பஷிம் பங்கா

37 views
Skip to first unread message

Dhivakar

unread,
Aug 20, 2011, 5:18:43 AM8/20/11
to மின்தமிழ்


"பஷிம் பங்கா'வாகிறது மேற்கு வங்கம்

தினமலரில் பஷிம் எனப் போட்டது சரியான தமிழ் வார்த்தைதானா?
பஸ்சிம் பங்கா வா, பச்சிம் பங்கா வா அல்லது பஷிம் பங்கா வா?

எப்படியும் தமிழில் நாம் அழைக்கும் ’மேற்கு வங்கம்’ என்பது தப்பிப் பிழைத்துவிட்டது.. வாழ்க பெங்காலிகள்.
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com



Vinodh Rajan

unread,
Aug 20, 2011, 5:33:04 AM8/20/11
to mint...@googlegroups.com, மின்தமிழ்
पश्चिम பஶ்சிம் పశ్చిం

அது ஷ’கரமும் அல்ல ஸ’கரமும் அல்ல ஶ’கரம். :-)

ஶகரம் வழக்கற்று விட்டதால், பஷ்சிம் என்று எழுதினால் போதும்.

வி




s.bala subramani B+ve

unread,
Aug 20, 2011, 5:37:03 AM8/20/11
to mint...@googlegroups.com
வடக்கு  என்று  பொருள்
வங்கம் என்பது அவர்கள் வாயில் பங்க என்று தான் வரும்
விமலா என்பது பிமலா ஆகவும் 
வணிகம் என்பது பாணிக ஆகவும் 
சாதுவா என்பது சாடுபா  ஆகவும் வரும்   

2011/8/20 Dhivakar <venkdh...@gmail.com>



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

Geetha Sambasivam

unread,
Aug 20, 2011, 5:43:40 AM8/20/11
to mint...@googlegroups.com
பஷ்சிம் என்றால் மேற்கு என்று சொல்வார்கள்.

2011/8/20 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

Dhivakar

unread,
Aug 20, 2011, 5:59:41 AM8/20/11
to mint...@googlegroups.com
மூலம் : வடமொழிதான்
தெலுங்கிலேயும் உண்டு.மேற்கு:  பஸ்சிம கோதாவரி மாவட்டம்.


2011/8/20 Geetha Sambasivam <geetha...@gmail.com>

seshadri sridharan

unread,
Aug 20, 2011, 6:24:41 AM8/20/11
to mint...@googlegroups.com
இந்த சிக்கலே வேண்டாம் நாம் எப்போதும் போல் மேற்கு வங்கம் என்றே சொல்லுவோம்.   பஷ்சிம் என்பது பெயர்ச் சொல் அல்ல.  ஆங்கிலத்தில் எப்படி எழுதுவார்கள் West Bengal  என்று தானே. அதையே நாமும் பின்பற்றுவோம்.
 
சேசாத்திரி 

2011/8/20 Dhivakar <venkdh...@gmail.com>

geeyes

unread,
Aug 20, 2011, 8:36:47 AM8/20/11
to மின்தமிழ்
இந்தியாவில் ஒரு வங்கம் தானே இருக்கிறது. அதனால் ‘பங்க ப்ரதேஷ்’ என்று
மாற்றுவதாகத்தானே ஆரம்பித்தார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில், கிழக்கு
வங்காளம் என்று இருந்ததுதான் தனி நாடாகிவிட்டதே.
பின் எப்படி மறுபடி ’.பஸ்ச்சிம் பங்கா’ என்றே ஆகிறது என்று தெரியவில்லை.

முதல் எண்ணம் தான் சரியெனப்படுகிறது.

அன்புடன்,
ஜி.ஸன்தானம்

Hari Krishnan

unread,
Aug 20, 2011, 8:41:59 AM8/20/11
to mint...@googlegroups.com


2011/8/20 geeyes <gmsan...@gmail.com>

பின் எப்படி மறுபடி ’.பஸ்ச்சிம் பங்கா’ என்றே ஆகிறது என்று தெரியவில்லை

மற்ற இடங்களைப் பற்றித் தெரியாது.  மைசூரில், ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு அருகே காவிரி மேற்கு நோக்கி ஓடுகிறாள்.  சின்ன யூ டர்ன் போன்ற இடம்.  இந்த இடத்துக்குப் பெயர் பஸ்ச்சிம வாஹினி.  ஆங்கிலத்திலும் Paschima Vahini என்றெழுதப்பட்டுள்ளது.  நதிகள் மேற்கு நோக்கிச் செல்லும் இடங்களில் அபரக் கிரியைகளைச் செய்வார்கள்.  இங்கேயும் அப்படித்தான்.  பஷ்ஷிம் சரியா அல்லது வேறு உச்சரிப்பு சரியா என்பது தெரியாது.  மைசூரில் பஸ்ச்சிம-தான் சரி. :)

--
அன்புடன்,
ஹரிகி.

Maravanpulavu K. Sachithananthan

unread,
Aug 20, 2011, 10:32:06 AM8/20/11
to மின்தமிழ்
இடப்பெயர்கள் தமிழாகுவதில் வரன்முறை எதுவுமில்லையாதலால் குழப்பம். Cape
of Good Hope என்பதை நன்னம்பிக்கை முனை என்றே முன்னோர்கள் அழைத்தார்கள்,
பாடப்புத்தகங்களில் அந்தப் பெயரே இருந்தது.

விகாரம் என்பது புத்த கோயிலைத் தமிழில் அழைக்கும் வழமை. Bihar இன்று
பீகார், பிகார் என வழங்குகிறது. அதே புத்த கோயிலின் பெயர்
மாநிலத்துக்கானதும் இந்த மாற்றம்.

கள்ளிக்கோட்டையை ஆங்கில வழி கலிக்கட் என்றே வழங்குகிறோம்.

கண்டம் தமிழ் வழக்கு. ஜார்க்கண்ட், உத்தரகண்ட் அப்படியே தமிழுக்கு
வந்தது. கண்டம் நீங்கியது.

Bangaladesh பங்காளதேஷ், பங்காளதேசம், வங்காளதேசம் என்றெல்லாம்
பாடப்புத்தகங்களில் மாறி மாறி வரும், இதழ்களிலும் அவ்வாறே. மக்கள்
புரிந்து கொள்கிரார்கள்.

மேற்கு வங்கம் என்பதில் உள்ள இனிமை, எளிமை பஸ்ச்சிம் பங்கா பெறுமா
தெரியவில்லை, பழகப் பழக எதுவும் இனிமையாகும்.

இடப்பெயர்களுக்கு உரோம வரிவடிவங்களில் சீர்மை நோக்கிய ஐக்கிய நாடுகள்
குழு 1960 தொடக்கம் உண்டு.

