்களுக்கு. வீட்டு சம்மதம் கிடையாது. அவர் நாயக்கர் என்பதால் முதலில் பெருமாள் சந்நிதிக்குப் போனோம். கல்யாணம் மீனாட்சி கோயிலில். அப்போது, ஆழ்வார் பாசுரம் சாதிக்கும் போது, பேராசிரியர் சுந்தர்ராஜன் கண்களில் தாரை, தாரையாக் கண்ணீர். என்னை அது புரட்டிவிட்டது! ஒரு கல்லைப்பார்த்து ஒரு மனிதன் அழுவானேன்? இன்னும் முழுமையாய் புரிந்து கொண்டேனா எனத்தெரியவில்லை. ஆனால், என்னை இறைச் சந்நிதியில் அதன் பின் பலமுறை அழவைத்துப் பார்த்துவிட்டான். அந்த அழுகை அல்ப சுய லாபம் கருதி அல்ல. வெறும் நன்றி அறிவித்தல். அவ்வளவே!
 
க.>

devoo

unread,
Aug 29, 2009, 11:38:03 PM8/29/09
to மின்தமிழ்
Aug 30, 5:46 am, "karthige...@gmail.com"

இப்படிப் பார்க்கும்போது பக்தியை மட்டும் ஏன் விஷேசமாகக் கருதவேண்டும் //

ஏனெனில் பக்தி அழிவில்லாமல் எல்லையின்றி வளர்வதால்;அதைத்தானே நாரத பக்தி
ஸூத்ரம் உள்ளிட்ட பக்தி இலக்கியம் பன்னிப் பன்னிக் கூறிவருகிறது.
உலகியல் சார்ந்த காதல் ஒரு புள்ளியில் முடிவுற்று விடுகிறது.

தேவ்

Kamala Devi

unread,
Aug 30, 2009, 5:37:54 AM8/30/09
to minT...@googlegroups.com
மோஹனரங்கன்,
தச்சி மம்மு சாட்டுண்டு” என்றால் என்ன பொருள்?
புரியவில்லை.விளக்கமுடியுமா?
கமலம்






   அரங்கன்  காப்பத்துவான்னா?    அட   போய்யா!    ஆத்துல  உட்கார்ந்துண்டு     தச்சி  மம்மு   சாட்டுண்டு   பேசிண்ட்ருக்காங்கன்னு  
 








Get your preferred Email name!
Now you can @ymail.com and @rocketmail.com.

Tthamizth Tthenee

unread,
Aug 30, 2009, 6:56:04 AM8/30/09
to mint...@googlegroups.com
சும்மா   முரண்டு   பிடிக்கக்  கூடாது.    நாம்   இதுவரை   பக்தி  என்பதை   அறிந்ததே    இல்லை.    நாம்    சொல்லிக்  கொள்வதெல்லாம்    வெறும்    க்ளிஸரின்    வேலை.
 
 
ஹஹஹஹஹஹஹாஆஆஆ
 
க்ளிஸரின் இல்லாமலே ,
 
நினைத்தாலே ,அல்லது பார்த்தாலே, கண்ணீர் வழியும் அளவுக்கு 
 
மனதைப் பக்குவப் படுத்தி அதன் மூலமாக  உடலையும் பக்குவப் படுத்தி வைத்திருக்கும்  பலர் இப்போது இருக்கிறார்கள்
 
 
 
என்னைக் கேட்டால் பாமரத்தனமான பக்திதான்  உண்மையான பக்தி என்று நான் சொல்லுவேன்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
On 8/30/09, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:
சரி  ஒருவர்   உணர்ச்சிகளின்  விளிம்பில்   நின்று    தீவிர   செயலில்   போகிறார்  என்றால்   மற்றொருவரோ   எந்தச்  செயலும்  அற்று    இயக்கற்று    மயக்கற்று    அமர்ந்துவிடுகிறார்.    செயலின்   உச்சத்தையோ   செயலின்   ஒழிவையோ   பக்தி  என்று    சொல்லிவிட  முடியாது  என்பது    புரிகிறது    வேறு எது   புரிகிறதோ  இல்லையோ.
 
ஆனால்   நம்   மனமோ   உள்ளத்தின்   ஆர்பாட்டங்களில்    நன்கு  பழகிய    காரணத்தால்    எதையுமே   அந்தக்  கணக்கில்தான்    போட்டு   வாங்குகிறது.   எனவேதான்   இன்பம்  என்றே   சொல்லத்தகாத    ஒரு  யந்திர  நிரல்  கோவையை    இன்பம் என்று  சொல்லாடி,   அதின்   அடிப்படையில்    ஒன்று  பேரின்பம்,   நாம்  அறிந்தது  சிற்றின்பம்  என்றெல்லாம்   மாற்றுச்  சொல்லாடி    மலைகிறோம்.   இன்பம்  ஒன்றுதான்   அதை   இதுவரையில்  நாம்  அறிந்ததேயில்லை    என்பதுதான்    ஈறுதேரும்  உண்மை.   ஐயோ   அதை    உணரும்    வரையில்  என்ன    போராட்டம்,  என்ன   பேதைமை!   என்ன   மயக்கம்!    செயல்    சிறந்தார்   வாழ்வும்    செயல்  இறந்தார்    வாழ்வும்    நமக்குப்  புதிர்  என்றால்,   இன்பம்   ஒன்றையே   நாடி    ஓடுகின்ற    வாழ்வு   என்று  நினைத்துக்  கொண்டிருந்த    நமக்கு    இன்பம்   என்பதே   இதுவரை   அறியாப்  புதிர்   என்பது    உணர  வரும்  கணத்தில்    என்ன    வெட்கம்   பிடுங்கித்   தின்னுகிறது!    பின்  என்னதான்   அறிந்தோம்   புரிந்தோம்    துய்த்தோம்    தொடர்ந்தோம்      துணையாகித்   தொல்லைப்  பேய்த்தேர்க்குப்   பரியாகித்   தவித்தோமடா! 
இதில்    பக்தி  என்பதைப்  பற்றி    நா  கூசாமல்    பேச    நாணம் எழவில்லையே.    ஐயன்     பரமஹம்ஸரின்    கதையில்   வரும்    கிணற்றுத்தவளையாய்   மற்றவரைக்   கோணப்  பார்வை     பார்க்கிறோம்!     கடல்  தவளை   வந்து    கடலில்  இருந்து   வருகிறேன்   என்றால்    அதைப்  புரிந்து   கொள்ள    நாம்  கடல் என்பதைப்   பார்த்திருந்தால்தானே?    கிணற்றை   விட்டு    வெளியேறிஅறியாத    பவுசுக்கு     'உன்  கடல்  என்ன    இங்கிருந்து   இதுவரை   இருக்குமா?'  என்று   குதித்துக்  காட்டிய    கூபஜோதியை  விட   நாம் என்ன    சிறந்துவிட்டோம்?   ஒன்றுமில்லை    அறிவு   பூர்வமாக    ஒருவர்   பேசினால்    நம்  கிணற்று   பக்திக்கு  என்ன    ஆங்காரம்   வருகிறது?    ஆனால்   செயல்  இறந்தார்    வாழ்வில்    இப்படியும்   ஒரு  நிகழ்வு:--
 
செயலற்று   மரத்தடியே   கிடந்த    திருக்கண்ணமங்கை  ஆண்டானுக்குக்   கூடப்படித்த    தோழர்   ஒருவர்.   அவர்   நாஸ்திகர்.    அவர்   இந்த   நிலையில்   இவரோடு   வந்து    பேசிக்கொண்டிருப்பதாக   வருகிறது.   ஆண்டானுக்கு    நம்மைப்  போல்   உண்மையான     பக்தி   இருந்தால்   என்ன   செய்து  இருக்க  வேண்டும்?   'அப்பா   நீ  என்னதான்  கூடப்படித்திருந்தாலும்    நாஸ்திகன்.   போ   போ  என்  பக்தி   கெட்டுவிடும்.   உன்  முகத்தில்  கூட    முழிக்கக்  கூடாது'  என்று   இருந்திருக்க   வேண்டுமே?    ம்  ம்  அது எல்லாம்   இல்லை.   ஆழ்ந்து   ஈடுபட்டுச்   சொற்கள்   பரிமாறப்  படுகின்றன.   சரி   நாஸ்திகரையாவது     மாற்ற   முயல்கிறாரா?    அதுவும்   இல்லை.   அவர்    அவராகவே   இருக்கிறார்.   இவர்   இவராகவே   இருக்கிறார்.   ஆனால்    இருவருக்கும்   இடையில்    பரிமாற்றம்    நடக்கிறது.  இப்பொழுது   சொல்லுங்கள்.   ஆண்டானிடம்    நம்மைப்  போல்   உண்மையான      பக்தி    இருந்திருக்குமா  என்ன?   நமக்குக்  காதல்  தெரியும்,   ஐம்புலனுக்குப்   பின்   குறையோ  முறையோ  என்றோடி    அதை  இன்பக்  கணக்கில்  எழுதத்  தெரியும்.   அங்கும்  இங்கும்  குதித்துக்   கடலையே    கிணற்றுக்குள்   அடக்கத்  தெரிந்த   தவளை  நம்மிடம்    பிச்சை  வாங்க  வேண்டும்.   நமக்குத்   தெரியாத     பக்தியா?    இது என்னவோ    புதுசாக   இருக்கிறது.   சரி  விடுங்கள்   நம்  பெருமை  யாருக்குத்  தெரிகிறது?  
 
நாஸ்திகத்   தோழர்   கேட்கிறார்   ஆண்டானிடம்,     ஆண்டான்    கோயில்   வளாகத்தில்   சுத்தம்  செய்வதைப்  பார்த்து,   அதாவது   திருவலகிடுதலைப்  பார்த்து.     'செயல்    ஒழிந்த   நிலையில்   இது என்ன   பயனை   உத்தேசித்துச்   செய்யப்  படுகிறது?    திருவலகிடுவதால்   மட்டும்  போந்த  பயன்  என்ன?'  
 
எது   நாஸ்திகம்   எது   பக்தி?   இவருக்கு ஏன்  மனம்   அங்கு   ஓடுகிறது?   அவர் ஏன்  இவரோடு  பேசுகிறார்? 
 
ஆண்டானின்   பதில்:   'இங்கு   இடம்   தூயமையாக    இருக்கிறது.    திருவலகிடாத    அந்த   இடத்தில்    இடம்    தூய்மையற்று    இருக்கிறது.     கண்ணுக்கு   நேர்    தெரியும்   இந்தப்     பயனைக்   கண்டுமா   இந்தக்  கேள்வி?' 
 
கொஞ்சம்   நாம்  பிள்ளைக்   கதவு   வழியாக    இருவரின்      மனோபாவத்துக்குள்     புகுந்து  கொண்டால்தான்    புரியும்.    தோழர்   ஆண்டானைப்  பற்றி   சிந்தித்து  சிந்தித்து   அவருடைய    உலகத்தினுள்    புகுந்து    கேள்வி  கேட்கிறார்.  
நமது     கடைத்தேற்றத்திற்கு என்று   நாம்  எதுவும்   கைகால்   முடக்க   வழியில்லை   என்று   செயல்   ஒழிந்தீரே   ஐயா!    இப்பொழுது   இப்படிக்   கோவில்  அலகிடுதல்   முதலிய    அனுஷ்டானங்களைக்   கையாளுகிறீரே     இதனால்     போந்த    பயன்  என்ன?    நீரோ    தான்   தனக்காக   முனைவது  என்ற   தன்முனைப்பை  விட்டவர்.      பின்   தான்  முனைந்து    தனக்காக    அனுஷ்டிப்பதாகிய    இந்த     ஸ்வப்ரவ்ருத்திக்கு  என்ன  பயன்?  
 
சரியான   கேள்வி!     இந்த   அளவு   நெடுக   உள்போந்து    இந்த   நிலையில்  கேள்வி  கேட்பதானால்    நான்  பேசாமல்   நாஸ்திகனாய்  இருந்து  விடுகிறேன்  ஸ்வாமி!    இது  என்ன     மனத்தின்   அனுசாரம்.  
 
ஆண்டானின்   பதில்    தோழரின்    சித்தாந்தத்தைக்   கணக்கில்  எடுத்துக்  கொண்டு     வருகிறது.    பிரத்யக்ஷமாகத்   தெரிகின்றதற்கு  மேல்   பரோக்ஷமாக   எதைப்பற்றியும்  பேசுவது   எதற்காக    என்பதுதானே    நாஸ்திகத்தின்   கடைப்பிடி.    அந்த  நிலையில்  இருந்து    பார்த்தால்    கண்ணுக்குத்   தெரிந்த    ஓரிடம்   சுத்தமாக    ஆகிவிட்டது.     மற்றோரிடம்    அசுத்தமாகவே    காண்கிறது.   இதுதானே    திருவலகு  இட்டதின்    பிரத்யக்ஷ   பலன்.    அதற்கு   மேல்   அதற்குப்   பலனாக    நாஸ்திகனான   நீ  எதை  எதிர்பார்க்கிறாய்?    நானோ   இதை  எதை   உத்தேசித்தும்    கர்மமாக   அனுஷ்டிக்கவில்லையே!    அவனுடையது  இந்த  உடல்   அவனுடையது  இந்த   மனம்     அவனுடையது   இந்த  அஹம்   என்று    ஸ்வபிரவ்ருத்திக்கான   அடிப்படைகள் எல்லாம்    தீர்ந்து   நிகழும்   செய்கைகள்    கைங்கர்யத்தில்   அன்றோ  புகுரும்.   கர்மக்   கணக்கில்  ஏறாதே!  
 
 
சரி  நீங்கள்  ஏற்கனவே   புருவத்தை    நெரிப்பது   தெரிகிறது.  என்னடா   இவன்    உண்மையாக    வியாக்யனங்களில்   இருக்கும்   செய்தியைக்  கூறுகிறானா    அல்லது     சுயக்  கச்சேரியா   என்று  பார்க்கிறீர்கள்.    இதோ    வியாக்யானத்தில்    வரும்   வண்ணமே    தந்துவிடுகிறேன் :-
 
" திருக்கண்ணமங்கையாண்டான்   அங்கே  ஒரு   திருமகிழடியிலே   இருந்து    சருகைத்    திருவலகிடா  நிற்க,    கூட   வாசித்து   நாஸ்திகனாயிருப்பான்   ஒருவன்,  "பகவான்  உபாயம்;   நாம்   அநந்யப்ரயோஜனர்;   இப்போது   இந்த  க்லேசத்துக்குப்   பலமென்?" என்ன,     திருவலகிட்ட   இடத்தையும்    இடாதவிடத்தையும்    காட்டி,  "இவ்விடமும்   அவ்விடமும்   இருந்தபடி    கண்டாய்க்கு    ஒரு  பலமும்  இல்லையென்று   தோற்றியிருந்ததோ?"  என்றான்.
(திருவாய்மொழி  9-2-1  ஈடு  வியாக்கியானம்;   வைணவ  ஆசார்யர்களின்   வாழ்வும்   வாக்கும்,   Dr  M  A  வெங்கடகிருஷ்ணன்,  கீதாசார்யன்,  திருவல்லிக்கேணி, எண் 765)
 
 
சும்மா   முரண்டு   பிடிக்கக்  கூடாது.    நாம்   இதுவரை   பக்தி  என்பதை   அறிந்ததே    இல்லை.    நாம்    சொல்லிக்  கொள்வதெல்லாம்    வெறும்    க்ளிஸரின்    வேலை.

N. Kannan

unread,
Aug 30, 2009, 7:21:55 AM8/30/09
to mint...@googlegroups.com
2009/8/30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

> சும்மா   முரண்டு   பிடிக்கக்  கூடாது.    நாம்   இதுவரை   பக்தி  என்பதை
> அறிந்ததே    இல்லை.    நாம்    சொல்லிக்  கொள்வதெல்லாம்    வெறும்
> க்ளிஸரின்    வேலை.
>

`அது` என்னவென்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டு `இது` `அது`
இல்லையென்று எப்படித்தெரிகிறது? அறிவு உணர்வைச் சாப்பிட்டு விழுங்கும்
போது இது. கவனம் ;-)

க.>

Kamala Devi

unread,
Aug 30, 2009, 10:08:39 PM8/30/09
to mint...@googlegroups.com
முனைவர் கண்ணன், சுழல்பந்து சார், தேவ் சார்,மோஹனரங்கன்,
மூன்று நாட்களாக இது குறித்து எழுத மனம் விழைகிறது.
 மிகவும் யோசிக்க வைத்த தலைப்பு.
மோஹன் அவரது புரிதலை மிக அழகாக விளக்கியிருக்கிறார்.
ஆழ்வார் அவருக்கே உரித்தான சங்கீர்த்தனத்தில் விளக்குகிறார்.
சுழல்பந்து சார், நிங்ஙளின் கேள்வியும் கவர்கிரது..
பக்திக்கு  அணை உண்டா? பக்தியே வாழ்வின் உச்சம் என்றெல்லாம் ,சொல்லப்போவதில்லை.
ஆனால் எவ்வளவு ஆழமான தலைப்பை எடுத்தாண்டு கொண்டிருக்கிறீர்கள், தெரியுமா?
பக்தி, என்பது வார்த்தைகளால் எழுதியோ, விளக்கிடவோ முடியுமா?
ஈஷ்வரனைக்கண்டவர் உண்டு. உணர்ந்தவர் உண்டு.ஈஷ்வரன் என்ற நாமம் ஸ்மரணையிலிருந்தாலே
உலகாய லெளகீகமே தூசி என்று வாழ்பவர்களை எனக்குத் தெரியும்.
கோமல் ஸ்வாமினாதனை அவர் மரிக்கும் முன் ஞான் சந்தித்திருக்கிறேன்.மிகக்கடுமையான நோயால் அவர் போராடிக்கொண்டிந்த சமயம்.அந்த நிலையிலும் இமாலயம் சென்று, கிரிவலம் வந்த கதையை அவர் சொன்னபோது
ஈஷ்வரன் உண்டா இல்லையா என்பதை உணர முடிந்தது, ஆழ்வார் குறீயது போல் காதல் கூட பக்திதான்.
[இதை எண்டெ வலைப்பதிவில் மானாட்டில் சந்தித்த , என்ற லண்டன் மானாட்டு கட்டுரையில் விளக்கியிருக்கிறேன்.]
வட நாட்டில் மதுரா எனும் ஊரில் கிருஷ்ண அம்பலம் சென்றபோது கிட்டிய   அனுபவம் முன்பு ஞான் எழுதியிருக்கிறேன்
மதுரை மீனாட்சி க்‌ஷேத்ரம் சென்றபோது, கேரளத்திலுள்ள என்டெ இல்லத்து தேவி தான் கருவறையிலிருந்து என்னை ஆட்கொண்டாள்.மலேசிய பத்துகேவ்ஸுக்கு சென்றால் , அந்த மனோநிலையே அலாதி.
டாக்டர் வாரியர் எனும் எங்கள் இலக்கிய  நண்பர் இல்லத்து வீட்டில் ஜனித்தவர்,ஆனால் ஈஷ்வர சிந்தையே இல்லாதவர்,
ஆனால் அவருக்கு இலக்கியம் தான் பக்தி,அவரது நட்பு உலகில் உதவுவது மட்டுமே பூஜை என்பார்,
”கமலம், வெள்ளைக்காரியை மணந்து கொண்டதால் சொல்லவில்லை.நியம நிஷ்டை என்பது தானாக வர வேண்டுமே தவிர வலிந்து புகுத்துவது அல்ல, ஈஷ்வரன் என்று உச்சரிக்கும்போதே நினக்கு கண்கள் பரவசமாகிறது. ஆனால் நின்டெ பரவசம் காண்பதே எனக்கு ஒரு அனுபவமாக இருக்கிறது, that,s all !"என்பார்.
இது கலியுக நூற்றாண்டு.அவரவர் புரிதல் மட்டுமே அவரவர் பக்தி, அவரவர் வாழ்வியல் கோட்பாடு.
இத் தலைப்பைத் தொடங்கிய மோஹனுக்கு நன்றி.
கமலம்










உண்மை ரெ.கா:
 பக்தி என்பது காதல்தான்.
 அதை ஏன் சிறப்பித்துச் சொல்கிறார்கள் என்றால் 'காதல்' என்பது அனைத்து ஜீவனுக்கும் ஆதாரமாக உள்ளது. எனவே அனைத்திற்கும் பொது. பொதுவான காதற் பேச்சே பக்தி.
 கவலை என்றால் என்னவென்று யாராவது விளக்கமுடியுமா? ஆனால், ஒருவர் 'கவலை'யாய் இருக்கேன் என்று சொன்னால் உடனே இரங்கி ஆறுதல் சொல்கிறோம். ஏன் எனில் அக்கவலை எனக்கும் பொது. அது என்னவென்று உள்ளுணர்வாகப் புரிகிறது. பக்தியும் அவ்வாறே. ஒரு உட்புரிதல். ஆனால் விளங்கிக்கொள்ளுதல் கொஞ்சம் கடினம்.
 முதன்முறையாக என்னுள் ஒரு சின்ன கல்லைப் புரட்டிப் போட்டது மதுரை கூடல் அழகர் சந்நிதியில். அப்போது எங்களுடன் சுந்தர்ராஜன் என்ற பேராசிரியர் முனைவர் பட்ட ஆய்விற்கு சின்னப் பசங்களான எங்களுடன் ஆய்வகத்தில் ஆய்வு செய்தார். எங்கள் சகாவான சுப்புராஜ் என்ற நாயக்கர் பையனுக்கும், ஒரு தேவர் பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணிவைக்கும் பொறுப்பு எங்களுக்கு. வீட்டு சம்மதம் கிடையாது. அவர் நாயக்கர் என்பதால் முதலில் பெருமாள் சந்நிதிக்குப் போனோம். கல்யாணம் மீனாட்சி கோயிலில். அப்போது, ஆழ்வார் பாசுரம் சாதிக்கும் போது, பேராசிரியர் சுந்தர்ராஜன் கண்களில் தாரை, தாரையாக் கண்ணீர். என்னை அது புரட்டிவிட்டது! ஒரு கல்லைப்பார்த்து ஒரு மனிதன் அழுவானேன்? இன்னும் முழுமையாய் புரிந்து கொண்டேனா எனத்தெரியவில்லை. ஆனால், என்னை இறைச் சந்நிதியில் அதன் பின் பலமுறை அழவைத்துப் பார்த்துவிட்டான். அந்த அழுகை அல்ப சுய லாபம் கருதி அல்ல. வெறும் நன்றி அறிவித்தல். அவ்வளவே!

.






Get your new Email address!
Grab the Email name you've always wanted before someone else does!

karth...@gmail.com

unread,
Aug 30, 2009, 10:22:43 PM8/30/09
to மின்தமிழ்

On Aug 30, 6:56 pm, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> >
> என்னைக் கேட்டால் பாமரத்தனமான பக்திதான்  உண்மையான பக்தி என்று நான் சொல்லுவேன்
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>

இந்த அறிவு கிறிவு எல்லாம் எதற்கு என்கிறீர்களா?

ரெ.கா.

karth...@gmail.com

unread,
Aug 30, 2009, 10:50:06 PM8/30/09
to மின்தமிழ்
இப்படிக் கற்களை வீசி மனக்குளத்தில் அலைகளை எழுப்புகிறீர்கள்!

பக்தி என்பது பெரும் ஆறாக இருக்கலாம். ஆனால் குடிக்கும்
வாயும் வயிறும் சிறுத்தேதானே இருக்கின்றன. அது நிறையும்வரை
குடித்தால் போதாதா?

ஆறு பெரிது என்னும் அறிவும் (உணர்வும்?) நாம் குடிக்க முடிந்தது
இவ்வளவே என்னும் அறிவும் (உணர்வும்?) போதாதா?
இதற்கு மேல் ஏங்குவதில் பலனுண்டா?

பக்திக்கு மட்டுமல்ல. அறிவுக்கும் இதுதான் விதி. ஆனால் வயிறு போல்
அல்லாமல் அறிவின் கொள்கலன் ஏற்பதற்கு ஏற்ப விரிந்து கொடுக்கிறது.
ரெ.கா.

On Aug 30, 6:08 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> சரி  ஒருவர்   உணர்ச்சிகளின்  விளிம்பில்   நின்று    தீவிர   செயலில்


> போகிறார்  என்றால்   மற்றொருவரோ   எந்தச்  செயலும்  அற்று    இயக்கற்று

> மயக்கற்று    அமர்ந்துவிடுகிறார்.    செயலின்   உச்சத்தையோ   செயலின்
> ஒழிவையோ   பக்தி  என்று    சொல்லிவிட  முடியாது  என்பது    புரிகிறது

Tthamizth Tthenee

unread,
Aug 30, 2009, 11:43:47 PM8/30/09
to mint...@googlegroups.com
இந்த  அறிவு ,கிறிவு  எல்லாம் வர ஆரம்பித்தால் பக்தி காணாமல் போய்விடும்
 
எப்படி  பக்திக்கு அளவுகோல் இல்லையோ  அதே போல  அறிவுக் கோலும் இல்லை
எல்லாவற்றையும் விலக்கி பக்தி செய்தல் ஒன்றே குறிக்கோள் என்று ஒரு உணர்வில் ஆழ்ந்தாலொழிய  பக்தி  பூரணமான பக்தி வராது
 
 
ஒரு நோக்கு என்பதுதான் பக்தியின் பரிணாமம்
 
அந்த ஒரு நோக்கு பக்தியை நோக்கித்தான் இருக்கவேண்டும்
 
மற்ற எது கலந்தாலும் அது பக்தி ஆகாது
 
அது குரு பக்தி ஆனாலும் சரி ,இறை பக்தி ஆனாலும் சரி
 
அந்த குருவுக்காகவும், இறைக்காகவும்
 
கண்ணை மூடிக்கொண்டு  கிணற்றில் விழவும் தயாராய் இருப்பதுதான் பக்தி

K R A Narasiah

unread,
Aug 31, 2009, 12:26:54 PM8/31/09
to mint...@googlegroups.com

முண்டாசுக் கவியைக் கேட்கலாமே!
எத்தனை கோடி யின்பம் வைத்தாய் - எங்கள்
இறைவா! இறைவா! இறைவா!

       சித்தினை அசித்துடன் இணைத்தாய்-அங்குச்
       சேருமைம் பூதத்து வியனுலகமைத்தாய்
       அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
       மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய்
     
        முக்தியென் றொருநிலை சமைத்தாய் - அங்கு
        முழுதினை யுமுண ருமுணர்வமைத்தாய்
        பக்தியென் றொருநிலை வகுத்தாயெங்கள்
        பரமா பரமா பரமா
பக்திக்கு இது போதாதா!
இழை மிக நன்றாக ஓடுகிறது தொடரவும்!
நரசய்யா
 
2009/8/31 srirangammohanarangan v <ranga...@gmail.com>
கமலம்மே!    ஒரு  சின்ன   க்ளூ!    சிற்பிகள்   விக்ரகம்    உருவாகும்   போது   எல்லாம்   முடித்துக்  கடைசியில்    கண்ணைத்   திறப்பார்கள்.   கண்ணைத்   திறக்காத   விக்ரகங்கள்    பூசைக்கு   வாரா.

2009/8/31 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

Innamburan Innamburan

unread,
Aug 31, 2009, 1:01:14 PM8/31/09
to mint...@googlegroups.com
சுருட்டுப் பிடிக்கும் இந்த முண்டாசுக் கவி கிட்டத்தட்ட 90 வருடங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக்கிழமை (April 6, 1919) குஹானந்த நிலையத்திற்கு, யதேச்சையாக வந்தான். அவனது அருமையான பகவத்கீதையின்  மொழியாக்கத்திற்கு  சிறப்புரை அளித்த காந்தி மஹான் பிரகடனம் செய்த சத்யாக்கிரஹ நாள் அன்று. கூட்டம் பெருகிய வண்ணம் இருந்தது. திருவிக அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி 'முருகா! முருகா!' என்று ஒரு பாட்டு பாடினான். காதலாகி, கண்ணீர் மல்கி உருகினர், யாவரும். சத்யாக்கிரஹத்திற்கும், முருகனுக்கும் என்ன சம்பந்தம்? பிணைத்தது எது? பக்தி. பக்திக்கு உவமை, உருவகம், பின்னணி, கொள்கை, இலக்கு என்று எதையும் சுட்ட நம்மால் இயலாது. இறையை இலக்கு வைக்காத பக்தியைப் பற்றி எழுத விழைகிறேன். இது நிற்க.

2009/8/31 K R A Narasiah <naras...@gmail.com>



--
இன்னம்பூரான்

N. Kannan

unread,
Aug 31, 2009, 11:35:32 PM8/31/09
to mint...@googlegroups.com
ஆக, பக்தி என்பதை அறிந்து கொள்ள இரண்டு அலகுகள் கிடைக்கின்றன.

பாரதி வாக்குப்படி `பக்தி என்றொரு நிலை` (a status! remember my earlier
quote on Quantum State).
மற்றது ரெ.கா புரிதல் படி, `கொள்கலன்` (capacity).

அதுவொரு நிலை. அந்நிலையின் போது பூரண அமையில் இருக்கலாம், அழலாம்,
தொழலாம், ஆடிக்களிக்கலாம், நம் வினை நினைந்து நாணிக் கவிழலாம். இப்படியான
10 வகையான நிலைகள் பற்றி பாகவதம் பேசுகிறது.

நம் கொள்கலனுக்கு ஏற்றவாறு இந்நிலைகள் அமைகின்றன. சிலருக்கு ஒன்று
பிடிபடலாம், சிலருக்கு இரண்டு, சிலருக்கு மூன்று. எம் சடகோபனுக்கு 10ம்
ஒரே நேரத்தில் பிடிபடுகிறது. அவனைப் போன்ற ஞானதேசிகன் யாரும் இல்லை.
இல்லையேனில் மெத்தப்படித்த ஆச்சார்யர்கள் அவனைத் தம் குலகுருவாகக் கொள்ள
வேண்டியதில்லை. ஆனால், அதே ஆழ்வாரே பிரேம பக்தியில் அழுது தவிக்கிறார்.
`கார்முகில் வண்ணனே கதறுகிறேன்` என்பது ஆழ்வார் வசனம். சாதாரணப் புலம்பல்
இல்லை. வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறுவார்களே அம்மாதிரியான
நிலை!

எனவே நமது பக்குவம் என்னவோ அதற்கேற்றவாறே பக்தியும் நமக்குக்
கைகூடுகிறது. கொள்கலன் சிறிதென்றால் உடனே நிரம்பிவிடுகிறது. சும்மாக்
கோயிலுக்குப் போய் வருவது ஒரு பக்தி. கொள்கலன் கூடும் போது பக்தியும்
கூடுகிறது. ஒருவருக்கு பக்தியில் செயல் இழந்துவிடுகிறது. கல்லினுள்
தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் காப்பளிக்கும் இறை என்னைக் காக்காதா?
எனும் நிலை. ஒருவருக்கு பக்தியில் மதியிழந்து விடுகிறது. காக்கும்
தெய்வம் கண்ணன் இருக்கும் போது கண்ணனைக் காக்க இவர் உயிர் விடுகின்றார்.
ஆனால் அது சும்மா நிகழ்ந்துவிடவில்லை. பல நூற்றாண்டுப் புரிதலின் உச்ச
வெளிப்பாடாக அது அமைகிறது. இல்லையெனில் கண்ணனுக்கு திருக்காப்பிட வேண்டிய
அவசியம் ஆழ்வாருக்கு ஏன் வருகிறது? (பல்லாண்டு, பல்லாண்டு). ஆனால்
சிலருக்கு அவனைக் கல்யாணம் செய்தால்தான் பக்தி பூரணமாகிறது. ஆண்டாள்,
மீரா இவர்கள் இருந்த நிலையை நம்மால் எண்ணிக்கூடப் பார்க்கமுடியுமோ?

வெறும் பயித்தியங்கள்! என்று சொல்லலாம். அவர்களே தங்களைப் பேயேன்
என்றுதான் அழைத்துக் கொள்கிறார்கள். ஆனால் பயித்திய நிலைக்கும் பக்தி
நிலைக்கும் நிறைய வேறுபாடுண்டு. பக்தி உள்ளோரிடம் அண்டி அருள் பெற
முடிகிறது. பயித்தியத்திடம் அது முடியாது. ஒன்று அருள் மழை பொழிகிறது.
மற்றது பினாத்துகிறது. பயித்தியமாக இருந்தால் திருவாய்மொழி எனும்
அமரத்துவத்தை அருளமுடியுமோ?

ஏதோ அவன் அருள் வேண்டி நிற்கும் சாதகப் பறவை போல் நிற்க முயற்சிக்கலாம்.
நம் கொள்கலன் கூடுமா? என வேண்டி நிற்கலாம். `குலம் தரும், செல்வம்
தந்திடும், அடியார் படுதுயர்` யாவும் களைந்திடும் என்று ஆழ்வார்
சொல்வதால் நம் கொள்கலன் கூட வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.

வாழ்க மனமே கைவிடேல். உயிரும் உடலும் மங்கவொட்டேல்.

க.>


2009/9/1 K R A Narasiah <naras...@gmail.com>:

devoo

unread,
Aug 31, 2009, 11:46:18 PM8/31/09
to மின்தமிழ்
Sep 1, 8:35 am, "N. Kannan"

*நம் கொள்கலன் கூட வாய்ப்புள்ளது*

கோலோகத்திலும், வைகுந்தத்திலும் கட்டாயம் கூடுகிறது.
இவ்வளவு துரம் பேசிவிட்டு மேலும் அவநம்பிக்கைக்கு யாரும்
இடம் தரக்கூடாது.

தேவ்

v4vijayakumar

unread,
Sep 1, 2009, 12:20:28 AM9/1/09
to மின்தமிழ்
On Aug 25, 10:57 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
...
> அறிவைப் பூரணமாக உள்வாங்கியது பக்தி என்பது என்று நமக்குப் புரியத்
> தொடங்குகிறதோ அன்று நமக்குக் கிழக்கு வெளுத்தது என்று பொருள்.
...

பக்தி வேறு, அறிவு வேறு. அறிவு ஓரிடத்தில் இருந்தால் அது கேள்விகள்
கேட்டுக் கொண்டேயிருக்கும், அதற்கு அறிவது முதன்மை; ஆனால் பக்தியோ
அனுபவம். இதை அறிவுப்பூர்வமாக ஆராயக்கூடாது.

N. Kannan

unread,
Sep 1, 2009, 12:57:29 AM9/1/09
to mint...@googlegroups.com
தேவ்:

பக்தனுக்கும், பயித்திற்குமுள்ள வேறுபாடு என்று 10 அடுக்குவார் பரனூர் பெரியவர்.
உங்களுக்கு நினைவில் இருக்கிறதா?
அதுவொரு சுவையான அலசல்!

க.>

2009/9/1 devoo <rde...@gmail.com>:

K R A Narasiah

unread,
Sep 1, 2009, 1:26:49 AM9/1/09
to mint...@googlegroups.com
சுவாமி சிவானந்தர் சொல்வார்:
மூட நம்பிக்கையை விட மோசமானது மூட அவநம்பிக்கை!
நரசய்யா
2009/9/1 N. Kannan <navan...@gmail.com>

kra narasiah

unread,
Sep 1, 2009, 1:27:02 AM9/1/09
to mint...@googlegroups.com
சுவாமி சிவானந்தர் சொல்வார்:
மூட நம்பிக்கையை விட மோசமானது மூட அவநம்பிக்கை!
நரசய்யா

--- On Mon, 8/31/09, devoo <rde...@gmail.com> wrote:

Innamburan Innamburan

unread,
Sep 1, 2009, 7:19:54 AM9/1/09
to mint...@googlegroups.com
கண்ணனின் இரு அலகுகளும், பத்து நிலைகளும் மகிழ்வும், நெகிழ்வும் அள்ளி அள்ளி கொடுக்கும் அமுதசுரபியாக அமைகின்றன. கேளுங்கள்.

"இன்னிசை வீணையர் வாழினர் ஒருபால்
  இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒரு பால்
துள்ளிய பிணைமலர்க் கையினர் ஒரு பால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒரு பால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒரு பால்..."
பெண்டகோஸ்ட் கிருத்துவர்களின் புரியா மொழி வணக்கங்களும் இவ்வாறு தான் அமைந்தாலும், "...திருப்பெருந்துறையுறை.." இறையைத் தொழுபவர்களுக்கு அது பக்தி தருவதில்லை. சரி.

பாரதியார் சத்யாக்ரஹ இடம், பொருள், ஏவலில், முருகனை அழைத்தது இரண்டு அலகுகளுக்கும் பொருந்துகிறது; பொருந்தவில்லை. இது அவரவர் மனநிலை. இறையை (அஃறிணை) என்ற இலக்கை தவிர்த்த பக்தி அல்லது ஒத்த உணர்வு இருக்குமா? பல வருடங்களுக்கு முன் ஒரிஸ்ஸாவின்  மனித நடமாட்டம் காணாத சிமிலிபால் காட்டுப்பகுதியில் வைகறை பொழுதினிலே விவரிக்கமுடியாத ஒரு நிம்மதி, அமைதி, மோனம், அமரிக்கை என்னை ஆட்கொண்டது. நிச்சயமாக, அது இறை உணர்வு அல்ல. உள்ளுற ஒரு குழப்பமும் இருந்து, தலை நிமிர்க்க வைத்தது.  ஒரு ஒத்தை யானை (என்னே கம்பீரம்! என்னே அலட்சியம்!) உணர்வெல்லாம், உடலை நோக்கி விரைய, செயலற்று நின்ற என்னை ஒரு சிறு தூசு என கருதி விலகியது போலும். ஏதோ சம்பந்தமில்லா விஷயம் சொல்கிறான் என்ரு, நீங்கள் கருதினால், எனக்கு சொல்லத் தெரியவில்லை என்று பொருள். 