Dated 2 May 2011
Experts from around the world gathered in Vienna today for the start
of a five-day United Nations conference aimed at standardizing the use
of place names so that governments, organizations and the public can
benefit.
The UN Group of Experts on Geographical Names (UNGEGN), which was
created in 1960, is holding its latest session at a time when digital
technology has made it easier to disseminate and obtain detailed
geographic information.
“Global expectations are for correct and authoritative information to
be available virtually on demand,” said UNGEGN Chairperson Helen
Kerfoot, adding that “the challenges we face today remain as thought-
provoking as in the past.”
UNGEGN was established to try to promote the use and availability of
accurate, clear and unambiguous geographic names given their
importance to national and international communication.
Place names are fundamental to many aspects of society, including the
coordination of emergency services, tourism, communications systems,
economic development and the setting up of planning databases.
International standards and the challenges of making standardized
names available for disaster responses are among the subjects to be
discussed at this week’s session in Vienna.
UNGEGN is one of seven standing expert bodies of the UN Economic and
Social Council (ECOSOC).
இடப்பெயர்களுக்குத் தமிழ் வரிவடிவங்களில் சீர்மை, தரக்கட்டுப்பாடு
நோக்கிய பயணமே தொடங்கவில்லை.
நன்றி


On Aug 20, 5:41 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/20 geeyes <gmsantha...@gmail.com>

geeyes

unread,
Aug 20, 2011, 12:16:59 PM8/20/11
to மின்தமிழ்
பெயர்ச்சொற்களை மொழிபெயர்த்துக்கொள்வது சரியெனப்படவில்லை. அவர்கள்
தங்கள் பகுதிக்கு (மாநிலத்திற்கு) என்ன பாரம்பரியப் பெயரை
விரும்புகிறார்களோ அதை நாமும் ஏற்பதுதான் நியாயம்.

அல்லாவிடில் சென்னையில் உள்ள Fort, Park, Beach போன்ற பல
ரயில்நிலையங்களின் பெயர்களை மொழிபெயர்த்து போட்டிருப்பதைப் பார்க்கையில்
ஏற்படும் நகையுணர்வுதான் ஏற்படும். அப்படி அல்லாது அந்தப் பெயர்களை
அப்படியே ஆங்கிலத்தில் Kottai, Poonga, Kadarkkarai என்றே
குறிக்கப்பட்டிருக்கவேண்டும்; ஏடுகளிலும் பதிவுசெய்யப்பட்டிருக்க
வேண்டும்.

நான் ‘பஸ்ச்சிம்’ என்று கூறியது ஹிந்தியை அடியொற்றித்தான். தில்லியில்கூட
‘பஸ்ச்சிம் விஹார்’ என்றொரு பகுதி இருக்கிறது. (நல்லவேளை அவர்கள் அதை
‘West Vihar' என்று(ம்) குறித்து, குழப்பவில்லை)

மேற்குத் திசையை ஹிந்தியில் ‘பஸ்ச்சிம்’ என்று குறிப்பதைப்போல,
வங்காள (பாங்லா) மொழியில் எப்படிக் குறிக்கிறார்கள் என்று எனக்குத்
தெரியவில்லை.

எவ்வாறானலும், இந்தியாவில் ஒரு வங்காளம் மட்டுமே இருப்பதால் ‘பங்க
ப்ரதேஷ்’ என்று மட்டுமே வைத்துக்கொண்டால் சரியாக இருக்கும்.

N. Ganesan

unread,
Aug 20, 2011, 1:45:07 PM8/20/11
to மின்தமிழ்

On Aug 20, 7:41 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/20 geeyes <gmsantha...@gmail.com>
>


வடமொழி திசைப்பெயர்கள் வந்ததெப்படி?
என்று எழுதியிருக்கிறேன். சூர்ய நமஸ்காரத்தால்
ஏற்பட்ட பெயர்கள் இவை.

பஶ்சிமம் என்றால் முதற்பொருள் “பின்னால்”.
சூரியனைப் பார்க்கும் கிழக்கு “முன்னால்” எனவே,
பூர்வம் = கிழக்கு, பஶ்சிமம் என்றால் பின் திசை
(அதாவது காலையில் சூரியோதயத்தில் சந்தியா
வந்தனம் அனுஷ்டிப்போருக்கு). வலது கை (டெக்ஷ்ட்றஸ்)
- தக்‌ஷிணம் (தென்திசை). இடதுகை வாமம் அல்லது
உத்தரம் = வடக்கு.

மேலும் அறிய, 1805 ரெபரன்ஸ்
http://books.google.com/books?id=3CYoAAAAYAAJ&pg=PA274&dq=paschima+west+sun+worship&hl=en&ei=ae9PTvv_KImatwfChqmyBw&sa=X&oi=book_result&ct=result&resnum=4&ved=0CD8Q6AEwAw#v=onepage&q=paschima%20west%20sun%20worship&f=false

தமிழின் திசைப் பெயர்கள் பற்றியும் விரிவாக எழுதியுள்ளேன்.
வடக்கு ஆலமரம் (வடம்), தெற்கு தென்னை சின்னங்கள்.
குணக்கு - கடலை தோண்டி சூரியன் உதிப்பதால்.
குடக்கு - குடைந்து மலையினுள் மறைதலால்.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Aug 20, 2011, 2:09:17 PM8/20/11
to mint...@googlegroups.com
http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=5374820
பஸ்ச்சிம் என்பது வெஸ்ட் என்ற ஆங்கில வார்த்தைக்குப் பதிலாக வங்கத்தில் மேற்கு என்று மொழியாக்கம் செய்யப்பதாக அரசுத்தகவல் தெரிவிக்கிறது.
வெஸ்ட் பெங்கால் என்பதை வங்காள மொழியில் பஸ்ச்சிம் பங்கா என்று மொழிமாற்றம் பெற்றுள்ளது
நாகராசன்


2011/8/20 N. Ganesan <naa.g...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Aug 20, 2011, 2:11:25 PM8/20/11
to mint...@googlegroups.com

அப்பாடா!
2011/8/20 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

R.M. Paulraj

unread,
Aug 20, 2011, 12:46:30 PM8/20/11
to mint...@googlegroups.com

ஆங்கிலத்தில், alphabetical orderஇல் குறிப்பிடப்படும் இடங்களில் 'W'வில் துவங்கும் West Bengal என்ற‌ தங்களது மாநிலத்தின் பெயர் எப்போதும் கடைக்கோடியில் வருவதைத் தவிர்க்க எண்ணியே வங்காளிகள் தம் மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என கோரத்துவங்கினர்.

இந்த 'West'க்கு 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு உள்ளது. வங்கப்பிரிவினை (Partition of Bengal) 1905இல் அந்த மொழி பேசும் மக்களை இரண்டு மாநில மக்களாகப் பிரித்துப்போட்டது மறக்க முடியாத வரலாறு.

பாரம்பரியத்தையும் விட்டுவிட தயங்கித் தடுமாறும் ஒரு intellectual இயலாமையால் இந்த முயற்சி திசை மாறி, 'மேற்கு' வை விட முடியாமல், 'மேற்கு' என்ற பொருள்படும் 'பஸ்சிம்' என்ற சொல்லையே எல்லா இடத்திலும் ஆளவேண்டும் என தீர்மானித்திருக்கிறார்கள்.

'மேற்கு' என்ற பொருளுடைய இந்த 'பஸ்சிம்' இந்தி மொழியில் மிகச்சரளமாகப் புழங்கும் ஒரு சொல்தான்.