2009/8/31 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Tthamizth Tthenee

unread,
Sep 1, 2009, 7:36:59 AM9/1/09
to mint...@googlegroups.com
ஆக  பயம் வந்தால் நம் மனதும் உடலும் உறைந்து போகிறது
அப்போது  பக்தி வருகிறது
 
பயம் வந்தால் பக்தி வருகிறதா?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

Innamburan Innamburan

unread,
Sep 1, 2009, 8:04:47 AM9/1/09
to mint...@googlegroups.com
செயலற்று போனது, அச்சத்தின் உச்சமோ? தெரியவில்லை. அச்சமொன்று ஒன்று இருந்ததாகத் தோன்றவில்லை. மேலும் பக்தி என்ற எல்லோரும் புரிந்துகொள்ளும் நிலை ஏற்படவில்லை. ஒரு சமயம், மோனமோ அல்லது அதன் போலியோ முன்பே நடந்து விட்டபடியால், இருக்கலாம். 

2009/9/1 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

N. Kannan

unread,
Sep 1, 2009, 8:48:31 AM9/1/09
to mint...@googlegroups.com
உண்மை!

தன் உணர்வு அற்றுப் போகும் சமயங்கள் பல. நீங்கள் சொல்லும் ஒரு காட்சி.
மலையருவியைக் கண்டு மலைக்கும் போது `நான்` இல்லாமல் போய்விடுகிறது. மிக
அழகிய நடனத்தை, ஓவியத்தை, கவிதையைக் கண்ணுறும் போது `நான்`
அழிந்துவிடுகிறது. பெரிய மலையிலிருந்து ஒரே தாவலாகக் கீழிறங்கும் ஐஸ்
ஸ்கேட், பங்கிஜம்ப், கிளைடிங் போன்ற செயல்களின் போதும் `நான்` அற்றுப்
போகிறது. குழந்தை ஆழ்ந்து படிக்கும் போது ஆள் அரவமே இருப்பதில்லை. `நான்`
இல்லாமல் போகிறது.

உங்களுக்கு அப்போது தோன்றிய உணர்வை தியானம் என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி.
எப்போதெல்லம் இரைச்சல் இல்லையோ. அப்போது தியானம் வந்து அமர்கிறது. நமது
இரைச்சல் எது என்று விளங்கியிருக்கும் ;-)

க.>

2009/9/1 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

karth...@gmail.com

unread,
Sep 1, 2009, 9:01:36 AM9/1/09
to மின்தமிழ்
பாகவதம், சடகோபன், பாரதியார், பரனூர் பெரியவர், சுவாமி
சிவானந்தர் ஆகியோரிடமிருந்து
சான்றுகள் காட்டப்படும்போது அவர்களெல்லாம் ஒரு சார்புடைய
சாட்சிகளாக ஆகமாட்டார்களா?
இந்த உரையாடலே ஒரு inbreeding தன்மையில் செல்லுகிறதல்லவா?

ரெ.கா.

N. Kannan

unread,
Sep 1, 2009, 9:16:03 AM9/1/09
to mint...@googlegroups.com
இல்லை! இங்குதான் பக்தி மரபு தோன்றி வளர்ந்திருக்கிறது. ஜடாயு கிறிஸ்தவதை
ஒப்புநோக்கி சொன்ன போதுதான் பக்தி பற்றிய் பேச்சு இங்கு எழுந்தது.

இந்த மண்ணின் மரபு இது. இவர்களை விட நமக்கு வேறு என்ன authority வேண்டும்?

ஆயினும் பக்தி எனும் உணர்வு தமிழனுக்கு மட்டும் சொந்தமில்லை. அது
மானுடத்திற்குச் சொந்தம். சென்றமுறை நான் மலேசியா வந்த போது எனது
பேச்சுக்களுக்கு நடுவில் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் (ஆண்/பெண்)
என்னிடம் சமயம் பற்றிப் பேசினர். அவர்கள் எல்லாம் பக்தியுள்ள
முசல்மான்கள். எனக்கு அது சத் சங்கமாகவே பட்டது. கம்போடியாவில் கண்ணாடியை
அருவியில் தொலைத்து விட்டு மாற்றுக் கண்ணாடிக்காக காத்திருந்த போது ஒரு
பிலிபினோ கிறிஸ்தவப் பெண் எனக்கு துணை கொடுத்தாள். அவளது கிறிஸ்தவம்
பக்தி பூர்வமான கிறிஸ்தவம். அதுவும் எனக்கு சத் சங்கமே.

க.>

2009/9/1 karth...@gmail.com <karth...@gmail.com>:

devoo

unread,
Sep 1, 2009, 10:22:15 AM9/1/09
to மின்தமிழ்
அவர்தம் கடைய நல்லூர் ஸப்தாஹ ஒலிநாடா கிடைக்குமானால்
இங்கு இணைக்கலாம். 35 ஆண்டுகளுக்கு முற்பட்டது.கேள்விகளுக்கு
இடமளிக்காத ஒரு கருத்துத் தெளிவு. ஆழ்வார்களின் மன நிலையை அழகுற ஐயம்
திரிபற விளக்கியிருப்பார். முதல் வரிசை நிறைய அத்வைதத்தில் தோய்ந்த முதிய
பண்டிதர்கள். அவர் அக்கொள்கையைக் கண்டிக்கவும் இல்லை. அதை ஒரு நிலையில்
வைத்து அதற்குமேல் விளக்கம் கூறிய அந்த அழகு ! எப்படி விவரிப்பது ?

தேவ்

N. Kannan

unread,
Sep 5, 2009, 3:13:04 AM9/5/09
to mint...@googlegroups.com
பக்தி பற்றிப் பேசும் பேச்சு, ஆண் பேச்சாகவே இருப்பதும் ஆச்சர்யம்!

அக்காலத்தில் ஆண் வேட்டையாடினான். வெளியே திரிந்தான். பின்னால் சமூக
அமைப்பு தோன்றியபோது போர்த் திட்டமிட்டான். ஒருவரையொருவ்ர் கொன்று
குவித்தான். இவையெல்லாம் ஆணுக்கேயுள்ள குணங்கள். அதே ஆளுமை உள்கிடந்து
ஊறும் இறைமையைப் பற்றிப் பேசும் போதும் முன்னின்று புகல்வது
வேடிக்கையாகக்கூட உள்ளது.

பெண் என்பவள் அடிப்படையில் உறவு சார்ந்து இய்ங்கிறாள். ஒரு கருவை
பத்துமாதம் சுமக்கிறாள். அக்கரு படும் வேதனையை உள்ளுணர்வாக அறிகிறாள்.
பிறந்து மண்ணில் விழுந்தவுடன் அழும் முதல் குரலுக்கு தாய்ப்பால் எனும்
மருந்தை தன்னுடலிலேயே தயாராக வைத்திருக்கிறாள். குழந்தை சிரித்தால்,
சிணுங்கினால் அவளுக்கு அதன் பொருள் புரிகிறது. ஒருமுறை நேஷனல்
ஜியோகிராபிக் எழுதியது. ஆப்பிரிக்காவில் முதுகில் பிள்ளையைச் சுமந்து
கொண்டு ஒரு ஆப்பிரிக்கப் பெண். நடந்து கொண்டே இருந்தவள், சட்டென நின்று
பிள்ளையை இறக்கிவிடுகிறாள். அது ஒண்ணுக்குப் போகிறது. குழந்தைக்கு
இன்னும் பேச்சு வரவில்லை. அதன் உடல் அசௌகர்யம் இவளுக்குப் புரிகிறது.
அதன் உடல்மொழி புரிகிறது. எப்படிக் கண்டுபிடித்தாய்? என்று இவர்கள்
கேட்கிறார்கள். உள்ளுணர்வுதான் காரணம் என்கிறாள் தாய்.

இந்த உள்ளுணர்வு. தன்னுள்ளே இருந்து இயங்கும் ஒன்றை அறியும் உணர்வு
அவளுக்கு இயற்கையாகவே உள்ளது. எனவே பக்தி என்பதை உணர்வு பூர்வமாக
அறிந்தவள் பெண்தான்.

ஆனால் ஆண் சக்தி படைத்தவனாக இருக்கிறான். எல்லாவற்றையும் இயக்குகிறான்.
முடிவுகள் எடுக்கிறான். வழி நடத்துகிறான். சாஸ்திரங்கள் எழுதுகிறான்.
தர்மபரிபாலணம் செய்கிறான். பெண் இதை உவப்புடன் ஏற்றுக் கொள்கிறாள். தர்ம
பரிபாலணம் செய்யும் அச்சக்தியிடம் பிஞ்சு பிள்ளைகளை பரிவுடன் அணுக
வைக்கிறாள். குழந்தைக்காக பரிந்து பேசுகிறாள். இதைப் புருஷாகாரம்
என்கின்றனர் பெரியோர்.

பெண்ணின் வழி நடத்தல் இன்றி பக்தியைப் பூரணமாகப் புரிந்து கொள்ளுதல் கடினம்.

கண்ணன்

Geetha Sambasivam

unread,
Sep 5, 2009, 9:08:40 PM9/5/09
to mint...@googlegroups.com
//ஜீவனுக்கான   ஆபரேடிங்  சிஸ்டம்தான்    கரண  களேபரம்    என்னும்     சதுர்விம்சதி   தத்துவங்களால்   ஆன     உலகு - உடல் - உயிர்  போலும். //

ஒப்புநோக்கல் நல்லா இருக்கு!

2009/9/5 srirangammohanarangan v <ranga...@gmail.com>
கடந்த    நாலு  நாட்களாக    பிஸியில்   ஆபரேடிங்  சிஸ்டம்   ஔட்.  பூட்  ஆகவில்லை.     போகட்டும்  தானாக   எப்பொழுது   கூடி  அமைகிறதோ   அப்பொழுது   மீண்டும்   வந்து  எழுதலாம்   என்று  இருந்துவிட்டேன்.   என்ன  மிஞ்சிப்  போனால்   தேவ்  வருத்தப்பட்டிருப்பார்.   கண்ணன்   ஒழிந்தானய்யா  ஒருவழியாக   என்று  மற்ற  இழைகளில்   கவனம்   செலுத்தியிருப்பார்.   இதுவும்   ஒருவித  மரணம்தானோ?    புனரபி  ஜனனம்   புனரபி  மரணம்    என்றதின்   ஒருவேர்   இந்த  வழியாகவும்  ஓடுகிறதோ?   ஆபரேடிங்  சிஸ்டம்   அவுட்டு  என்றால்   உள்ளே   நுழைய  முடியாது.   வெளியிலிருந்து  நான்  என்ன  கத்தினாலும்   உங்கள்  காதில்  விழப்போவதில்லை.   இங்கு   உங்களோடு   தொடர்பு  கொள்ளும்  அமைப்பில்,  வடிவில்,   முறையில்   தொடர்பு  கொண்டால்தான்   மகிழ்வோர்   மகிழவும்,  மற்றோர்  காணவும்  முடிகிறது.   மின்தமிழைப்  பொருத்தவரையில்  இப்பொழுதுதான்  நான்  உளனானேன்.  ஆனால்    முன்னாலும்  நான்  இருந்தேன்.    'அர்ஜுனா!    நீயும்  நானும்    அக்காலத்தும்   இருந்தோம்.    இவர்களும்   இருந்தார்கள்.   இனியும்  எக்காலத்தும்    நீயும்  நானும்  இவர்களும்    இல்லாமல்  இருக்கப்போவதில்லை.'     'இந்த    ஜீவன்    கர்மங்கள்   தீர்ந்த   இந்த  உடலை    பழஞ்சட்டையைக்  கழட்டி  எறிவதுபோல்    எறிந்துவிட்டு,   புத்துடல்   தேடி   புறப்படும்  மரணத்தில்.'   'வருவதற்கோ    போவதற்கோ  கலங்கான்   பண்டிதன்'.   கூட்டிக்கழித்துப்  பார்த்தால்    எல்லாம்  சரியாகத்தான்    வருகிறது.   ஜீவனுக்கான   ஆபரேடிங்  சிஸ்டம்தான்    கரண  களேபரம்    என்னும்     சதுர்விம்சதி   தத்துவங்களால்   ஆன     உலகு - உடல் - உயிர்  போலும்.    கர்மமும்,  காலமும்   வினை  மடுப்பானும்,   மடுக்கும்   வாயும்  போலும்.   சரி  இதில்  ஆத்மா   என்ன   செய்கிறது?     சாட்சி   என்கிறது  வேதாந்தம்.   
'பொய்நின்ற    ஞானமும்    பொல்லா  ஒழுக்கும்   அழுக்குடம்பும்   இந்நின்ற   நீர்மை   இனி  யாமுறாமை'    வேண்டுகிறது   குருகூர்  நம்பியின்   குறுகாத   பக்தி.
 
சரி   வேண்டுவது  யார்?    அவர்   இருபத்தி  நான்கு  தத்துவக்   கட்டில்   சேர்ந்தவரா?    அல்லது   தனியா?   இல்லை   கணக்குப்  பாடத்தில்  போல     அப்படி  என்று  எடுத்துக்  கொள்ள  வேண்டுமா?   கடைசியில்    கழித்துக்கட்ட.
 
பூர்வாசாரியர்களிடத்தில்   மிக  ஜாக்கிரதையாக   கேள்வி  கேட்க  வேண்டும்.    ஒருவர்    பாவம்  என்னைப்  போன்றவர்.    மோட்சம்      பெற   வழி  என்ன    என்று  கேட்டுவிட்டார்.    மோட்சம்  என்றால்   என்ன?      'இந்த  ஆத்மா   கடைத்தேற'    எதிலிருந்து  இது   கடைத்தேற  வேண்டும்?      'என்னது.   இந்த  ஸம்ஸாரத்தில்,    உடல்  தளையில்   மாட்டிக்கொண்டு    பாடாய்ப்  படுகிறது'.      அவரவர்    பொருளுக்கு   அவரவர்   கவலைப்  படும்  பொழுது   நீ  ஏன்   நடுவில்  கிடந்து   அல்லாடுகிறாய்?     'என்னது   மோட்சம்  எனக்குன்னா?' 
இந்த   ஆத்மா    பகவத்  அதீனம்.   எனவே   அதில்  உனக்கு  அதிகாரம்  இல்லை.   பேசாமல்  இரு.    இந்த  உடல்    கர்ம  அதீனம்.    அதிலும்   உனக்கு  அதிகாரம்  இல்லை.   இதில்  நடுவில்  கிடந்து  அல்லாடுகிறாயே   நீ   யார்?  'என்னது   நான்  நான்  நான்   '    இதைத்தான்    ஊழிதோறூழி   சொல்லிக்  கொண்டே  இருக்கிறாய்.   என்ன  திக்குவாயோ!     யாரென்று   சொல்லி   முடித்தபாடில்லை.  
 
யானாய்  என்னில்  நிறைந்தானை    என்கிறது   ஆழ்வாரின்   பக்திக்குள்    நிறைந்த    ஞானம்.    'அஹம்  பிரம்மாஸ்மி'  என்கிறது    உபநிஷத   ஞானத்திற்குள்    நிரம்பி   வெளிப்பொசியும்    பக்தி. 
 
இப்படி  ஆளுக்கு  ஆள்   அஞ்ஞானத்தையும்,  அரைகுறை   ஞானத்தையும்   விரட்டினால்   அது  எங்கே  போகும்,  பாவம்!   எனக்குள்   வந்து   ஒண்டிக்கொண்டு    'தயவு  செய்து  என்னைக்  காட்டிக்  கொடுத்து  விடாதே'    என்று  கெஞ்சுகிறது. 



Tirumurti Vasudevan

unread,
Sep 5, 2009, 9:52:14 PM9/5/09
to mint...@googlegroups.com


2009/9/5 srirangammohanarangan v <ranga...@gmail.com>


 
இப்படி  ஆளுக்கு  ஆள்   அஞ்ஞானத்தையும்,  அரைகுறை   ஞானத்தையும்   விரட்டினால்   அது  எங்கே  போகும்,  பாவம்!   எனக்குள்   வந்து   ஒண்டிக்கொண்டு    'தயவு  செய்து  என்னைக்  காட்டிக்  கொடுத்து  விடாதே'    என்று  கெஞ்சுகிறது. 

:-))
ரங்கனாரின் சடில்  ஹ்யூமர் ரொம்பவே ரசிக்கக்கூடியதுதான்
திவா


--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Chandra sekaran

unread,
Sep 6, 2009, 1:18:48 AM9/6/09
to mint...@googlegroups.com
ரங்கன் அண்ணா இன் full form. நடக்கட்டும் ராஜ பாட்டை!
சந்திரா 
 -- 
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

devoo

unread,
Sep 6, 2009, 1:24:25 AM9/6/09
to மின்தமிழ்
Sep 5, 11:08 pm, srirangammohanarangan v
* தேவ் வருத்தப்பட்டிருப்பார்*

ஒரு குழுச் சார்பு,கொஞ்சம் பிடிபடாத நடை இவை காரணமாக ஈட்டின்
ப்ரேமையும்,ஞானமும் தோய்ந்த அருமையான பகுதிகளைத் தமிழர் காலம் காலமாகப்
புரிந்துகொள்ளாமல் போனது எனக்கு மிக வருத்தமே.அரங்கனார் மனம் வைத்தால்
அவற்றை அரங்கில் பகிர்ந்து கொள்ளமுடியும் என்று கோரியதும் உண்மை.
இடையூறு நேரக் கூடாது என்று விஷ்வக்ஸேனரையும் அழைத்தேன் மற்றோர் இழையில்.

வருத்தமும் தீர்ந்து மகிழ அரங்கனும், அரங்கனாரும் திரு உள்ளம் பற்ற
வேணும். ஐயங்கள் இருப்பின் அன்பர்கள் தயங்காமல் தெரிவித்துப் பங்கு பெற
வேண்டும். இது ஓர் அழகிய துறை.


தேவ்

N. Kannan

unread,
Sep 6, 2009, 2:22:22 AM9/6/09
to mint...@googlegroups.com
தேவர் கட்டளை என்பதை நான் ஆண்டவன் கட்டளை என்று எண்ணிவிட்டேன் ;-)

ஈடு உலாவரப்போகிறது எனில் என் போன்ற ஈக்களுக்கு அங்கென்ன வேலை?

கப்சிப் காராவடை! அரங்கனார் ராஜபாட்டை அவருடையது. வழிக்கடை இளனிக்கடை நான்!

க.>

2009/9/6 devoo <rde...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Sep 6, 2009, 3:39:51 AM9/6/09
to mint...@googlegroups.com


On 9/6/09, N. Kannan <navan...@gmail.com> wrote:
 

                " ஞானோதயம்  "

           

 

ஈக்களோடு  ஈக்களாய்  குப்பைத்

    தொட்டியில்  வாசம்

ஒரு  திடீர்  ஞானோதயம்

தேனீயாய்  மாறி  பூக்களோடு   நேசம்

  தமிழ்ப்பாக்களோடு  வாசம்
  தமிழ்த் தேனீயாய்  மாறி

தமிழ்ப்  பூக்களோடு  வாசம்

   பக்திப் பூக்களோடு  வாசம்

தமிழ்தான் என்  ஸ்வாசம்

 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

வர் கட்டளை என்பதை நான் ஆண்டவன் கட்டளை என்று எண்ணிவிட்டேன் ;-)
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

N. Kannan

unread,
Sep 6, 2009, 4:56:14 AM9/6/09
to mint...@googlegroups.com
நீர் கொடுத்து வைத்தவர்தான் ;-)
பூர்வஜென்ம வாசனை என்பது விடாமல் துறத்துகிறதே!
எனக்கினி பிறவி வேண்டாம் என்பது இந்த வாசனைகளைத்தானோ என்றொரு சம்ஸயம்
ஏதோ, தீவட்டிப் பிச்சன் போல் ஒரு கைங்கர்யம் இபோதாவது கிடைக்கட்டும்
என்று இருக்கிறேன்.
பிரவச்சனம் ஆரம்பமாயிடுத்தா?

க.>

2009/9/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
>                 " ஞானோதயம்  "

devoo

unread,
Sep 6, 2009, 7:51:00 AM9/6/09
to மின்தமிழ்
Sep 6, 1:56 pm, "N. Kannan"
* ஏதோ, தீவட்டிப் பிச்சன் போல் ஒரு கைங்கர்யம் *

திருவிளக்குப் பிச்சனைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
ஏதோ என இழுப்பதற்கு அவர் செய்த கைங்கர்யம் என்ன சாமானியமானதா?
ஈடு விரிவுரை கேட்க எழுந்த அரங்கனை அதட்டி மீண்டும்
அரவணைமேல் கிடத்த வேண்டும் என்றால் அவர் எத்தனை தகுதி வாய்க்கப்
பெற்றவராய் இருந்திருக்க வேண்டும்?
ஈடு பல அரிய விஷயங்களை விரைந்து சொல்லிக்கொண்டு போகும்.உட்பொருள்
புரியும்போது வியப்பும், ஆனந்தமும் ஏற்படும்.
ஓர் உத்தம அதிகாரி நம்மில் இருக்கும்போது அடியேன் பேசத்துணிவது பொருந்தாத
செயல்.

தேவ்

N. Kannan

unread,
Sep 7, 2009, 10:26:09 AM9/7/09
to mint...@googlegroups.com
தேவு சார்:

திருவிளக்குப் பிச்சன் கதையை உங்கள் நடையில் சொல்லுங்களேன்.
சுவாரசியமாக இருக்கும். பிரவச்சன சம்பிரதாயத்தின் பெருமையைச்
சொன்னதாகவும் இருக்கும்.
பாட்டிற்குத்தான் தெய்வம் இற(ர)ங்கும் என்றில்லை என்பதைச் சுட்டும்
நிகழ்வுகள் அறியப்பட வேண்டியவையே!

எதிர்பார்ப்புடன்,
க.>

2009/9/6 devoo <rde...@gmail.com>:

kaviyogi vedham

unread,
Sep 8, 2009, 9:12:17 PM9/8/09
to mint...@googlegroups.com, Mohanarangam POET
ஏனு ஸ்வாமி? மோஹன ரங்கா! ஆசி.
 இதுயாருக்கு விடுத்த கோபப் பதில். சொன்னால் புரியும்..
 இன்னும் தெளிவாக ‘பக்தி’ பற்றி எழுதக் கோருகிறேன்...இந்தச் சின்ன மர மண்டையில் ஏற மாட்டேன் என்கிறதே!,
 யோகியார்

--- On Tue, 9/8/09, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:

From: srirangammohanarangan v <ranga...@gmail.com>
Subject: [MinTamil] Re: எது பக்தி?
To: mint...@googlegroups.com
Date: Tuesday, September 8, 2009, 1:18 PM

நாங்கள்  எல்லாம்  இதுநாள்  வரையில்  பக்தி,  வழிபாடு,  நம்பிக்கை,  பிரார்த்தனை   என்று  தோய்ந்துகொண்டுதான்   இருக்கிறோம்.   நீயாகப்  புதிதாக  வந்து    பக்தி   புரியாது   என்று  சொல்லி,  இது  வரையில்  நாம்  பக்தி  என்பதையே  அறிந்ததே  இல்லை    என்று கதை  விடுகிறாய்.   நீ  வேண்டுமானால்  தறிகெட்டு  அலைந்திருக்கலாம்.    போனது  போக   இப்பொழுதாவது  புரிந்துகொள்.   அதை  விட்டுவிட்டு   உனக்குப்  புரியவில்லையென்றால்  ஊருக்கே  புரியவில்லை  என்று  அர்த்தமா?   எல்லாம்    உங்கள்   இதய  மொணமொணப்பு   புரிகிறது.   ஆனாலும்  அங்குதான்   மர்மமே   ஆரம்பம்  ஆகிறது.
 
நம்பிக்கை   என்கிறோம்.   சொல்லும்பொழுதே   என்ன  பொருளாகிறது?    அறிவின்படி   பார்த்தால்  அது    இல்லையென்றிருக்கலாம்    ஆனால்    அறிவை இதற்கெல்லாம்   கொண்டு  வரக்கூடாது.    இது  அறிவிற்கு  அப்பாற்பட்டது.  நம்ப  வேண்டும்.  அதான்.    உடனே  நமக்கு   உள்ளூர்   கவிஞர்   ஊக்கம்  அளிக்க  வந்துவிடுவார்.   'நம்புவதே   வழி    என்ற     மறைதனை  நாமின்று  நம்பிவிட்டோம்'      எனக்குத்  தெரிந்தவரை     'நம்பு'  என்று  மறை    எந்த  இடத்திலும்  சொல்லவில்லை.   வேதத்தில்   தேடினாலும்  கிடைக்காத   ஒரே  வார்த்தை  நம்பிக்கை.   சிரத்தை    என்ற   வார்த்தையை   இப்படி   சில்லரை  மாற்றி   வைத்துக்கொண்டு     செல்லாவணியாகப்  பயன்படுத்துகின்றார்கள்  போலும்.   இந்த  நம்பிக்கையை  வைத்துக்கொண்டு    செயல்  செய்கிறோம்.   இறைபணி  என்கிறோம்.  ஒரே  இரைச்சல்!     இறை  என்பது  இருக்கட்டும்.   பணி  என்பது  என்ன     அப்புறம்   இறைவனுக்கு   இறைவனால்    பணி  என்னும்    விசேஷம்  என்ன?    அதாவது   புண்ணியம்  உண்டு.    கைமேல்  பலன்   எதிர்பார்க்க  வில்லையென்றாலும்.    அவன்  பார்த்துக்கொண்டு    நம்மைப்  பற்றிக்  குறித்துக் கொள்வான்.   அதான்  சொன்னேனே!   நாம்    நம்மை  விட்டு  வெளியே  வருவதே  இல்லை.   நன்று  சொல்லினர்   ஸ்ரீராமகிருஷ்ண    பரமஹம்ஸம்!       இப்படி  ஒரு  ஜம்ப்    அப்படி  ஒரு  ஜம்ப்    அது  சமுத்திரமாகட்டும்    இல்லை  அண்ட  கடாகத்து  அப்புறத்து   அப்புவாகவெ  இருக்கட்டும்.     இந்த  அளவையில்   அடங்கவேண்டும்.  இல்லையா    சுத்தப்  பொய்.  அப்படிச்  சொன்னாலும்  பரவாயில்லை.  அதிலும்  நாம்  கைதேர்ந்தவர்கள்.     'ஏதோ  நம்ம   அன்றாட   வாழ்க்கைல   சராசரி    மனுஷாளுக்கு   யத்  கிஞ்சித்   என்ன  முடியுமோ.   மிச்சத்தையெல்லாம்  ஆண்டவன்  பார்த்துப்பான்'.   ஓடுகின்ற  வாழ்க்கையில்    படுகின்ற   அத்தனை   அல்லல்களுக்கிடையில்   ஏதோ  ஆசுவாசமாகக்  கிடைக்கும்   மனத்திருப்தியைச்  சார்ந்த    மனநிலையை   எள்ளுவது   என்  நோக்கமன்று.  அது  எத்தனை   எத்தனை   பாரங்களைச்  சுமக்கும்  வலுவைத்  தந்துவிடுகிறது  என்பதை  உணர்வேன்.  ஆனால்  பக்தி  என்ற  இடத்தில்  அதைக்  கொண்டு  வைத்துவிடுவது   வெளிச்சத்தை  மறைக்கிற  வேலை.
 
சரி   ஒருவர்   நாள்  கொள்ளாமல்   பூஜை  செய்கிறார்   என்று  வைத்துக்கொள்வோம்.  அவருடையது  பக்தியா?  நான்  சொன்னால்   வம்பு.    பராசர   பட்டரின்   வாழ்க்கையில்   ஒரு   நிகழ்வு.    ஒரு   தோழர்   பக்தியை    ஒரு  கை  பார்க்கவேண்டும்    என்று    புறப்பட்டிருப்பார்போல    என்  மாதிரி.    பராசர  பட்டரிடம்  வந்து   தனக்கு   நித்யம்   பூஜாகிரமம்    ஒன்று   உபதேசிக்கும்படி   கூறினார்.   பட்டர்  பார்க்கலாம்  பார்க்கலாம்   எனறு  சொல்லிப் பார்த்தார்.  ஆள்  விடுவதாக  இல்லை.   சரி  இந்தா  என்று   நெடும்  யாமப் போது  செய்யலாம்படியான்   அப்படி   நிதயம்   பூஜா  முறைகளை  எழுதித்  தந்தார்.   விளக்கி   எப்படி  எப்படிச்  செய்ய  வேண்டும்   என்றெல்லாம்   கற்றுத்  தந்தார்.    நமது,  மன்னிக்கவும்,   எனது   தோழருக்கு    மகிழ்ச்சியோ  மகிழ்ச்சி.   'வாசித்தும்  பூசித்தும்  போக்கினேன்  போது'   என்று  பின்னி  எடுத்துவிடவேண்டும்    என்று  ஜீமூதமாகச்  சென்றார்.   பணி  தன்  வேலையைக்  காட்டிவிடும்  அல்லவா?    சில  நாள்   சென்றதும்   காலத்தின்   மணிகள்   எல்லாம்   காணாமல்   போய்விட்டதாய்   உணர்ந்தார்.     சரி  நமக்கு   இப்படி   இருக்கிறதே     கற்றுக்  கொடுத்த    அவர்   எப்படி   இதை  சமாளிக்கிறார்   என்று  பார்ப்போம்    என்று    மெதுவாகச்  சென்று     பட்டரின்   நித்ய  பூஜையின்   நேரம்  பார்த்துப்  போய்  நின்றார்.     விடிய  விடிய  பகவத்  விஷய   அரட்டையிலேயே   போது  போக்கிய  பட்டர்,   ஆழ்வார்களின்   ஈரச்சொல்   கொண்டு   வந்தார்  உள்ளம்    நனைத்து   வரம்  தந்த  வாழ்வினராய்ப்  போது  போக்கி   பூஜா  காலம்  வந்தவாறே    மனைவியாரைப்  பூஜை  பெட்டியைக்  கொணர்வித்து    பெருமாளுக்கு    இரண்டு  துளசி,   பிரசாதம்,    ஜலம்,    சமர்ப்பித்து    ஆழ்வார்களின்    பாசுரம்  கொண்டு    இரண்டு  பாடி    'அழகியமணவாளா'    என்று  கண்ணீரும்  கம்பலையுமாக     வணங்கியவர்   உடனே    போனகம்  செய்ய   அமர்ந்துவிட்டார்.  
 
நம்ம  ஆசாமிக்கு   ஒன்றும்  புரியவில்லை.  மன்னிக்கவும்  என்னொத்த  ஆசாமிக்கு.   என்னடா  இது!    நமக்கு  என்னவோ  நாள்   பத்தாம    கிரமம்   சொன்னார்.    இப்ப  இங்க   இப்படி    நடக்கிறது.    இன்று   இதை   என்னவென்று   கேட்டுவிட   வேண்டியது.     அங்குதான்   இருக்கிறது   ஸ்ரீவைஷ்ணவம்!     சிந்திக்கவும்,  சிந்தித்ததைத்  துணிந்து  கேட்கவும்,  அவ்வாறு  கேட்டதை   அக்கறையோடும்  பொறுப்போடும்    விளக்குவதை  தம்   தலையாய  கடனாகக்   கொள்ளவும்    செய்துவைத்திருப்பதே   ஸ்ரீவைஷ்ணவம்  ஒன்றுதான்.   அனைத்து  உலக   மதங்களையும்   நோண்டி  நுளசிப்  பாருங்கள்.   ஒப்பு  சொல்ல  வேறொன்று  கிடையாது.  
 
பட்டர்  வந்து  அமர்ந்ததும்   மெதுவாகக்  கேட்டார்,  'எனக்கு  அப்படி    விதித்தது.   இங்கு   இப்படி  நடக்கிறது.   இதற்குக்  காரணம்  என்ன?'   பட்டர்     கூறினார்,  'ஸகல   சாஸ்திரங்களையும்  ஆராய்ந்து   பார்த்தவிடத்து   உமக்கு   அப்ப்டியொழியச்  சொல்லுகைக்கு   ஒருவார்த்தை  கண்டிலேன்;    என்னை  நிரூபித்தவிடத்தில்    இப்படியொழியச்  செய்கைக்கு    ஒரு  செயல்  கண்டிலேன்'.   கேட்டவர்    சகல   சாஸ்திர   பண்டிதர்.   வேள்வி  வல்லவர்.  ஸோம  யாஜி.   அவருக்குப்    பூஜை  என்றால்    இப்படியாம்.    இவருடைய  இயல்பை   வைத்து   நன்கு    நிரூபித்துப்  பார்க்கும்  போது    இதுதான்  சரியாம். 
 
மறந்துபோய்   தெரியாத்  தனமாய்   உனக்கு  ஒரு  கும்பிடு   போட்டுவிட்டேனோ   என்று  கவலைப்  படுகிறார்   ஆழ்வார்   பகவானிடம். 
 
எது  பக்தி?        



karth...@gmail.com

unread,
Sep 8, 2009, 9:57:59 PM9/8/09
to மின்தமிழ்
அரங்கனாரே,

கிளைக் கேள்வி.
பக்தி ஞானத்துக்கான ஒரு படிதானே! கடைசிப் படி?
ஞானம் அடைந்த பின்னும் பக்தி தேவையா? இருக்குமா?

ரெ.கா.

On Sep 9, 2:18 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> நாங்கள்  எல்லாம்  இதுநாள்  வரையில்  பக்தி,  வழிபாடு,  நம்பிக்கை,
> பிரார்த்தனை   என்று  தோய்ந்துகொண்டுதான்   இருக்கிறோம்.   நீயாகப்  புதிதாக
> வந்து    பக்தி   புரியாது   என்று  சொல்லி,  இது  வரையில்  நாம்  பக்தி

> என்பதையே  அறிந்ததே  இல்லை    என்று கதை  விடுகிறாய்.   நீ  வேண்டுமானால்
> தறிகெட்டு  அலைந்திருக்கலாம்.    போனது  போக   இப்பொழுதாவது  புரிந்துகொள்.
> அதை  விட்டுவிட்டு   உனக்குப்  புரியவில்லையென்றால்  ஊருக்கே  புரியவில்லை

devoo

unread,
Sep 9, 2009, 12:12:19 AM9/9/09
to மின்தமிழ்
Sep 8, 11:18 pm, srirangammohanarangan v

*விடிய விடிய பகவத் விஷய அரட்டையிலேயே போது போக்கிய பட்டர்,
ஆழ்வார்களின் ஈரச்சொல் கொண்டு வந்தார் உள்ளம் நனைத்து வரம்
தந்த வாழ்வினராய்ப் போது போக்கி.....*

*பெருமாளுக்கு இரண்டு துளசி, பிரசாதம், ஜலம், சமர்ப்பித்து
ஆழ்வார்களின் பாசுரம் கொண்டு இரண்டு பாடி 'அழகியமணவாளா' என்று


கண்ணீரும் கம்பலையுமாக வணங்கியவர் உடனே போனகம் செய்ய

அமர்ந்துவிட்டார்.*

அவனுடனேயே , அவனிலேயே வாழ்வது பக்தி.இது சரியா ?
அதனால்தான் முகம் மாறாமல் வேற்றூர் செல்வதுபோல் அவரால்
அரங்கத்தைப் பிரிந்து பரமபதம் செல்ல முடிந்தது.

தேவ்

Tirumurti Vasudevan

unread,
Sep 9, 2009, 2:46:05 AM9/9/09
to mint...@googlegroups.com


2009/9/9 devoo <rde...@gmail.com>
Sep 8, 11:18 pm, srirangammohanarangan v

கேட்டவர்    சகல   சாஸ்திர   பண்டிதர்.   வேள்வி  வல்லவர்.  ஸோம  யாஜி.   அவருக்குப்    பூஜை  என்றால்    இப்படியாம்.    இவருடைய  இயல்பை   வைத்து   நன்கு    நிரூபித்துப்  பார்க்கும்  போது    இதுதான்  சரியாம்.

சரிதான். அவரவருக்கு தகுந்தது...  இது மட்டுமே ன்னு எதையும் கட்டம் கட்டி அடைச்சுவிட முடியாது என்று தோன்றுகிறது.

திவா

devoo

unread,
Sep 10, 2009, 6:45:36 AM9/10/09
to மின்தமிழ்

விஜ்ஞானம் - பக்தி ரூபாபந்ந ஞானம் - அறிதலின் அடுத்த பரிணாமம்

அடியேனும் கொடுத்து வைத்த கோஷ்டியில்...

தேவ்

Message has been deleted

N. Kannan

unread,
Sep 11, 2009, 9:01:22 PM9/11/09
to mint...@googlegroups.com
2009/9/12 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> கமலம்மே!    நீங்களும்   என்னைத்  திட்ட  ஆரம்பித்துவிட்டீர்களா?
> கண்ணனிடமிருந்து   தொற்றிக்கொண்டு  விட்டதோ?