அன்புடன்
ஆர்.எம்.பால்ராஜ்

--- On Sat, 20/8/11, geeyes <gmsan...@gmail.com> wrote:

Hari Krishnan

unread,
Aug 20, 2011, 11:58:19 PM8/20/11
to mint...@googlegroups.com


2011/8/20 R.M. Paulraj <rmp...@yahoo.co.uk>

பாரம்பரியத்தையும் விட்டுவிட தயங்கித் தடுமாறும் ஒரு intellectual இயலாமையால் இந்த முயற்சி திசை மாறி, 'மேற்கு' வை விட முடியாமல், 'மேற்கு' என்ற பொருள்படும் 'பஸ்சிம்' என்ற சொல்லையே எல்லா இடத்திலும் ஆளவேண்டும் என தீர்மானித்திருக்கிறார்கள்.

கிழக்கு வங்காளம், வங்கதேசமாக (பங்ளாதேஷ்) மாறிய பிறகு, இந்த மேற்கு என்ற அடையே தேவையற்றது.  வங்காளம் என்றாலே போதுமே!  கிழக்குப் பகுதிதான் இல்லையே!  அப்புறம் எதற்காக, மேற்கு என்று பிரித்துக்காட்ட வேண்டிய அவசியம்!  Mental block.  மனத்தடை,

Innamburan Innamburan

unread,
Aug 21, 2011, 1:04:54 AM8/21/11
to mint...@googlegroups.com
'ஸோனார் பங்க்ளா' தேசாபிமானம் இந்திய தேசாபிமானத்திற்கு முரண் அன்று. கர்ஸான் பிரபு இந்திய மரபு போற்றிய, ஆனால், ஆணவம் மிகுந்த இம்பீரியல் அபிமானி. ஒரே தேசாபிமானத்துடன் வாழ்ந்து வந்த  'ஸோனார் பங்க்ளா' வை பிரித்து, கலகமூட்டிய அதிக பிரசங்கி. அதன் கர்மவினையே பிரிவினை, இந்த கிழக்கு/மேற்கு, 'ஸோனார் பங்க்ளா'க்காரர்களை மனத்தளவில் பாதிக்கிறது. அதனால், இப்படி. தமிழர்கள் அவர்களுக்காக தீர்மானிப்பது, கர்ஸான் போல. உங்களுக்கு ஒன்று தெரியுமோ? S S L C என்றால்,Stupid System of Lord Curzon!
இன்னம்பூரான்
21 08 2011

R.M. Paulraj

unread,
Aug 21, 2011, 4:19:17 AM8/21/11
to mint...@googlegroups.com
பெயர் மாற்றம் வேண்டும் என்பவர்கள் கூறும் காரணம் அத்தனை பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. ஒரு விதத்தில் சிறுபிள்ளைத்தனமானதும் கூட.

'மேற்கு'வை விட மனதில்லாதவர்கள், மிகப்பெரும்பாலும் அந்த சொல்லில் அடங்கியுள்ள‌ சரித்திரத்தை மறக்க விரும்பாதவர்கள்; அந்த சொல் அம்மாநிலத்தின் வரலாற்றில் வந்து ஒட்டிக்கொண்ட கதை ஒரு பெரிய வரலாறு அல்லவா?

அன்புடன்,

ஆர்.எம்.பால்ராஜ்

--- On Sun, 21/8/11, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
--

Innamburan Innamburan

unread,
Aug 21, 2011, 6:29:47 AM8/21/11
to mint...@googlegroups.com
அந்த 'பெரிய வரலாற்றை' சொல்லுங்களேன், திரு. பால்ராஜ்.

Swaminathan Venkat

unread,
Aug 21, 2011, 6:35:11 AM8/21/11
to mint...@googlegroups.com
ப்ஷீம் இல்லை. பஸ்சிம் என்று சொல்ல பழகிக் கொள்ளலாமே. தமிழ் பத்திரிகைகளும் தமிழ் தொலைக்காட்சிகளூம்  எந்தப் பெயரையும் தம் இஷடத்திற்கு சித்திர வதை செய்கின்றன. பெங்கால் என்று பெயர் மாற்றம் செய்யத் தொடங்கிய போராட்டம் பஸ்சிம் என்று சேர்த்துக்கொண்டது ஏனோ. தெரியவில்லை. பால்ராஜ் அவர்கள் சொல்ல விருக்கும் கதையில் விவரம் தெரியலாம்.

2011/8/21 Innamburan Innamburan <innam...@gmail.com>
அந்த 'பெரிய வரலாற்றை' சொல்லுங்களேன், திரு. பால்ராஜ்.
இன்னம்பூரான்


N. Ganesan

unread,
Aug 21, 2011, 1:05:26 PM8/21/11
to மின்தமிழ்

On Aug 21, 1:19 am, "R.M. Paulraj" <rmp...@yahoo.co.uk> wrote:
> பெயர் மாற்றம் வேண்டும் என்பவர்கள் கூறும் காரணம் அத்தனை பெரிய விஷயம் ஒன்றும் இல்லை. ஒரு விதத்தில் சிறுபிள்ளைத்தனமானதும் கூட.
>
> 'மேற்கு'வை விட மனதில்லாதவர்கள், மிகப்பெரும்பாலும் அந்த சொல்லில் அடங்கியுள்ள‌ சரித்திரத்தை மறக்க விரும்பாதவர்கள்; அந்த சொல் அம்மாநிலத்தின் வரலாற்றில் வந்து ஒட்டிக்கொண்ட கதை ஒரு பெரிய வரலாறு அல்லவா?
>
> அன்புடன்,
> ஆர்.எம்.பால்ராஜ்
>

> --- On Sun, 21/8/11, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:


>
> From: Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
> Subject: Re: [MinTamil] Re: பஷிம் பங்கா
> To: mint...@googlegroups.com
> Date: Sunday, 21 August, 2011, 9:28 AM
>
> 2011/8/20 R.M. Paulraj <rmp...@yahoo.co.uk>
>
> பாரம்பரியத்தையும் விட்டுவிட தயங்கித் தடுமாறும் ஒரு intellectual இயலாமையால் இந்த முயற்சி திசை மாறி, 'மேற்கு' வை விட முடியாமல், 'மேற்கு' என்ற பொருள்படும் 'பஸ்சிம்' என்ற சொல்லையே எல்லா இடத்திலும் ஆளவேண்டும் என தீர்மானித்திருக்கிறார்கள்.
>
> கிழக்கு வங்காளம், வங்கதேசமாக (பங்ளாதேஷ்) மாறிய பிறகு, இந்த மேற்கு என்ற அடையே தேவையற்றது.  வங்காளம் என்றாலே போதுமே!  கிழக்குப் பகுதிதான் இல்லையே!  அப்புறம் எதற்காக, மேற்கு என்று பிரித்துக்காட்ட வேண்டிய அவசியம்!  Mental block.  மனத்தடை,
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
>

Tamilization by Kampar (pazchima > paccimam):

பச்சிமத்தினும், மருங்கினும், முகத்தினும், பகழி,
உச்சி முற்றிய வெய்யவன் கதிர் என உமிழ,
கச்சம் உற்றவன் கைத் துணைக் கடுமையைக் காணா,
அச்சம் உற்றனர், கண் புதைத்து அடங்கினர், அமரர். 69