> இவையெல்லாம்  சொல்லின்    பல்லூழியும்   பல்லாங்குழியாய்ப்  போம்   படி
> பரந்துவிடும்.    அப்புறம்   கண்ணன்   பாவம்    கடு  கடு  என்று    இது
> மின்னாக்கத்துக்காக   இருக்கிற    குழுமமாக்கும்,  இப்படி  கச்சேரி
> பண்ணினால்   என்ன   செய்வது   என்று    சலித்துக்  கொள்வார்.    நமக்கேன்
> வம்பு?

பரமாத்துமாவும் ரங்கனும் ஒண்ணு. இரண்டும் புரியாது!
இவ்வளவு பரமார்த்தமான விஷயம் பேசிக்கொண்டு இருக்கும் போது கூடவே இந்த
கொணஷ்டை எதற்கு?
இரண்டையும் ஒரே நேரத்தில் எப்படிக் கலந்து கொடுக்கமுடிகிறது?
இதற்கும் ஈடு ஏதாவது உதாகரணம் கொடுக்கிறதோ;-) ?

க.>’

பிகு: நான் என்றாவது உம்மைத்திட்டி மின்தமிழில் எழுதியதுண்டா. புகழ்தலில்
குறைவா என்று கேட்டதுண்டு. அது தப்பா ;-)

Chandra sekaran

unread,
Sep 12, 2009, 3:37:54 PM9/12/09
to mint...@googlegroups.com
மெட்ராஸ் பாஷையில் சொன்னால் = பின்னிப் பெடல் எடுக்கிறீங்களே தலைவா!
சந்திராவின் கூற்று- ரங்கன் அண்ணாவின் நடையை ரசிக்கவே, பல முறை படித்தால் மரமண்டைக்குள்ளும் அவ்வப்போது லைட் பளிச்சிடுகிறது ;)

காசுமி

unread,
Sep 12, 2009, 9:05:39 PM9/12/09
to மின்தமிழ்
On Sep 13, 4:26 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:

> முக்கோல்  பகவர்    தாயாகி  விடுகிறார்.    வலுவான  ரட்சையாக     இட்டவாறே
> கொண்டுசென்று   ஸ்ரீராமானுஜரிடம்    காட்டுகிறார்.    அவரோ   குழந்தைமையைப்
> பார்க்கத்  தெரிவதில்   பரிபூரணர்.    அகவிதழைப்  புறவிதழ்    ஏந்துமாப்போலே
> அழகுற   ஏந்தி    உச்சி  முகர்கிறார்.    விந்தை!    என்ன  இது    த்வயம்
> கழ்கிறது!    என்று  வியந்து  கூறுகிறார்.    

ரங்கன்! கண்கள் பனிக்கின்றன.
இந்த திவ்ய சரிதங்களை இந்தப்பரந்த மின்வெளியிலும் கூறும்படி நியமித்தான்
பாரும் உம்மை!
நாங்கள் பாக்கியவான்கள். உமக்கு ரக்ஷை கட்ட வேண்டும்.

கண்ணன்

Tirumurti Vasudevan

unread,
Sep 12, 2009, 10:08:50 PM9/12/09
to mint...@googlegroups.com
ஹிஹிஹி! சுமித்ரமான ஆசாமி இல்லையா? அதான்!
திவா

2009/9/13 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> மாட்டிக்கிட்டாரு   ஐயா  மாட்டிக்கிட்டாரு!    காசுமி    கண்ணன்  என்று
> கையெழுத்து  போட்டுவிட்டாரே!

N.Kannan

unread,
Sep 12, 2009, 10:15:42 PM9/12/09
to மின்தமிழ்
ஐயா சாமி!

என்னைப் போன்ற வெறும் கண்ணன்களுண்டு.
அண்ணாகண்ணன்களுமுண்டு
பிறகு நினா கண்ணன்
கோகுலகண்ணன்
கண்ணபிரான்
தாமரைக்கண்ணன் இப்படி.
அவரும் ஒரு கண்ணன் போலும்!
எல்லோரும் இருக்கட்டும்.

வெறும் கண்ணன்

On Sep 13, 10:54 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> மாட்டிக்கிட்டாரு   ஐயா  மாட்டிக்கிட்டாரு!    காசுமி    கண்ணன்  என்று
> கையெழுத்து  போட்டுவிட்டாரே!
>

> On 9/13/09, காசுமி <kasume.c...@gmail.com> wrote:

devoo

unread,
Sep 12, 2009, 10:18:12 PM9/12/09
to மின்தமிழ்
Sep 11, 9:52 pm, srirangammohanarangan v
அந்தர்யாமியாய் நிறைந்து நிற்கின்றான். சில வேதாந்திகளுக்கு
இதில் ஒரு பிரச்சனை. என்னவென்றால், கடவுள் ஏதேனும் ஓர்
உயிரினுள் முட்ட முழுக்க நிறைந்துவிட்டால் பின்பு மற்ற
இடங்களில் நிறைவதற்கு பரம்பொருள் என்று ஒன்றே மிச்சம்
இருக்காதே! என்ன செய்வது? அதாவது தர்க்கத்தில்
மகாகெட்டிக்காரர்கள் சில வேதாந்திகள் உண்டு. எமது தர்க்க
சாமர்த்தியத்தினால் எதையும் சாதித்து விட வல்லேம் என்பார்கள்.
நாம் பேசுவது பரம்பொருளைப் பற்றியன்றோ என்றால்...... ம்
கேட்கமாட்டார்கள்.//

வாசித்ததுமுதல் ஜீர்ணமாகாமல் மூளைக்குள் சுற்றிக்கொண்டிருக்கும்
இவ்வரிகள் !! பரமனுக்கு அந்தர்வ்யாப்தியும் இல்லை; பஹிர்வ்யாப்தியுமில்லை
என வரம்பு கட்டும் ஒரு பத்ததி.
இதோடு ஒப்பு நோக்கிய வண்ணம் நேரம் கழிகிறது.அகடித கடனா சக்தியை
மறுத்ததாகுமே எனவும் ஒரு பதற்றம்.இது பற்றிப் பேசினால் அன்பர்களுக்குச்
சுவைக்குமா என்றும் ஒரு தயக்கம்.

தேவ்


N.Kannan

unread,
Sep 12, 2009, 10:31:23 PM9/12/09
to மின்தமிழ்
தேவ்:

ரங்கன், முன்னமே சொன்னது போல் எம்பெருமானார் சபையிலும் சரி, இந்த
அரங்கனார் சபையிலும் சரி, விசாரத்திற்குத்தடை ஏது?

இன்னும் கூட கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன். அதன் நுட்பொருள்
நுகர்வோம்!

க.>

Kamala Devi

unread,
Sep 13, 2009, 12:03:37 AM9/13/09
to mint...@googlegroups.com
ரக்‌ஷையோடு, ஒரு பொன் தூவலும் கூட
கமலம்


----- Original Message ----
From: காசுமி <kasum...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Sunday, 13 September 2009 9:05:39
Subject: [MinTamil] Re: எது பக்தி?

devoo

unread,
Sep 13, 2009, 4:05:31 AM9/13/09
to மின்தமிழ்
Sep 13, 7:31 am, "N.Kannan"

எம்பெருமானார் சபையிலும் சரி, இந்த அரங்கனார் சபையிலும் சரி,
விசாரத்திற்குத்தடை ஏது?//

வ்யாப்தி - எங்கும் பரந்து நிறைதல் : இது எம்பெருமானுக்கு இயல்பாக அமைந்த
எல்லையற்ற தன்மைகளுள் ஒன்று. ’உடனிருந்தறிதி’, ’கரந்தெங்கும் பரந்துளன்’
என்றெல்லாம் இத்தன்மை ஆழ்வார்களால் அனுபவிக்கப்படுகிறது.
அவன் தன் ஸ்வரூபத்தோடு ஒரு பொருளில் உறைந்து விட்டால் மற்றொரு பொருளில்
தங்குவதற்கு என்ன எஞ்சும் ? இது ஒரு கேள்வி.
உள்ளீடற்ற ஒன்றை அணு என்கிறோம்; அதனுள் அவனுக்கு உறைதல் (அந்தர்வ்யாப்தி)
உண்டா ?
எங்கும் பரந்ததை ‘விபு’என்கிறோம்;அதற்கு வெளியேயும் பரந்து உறைவதற்கு
இயலுமா (பஹிர்வ்யாப்தி)?
இவை துணைக் கேள்விகள்.

விடை:
இத்தன்மைகளை நிலை நிறுத்துவதற்கான அளவற்ற ஆற்றல் வாய்க்கப் பெற்றவன்
ஸர்வேச்வரன். இயலாத ஒன்றையும் முடிக்கும் ஆற்றலும் அவனுக்கு இயல்பாக
அமைந்த தன்மை ஆகும்; அதை ‘அகடிதகடநா ஸாமர்த்யம்’என்பர்.இத்தன்மை கொண்டு
அவன் அனைத்திலும் உள்ளும்,புறமும் நிறைந்து
விளங்குகிறான் என முடிவு கட்டுவர்.
’அணோ: அணீயாந்,மஹத: மஹீயாந்’, ’பராஸ்ய சக்தி: விவிதைவ ச்ரூயதே
ஸ்வாபாவிகீ .....’ போன்ற மறைமொழிகள் இதற்குத் துணை செய்வன.நம்பிள்ளைகள்
முதல் கேள்விக்குச் சொன்ன விடை மிக அருமையானது.

புரிந்து கொண்ட அளவு பொருள் சொன்னேன்.
அரங்கனார் இன்னும் சீரிய முறையில் விளக்கம்தர வல்லவர்.

தேவ்

Tirumurti Vasudevan

unread,
Sep 13, 2009, 4:27:02 AM9/13/09
to mint...@googlegroups.com
//உள்ளீடற்ற ஒன்றை அணு என்கிறோம்; அதனுள் அவனுக்கு உறைதல் (அந்தர்வ்யாப்தி)

உண்டா ?
எங்கும் பரந்ததை ‘விபு’என்கிறோம்;அதற்கு வெளியேயும் பரந்து உறைவதற்கு
இயலுமா (பஹிர்வ்யாப்தி)?//

அதனாலதான் அவன் அவனா இருக்கான். நாம் நாமா இருக்கோம். செய்ய முடியும்ன்னு
தோணாததைக்கூட செய்ய முடியுமில்லையா அவ்னாலே?
என் 2 பைசா

:-)

திவா

Geetha Sambasivam

unread,
Sep 13, 2009, 4:35:34 AM9/13/09
to mint...@googlegroups.com
2 பைசாவுக்கு மேலே கொடுக்கிறதே இல்லை!

2009/9/13 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

N.Kannan

unread,
Sep 13, 2009, 4:50:11 AM9/13/09
to மின்தமிழ்
இதைக் கற்றையியல் (குவாண்டம் பிஸிக்ஸ்) ஒரு வகையாகப் புரிந்து
கொண்டுள்ளது.

Nonlocality பற்றிப் பேசும் போது 'எல்லாம்', எச்சமயத்திலும் தொடர்புடன்
இருக்கின்றன என்பது சித்தாந்தம். அது எப்படி சாத்தியமாகும்? நான், என்
உடல் தனியாக, நிற்கிறது. நீ, உன் உடல் தனியாக நிற்கிறது. என்று நாம்
நடைமுறையில் காண்கிறோம். எல்லாம் பாத்தி கட்டிய அமைப்பாகவேதான் உள்ளன.
அதாவது ஒவ்வொரு செல்லும் தன்னை சவ்வு (membrane) மூலம் பிரித்தாள்கிறது.
அதே போல்தான் அணுவும்.

ஆனால் கூர்ந்து கவனித்தால், இப்பாத்தி நீர்புகாத்தன்மையுடன்
இருப்பதில்லை. செல்லுக்கு உள்ளும் புறமும் சதா போக்குவரத்து இருந்து
கொண்டே இருக்கிறது. உடலுக்கு ஒன்பது வாசல் தொடர்புண்டு. அணு என்று
பார்த்தாலும், புரோட்டான், எலெக்றான் (இலத்திரன்) இவைக்கு நடுவே வெளி
இருக்கிறது. வெளியே எல்லாவற்றையும் இணைக்கிறது. அப்பரவெளியாக சர்வேஸ்வரன்
அமைந்துள்ளான்.

இதனால்தான் நாராயணன் என்ற சொல் என்னை அப்படியே ஸ்தம்பிக்க வைக்கிறது.
எவ்வளவு பொருள் உள்ள சொல் அது.

அவன் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக உள்ளான். அவைகளை இயக்குபவனாகவும் உள்ளான்.

கற்றையியல் பார்வையில் இது தெளிவாகவே உள்ளது. அவன் பரந்து விரிந்த
விபுவாக இருக்கும் போதே அந்தர்யாமியாக செல்லின் கருவாகவும் உள்ளான். மிக
எளிய அமைப்பின் மூலம்.

கண்ணன்

N.Kannan

unread,
Sep 13, 2009, 4:51:10 AM9/13/09
to மின்தமிழ்
திவா:

இதை அடிக்கடி இங்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருங்கள். மறந்துவிடுகிறது ;-)

க.>

devoo

unread,
Sep 13, 2009, 6:10:15 AM9/13/09
to மின்தமிழ்
Sep 13, 1:50 pm, "N.Kannan"
*Nonlocality பற்றிப் பேசும் போது 'எல்லாம்', எச்சமயத்திலும் தொடர்புடன்
இருக்கின்றன என்பது சித்தாந்தம்.*

ஆதி சங்கரர் அனைத்துக்குமான தொடர்பை ‘ப்ரோதா’ என்றும், எக்காலத்திலும்
விளங்கும் தன்மையை ’ஜகத் ஸாக்ஷி’ என்றும் கூறுவார் - ’யா ப்ரஹ்மாதி
பிபீலிகாந்த தநுஷு ப்ரோதா ஜகத் ஸாக்ஷிணீ’ ..' ( நான்முகன் முதல் எறும்பு
ஈறாக ஒரே தொடராக விளங்கும்.....)

அறிவியலும்,மெய்யியலும் கருத்தளவில் ஒத்திசைந்து செல்கின்றன; அவை
சொல்லும் மொழி வெவ்வேறு.

தேவ்

Tirumurti Vasudevan

unread,
Sep 13, 2009, 12:08:45 PM9/13/09
to mint...@googlegroups.com
2009/9/13 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> நானே   ஒரு  வழியாக   இதைப்  புரிந்துகொண்டேன்.  ஒவ்வொருவர்  ஜிமெய்ல்
> இன்பாக்ஸிலும்   100  வந்தவுடன்   ஒரு  கட்டு  கட்டி  போட்டுவிட்டு  புது
> எண்ணிக்கை  ஆரம்பிக்கிறது.  எனவே இது  எனக்கு  என்  ஜிமெய்லில்  தெரியும்
> காட்சியே  தவிர  பொதுக்காட்சி  அன்று.

அப்பாடி!   எதையெடுத்தாலும்
> அகவுலகின்   பிரதிபலிப்புதானா?    இப்பொழுதுதான்    புரிகிறது   'அஹங்காரம்
> என்ற   ஆர்ப்பைத்துடைத்தால்     ஆத்மாவுக்கு   அழியாதபேர்   அடியான்
> என்பதிறே'

ரெண்டுமே சரிதான்!
திவா

devoo

unread,
Sep 14, 2009, 5:32:52 AM9/14/09
to மின்தமிழ்
Sep 13, 7:55 pm, srirangammohanarangan v
”அஹங்காரம் என்ற ஆர்ப்பைத் துடைத்தால் ஆத்மாவுக்கு அழியாதபேர் அடியான்
என்பதிறே”

மோனை பொருந்திய உரைநடை அமைப்புக்கும் பூருவர்கள் முன்னோடிகளாயிருந்தனர்
போலும்.
ஈடு பற்றிய இந்த உரையாடல் பல அரிய செய்திகளைத் தரும் என்று
எதிர்பார்க்கிறேன்.

தேவ்


Tthamizth Tthenee

unread,
Sep 19, 2009, 8:55:48 AM9/19/09
to mint...@googlegroups.com

எது பக்தி என்று திரு ரங்கன் அவர்கள் எழுதியதைப் படித்தேன்

எப்போதுமே பெரியவர்கள் தெளிவாக சொல்வார்கள்

தெளிவாக ,மிகத்தெளிவாக  சொல்லிக்கொடுத்து நம்மைக் குழப்புவதில்  வல்லவர்கள் பெரியவர்கள்

பக்தி என்றால் என்ன  என்று யோசித்து யோசித்து ஏற்கெனெவே  குழம்பியிருக்கும் மனதை
திரு ரங்கன் அவர்கள் தன்னுடைய ஆழமான, அழுத்தமான, பொருட்செறிவு  நிறைந்த, வியாக்யானங்களால்
இன்னமும் அதிகமாகக் குழப்பி விட்டார்

அவருக்கு மிக நன்றாகத் தெரிந்திருக்கிறது
தெளிவாக இருப்பவர்களைத்தான் குழப்ப முடியும் என்கிற உண்மை
அதனால் குழம்பியிருந்த நம்மைத் தெளியவைத்து
மிக நுணுக்கமாக  நம்மைக் குழப்பி விட்டார்

ஒரு புறம்  அலகு குத்திக்கொண்டு சாமியாடி வருகிறார்கள்
மறு புறம்  காவடி சுமந்து ஆட்டமாடி வருகிறார்கள்
ஒருவர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து தன் உடலையே உருளையாக்கி  உருண்டு கொண்டிருக்கிறார்
ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு  எதிரே இருக்கும் விக்ரகத்துக்கு செய்யப்படும்  அபிஷேக, அலங்காரங்களையும்,
நைவேத்யங்களையும், கற்பூர தீபாராதனைகளையும் காணாமல்
தனக்குள்ளே ஆழ்ந்து கொண்டிருக்கிறார்

இன்னொருவர் கண்ணை அகலமாக வைத்துக்கொண்டு இறைவனையே பார்த்துக்கொண்டு மனமுருக வேண்டி கொண்டிருக்கிறார்
ஒரு பெண் தன் மெல்லடியால்  மூவடி அளந்த மாயனைப் போல மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து கை கூப்பி நடந்துகொண்டிருக்கிறாள்
அடிப் ப்ரதக்ஷணம் என்று சொல்லுகிறார்கள்

ஒருவர்  கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தபடி
கன்னத்தில் தன் கைகளாலேயே தப்படி போட்டுக்கொண்டு நிற்கிறார்

இறைவனுக்கு நீராட்டம், அலங்காரம் ,செய்து கற்பூர தீபாராதனை செய்யும் அர்ச்சகர் வெறித்த பார்வையாய் இருக்கிறார்

அந்தர்  பஹிச்ச  தத்  ஸர்வம்  வ்யாப்ய   நாராயண  ஸ்தித:  
என்று   மறை  கூறும்   முடிவும்  இஃதே. 
 


அனைத்தையும் பார்த்து விட்டு  திரு ரங்கன் அவர்கள் எழுதிய எது பக்தியும் படித்துவிட்டு

நாம்  இது  அந்தர்   இது  பஹிர்   என்று  வ்யவஹாரம்  செய்கிறோம்.    இது  அன்று  தத்துவப்  பார்வை.  ஏனெனில்    நடுவில்  அமர்ந்து    பட்டுவாடா  செய்கிறோமே   இந்த   நாம்  எங்கு  இருக்கிறது?    அந்தரிலா?   பஹிரிலா?     இரண்டுக்கும்  மீறி  நடுவாந்தரத்திலா?

ஓ அதனால்தான் கத்திமேல் நடப்பது போல் வாழ்வு என்கிறார்களோ
வாயிற்படியை மிதிக்காதே என்கிறார்களோ
பக்தி  என்னும் இறை நம்பிக்கையே
மனிதர்களுக்கு  ஒரு பற்றுக்கோல்
 
நாம் பற்றிக் கொள்ள  ஒரு பிடிமானம் இருக்கிறது  என்னும் நினைவே பக்தி
 
குழந்தைக்கு தாயின் கையைப் போல, அல்லது தகப்பனின் கையைப் போல
 
அந்த பக்தி என்னும் இறை நம்பிக்கை  மட்டும் இல்லையென்றால்
வாழ்வில்  விரக்தி ஒன்றுதான்  மிஞ்சும்
 
கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு  கையில் கிடைக்கும் ஒரு சிறு மரக்கட்டையைப்  போல,
 
பக்தி இல்லாதவனுக்கு  அந்த நேரத்தில் அந்த மரக்கட்டை    கண்ணிலும் படாது,  கண்ணில் பட்டாலும்  உதவாது
 
பதட்டம்தான்  மிஞ்சும்
 
எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி  ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலுமே பக்தி செய்ய முடியவில்லை
 
ஒன்று  அவன் திருவடி, அல்லது  மீண்டும் பிறவாத  ஒரு நிலை
இரண்டில் ஏதோ ஒன்றை  எதிர் பார்த்துதானே  அவர்களும் பக்தி செய்தார்கள்
 
ஆண்டாளும்  அரங்கன்  தன் மணாளனாக வேண்டும் என்னும் நினைப்போடுதானே  சூடிக் கொடுத்தாள்..?
 
 
 
ஆகவே 
 
" பக்தி பக்தி வரைத்தன்று
செயப்பட்டார் சால்பின் வரைத்து  "

இறைவனைப் பார்த்து  எது பக்தி என்று கேட்டேன்

"  போயி வேலையைப் பாரு  "

என்று ஒரு இதமான  அசரீரி கேட்டது

அன்புடன்
தமிழ்த்தேனீ



Tthamizth Tthenee

unread,
Sep 19, 2009, 9:18:43 AM9/19/09
to mint...@googlegroups.com
நன்றி
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
On 9/19/09, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:
இந்தத்   தமிழ்த்  தேனி   ஒரு   ரௌஸு   பிடித்த  பேர்வழி.  குறுக்க  மறுக்க   ஓடி  எதிலேயோ   கையை  வைத்துவிடுகிறார் !!

 
On 9/19/09, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:

எது பக்தி என்று திரு ரங்கன் அவர்கள் எழுதியதைப் படித்தேன்

எப்போதுமே பெரியவர்கள் தெளிவாக சொல்வார்கள்

தெளிவாக ,மிகத்தெளிவாக  சொல்லிக்கொடுத்து நம்மைக் குழப்புவதில்  வல்லவர்கள் பெரியவர்கள்

பக்தி என்றால் என்ன  என்று யோசித்து யோசித்து ஏற்கெனெவே  குழம்பியிருக்கும் மனதை
திரு ரங்கன் அவர்கள் தன்னுடைய ஆழமான, அழுத்தமான, பொருட்செறிவு  நிறைந்த, வியாக்யானங்களால்
இன்னமும் அதிகமாகக் குழப்பி விட்டார்

அவருக்கு மிக நன்றாகத் தெரிந்திருக்கிறது
தெளிவாக இருப்பவர்களைத்தான் குழப்ப முடியும் என்கிற உண்மை
அதனால் குழம்பியிருந்த நம்மைத் தெளியவைத்து
மிக நுணுக்கமாக  நம்மைக் குழப்பி விட்டார்


ஆகவே 
 
" பக்தி பக்தி வரைத்தன்று
செயப்பட்டார் சால்பின் வரைத்து  "

இறைவனைப் பார்த்து  எது பக்தி என்று கேட்டேன்

"  போயி வேலையைப் பாரு  "

என்று ஒரு இதமான  அசரீரி கேட்டது

அன்புடன்
தமிழ்த்தேனீ



karuannam annam

unread,
Sep 19, 2009, 10:29:07 AM9/19/09
to mint...@googlegroups.com

தமிழ்த்

தேனி

கண்ணதாசனுக்கு

அனுபவமே நான்தான் எனச்சொன்ன இறைவன் தங்களுக்கு நம் பணி தொடரலே சேவையே தொண்டே தான் என்று சொல்லியிருக்கிறான். பக்திக்கு அருமையான விளக்கம் . மிக அருமை

மிக்க

அன்புடன்

சொ.வினைதீர்த்தான்

 

 

 
 
 
ஆகவே 
 
" பக்தி பக்தி வரைத்தன்று
செயப்பட்டார் சால்பின் வரைத்து  "

இறைவனைப் பார்த்து  எது பக்தி என்று கேட்டேன்

"  போயி வேலையைப் பாரு  "

என்று ஒரு இதமான  அசரீரி கேட்டது

அன்புடன்
தமிழ்த்தேனீ



N. Kannan

unread,
Sep 19, 2009, 10:37:31 AM9/19/09
to mint...@googlegroups.com
தேனீ கலாச்சிட்டாரு !!
இன்று அவர் நல்ல farm ;-)

க.>

2009/9/19 karuannam annam <karu...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Sep 19, 2009, 10:57:58 AM9/19/09
to mint...@googlegroups.com
எல்லாம்  ரங்கன் செயல்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

karth...@gmail.com

unread,
Sep 19, 2009, 9:13:27 PM9/19/09
to மின்தமிழ்
அரங்கனாரே!

நானும் ரவுசு (இதன் மூலம் செங்கிருதமா?) பிடித்தவன்தான்!
தெரிந்த விஷயம்தானே!

பக்தி பற்றிப் பேசும் உங்கள் திறந்த மனப்பன்மை எனக்குப்
பிடிக்கிறது. பக்தி என்பதை விரல் சுட்டிச் சொல்லிவிட முடியாது
என்பது போல்தான் தொனிக்கிறீர்கள். அதுதான் யதார்த்தம் எனப்
படுகிறது.

ஆனால் இப்படியே பேசிக்கொண்டே போய், ஒரு கட்டத்தில்,
இப்ப்டியெல்லாம் பேசுவதில் பிரயோஜனமில்லை. "பகவத்
கீதையில் கண்ணன் ஏற்கனவே சொல்லியிருக்கிறான்"
அல்லது "ஆழ்வார்கள் அப்போதே சொல்லிவிட்டார்கள்" என்று
சிவப்பு நாடா கட்டி இந்தக் கோப்பை மூடிவிடுவீர்கள் என்ற
அச்சம் எனக்கு இருக்கிறது.

ஏற்கனவே நமது ஆன்மீகப் பாரம்பரியத்துக்குள் எல்லாம் சொல்லப்
பட்டுவிட்டது; வேறு இடத்தில் தேடுவானேன் என வாய்
அடைக்கப் பட்டிருக்கிறேன்.

எனினும் இந்த விசாரணைப் பாட்டை, அதில் காணுகின்ற தத்துவ
நுணுக்கங்கள், மேற்கோள்கள், மனம், மூளை (அந்தர், பஹிர்) பற்றிய அலசல்கள்
அனைத்தும் எனக்குப் பிடிக்கின்றன. நீங்கள் சொல்லும் விதம் மிக
அழகு. ஆகவேதான் விடாமல் படிக்கிறேன்.

நான் பயணி. பயண்த்தின் இறுதி அடைவு பற்றி எனக்கு அவ்வளவாக
அக்கறையில்லை (நம்பிக்கையும் இல்லை). ஆனால் உங்களோடு
பயணம் செய்வது சுகானுபவம்,. அறிவைக் கிளறும் அனுபவமும் கூட.

என்னுடைய இரண்டு தமபிடி ரவுசு இதோடு முடிகிறது.

ரெ.கா.

On Sep 19, 9:14 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> இந்தத்   தமிழ்த்  தேனி   ஒரு   ரௌஸு   பிடித்த  பேர்வழி.  குறுக்க  மறுக்க


> ஓடி  எதிலேயோ   கையை  வைத்துவிடுகிறார் !!
>

> On 9/19/09, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
>

devoo

unread,
Sep 21, 2009, 2:20:55 PM9/21/09
to மின்தமிழ்
Sep 21, 10:16 pm, srirangammohanarangan v

*கதவைத் திறந்தால் ஒரு குருவி வினோதமான முறையில்
பாரபோலா,டம்பல்ஸ் போன்ற பல வடிவங்களில் தன் இறக்கைகளை
அதிர்வுற
வீசிய படியே கிழே தரையில் என் கால்கள் நகர வொட்டாமல்
சுற்றிச்சுற்றி வருகிறது.*
*பார்த்தா தாய்முசலு அந்த எரிக்கிற பொட்டை வெளின்னு கூட
பார்க்காம என் முன்னாடி நெடுஞ்சாண்கிடயா விழுந்து அடம் பண்ணுது*

புரிகிறது - சரணாகதி வெகு இயல்பானது; நூல்களால் வலிந்து
திணிக்கப்படாதது.
நீங்கள் பழைய பார்வைகளால் புத்துலகுக்கு ஒரு விடியலைக் காட்டுகிறீர்களோ !

தேவ்

N. Kannan

unread,
Sep 21, 2009, 6:52:53 PM9/21/09
to mint...@googlegroups.com
இதற்குத்தான் ஒரு அரங்கர் வேணும்!
எப்படி முடிச்சுப்போடுகிறார் பாருங்கள்!
திருவரங்கன் பேசும் தெய்வமென்று நான் சொல்கிறேன். இதை, எதை வைத்து
நம்புவது? அனுபவித்துப்பார்த்தாலன்றி.
அடடா!

க.>

2009/9/22 devoo <rde...@gmail.com>:

karth...@gmail.com

unread,
Sep 21, 2009, 8:48:05 PM9/21/09
to மின்தமிழ்
மிக அழகு. தோய்ந்து படித்தேன். என்ன ஒரு கதை சொல்லும்
ஆற்றல் உங்களுக்கு! ஆனால்.....

On Sep 22, 1:16 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:

 > ஏற்கனவே    எனக்கு    கணந்தோறும்    பழக்கத்தில்
> இருக்கும்   படித்த,  புரிந்துகொண்ட    உலகும்   ஒன்றையொன்று
> முறைத்துக்கொண்டு    பேச்சு    இல்லாமல்  நின்றன.   பழைய  உலகம்.    இந்தப்
> புதிய  பார்வையை   எந்தத்  தட்டில்  கொண்டு  போய்   சொருகி  வைப்பது.?
> எல்லாமே   அறிவுதான்.    இல்லை.    எதுவுமே   என்  சொல்  பேச்சைக்  கேட்க
> மாட்டேன்  என்கிறது.     இது  இன்னதுதான்    என்று   நான்  படித்துப்
> படித்துச்  சொல்லியிருந்தும்    இது  என்ன?    இதை  நான்  திடுதிப்பென்று
> எந்தக்  கணக்கில்   கொண்டுபோய்   வைப்பது?     நான்    குருவியோடு  பேசினேன்
> என்றால்    நம்பிக்கையாகிவிடும்.     அல்லது    குழந்தைக்  கதையில்  வரும்
> கற்பனையாகிவிடும்.    

மனம், மூளை (மனிதருக்கும் மிருகங்களுக்கும் பொதுவாகத்தான்)
செயல் படும் விதம் இன்னும் முழுதாக அறியப்படவில்லை
என்பது தெரிந்ததுதான். உங்கள் அனுபவங்கள் உண்மையானவை.
ஆனால் அவற்றைப் பிறருக்குச் சொல்லி நீங்கள் நம்பவைக்க
முடியாது. அது உங்களுக்கே உரியது. உங்களின் உண்மை.
ஆனால் இது "பொது" உண்மை ஆகிவிடாது. இதன் மூலம் நீங்கள்
எந்த ஒரு ஸ்திரமான பொது கொள்கையை/ முடிவை (deduction)
உருவாக்க முடியாது.

>   'ரொம்ப  படிக்காதீர்கள்.   அவ்வளவாக
> உடம்புக்கு  நல்லது  இல்லை'  என்று    அக்கறையாக    நல்லது  சொல்வீர்கள்.

Touche!

>> சொல்லுகிறான்:  --
> 'சாமி!    ஒரு  முசல்  குட்டியைப்   பிடிச்சேனுங்க.    பிடிச்சிக்கிட்டு
> பொட்டைவெளியில    வாரேன்.    பார்த்தா   தாய்முசலு    அந்த   எரிக்கிற
> பொட்டை  வெளின்னு  கூட    பார்க்காம   என்  முன்னாடி    நெடுஞ்சாண்கிடயா
> விழுந்து   அடம்  பண்ணுது.   எனக்கு    என்னமோ   பண்ணிடிச்சி   சாமி!
> பேசாம   அந்தக்  குட்டிய    உட்டுட்டு    வந்துட்டன்'     என்றான்.

முதலில் குட்டிக்கு ஒரு மருட்டல் எற்படும் தருணத்தில் ஒரு தாய் மிருகம்
போரிடத்தான் செய்யும். போரிட்டு மாயவும் கூடும். இதுதான் instinct. பொது
உண்மை.
ஆனால் வேடனின் கதை உண்மை இல்லை என்று யார் சொல்ல முடியும்?
இது வேடனுக்கே உரிய உண்மை. அவன் அனுபவித்து உணர்ந்தது. இதனைக்
கேட்பவர் எவரும் மறுக்க முடியாது.

> அறிவு,   மனத்தொடர்பு,  உள்ள  அதிர்வு,  உயிர்,    உயிருக்கு  உயிர்
> உண்டாகும்   உள்ளப்  பரிமாற்றம்,   பக்தி    இவையெல்லாம்    என்ன?     பழைய
> உலகினில்    புதிய  பார்வைகளின்    விடியல்    என்று   கவிதை  போல்   ஏதோ
> எழுதிப்  பார்க்கிறது    என்  அந்தரங்கம்.

இந்தச் சுயவிசாரணை மிகச் சரி. இதுவே இந்தச் சிந்தனைகளுக்கான தற்காலிக
முடிவு. முற்றுப் புள்ளியல்ல; அரைப்புள்ளி.

தொடரும் அல்லவா? தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

ரெ.கா.
>

Venkatachalam Subramanian

unread,
Sep 21, 2009, 11:54:15 PM9/21/09
to mint...@googlegroups.com
ஓம் வணக்கம்.
அடர்ந்த மலைப் பாதைக் காடு. ஒளி நுழையாத பகுதியில் கருமை இருள்.கொடைக்கானல் சென்று பகவான் பாபாவைத் தரிசித்துவிட்டு ஒரு குழுவாக மதுரையினின்றும் சென்று திரும்பிக் கொண்டிருக்கின்றோம். கொண்டைஊசி வளைவுகளில் அதிவேகப் பயணம் பழக்கமில்லாத காரணத்தால் அடிவயிற்றில் இருந்தவை மேலோட்டமாக மிதந்து வந்து, வாந்தி என்று பெயரெடுத்துப் பலர் தன் கையில் வைத்திருந்த பிளாஸ்டிப் பைகளின் வாயில்  முகம் புதைத்து வினோதமான ஓங்கரிப்பில் இருந்தனர். படு வேகமாகச் சென்றுகொண்டிருந்த பேருந்து சட்டென நின்றது.

 ஓட்டுனரும் நடத்துனரும் யாதொன்றும் சொல்லாமல் வேகமாக இறங்கி ஓடினார்கள் உள்ளே இருந்த பயணிகளில் கவனிக்கும் வகையில் திறத்துடன் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட் அவரவர் மனோ வேகத்துக்கேற்ப பாவத்துக்கேற்ப கற்பனையில் சென்று நின்றமைக்குக்  காரணம் கற்பித்தனர்.

பத்து நிமிட அவகாசத்தில் ஒரு மலை வௌவாலை சுமார் ஒரு கடுவன் பூனையின் அளவில் உடல் அமைந்ததும் இரு சிறகுகளையும் பிடித்துத் தூக்கும் போது ஆஜானு பாகுவின் நீண்ட கைகளை விரித்தால் அமையும் ஒரு பாகம் இருக்கும்  அந்தப் பழந்தின்னி வௌவால் விலங்குப் பறவை . இதற்கு முன்னர் அப்படி ஒரு வௌவாலை இத்தனை பெரிய உருவில் பார்த்ததில்லை.

அத்தனை பயணிகளும் அவரவர் கற்பனைக் காரணங்களிலில் இருந்து விடுபட்டனர்.

வேகமாக பேருந்து வருகையில் குறுகிய வளைவாக இருந்த பகுதியில் குறுக்கே கடக்கு முகத்தான் பறந்த வௌவால் அடிபட்டதைப் பார்த்த ஓட்டுனர் தன் வேகத்தைக் குறைத்து அதை எடுத்துவந்து உண்பதற்காக வைத்துக் கொண்டனர்.

ஓட்டுனர் கையில் வாங்கிக் கொண்டு இருக்கையின் அருகே பிரேக் பெடல் பக்கம் ஒரு வாயகன்ற கோணியில் அந்த வௌவாலை வைத்துவிட்டு மீண்டும்பேருந்து  உறுமி கன வேகத்தில் பயணம் தொடர்ந்தது. 

 பரந்த உலகில் ஒரு வௌவால் அதன் இருப்பிடத்திலேயே பறந்து செல்ல உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. உயிருடன் கிடைத்த அப்பொருள் அவனுக்கு விருந்தாயிற்று. அற்ப உயிர் என்பது இவன் கணக்கு. அந்த வௌவால் பலப்பல பிறவிகளில் ஆராரோ ஆராரோ!

வளைவுகளின் குலுக்கம் நின்று அடிவாரம்வழியே காட்ரோடைத் தாண்டி வத்தலக்குண்டு நிலக்கோட்டை கடந்து வாடிப்பட்டி , வடுகப்பட்டி கழிந்து சமயநல்லூர் தாண்டி கனவேகத்தில் பேரருந்து  மிதந்து சென்றுகொண்டிருந்தது.

இரு மருங்கிலும் சற்றே ஓடைக் கால் தாண்டி முள்வேலிப் புதர் உயரமாக இருந்தன. பலத்த ஒரு ஓசை. ’கட கட’ வென கிலியூட்டிய பேரிரைச்சல்.  பேருந்து ஓரங் கட்டப்பட்டது.