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=14375&st=420

NG

> --
>
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

Nagarajan Vadivel

unread,
Aug 21, 2011, 1:22:13 PM8/21/11
to mint...@googlegroups.com
மேற்கு என்பது விவாத்திற்குறியது.  மேலைநாட்டு இலக்கிய பண்பாட்டுக்கூறுகளை வாழ்வில் வழிவழியாகக் கடைப்பிடித்து வாழ்ந்த அந்த மேற்கு என்பது வேறு. பிரிவினையின் காரணமாக வங்காளம் இரண்டாகப் பிரிந்ததில் மேற்குப்பக்கம் கிடைத்தது வேறு.  இப்பொது எந்த மேற்கை மாற்ற்யிருக்கிறாட்கள்.  மாற்றம் ஒன்றும் இல்லை.  ஏமாற்றம்தான்.
நாகராசன்

2011/8/21 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Maravanpulavu K. Sachithananthan

unread,
Aug 21, 2011, 8:18:10 PM8/21/11
to மின்தமிழ்
கம்பருக்கு முன்பாகவோ பின்பாகவோ திருமூலர் பச்சிமம் = மேற்கு என்கிறார்.

உத்தமன் சோதி உளன்ஒரு பாலனாய்
மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
சத்திமா னாகத் தழைத்த கொடியே. தி.10404025

உணர்த்தும் அதிபக் குவர்க்கே உணர்த்தி
இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண்
டுணந்த்தும் மின் ஆவுடை யாள்தன்னை உன்னியே.தி.10614011

சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில்
உத்தரம் வாமம் உரைத்திடும் சத்தி
பச்சிமம் பூருவம் தற்புரு டன்உரை
தெற்கில் அகோரம் வடகிழக் கீசனே.தி.10704012

பச்சிம திக்கலே வைத்தஆ சாரியன்
நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள்
உச்சிக்கும் கீழது உள்நாக்கு மேலது
வைச்ச பதமிது வாய்திற வாதே தி.10708003

கம்பருக்கு நெடுங்காலம் பின்பு அருணகிரிநாதர் பச்சிமம் = மேற்கு
என்கிறார்.

பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்திய ...... குகபூர்வ

பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ்

சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்

செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக ...... மறவேனே

கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல்

கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
கட்டிய ணைத்தப ...... னிருதோளா

சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
கப்பனு மெச்சிட ...... மறைநூலின்

தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே.
பூர்வ பச்சிம தட்சிண உத்தர திக்குள ... கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு
ஆகிய நாலாதிசைகளிலும் உள்ள

கடந்த நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் பச்சிம = மேற்கு எனப் பொருள்பட,

அகராதி தந்த மேலைப்புலோலி நா.சதாவதானி கதிரைவேற்பிள்ளை, தாம் வழிபட்ட
குலதெய்வம் முருகன் ஆலயத்தை "புதுச்சந்நதிக் கந்தன்" ஆலயம் எனவும்
மகாவேலன் தணி (மாலந்தெணி) வேலன் தங்கும் இடம், மேலைப்புலோலி (புலோலி
மேற்கு) "பச்சிம புலவ கான நகரம்"(பச்சிமம்-மேற்கு திசை) மாயக்கை (மாயா
யாக்கை) இப்படியாக பல தீந்தமிழ்ச் சொற்களை தமது பேச்சிலும் எழுத்திலும்
எடுத்தாண்டு வந்தார்

பச்சிம வங்கம் = மேற்கு வங்கம் ஆகும்
நன்றி

> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group, send email to minT...@googlegroups.com

Maravanpulavu K. Sachithananthan

unread,
Aug 21, 2011, 8:43:29 PM8/21/11
to மின்தமிழ்
இடப் பெயர்களைத் தமிழாக்கும் முயற்சி பல நூற்றாண்டுகட்டூடாகத்
தொடர்கிறது.
காட்டாக,

ஆட்சி மொழி வடமொழி.
அரசன் வேற்றவன்.
தமிழே பேசக்கூடாது என்ற ஆணை.

அதை மீறித் தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் எனப் பாடியமையால்
நீற்றறையில், கல்லோடு கடலுள், யானைக்காலில், என உடல் வதை.
அதை மீறி ஊர் ஊராகச் சென்றனர்.

சிறு சிறு ஊர்கள்.
சிறிய சேரிகள்.
மக்களோடு தங்கினர்,
பெயரைக் கொடுத்தனர்.
ஒவ்வொரு ஊருக்கும் திரு அடைமொழி கொடுத்தனர்.
ஸ்ரீ யைத் தூக்கி எறிந்தனர்.

மக்கள் வாய்களுள் தமிழை அமுதமாக ஊட்டினர்.
தமிழைப் பாடு துயரம் போகும்.
தமிழைப் பாடு இன்பம் பெருகும்.
தமிழைப் பாடு ஒழுக்கம் சிறக்கும்
என்றனர்.

அரசன் செய்யான்.
ஆணைகள் வரா.

ஆனாலும் தமிழாக்குவோம்.
போராடுவோம்.
மக்களுக்குச் சொல்வோம்.
இதுவே போராளிகளின் அணுகு முறை.

அப்பர் முதலில், சம்பந்தர் தொடர்ந்தார், ஆழ்வார்கள் பரந்தனர்.
இன்று வரை ஊர்ப்பெயர்கள் பெரும்பான்மை திருவுடன் தொடங்குகின்றன.

விருத்தாசலம், லாலாபாத், டால்மியாபுரம், மாயவரம், இடைச் செருகல்கள்.
நன்றி

On Aug 21, 10:05 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group, send email to minT...@googlegroups.com

விஜயராகவன்

unread,
Aug 22, 2011, 7:29:57 AM8/22/11
to மின்தமிழ்
On 20 Aug., 16:32, "Maravanpulavu K. Sachithananthan"

<tamiln...@gmail.com> wrote:
> இடப்பெயர்களுக்குத் தமிழ் வரிவடிவங்களில் சீர்மை, தரக்கட்டுப்பாடு
> நோக்கிய பயணமே தொடங்கவில்லை.
> நன்றி

தமிழ் சீர் எழுத்து முறையை தனித்தமிழ் வெறியர்கள் முக்கியமாக கிரந்த
எழுத்துகள் மேலுள்ள காழ்ப்பினால் குலைத்து விட்டனர்.

உதாரணம்: தமிழ் பத்திரிக்கைகள் ஜெர்மனி என எழுதுகின்றன, லக்ஷக்கணக்கானவர்
அதை படிக்கின்ரனர். இபோது மேல் சொன்ன காரணத்தால் செர்மனி, செருமனி,
யெர்மனி என பல மாத்தல் பெயர்கள் தமிழர்களை குழப்பி அடிக்கின்றன. இது
தமிழில் வலிமை இல்லை, மாறாக வீக்னஸ், இன்னும் சொல்லப்போனால் இது தமிழின்
வீக்னஸ் இல்லை, தனித்தமிழ் என்ற ஐடியாலஜியினால் வரும் கோளாருகள்.