என்ன நடந்தது என்று ஒவ்வொருவர் மனத்திலும் ஆர்வமும் கணிப்பும் திகிலும் உள்வாங்க, மிக முடிந்தவர்கள் பலர் இறங்கி  ஓசை நிகழ்ந்த இடம் நோக்கி விரைந்தனர்.அங்கே கண்ட காட்சி.

வயற்காட்டில் உள்பக்கம் முள்புதரை வெட்டி எடுத்து வேலியை ஓரம் ஒதுக்கித் தள்ளிவிட்டு இரு அயல்நாட்டு ஹிப்பியர், ஆணும் பெண்ணும்  நடுத்தர வயது கொண்ட  சிற்றுருவம் கொண்ட ஒரு மனிதனைச்  சிரம சாத்தியமாக தூக்கிவந்தனர்.

அவர்கள் ஹிப்பியர். நாங்கள் வந்த பேருந்துவில் தான் காட் ரோட்டில் ஏறி மதுரைக்கு  வந்து கொண்டிருக் கின்றனர்.கடைசி இருக்கையில் நீளவாட்டில் பக்கம் பக்கமாக அமர்ந்து    இருமருங்கிலும் பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தனர்.

இரண்டு சக்கரங்கள் பெரிய அளவிலும்  ஒரு அச்சில் இருபுறமும் இணைத்து கடையாணியிட்டு ஊடே ஏணி போன்ற அமைப்பில் முக்கால் மீட்டர் அகலத்தில் ஒரு சட்டத்தை அச்சின் மீது  பொருத்தி முன்புறம் இரு மழுக்கப்பட்ட கைபிடிகள் கொண்ட மனிதன் இழுக்கும் பாரவண்டியினை ஒருவன் சாலையில் ஓரத்தில் நடந்து கொண்டே இழுத்து வந்திருக்கிறான். பின் புறமாக அதி வேகமாக வந்த எங்கள் பேருந்து அந்த வண்டியில் இடிக்கவும் அந்தக் கைவண்டி நொறுங்கிய ஓசைதான் எங்கள் காதுகளைக் கிழித்தது. இடிபட்ட மாத்திரத்தில்; சட்டம் பொல பொலவென உதிர்ந்து இரு சக்கரங்க ளினின்றும் உடைந்த அலகுகளில் கழன்ற வட்ட வடிவ இரும்புப் பட்டைகளும் எங்கு பறந்தனவென்று தெரியவில்லை.

வண்டியை இழுத்து வந்தவன் சாலையிலிருந்து தூக்கி எறியப்பட்டு முள் வேலி தாண்டி வயற்காட்டினுள் வீசப்பட்டிருக்கிறான். அந்த கடகட ஒலி கேட்ட மாத்திரத்தில் அந்த ஹிப்பியர் இருவரும் வண்டியிலிருந்து குதித்து இறங்கி வயற்காட்டில் தேடி அவனை எடுத்து காயத்திற்கு தன் கைப்பையிலிருந்து பொருள்கள் கொண்டு முதல் உதவி செய்து, கைவிளக்கினால் ஒளிபெற்று, அவனை இருவருமாக வேலியை வெட்டி வழி செய்து, சாலைக்குத் தூக்கி வரும் போதுதான் நாங்கள் வண்டியிலிருந்து இறங்கிபின்நோக்கி வந்து கொண்டிருந்தவர்கள் பார்த்தோம்.

உயிர்பிரியவேண்டிய தருவாயில் பாதுகாக்கப்பட்டு அந்த ஹிப்பியர் இருவரரின்  உயர்ந்த உதவியினால் பேருந்துவில் ஏற்றிக்கொண்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அவசர உதவிஅளிக்கப்பட்டது.

ஹிப்பியர் இருவரும் எனக்கு அன்னை பராசக்தியும் அரனுமாகக் காட்சி தந்தனர். மொழியென்ன தேசமென்ன? எனக்கென்னவென்று வாளாவிருக்காமல் எவனுக்கோ எங்கேயோ முன்பின் அறிமுகம் இல்லாதவனுக்காக உயிரைக் காப்பதற்கென தன் உயிரை மதிக்காமல் குதித்து, வண்டியிலிருந்து வேகமாக இறங்கி, ஒரு பர்லாங் மேல் கைவிளக்கு கொண்டு அந்த மனிதனைத் தேடிக் கண்டுபிடித்து, ஒழுங்கற்ற தளமான வயற்காட்டில் அறுவடை முடிந்து குத்தும் அடிப்பயிர்கள் ஊடே புகுந்து,  அவனுக்கு முதல் உதவி தந்து, வேண்டிய ம்ருந்துகளைப் பூசி, பாண்டேஜ்களைப் போட்டு தூக்கி, வேலியைவெட்டி வழி செய்து, வெளியே சாலைக்குத் தூக்கிவருவது என்பது திட்டமிட்டால் கூட அவ்வளவு சுலபத்தில் நடந்திருக்காது.

கண்ணிமைக்கும் நேரத்தில் விளைந்த ஆபத்திற்கு தம்மையே அர்ப்பணித்து செயலாற்றிய இரு தெய்வங்களையும் நான் நேரில் பாராட்டி அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கினேன். வௌவாலை அடித்து ஒருவன்,
 இறக்க இருந்த ஒருவனைக் காக்கும் ஒரு ஹிப்பியர். 
 பக்தி என்பது உள்ளத்தின் விலாசமும் ஓர்ந்து ஆராய்ந்து கிடைத்த தெளிவும், தன் வழியில் செல்ல சுதந்திரமும். பிறருடைய மதிப்பு அவமதிப்பு, மற்றும் கருத்துக்கு  மனம் நோகாது வாழ்வதுதானோ!

”வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
 உள்ளத் தனய  உயர்வு”

என்ற வள்ளுவவேதம்தான் தென்பட்டது.
அன்புடன்
வெ.சுப்பிரமணியன் ஓம்.
2009/9/22 N. Kannan <navan...@gmail.com>

meena muthu

unread,
Sep 22, 2009, 12:06:34 AM9/22/09
to mint...@googlegroups.com
அந்த சின்னஞ்சிறு குருவியின் படபடப்பில்... பிரமிப்பில் இருந்து மீளமனமில்லை..

இதென்ன இறைவன் கொடுத்தவரமா..!

2009/9/22 srirangammohanarangan v <ranga...@gmail.com>
சில   வருஷங்களுக்கு   முன்னர்   ஒரு   தனி  வீட்டில்  குடியிருந்தேன்.   சுற்றிலும்  மரங்கள்.   வாசலில்    கிராதிக்கு   உட்பக்கம்    மேடைபோல்  குறடு.    சைக்கிள்  அங்குதான்   நிறுத்துவோம்.    மேலே   ஊஞ்சல்   கட்டித்  தொங்க  விட   கொக்கிகள்.    ஊஞ்சல்   கட்டவில்லை  பல  வருஷங்களாக.    எனவே  குருவிகள்    தங்கள்  குடும்ப  வாழ்க்கையை   அங்கே    தொடங்கி    குஞ்சு  பொறித்து   பறக்குமட்டும்    பயன்  படுத்த   கூட்டைக்  கட்டின.    கூடு  இருந்துகொண்டே   இருக்கும்.    குருவிகள்     பேறுகாலத்தில்    வரும்   முட்டையிட்டு  அடைகாக்கும்.    நாங்கள்  எங்கள்  வேலையுண்டு    நாங்களுண்டு   என்று   போகின்றவர்கள்   என்று  அதற்கு   யார்  சொன்னார்கள்?    குருவிக்கூட்டைக்  கலைப்பது     பாவம்  என்று    இளகிய  மனத்தர்   என்று    அதன்   பாஷையில்   யாராவது    தெரிவித்தார்களா?   அது  தெரியாமல்    அந்தக்  குருவிகள்   குருட்டாம்  போக்கில்    கூடு  கட்டிக்  குடும்பம்   நடத்துகின்றன    என்று  கூறாதீர்கள்.    பிரத்யக்ஷம்   எனக்கு   அதைச்   சுத்தப்  பொய்   என்று    நிரூபித்துவிட்டது.  எனவே  நான்  ஒருபோதும்     அதற்கு  மயங்க  மாட்டேன்.   நிச்சயம்    பறவை,   விலங்கு,    பூச்சி,    ஏன்  எறும்பு   எல்லாமே    அறிவில்தான்    இயங்குகின்றன   என்ற   நிச்சயம்    சிறிது   இயற்கையில்    வாழ்ந்தாலே    தெரிந்துவிடும்.   ஆனால்  வகுப்பறை  மேடைக்கு   மட்டும்    சில  கொள்கைகள்,   சில   வாசகங்கள்,  சில  கோட்பாடுகள்.    இந்த    அபத்தத்திற்கு    'ஒப்புக்   கொள்ளப்பட்ட   நெறிமுறைகளின்  படி'   என்று   பெயர்.   இதிலும்  ஒரு  காரணம்   இருக்கலாம்.    இல்லையென்றால்    பொய்  மலிந்து   எங்கும்  பூனைக்குறும்பு   ஆகிவிடும்.   சரிதான்   ஆனாலும்   ஓரறிவுயிரே    ஈரறிவுயிரே   என்று   தொல்காப்பியர்    ஒண்ணாம்  வாய்ப்பாடு    சொல்லிப்  பார்த்தாலும்   உயிர்   எங்கும்    அறிவு   இருக்கத்தான்  செய்கிறது.    விவேகாநந்தர்    சொல்வார்,  '  அதோ  வருகிறது    கனவேகத்தில்    புகைவண்டி.    தண்டவாளத்தில்   விரைவில்   சுழலும்  அதன்   சக்கரங்கள்.    இன்னும்  சற்று  இருந்தால்    சக்கரம்  ஏறி  அந்த    எறும்பு    நசுங்கியிருக்கும்.  ஆனால்   லாகவமாக    எறும்பு    பக்கவாட்டில்  நகர்ந்து   எங்கு  இடைவெளி   ஏற்படுமோ  அங்கு  ஒதுங்கி    தப்பித்து   மீண்டும்   தன்    வழியைத்  தொடர்கிறது.    அதனிடம்   சுதந்திரம்    இருக்கிறது'    என்று  கூறுவார்.    உயிர்,  விடுதலை,   அறிவு   --  ஒரு  வைரத்தையே    திருப்பித்  திருப்பிப்   பல  பட்டைகளில்  தெரியும்   ஒளி  மாலைகளைக்  காண்கிறோம்.  
 
 
நமது   குருவிக்கு  வருவோம்.     குஞ்சு  பொறித்து    நாட்கள்  ஆகிப்    பறக்கப்  போகிறது   என்றால்   எங்களுக்கு   முதல்நாளே  தெரிந்துவிடும்.    கலகல கல  என்று    கூட்டில்   ஓயாத     பயணக்   கலகலப்பு   இருக்கும்.    send  off  போலும்   என்று  பேசிக்கொள்வோம்.    அப்படி   ஒரு  சமயம்   ஏதோ  அவசரம்    காலை    கிளம்பி    சைக்கிளை   எடுக்கச்  சென்றேன்.     கூடத்திலிருந்து    பக்கத்து  சன்னலுக்கு  வெளியே    சைக்கிள்    நிற்கும்.   கதவைத்  திறந்தால்     ஒரு  குருவி     வினோதமான   முறையில்    பாரபோலா,   டம்பல்ஸ்    போன்ற   பல    வடிவங்களில்   தன்  இறக்கைகளை    அதிர்வுற     வீசிய  படியே   கிழே   தரையில்   என்  கால்கள்   நகர வொட்டாமல்     சுற்றிச்  சுற்றி  வருகிறது.   வினோதமாக  இருக்கிறது.    சத்தம்   கேட்டாலே   ஓடிவிடும்   பறவை    என்  எதிரில்    கால்களுக்கு   அருகில்    என்னைத்  தடுப்பதுபோல்    வியூகம்  போடுகிறது.    ஒரு  கணம்  பொறி  தட்டினாற்  போல்    உறைத்தது.    அடடா    பிள்ளையைப்   பள்ளிக்  கூடம்    சேர்க்கும்    'வித்யாரம்பம்'    சடங்கு  நடக்கிறது  போலும்.    இப்பொழுது  வராதே  என்கிறது   என்று.    அப்படியே   ரிவர்ஸ்ஸில்    பின்னால்  வந்து   கதவைச்  சாத்திவிட்டேன்.  பக்கத்து   சன்னலில்  நின்று   என்ன  நடக்கிறது    என்று  வேடிக்கை  பார்த்தேன்.    சைக்கிள்  ஹாண்டில்  பார்  மேல்,   பறக்க  முயன்று   புது  அனுபவத்தில்   நெட்டுக்  குத்த  விழுந்த   குஞ்சு   கெட்டியாகப்  பிடித்துக்  கொண்டு   அழுந்த  உட்கார்ந்திருக்கிறது.   அப்பன்  பறவை,   ஆத்தாள்   பறவை   இரண்டும்,    அவற்றின்  குடும்பத்தில்    எந்த   உறவு  முறை    இந்தச்  சடங்கிற்கு   முன்  நின்று  நடத்த  வேண்டும்  தெரியாது.    இரண்டும்    மாறி  மாறி    குரல்  கொடுத்து     ஊக்கம்   தருகிறது.  அல்லது   செய்முறை   குறிப்புகள்    தருகின்றன.   நமக்கு   எல்லாமே   ஒரே   கிலுகிலுகிலுகிலுதான்.     ஒரு  அரை  மணி  நேரம்    நான்  மனித  உலகிற்கும்   பறவை   உலகிற்கும்   இடைப்பட்ட      உலகில்  இருந்தேன்.    நான்  ஏற்கனவே  அறிந்து  வைத்திருந்த    co-ordinates   எல்லாம்   அந்த  நேரத்தில்   தூரவே   நின்றன.   பிரத்யக்ஷம்,   படித்த  அறிவைப்  புறந்தள்ளி  விட்டு    வேறு  எங்கோ  கொள்முதல்  அள்ளச்  சென்றுவிட்டது.   குருவியோடு  நான்  மனத்தொடர்பு  கொண்டதும்,  அந்தக்  குஞ்சின்   உபநயனச்   சடங்கில்   நான்   கலந்துகொண்டதும்,  ஏற்கனவே    எனக்கு    கணந்தோறும்    பழக்கத்தில்   இருக்கும்   படித்த,  புரிந்துகொண்ட    உலகும்   ஒன்றையொன்று   முறைத்துக்கொண்டு    பேச்சு    இல்லாமல்  நின்றன.   பழைய  உலகம்.    இந்தப்  புதிய  பார்வையை   எந்தத்  தட்டில்  கொண்டு  போய்   சொருகி  வைப்பது.?   எல்லாமே   அறிவுதான்.    இல்லை.    எதுவுமே   என்  சொல்  பேச்சைக்  கேட்க  மாட்டேன்  என்கிறது.     இது  இன்னதுதான்    என்று   நான்  படித்துப்  படித்துச்  சொல்லியிருந்தும்    இது  என்ன?    இதை  நான்  திடுதிப்பென்று   எந்தக்  கணக்கில்   கொண்டுபோய்   வைப்பது?     நான்    குருவியோடு  பேசினேன்   என்றால்    நம்பிக்கையாகிவிடும்.     அல்லது    குழந்தைக்  கதையில்  வரும்   கற்பனையாகிவிடும்.    அதன்   வீட்டுக்   குஞ்சு     பெரிசான   நிகழ்ச்சியில்    கலந்துகொண்டேன்     என்றால்    நீங்களே    என்னைத்   தனியாக    பார்த்து    'ரொம்ப  படிக்காதீர்கள்.   அவ்வளவாக    உடம்புக்கு  நல்லது  இல்லை'  என்று    அக்கறையாக    நல்லது  சொல்வீர்கள்.   இல்லை   நம்  பழைய    உலகில்   கொள்ளாத     ப்ரத்யக்ஷமானாலும்   அது    நம்பக்   கூடியது  அன்று.    என்  புரையுள்  சொருகிவைக்க  இடம்  இல்லையென்றால்   அது  உண்மையில்  இருந்தும்  இல்லாதது    போல்தான்.   மனித    உயிர்   மனித  உடல்   மனித  வாழ்க்கை     இந்த    ரீதியில்தான்    தொடக்கமுதல்    நான்    மூளையில்   தகவல்  கவாண்களைச்    சட்டம்  கட்டி  வைத்திருக்கிறேன்.    அதில்  கொள்ளாதது    ஏதோ   ஃப்ரீக்    என்று    புறம்  தள்ளப்படுகிறது.   இங்குதான்   எனக்கு   ஒரு  ஐயம்  வருகிறது.  பக்தி  என்பது   பழைய    உலகில்    புதிய  பார்வையோ?  ஏனெனில்   இந்தச்  சம்பவத்தைப்  பாருங்கள்.  எனக்கு  ஏற்பட்ட   ப்ரத்யக்ஷ   அனுபவம்  இல்லையேல்    இதற்கு  பெரிதும்  மதிப்பு   அளித்திருக்க  மாட்டேன்.  ஆனால்   இப்பொழுது    இந்த  சம்பவத்தில்   மனம்    தோய்ந்து  சுழல்கிறது.  ---- 
 
 
சேது  ஸ்நாநம்   செய்ய   பராசர   பட்டர்  போனார்.    மீளும்  போது    பாதிரிக்கொடி   அருகில்    பொழுது  சாய்ந்துவிட்டது.    அக்கம்  பக்கம்    தங்கிச்  செல்ல  வீடுகள்  இல்லை.   ஒரு  வேடன்   குடிசையில்  சென்று    சிறிது  அமர   இடம்  பார்த்தார்.  
வேடன்   தான்      அமர்ந்திருந்த   ஆஸநத்தையும்   தந்து   
கட்டிலைத்  தட்டிப்  போட்டு    அமரச்  சொல்லி   உபசரித்தான்.   பட்டர்   யோசித்தார்.   இவனுக்கு    நம்மைப்  பற்றித்   தெரியாது.   நாம்  ஏதோ    இவனுக்குச்    செய்தோம்  என்று  பதிலுக்கு  இவன்   இதைச்  செய்யவில்லை.    தன்னை   அண்டி   வந்தான்   ஒருவன்    என்ற  ஒரே   காரணத்திற்காக    இதைச்  செய்தான்  ஆனான்.    அப்படியென்றால்    பகவானுடைய    வீடு  இந்த  உலகம்.   இங்கு   ஒண்ட   நாம்  வந்துவிட்டோம்.    நம்மை  முன்பின்   தெரிந்தவன்,  உறவு,    பிடித்ததைச்   செய்தவன்    என்ற  எந்த    காரணத்தையும்  முன்னிடாமல்   தன்  வீட்டை   அண்டி  வந்தான்   என்ற  ஒரே    காரணத்திற்காக      அந்த   பரமசேதனனும்    நம்  நன்மை    செய்யத்தானே    வேண்டும்.   என்ன  நினைத்திருக்கின்றானோ?    என்று    கூறிக்கொண்டார்.   
 
 
சரி    போதுபோக்காக    இருக்கட்டும்  என்று   அவனிடம்    இன்று   வேட்டையாடப்   போனியாப்பா?   ஏதாவது   விசேஷம்  உண்டா?    என்று   வினவினார்.    வேடன்  சொல்லுகிறான்:  --  
'சாமி!    ஒரு  முசல்  குட்டியைப்   பிடிச்சேனுங்க.    பிடிச்சிக்கிட்டு    பொட்டைவெளியில    வாரேன்.    பார்த்தா   தாய்முசலு    அந்த   எரிக்கிற    பொட்டை  வெளின்னு  கூட    பார்க்காம   என்  முன்னாடி    நெடுஞ்சாண்கிடயா    விழுந்து   அடம்  பண்ணுது.   எனக்கு    என்னமோ   பண்ணிடிச்சி   சாமி!    பேசாம   அந்தக்  குட்டிய    உட்டுட்டு    வந்துட்டன்'     என்றான்.   பட்டர்    முகத்தில்    ஈயாடவில்லை.   அப்படியே   உறைந்து   போய்    அமர்ந்திருந்தவர்    நெடுநேரம்  கழித்துக்   கூறுகிறார்:--   இந்தச்  சம்பவத்தில்    பொதிந்திருக்கும்   குணாதிசயங்கள்    ஒரு  முசல்   தன்  குட்டியைக்  காப்பாற்ற    சரணாகதியை   அனுஷ்டிக்கிறது.    கொடூரமே    வாழ்க்கையாக  உடைய  வேடன்    சரணமடைந்த    ஓருயிரைத்   தன்   உணவை  விட்டுக்கொடுத்தும்    காப்பாற்றுகிறான்.   இந்த  இரண்டு   குணநலன்களுமே     பரம  சேதனனாகிய     பகவான்  விஷயத்தில்   சம்பந்தப்  பட்ட    குணங்கள்.    அவ்வாறுதான்   பிரமாணங்கள்   தெரிவிக்கின்றன.   கீதையில்   கண்ணன்    'மாம்  ஏகம்  சரணம்  வ்ரஜ'   என்  ஒருவனையே    சரணமாகப்  பற்று.   என்று   பிரபத்தியாகிய   சரணாகதியை   உபதேசித்தான்.   அவ்வாறு    சரணாகதி   செய்  என்று    இந்த  முசலுக்கு   யார்   உபதேசித்தார்?    ஸ்ரீராமாயணத்தில்   'அரி   ப்ராணாந்   பரித்யஜ்ய   ரக்ஷிதவ்ய:   க்ருதாத்மநா'   சரணமடைந்த   விரோதியைக்கூட     ஒருவன்    தன்  பிராணனை  விட்டும்   காப்பாற்ற  வேண்டும்    என்று    சரணாகதி  அடைந்தவனைக்   காக்க    வேண்டிய    பொறுப்பு   பற்றிக்  கூறியிருக்கிறது.   சர்வசக்திமானாகிய    பகவான்  அன்றோ   அனைத்து   உயிர்களையும்   காக்கவல்லவன்.    அவ்வாறு    சரணாகதி    அடைந்தவர்களைக்   காப்பது   கடமை   என்று   இந்த  வேடனுக்கு    யார்   உபதேசித்தார்கள்?    எங்கோ  ஒரு  காட்டில்    யாரோ   ஒரு  வேடனுக்கும்   முசலுக்கும்   இடையில்    தன்னியல்பாக    பிரபத்தி    பலித்ததே    இந்த   விசேஷம்தான்    என்ன?     இயற்கையே   சரணாகதிக்குத்   தன்   போக்கில்   பிரமாணம்    சொல்லுகிறதோ?----   என்று   நெடு  நேரம்   சிந்தை  வயத்தவர்  ஆனார்    என்று    வார்த்தாமாலை    அந்தத்  திருக்கணத்தை    ஏடுபடுத்தியிருக்கிறது.  
 
அறிவு,   மனத்தொடர்பு,  உள்ள  அதிர்வு,  உயிர்,    உயிருக்கு  உயிர்    உண்டாகும்   உள்ளப்  பரிமாற்றம்,   பக்தி    இவையெல்லாம்    என்ன?     பழைய    உலகினில்    புதிய  பார்வைகளின்    விடியல்    என்று   கவிதை  போல்   ஏதோ  எழுதிப்  பார்க்கிறது    என்  அந்தரங்கம். 
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்             



Tthamizth Tthenee

unread,
Sep 22, 2009, 2:13:00 AM9/22/09
to mint...@googlegroups.com
"தன்னந்தனியே  காட்டு வழியில் நடந்து கொண்டிருக்கும் போது உங்கள் எதிரே  ஒரு சீற்றம் மிகுந்த புலி வந்துவிட்டால் நீங்கள்  என்ன செய்வீர்கள்.?
 
என்கிற  கேள்வி  ஒரு முறை  நான் பணி புறிந்த அலுவலகத்தில் 
பலரிடம் கேட்கப்பட்டது
 
பலர்   பல விதமான  பதில்களைக் கூறினர்
 
 
என் முறை வந்தது
 
நான் பதில் சொன்னேன்
 
விளையாட்டாக
 
 
நான் ஒன்றும் செய்யமாட்டேன்  எல்லாமே  புலிதான் செய்யும் என்று
 
 
ஒரு வேளை  இதுதான் சரணாகதியின் தத்துவமோ என்று தோன்றுகிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

Kamala Devi

unread,
Sep 22, 2009, 4:18:05 AM9/22/09
to mint...@googlegroups.com
குருவி அடைகாத்து குஞ்சு பொறிக்கும்வரை, ஒவ்வொரு நாளும் கணம் கணமாய் காத்திருந்து ,
கவனித்த அனுபவம் குழந்தை நாளில் உண்டு.
சரணாகதியின் மோட்சம் மட்டுமல்ல. ப்ரத்யக்‌ஷம் பிரபஞ்ச அகண்டமாய் கவர்கிறது.
மோஹனின் பார்வையை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.
கமலம்
 
http://www.kamalagaanam.blogspot.com



From: srirangammohanarangan v <ranga...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tuesday, 22 September 2009 1:16:46

Subject: [MinTamil] Re: எது பக்தி?

சில   வருஷங்களுக்கு   முன்னர்   ஒரு   தனி  வீட்டில்  குடியிருந்தேன்.   சுற்றிலும்  மரங்கள்.   வாசலில்    கிராதிக்கு   உட்பக்கம்    மேடைபோல்  குறடு.    சைக்கிள்  அங்குதான்   நிறுத்துவோம்..    மேலே   ஊஞ்சல்   கட்டித்  தொங்க  விட   கொக்கிகள்.    ஊஞ்சல்   கட்டவில்லை  பல  வருஷங்களாக.    எனவே  குருவிகள்    தங்கள்  குடும்ப  வாழ்க்கையை   அங்கே    தொடங்கி    குஞ்சு  பொறித்து   பறக்குமட்டும்    பயன்  படுத்த   கூட்டைக்  கட்டின.    கூடு  இருந்துகொண்டே   இருக்கும்.    குருவிகள்     பேறுகாலத்தில்    வரும்   முட்டையிட்டு  அடைகாக்கும்.    நாங்கள்  எங்கள்  வேலையுண்டு    நாங்களுண்டு   என்று   போகின்றவர்கள்   என்று  அதற்கு   யார்  சொன்னார்கள்?    குருவிக்கூட்டைக்  கலைப்பது     பாவம்  என்று    இளகிய  மனத்தர்   என்று    அதன்   பாஷையில்   யாராவது    தெரிவித்தார்களா?   அது  தெரியாமல்    அந்தக்  குருவிகள்   குருட்டாம்  போக்கில்    கூடு  கட்டிக்  குடும்பம்   நடத்துகின்றன    என்று  கூறாதீர்கள்.    பிரத்யக்ஷம்   எனக்கு   அதைச்   சுத்தப்  பொய்   என்று    நிரூபித்துவிட்டது.  எனவே  நான்  ஒருபோதும்     அதற்கு  மயங்க  மாட்டேன்.   நிச்சயம்    பறவை,   விலங்கு,    பூச்சி,    ஏன்  எறும்பு   எல்லாமே    அறிவில்தான்    இயங்குகின்றன   என்ற   நிச்சயம்    சிறிது   இயற்கையில்    வாழ்ந்தாலே    தெரிந்துவிடும்.   ஆனால்  வகுப்பறை  மேடைக்கு   மட்டும்    சில  கொள்கைகள்,   சில   வாசகங்கள்,  சில  கோட்பாடுகள்.    இந்த    அபத்தத்திற்கு    'ஒப்புக்   கொள்ளப்பட்ட   நெறிமுறைகளின்  படி'   என்று   பெயர்.   இதிலும்  ஒரு  காரணம்   இருக்கலாம்.    இல்லையென்றால்    பொய்  மலிந்து   எங்கும்  பூனைக்குறும்பு   ஆகிவிடும்.   சரிதான்   ஆனாலும்   ஓரறிவுயிரே    ஈரறிவுயிரே   என்று   தொல்காப்பியர்    ஒண்ணாம்  வாய்ப்பாடு    சொல்லிப்  பார்த்தாலும்   உயிர்   எங்கும்    அறிவு   இருக்கத்தான்  செய்கிறது.    விவேகாநந்தர்    சொல்வார்,  '  அதோ  வருகிறது    கனவேகத்தில்    புகைவண்டி.    தண்டவாளத்தில்   விரைவில்   சுழலும்  அதன்   சக்கரங்கள்.    இன்னும்  சற்று  இருந்தால்    சக்கரம்  ஏறி  அந்த    எறும்பு    நசுங்கியிருக்கும்.  ஆனால்   லாகவமாக    எறும்பு    பக்கவாட்டில்  நகர்ந்து   எங்கு  இடைவெளி   ஏற்படுமோ  அங்கு  ஒதுங்கி    தப்பித்து   மீண்டும்   தன்    வழியைத்  தொடர்கிறது.    அதனிடம்   சுதந்திரம்    இருக்கிறது'    என்று  கூறுவார்.    உயிர்,  விடுதலை,   அறிவு   --  ஒரு  வைரத்தையே    திருப்பித்  திருப்பிப்   பல  பட்டைகளில்  தெரியும்   ஒளி  மாலைகளைக்  காண்கிறோம்.  


Importing contacts has never been easier..
Bring your friends over to Yahoo! Mail today!

N. Kannan

unread,
Sep 22, 2009, 4:50:42 AM9/22/09
to mint...@googlegroups.com
2009/9/22 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>:

> அவர்கள் ஹிப்பியர். நாங்கள் வந்த பேருந்துவில் தான் காட் ரோட்டில் ஏறி
> மதுரைக்கு  வந்து கொண்டிருக் கின்றனர்.கடைசி இருக்கையில் நீளவாட்டில் பக்கம்
> பக்கமாக அமர்ந்து    இருமருங்கிலும் பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருந்தனர்.
>

எக்காலத்தில் நடந்தது இது? 70களில்?
ஹிப்பி எனும் பதம் இப்போது வழக்கில் இல்லை.
அமெரிக்கர்களை நாம் 'ஹிப்பியர்' என்று அழைத்தால் அது தவறு.
அரசியல் நடுவு நிலமை தவறிவிடுகிறது.
எந்த நாடு என்று தெரியவில்லையெனில், வெள்ளையர் என்று கூறலாம்.

க.>

Tthamizth Tthenee

unread,
Sep 22, 2009, 5:27:57 AM9/22/09
to mint...@googlegroups.com
அமெரிக்க  குறவர்கள்  என்று சொல்லலாமா..?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

N. Kannan

unread,
Sep 22, 2009, 6:18:24 AM9/22/09
to mint...@googlegroups.com
ஆகா! இதுதான்!

நாம் நிறப்பிரிகை.

இந்தியாவில் ஊறிப்போயிருக்கும் குணமிது. குறவன் எனும் போது ஒரு இளக்காரம்
இருக்கிறது. அந்த இரு வெளி நாட்டு மனிதர்கள் இந்திய மண்ணில் வந்து உயர்
செய்கை செய்த போதும், நிறப்பிரிகை உள்ளம் அவர்களை ஹிப்பி என்று காண்கிறது
(முன்பு போலிருந்தால் மிலேச்சன் ;-).

ஏன் ஒருவரை ஒருவராக நம்மால் காண முடியவில்லை.

இந்த உள்வட்டம் வெளிவட்டம்
எனும் கண்ணோட்டம்
இல்லாமல் களித்திருப்பது
என்று காண் பராமரமே!

க.>


2009/9/22 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Venkatachalam Subramanian

unread,
Sep 22, 2009, 6:35:08 AM9/22/09
to mint...@googlegroups.com
ஓம்.
வணக்கம்.
நீங்கள் சொல்வது சரி. இந்த சம்பவம் 70-71ல் இருக்கலாம்.நன்றி தகவலுக்கு. ’வெள்ளையர்’

வெ.சுப்பிரமணியன் ஓம்

2009/9/22 N. Kannan <navan...@gmail.com>

karth...@gmail.com

unread,
Sep 22, 2009, 6:39:49 AM9/22/09
to மின்தமிழ்
சரி,

எது பக்தி - பாகம் 2 ஆரம்பிக்கலாமா?
ஓல்டெரிலிருந்து நியூவர் போகச் சொடுக்கிச்
சொடுக்கி அலுத்து விடுகிறது. ஹரிகி சொன்ன
எதையாவது போட்டுக் கொண்டால்தான் உற்சாகம்
வரும்போல.

ரெ.கா.

அரங்கன்தான் ஆரம்பித்து வைக்க வேண்டும்.

ரெ.கா.


On Sep 22, 6:18 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> ஆகா! இதுதான்!
>
> நாம் நிறப்பிரிகை.
>
> இந்தியாவில் ஊறிப்போயிருக்கும் குணமிது. குறவன் எனும் போது ஒரு இளக்காரம்
> இருக்கிறது. அந்த இரு வெளி நாட்டு மனிதர்கள் இந்திய மண்ணில் வந்து உயர்
> செய்கை செய்த போதும், நிறப்பிரிகை உள்ளம் அவர்களை ஹிப்பி என்று காண்கிறது
> (முன்பு போலிருந்தால் மிலேச்சன் ;-).
>
> ஏன் ஒருவரை ஒருவராக நம்மால் காண முடியவில்லை.
>
> இந்த உள்வட்டம் வெளிவட்டம்
> எனும் கண்ணோட்டம்
> இல்லாமல் களித்திருப்பது
> என்று காண் பராமரமே!
>
> க.>
>

> 2009/9/22 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>:


>
>
>
> > அமெரிக்க  குறவர்கள்  என்று சொல்லலாமா..?
>
> > அன்புடன்

> > தமிழ்த்தேனீ- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Kannan

unread,
Sep 22, 2009, 7:16:09 AM9/22/09
to mint...@googlegroups.com
எளிய மாற்று யோசனை:

தாங்கள் கூகுள் தளத்திற்கு சென்று மின்தமிழைக் காண்கிறீர்கள் என்று
தோன்றுகிறது. நாங்கள் எல்லாம் இதற்கென்றே பிரத்யேக மின்னஞ்சல் முகவரி
வைத்துக் கொண்டு கவலை இல்லாமல் ஜாலியாக இருக்கிறோம். கூகுளார்
கேட்டவருக்கெல்லாம் சும்மா கிகா, கிகாவாகத்தருகிறார். கொள்வதில் என்ன
தடை? தங்களுக்குப் பிடித்த பெயரில் ஒரு கூகுள் கணக்கு ஆரம்பித்து
அங்கிருந்து மின்தமிழுக்கு எழுதுங்களேன்? யாருக்காக சேமிக்கிறீர்கள்?
எல்லாம் கூகுள் சேவியில்தான் நடைபெறுகிறது. அனைத்தும் அவர் அரங்கம் ;-)

ஒரு யோசனைதான்.

க.>

2009/9/22 karth...@gmail.com <karth...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Tthamizth Tthenee

unread,
Sep 22, 2009, 7:25:26 AM9/22/09
to mint...@googlegroups.com
இந்தியாவில் ஊறிப்போயிருக்கும் குணமிது. குறவன் எனும் போது ஒரு இளக்காரம்
இருக்கிறது
 
குறவன் என்று  சொன்னாலே  இளக்காரம் என்று ஏன் நினைக்கவேண்டும்
 
குறவர்களை குறவர்கள் என்று சொல்லாமல் பின்  எப்படி அழைப்பது
 
பொதுவாகவே நான் பார்த்திருக்கிறேன்
 
பாப்பான் என்று சொன்னாலே  நமக்கு கோவம் வருகிறது
 
ஆனால் எனக்கு ஒன்று புரியவில்லை
 
ஏன் கோவம் வரவேண்டும்  பார்ப்பனர்களை  பாப்பான் என்று சொன்னால் அதில் கோவப்பட என்ன இருக்கிறது
 
நாயுடுவை  நாயுடு என்கிறோம், செட்டியாரை  செட்டியார் என்கிறோம்
 
அது போல்  பார்ப்பனரை  பாப்பான் என்று அழைக்கிறோம்
 
அதைத்  தவறாக  எடுத்துக்கொண்டால்  நம் மனதிலேயே நம்மைப் பற்றி தாழ்வான எண்ணம் இருக்கிறது  என்றுதானே பொருள்
 
இங்கே  நிறப் பிரிகை எங்கே வந்தது
 
கருப்பர்களை  அமெரிக்காவில் கருப்பர்கள் என்று அழைத்தால் கோவப்படுகிறார்கள்
 
ஆனால்  அரபு நாடுகளில்  கருப்பரை கருப்பர் என்றுதான் அழைக்கிறார்கள்
 
இந்தச் சொற்கள்  அவர்களைக் குறிப்பிடும் சொற்களே தவிற
 
அவர்களை  இழிவுபடுத்தும் நோக்கில்  சொல்லப்பட்ட  சொற்கள் அல்ல என்றுதான் எனக்குத் தோன்றுகிறது

N. Kannan

unread,
Sep 22, 2009, 7:30:09 AM9/22/09
to mint...@googlegroups.com
எதற்கு ஜாதியின் பெயர் இங்கு வரவேண்டும்? ஏன் அவனைப் பார்ப்பான் என்று
சொல்ல முதலில் மனம் வரவில்லை? (உடனே தட்டச்ச இறங்காமல் யோசித்துப்
பார்க்கவும்) இதை ஒரு மனப்பயிற்சிக்காகத்தான் எடுத்துச் சொன்னேன். ஒரு
உளவியல் சோதனை. ஆத்மசோதனை. இது முமூக்ஷுப்படி ;-)

க.>

2009/9/22 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

> குறவன் என்று  சொன்னாலே  இளக்காரம் என்று ஏன் நினைக்கவேண்டும்

It is loading more messages.
0 new messages