ஜப்பான் எல்லோருக்கும் தெரிந்தது, தனித்தமிழ் வக்ரங்கள் யப்பான்,
நிப்பான் போன்றவை

ஸ்பெயின் தெரிந்தது, இசுப்பானியா, இசுப்பெய்ன் போன்றவை குழப்பும்
முயற்சிகள்.

கிரந்த வெறுப்பை குப்பைத் தொட்டியில் தள்ளினால் ஒழிய, தமிழ் பெயர்கள்
சீர் பெறாது.

படிப்பவர்கள், எழுதுபவர்கள் முக்கியமாக பாலகர்கள் - இந்த குழப்பங்களை
தவிர்க்க தமிழ் பேச்சு/எழுத்தையே தவிர்க்கின்றனர். ஆங்கிலம்தாம் ரெடியாக
காத்துக் கொண்டு இருக்கிறதே, ஏன் தமிழில் மாரடிக்க வேன்டும் என்ற
மனோபாவத்திற்க்கு ஒரு நல்ல காரணம் இருக்கு. அது எளிதான காரனம் - தமிழில்
ஸ்டாண்டார்ட் இல்லை


ஸ்டாண்டார்ட் பயன்பாடுதான் மொழியையே நிலைநிருத்துகிறது. தனித்தமிழ் -
கிரந்த , சமஸ்கிருத வெறுப்பு அந்த ஸ்டாண்டார்ட் தமிழின் காலை வாருகின்றது

விஜயராகவன்


விஜயராகவன்

unread,
Aug 22, 2011, 7:49:32 AM8/22/11
to மின்தமிழ்
On 22 Aug., 02:43, "Maravanpulavu K. Sachithananthan"

<tamiln...@gmail.com> wrote:
> இடப் பெயர்களைத் தமிழாக்கும் முயற்சி பல நூற்றாண்டுகட்டூடாகத்
> தொடர்கிறது.
> காட்டாக,
>
> ஆட்சி மொழி வடமொழி.
> அரசன் வேற்றவன்.
> தமிழே பேசக்கூடாது என்ற ஆணை.

இந்த "ஆணை" கற்பனையா, அல்லது ஆதாரம் இருக்கா?

>
>
> விருத்தாசலம், லாலாபாத், டால்மியாபுரம், மாயவரம், இடைச் செருகல்கள்.
> நன்றி


டால்மியா என்ற பண எஜமான் , தன் பணத்தை தமிழ்நாட்டில் இடைச்செருகல்
செய்தார், அந்த இடைச்செருகலை வாழ்த்தி டால்மியாபுரம் என்ற இடைச்செருகல்.

தமிழ்நாட்டில் உடை, உணவு, வீடு , பாட்டு, டான்ஸ், சினிமா இவற்றில் வட
இந்திய அல்ல்து மேற்ககத்திய இடைச்செருகல் இருக்கும் போது, ஊர் பெயர்களில்
இருந்தால் என்ன தப்பு

விஜயராகவன்

Dhivakar

unread,
Aug 22, 2011, 8:18:05 AM8/22/11
to mint...@googlegroups.com
விஜயராகவன்,

சோழர்கள் திருமுறைப் பதிகங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தவர்கள். திருமுறைப் பதிகங்களின் என்ன பெயரால் அழைக்கப்பட்டதோ அந்தப் பெயர்களில் ஏதும் மாற்றம் செய்யவில்லை. மண்டலங்கள் (ஏறத்தாழ மாவட்டங்கள் - அதைவிட பெரிய அளவில்) பெயர்கள் ஒவ்வொரு அரசரின் விருப்பத்துக்கேற்றவாரும், அந்தந்த காலகட்டத்து சோழ சக்கரவர்த்தியாக இருப்பவரைக் கவர்வதற்காகவும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன (இப்போதும் செய்யவில்லையா..செங்கல்பட்டு, காஞ்சிபுரம், எம்ஜீயார் மாவட்டம் போல) ஆனால் கோயில் திருப்பெயர்கள் சோழர்கள் காலத்தில் பெரிய அளவில் மாற்றப்படவில்லை.தமிழ் சோழ அரசர்களின் விருப்பமான மொழி. இல்லையென்றால் மெய்க்கீர்த்திகளை இனிய தமிழால் எழுதிக் கொண்டிருப்பார்களா.. கல்வெட்டுகளும் பல்லவன் காலத்திலேயே தமிழுக்கு மாற்றப்பட்டன. முதலாம் மகேந்திரன் முதல் தமிழ்க் கல்வெட்டை (கோயில் சம்பந்தப்பட்டது) பொறித்தவன் என்ற பெயரையும் பெற்றவன். 

சரி, கோயிலின் திருப்பெயர்கள் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழை வடமொழிக்கு மொழிபெயர்த்து வந்தார்கள். காரணம் அப்போது தமிழகத்தை ஆண்டவர்கள் தெலுங்கு மொழியினர், 15-16 ஆம் நூற்றாண்டில் தெலுங்கு ஆண்டது.. அதன் பிறகு 17,18ஆம் நூற்றாண்டில் மராத்தியர்கள் ஆண்டனர். இவர்களுக்கெல்லாம் தமிழின் மீது விருப்பமோ, வெறுப்போ நீங்கள் எதிர்பார்க்கமுடியாது. அவர்களுக்குப் புரியும் பாஷையில் பெயர் இருந்தால் போதும். அப்படி மொழிமாற்றம் செய்யப்பட்ட ஊர்களின் பெயர்கள், கடவுளரின் பெயர்கள் எல்லாமே 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின் ஏற்பட்டது. அத்துடன் நாயக்க மன்னர்களினால் வேறு வகையில் தமிழக் கோயில்களுக்கும் பெரும் பலன் கிடைத்தது. பல நூறு கோயில்கள் புதுப்பிக்கப்பட்டன.


ஆனால் விஜயநகர ராஜாக்களையும், நாயக்க ராஜாக்களையும், மராத்தி ராஜாக்களையும் தமிழில் விருப்பம் காட்ட வைக்க நம் புலவர்கள் முன் வரவில்லை என்றே சொல்வேன். ஒருவிதமான குழப்பமான சூழ்நிலையில் ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் இப்படித்தான் தமிழகம் இருந்தது.

எத்தனைதான் தனித் தமிழ் என்றெல்லாம் இப்போது கொடி பிடித்தாலும் தெலுங்கு அரச மொழியாக தமிழகத்தை ஆட்டிப் படைத்தபோது தனித்தமிழாளர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்பது சரித்திரம் நமக்கு காண்பிக்கும் உண்மை. சர்வாதிகார அரசர்கள் இருக்கும்போது அதையும் மீறி தமிழைக் காப்பாற்றியவர்களில் மிகப் பெரிய பங்கு திருவாவடுதுறை, தருமபுரம், மதுரை ஆதின மடங்களுக்கு உண்டு. குமர குருபரர் தமிழை அன்னை மீனாட்சியின் தயவால் மட்டுமே அரங்கேற்ற முடிந்ததும், அபிராமிக்கு தமிழால் பாடக் கூட ஏகப்பட்ட இடையூறுகள், அந்த அன்னையின் தயவினால் அகற்றப்பட்டதையும், திருவிளையாடல் புராணப் பாடல்கள், கந்த புராணப் பாடல்கள் போன்ற மிக அருமையான தமிழ்க் காவியங்கள் மக்கள் மத்தியில் நாயக்கர்கள் ஆண்டபோது அதிகமாக எடுத்துச் செல்ல முடியவில்லை என்பதும் இங்கே கவனிக்கவேண்டும். கவி காளமேகம் சோழர் காலத்தில் பிறந்திருந்தால் மிகப் பெரிய காவியமே படைத்திருப்பான். சற்று தள்ளிப் பிறந்தமையால் அவன் தமிழும் சிதறி சின்ன சின்ன வைரங்களாய் மின்னுகிறது. 

தமிழ் பல சவால்களை சமாளித்து வந்துள்ளது. இனியும் வரும் கஷ்டங்களையும் தாங்கும் சக்தி கொண்டதுதான் தமிழ். 

திவாகர்

2011/8/22 விஜயராகவன் <vij...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

விஜயராகவன்

unread,
Aug 22, 2011, 8:31:48 AM8/22/11
to மின்தமிழ்
திவாகர்

சச்சிதானந்தம் தமிழை பேசக் கூடாது என்ற அரசு ஆணை(கள்) இருப்பதாக
குறிப்பிட்டார். அந்த ஆணை, அப்படி ஒன்றோ, பலவோ இருந்தால், அதற்க்கான
ஆதாரங்களை கேட்டேன். அந்த ஆணை தம்ழில் பேசுவதை - யாரால், எங்கு , எப்படி
தடை செய்யப்பட்டது என சச்சிதானந்தம் கூறினால் நன்றாக இருக்கும்

உங்களுக்கு தெரிந்து எந்த அரசோ தமிழை யாரும் எங்கேயும் பேசக் கூடாது என்ற
ஆணை பிறப்பித்தனரா??

விஜயராகவன்

> 2011/8/22 விஜயராகவன் <viji...@gmail.com>

> Dhivakarwww.vamsadhara.blogspot.comwww.aduththaveedu.blogspot.com- Zitierten Text ausblenden -
>
> - Zitierten Text anzeigen -

Hari Krishnan

unread,
Aug 22, 2011, 8:37:01 AM8/22/11
to mint...@googlegroups.com
2011/8/22 விஜயராகவன் <vij...@gmail.com>
டால்மியா என்ற பண எஜமான் , தன் பணத்தை தமிழ்நாட்டில் இடைச்செருகல்

செய்தார், அந்த இடைச்செருகலை வாழ்த்தி டால்மியாபுரம் என்ற இடைச்செருகல்.

நாங்கதான் ஜிக்புக் ஜிக்புக் ஜிக்புக் ஜிக்புக் என்று ரயில் கிளம்பி வந்தபோதிலும் அஞ்சாமல் இருப்புப்பாதையில் எம் கழுத்தை இட்டு,  புகையிரதத்தின் சக்கரங்கள் எம் கழுத்தைத் தொடுமளவும் அஞ்சாமல் கிடந்து, நாங்கள் அவ்வண்ணம் இருத்தல் கண்ணுற்ற புகையிரத தேரோட்டி, நிறுத்துவானை அமுக்கி, இரதத்தை நிறுத்தி.....கல்லக்குடி பழங்கநத்தம்னு பேர மாத்திட்டோமுல்ல? ஹ?

(நெஞ்சுக்கு நீதியில் வர்ணனை கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கிறது.  வனவாசத்தில் கவிஞர் கண்ணதாசன், ‘நான்தான் முதல் ஆளாகப் படுத்தேன்.  இவர் ஆறாவது ஆளாகப் படுத்திருந்தார்; வண்டி கிளம்பவே இல்லை என்பதுபோல் எழுதுகிறார்.  யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்!  அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்!)

N. Kannan

unread,
Aug 22, 2011, 8:37:08 AM8/22/11
to mint...@googlegroups.com
திவாகர்ஜீ

மீண்டும், மீண்டும் ஒரு மொழி மீதே சாடும் தனித்தமிழ் ஆர்வலர்கள் மீது
பெருத்த சந்தேகமே வந்துவிட்டது இப்போது!

நாயக்கர் காலத்தில் தெலுங்கு, மராட்டியர் காலத்தில் மராட்டி. அரசனுக்குப்
ப்யந்து அடங்கிக் கிடந்தார்கள் என்று கொள்ளலாம்.

இன்று ஆங்கிலேயர்களா நம்மை ஆள்கிறார்கள். ஏன் விழுந்து அடித்து
கிண்டர்கார்டனுக்கு பிள்ளையை அனுப்புகிறார்கள். யாருக்குப் பயந்து
பிள்ளைகள் தமிழே பேசுவதில்லை.

கண்ணெதிரே ஒரு எதிரியை வைத்துக் கொண்டு சமிஸ்கிருதத்தை வம்பிற்கு
இழுக்கும் இவர்கள், ஆங்கிலமொழி ஏஜெண்டுகளா? இல்லை, பார்வை அற்றவர்களா?
இவர்கள் தமிழுக்கு நண்பர்களா? விரோதிகளா?

தமிழ் இவர்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதே சவால்! கூப்பிய கையில்
வாளோடு இருக்கும் இவர்களை!!

நா.கண்ணன்

2011/8/22 Dhivakar <venkdh...@gmail.com>:

>
> ஆனால் விஜயநகர ராஜாக்களையும், நாயக்க ராஜாக்களையும், மராத்தி ராஜாக்களையும்
> தமிழில் விருப்பம் காட்ட வைக்க நம் புலவர்கள் முன் வரவில்லை என்றே சொல்வேன்.
> ஒருவிதமான குழப்பமான சூழ்நிலையில் ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் இப்படித்தான்
> தமிழகம் இருந்தது.

Geetha Sambasivam

unread,
Aug 22, 2011, 9:38:16 AM8/22/11
to mint...@googlegroups.com
நல்ல தெளிவான அலசல்.  நன்றி.

2011/8/22 Dhivakar <venkdh...@gmail.com>
விஜயராகவன்,

Dhivakar

unread,
Aug 22, 2011, 10:22:31 AM8/22/11
to mint...@googlegroups.com
வாய் மூலம், செவி மூலம், இப்படிப்பட்ட செய்திகள் வரத்தான் செய்கின்றன விஜயராகவன்.

தமிழில் பேசுவது தடை என்று என்னால் ஒரேயடியாகக் கூறமுடியாவிட்டாலும் தமிழில் பாடத் தடையும், அப்படிப் பாடலை சபைஏற்ற ஏகப்பட்ட இடைஞ்சல்கள் இருந்ததும் உண்மை. கவி காளமேகம் பற்றிய செவிவழிக் கதைகள் ஏராளம். அவனைக் கவியென்றே ஒப்புக் கொள்ளாதவர்கள் சிற்றரசர் சபைகளில் இருந்தது உண்டு இவன் காலத்தில் ஊருக்கு ஊர் ராஜாக்களாயிற்றே.  சர்வாதிகார அரசர்களின் ஆட்சியில் தண்டனைகள் எப்படித்தான் கண்டுபிடிப்பார்களோ.. கவிஞனைக் கயிற்றால் கட்டி மேலே தொங்கவிட்டு, கீழே எரியும் தீயில் வாணலியில் சுடுகின்ற எண்ணெயோடு இவர்கள் கேட்பதைச் சரியாக பாடவேண்டும்.. பாடாவிட்டால் தொபுக்’ எனக் கயிறு எண்ணெயில் விடப்படும் என அச்சுறுத்தப்பட்டதாக இரண்டு கவிகளின் வாழ்க்கைக் கதையாக நமக்குச் சொல்கிறார்கள். ஒன்று காளமேகம், இன்னொன்று அபிராமி பட்டர். 

இதற்கெல்லாம் சரியான சான்று கிடைக்காதுதான். எங்கேயாவது பாடலில் இருக்கலாம்.  சான்றுகள் சில அபிதாப சிந்தாமணி எனும் தமிழ் நூலில் (1700 களில் எழுதப்பட்டது) இருக்கிறது. வேறொரு சமயத்தில் இந்நூலைப் பற்றிப் பேசலாம். 

தஞ்சை சரபோஜி மகராஜா நூலகத்தில் தெலுங்கு நூல்கள், ஓலைகள் ஏராளமாக உள்ளன. இவைகளெல்லாம் சரியாக ஆராயப்பட்டால் சரித்திரம் சம்பந்தமான பல ஆதாரங்கள் கிடைக்கும்.ஓலைகள் சரியாக படியெடுக்கப்படவில்லை என நான் மூன்று வருடங்களுக்கு முன்பு எம்டன் நூலுக்காக சென்ற போது சொன்னார்கள். அங்கேதான் அபிதான சிந்தாமணி எனும் நூலைப் பார்த்தேன்.

எனக்கு அந்தச் சமயத்தில் அவைகளையெல்லாம் பார்க்கும்போது ஒன்றுதான் தோன்றியது. இங்கே கிணறு வெட்டினால் பூதம்தான் தோன்றும் என. அத்தனை விவரங்கள் உள்ளன.

தி



2011/8/22 விஜயராகவன் <vij...@gmail.com>
திவாகர்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

விஜயராகவன்

unread,
Aug 22, 2011, 10:24:30 AM8/22/11
to மின்தமிழ்
On 22 Aug., 16:22, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
>
> எனக்கு அந்தச் சமயத்தில் அவைகளையெல்லாம் பார்க்கும்போது ஒன்றுதான் தோன்றியது.
> இங்கே கிணறு வெட்டினால் பூதம்தான் தோன்றும் என. அத்தனை விவரங்கள் உள்ளன.

கிணறுகளை வெட்டுங்கள், பூதங்களை கிளப்புங்கள். ஃஜீபூம்பா


விஜயராகவன்

Dhivakar

unread,
Aug 22, 2011, 10:33:14 AM8/22/11
to mint...@googlegroups.com
தனித்தமிழ் பற்றி, உண்மையாகச் சொல்லப்போனால், எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு கண்ணன்.

சர்வாதிகார ஆட்சிகளில் யாருமே எதிர்த்துப் பேசமுடியாது. அதுவும் முடியாட்சியில் கேட்கவே வேண்டாம். தமிழில் தெய்வத் திருப்புகழ் பாடிய அமரகவி அருணகிரிநாதரை விட இந்த சர்வாதிகார அரசுகள் தொந்தரவு செய்யாமல் விட்டதில்லை.

ஆங்கிலேயருக்கு அதே கதைதான். திருச்சிரபுரத்தை ட்ரிச்சி என்றும் திருவனந்தபுரத்தை ட்ரிவேண்ட்ரம் என்றும் தின்னவல்லி, ட்ரவோங்கூர், கோயம்பட்டூர், ஊட்டி, கன்சிவர்ரம், இன்னபிற பெயர்கள் இன்னமும் நம் நாவில் இருப்பது ஆங்கிலேயர் புண்ணியத்தால்தான். ஊட்டி கொடேய்க்கெனாலில் உள்ள பள்ளிகளில் படிப்பதுதான் தமிழார்வலர் பிள்ளைகளுக்கழகு.

தி

2011/8/22 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Aug 22, 2011, 10:35:28 AM8/22/11
to மின்தமிழ்

Beautiful!

Anbudan
NG

> 2011/8/22 விஜயராகவன் <viji...@gmail.com>

> Dhivakarwww.vamsadhara.blogspot.comwww.aduththaveedu.blogspot.com- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Aug 22, 2011, 10:38:27 AM8/22/11
to மின்தமிழ்

On Aug 21, 5:18 pm, "Maravanpulavu K. Sachithananthan"

Yes. pa'schima banga in Bengali will be "paccima vaGkam" in Tamil.

BTW, Tirumantiram verses are not much before Kamban.

NG

> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmaylike to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTopostto this group, send email to minT...@googlegroups.com


>
> > > To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>

> > > For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil- Hide quoted text -

R.M. Paulraj

unread,
Aug 21, 2011, 10:28:59 PM8/21/11
to mint...@googlegroups.com
தமிழ் எதையும் புறந்தள்ளியதில்லை (சமஸ்கிருதம் போலவே); நீங்கள் குறிப்பிட்டுள்ள‌துபோல. ஆனால், 'தமிழ்ப்படுத்தி' ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு கம்பரை உதாரணமாகக் கூறும் வழக்கம் எனக்கும் உண்டு.

அவ்வளவு ஏன், 'தமிழ்ப்படுத்துவதற்கான' விதிமுறைகளைதான்  தொல்காப்பியரே தந்துவிட்டாரே. பின் வேற்றுமொழிச் சொற்களை ஏற்றுக்கொள்வது குறித்து விவாதம் தேவைதானா என்றே கேட்கத்தோன்றுகிறது. கால ஓட்டத்தில் தமிழ் வடிவம் பெற்றுவிட்ட சொற்களை, அவை தமிழ் சொற்கள்தான் என்று வாதிடுவதும் தேவையற்றது.


அன்புடன்,
ஆர்.எம்.பால்ராஜ்

--- On Sun, 21/8/11, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

விஜயராகவன்

unread,
Aug 22, 2011, 11:41:59 AM8/22/11
to மின்தமிழ்
On 22 Aug., 16:22, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> வாய் மூலம், செவி மூலம், இப்படிப்பட்ட செய்திகள் வரத்தான் செய்கின்றன
> விஜயராகவன்.
>
> தமிழில் பேசுவது தடை என்று என்னால் ஒரேயடியாகக் கூறமுடியாவிட்டாலும் தமிழில்
> பாடத் தடையும், அப்படிப் பாடலை சபைஏற்ற ஏகப்பட்ட இடைஞ்சல்கள் இருந்ததும் உண்மை.
> கவி காளமேகம் பற்றிய செவிவழிக் கதைகள் ஏராளம். அவனைக் கவியென்றே ஒப்புக்
> கொள்ளாதவர்கள் சிற்றரசர் சபைகளில் இருந்தது உண்டு இவன் காலத்தில் ஊருக்கு ஊர்
> ராஜாக்களாயிற்றே.  சர்வாதிகார அரசர்களின் ஆட்சியில் தண்டனைகள் எப்படித்தான்
> கண்டுபிடிப்பார்களோ.. கவிஞனைக் கயிற்றால் கட்டி மேலே தொங்கவிட்டு, கீழே எரியும்
> தீயில் வாணலியில் சுடுகின்ற எண்ணெயோடு இவர்கள் கேட்பதைச் சரியாக பாடவேண்டும்..
> பாடாவிட்டால் தொபுக்’ எனக் கயிறு எண்ணெயில் விடப்படும் என அச்சுறுத்தப்பட்டதாக
> இரண்டு கவிகளின் வாழ்க்கைக் கதையாக நமக்குச் சொல்கிறார்கள். ஒன்று காளமேகம்,
> இன்னொன்று அபிராமி பட்டர்.
>
> இதற்கெல்லாம் சரியான சான்று கிடைக்காதுதான். எங்கேயாவது பாடலில் இருக்கலாம்.

இதெல்லாம் நம்பலாம். நம் கண் எதிரிலேயெ சென்னை ஹைகோர்ட்டில் தமிழுக்கு
தடை, ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும்

போலீஸ் மார்ச் , இதற கமாண்டுகள் ஆங்கிலத்தில்தன் உள்ளன - மார்ச்
செய்யும்போது லெஃப்ட், ரைட், அபௌட் டர்ன் எனத்தான் சொல்கின்ரனர். வலது,
இடது, திரும்பு என இல்லை.

தமிழுக்கு "தடை" இல்லாவிட்டாலும் எந்த தமிழக அரசாங்க ஆவணமும்
ஆங்கிலத்திற்க்குதான் முதல் மரியாதை. தமிழ்நாடு அரசாங்கத்தின் வெப்சைட்
போய் பருங்கள் , நான் சொல்வது புரியும், அல்லது மாவட்ட
வென்ப்சைட்டுகளுக்கு போய் பாருங்கள், பல இங்லீஷில்தான் உள்ளன. இதெல்லாம்
எங்கும் தமிழ் என 60 வருடங்கள் மார்பில் அடித்த பின்பு.


ஒரு அரசர் ஒரு சூழ் நிலையில் தமிழில் தடை செய்து இருக்கலாம் - அது
இன்னும் நிரூபிக்கப் பட வில்லை. ஆனால் மொத்தமாக எந்த அர்சாவது தமிழை
விட்டில் பேசாதே, தெருவில் பேசாதே என ஆனை கொடுத்த தொனியில் சச்சிதாநந்தம்
எழுதினார், அதற்குத்தான் இத்தனை கேள்வி.

அண்ணாதுரை இருந்தபோது , அவர் என்.சி.சி. யை தமிழகத்தில் தடை செய்தார்,
ஏன்? அதில் உள்ள கமான்டுகள் ஹிந்தியில் உள்ளதென. ஆனால் அண்ணாதுரையோ,
கருணாநிதியோ கேட்டது ஹிந்திக்கு பதிலாக தமிழ் ஆணைகள் அல்ல, ஆங்கில
ஆணைகள் . அப்புறம் ஆங்கில ஆணைகளோடு என்.சி.சி. திரும்பி வந்தது.

இனமான தலைவர்களே ஆங்கில ஆணைதான் கேட்டபோது, தெலுங்கு, மராட்டியர் ஏன்
தமிழில் மட்டும் ஆணை விட வேன்டும்.


விஜயராகவன்


விஜயராகவன்

Nagarajan Vadivel

unread,
Aug 22, 2011, 1:40:10 PM8/22/11
to mint...@googlegroups.com
//தமிழில் பேசுவது தடை//
எனக்குத் தெரிந்து மெட்ரிகுலேசன் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பள்ளி வளாகத்துள் எக்காரணம் கொண்டும் தமிழில் பேசக்கூடாது என்ற தடை நடை முறையில் உள்ளது

இது ஒரு தலைமுறையயே தமிழ் மொழிப் பயன்பாட்டில் இருந்து தனிமைப்படுத்திவிடும் என்பதை உணர்ந்தும் பெற்றொரும் மற்றோரும் ஆங்கிலத்தின் அழுத்தத்துகு உட்பட்டு அமைதியில் ஆழ்ந்து கிடக்கிறார்கள்

பல சீன வலைத்தளங்கள் உருவாக உதவி புரிந்துள்ளேன்.  அவர்கள் வேண்டியதெல்லாம் எங்கள் இணையதளம் சீன மொழியில் இருக்கிறது.  பன்னாட்டு வணிகத்துக்கு அதை ஆங்கிலத்திலும் மாற்றி இருமொழி இணயமாக ஆக்கவேண்டும் என்பதே.  அவர்களின் மின் அஞ்சலில் சீனப்பெயருக்குப் பதிலாக ஆங்கிலப் பெயர்களை வைத்துக்கொள்கிறார்கள்.  இப்போது சீனாவில் மின் அஞ்சலுக்கான ஆங்கிலப் பெயருக்குக் கடும் பற்றாக்குறை

தமிழகத்தைப் பொருத்தவரை நான் ஆராய்ச்சி நெறிமுறை வகுப்பில் சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது.
ஒரு மேலாளர் வணிகச் சந்திப்புக்காகச் சிறு நகரத்துக்குச் செல்லுகிறார்.  வேலை முடிந்ததும் மாலையில் நேரத்தைக் கழிக்க ஒரு சூதாட்டக்கூடத்துகுச் செல்ல விழைகிறார்.

எதிரில் வந்தவரிடம் அவர் உள்ளூஎக்காரரா சூதாடுபவரா என்று கேட்டுத் தெரிந்துகொண்டு எததனை சூதாட்டக்கூடம் உள்ளது என்ன வகைச் சூதாட்டங்கள் உள்ளன என்று கூறுமாறு வேண்டுகிறார். 

உள்ளூர்க்காரர் தான் 30 ஆண்டுகளாகத் தினம் சூதாடுவதாகவும் அந்தச் சிறு நகரில் ஒரே ஒரு சூதாட்டக்கூடம் இருப்பதாகவும் சக்கரத்தைச் சுற்றிவிட்டு விளையாடும் ஒரே ஒரு விளையாட்டுதான் உண்டு என்றும் கூறுகிறார். 

நகரத்துக்குப் புதியவர் அந்தச் சக்கரம் ஒழுங்காக வேலை செய்யுமா என்று கேட்கிறார்.
 உள்ளூர்க்காரர் சக்கரம் சரியாக வேலை செய்யாது என்றும் அது கடைக்காரருக்குச் சாதகமாகவே அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். 

வந்ததே கோபம் வெளியூர்க்காரருக்கு. 
என்னைய்யா இது.  அநியாயம் என்று தெரிந்திருந்தும் 30 ஆண்டுகளாக விளையாடினேன் என்று சொல்கிறீரே வெட்கமாக இல்லையா என்று கேட்கிறார்

என்ன செய்வது இருக்கிறதை வைத்துத்தானே பொழுதை ஓட்ட வேண்டும் என்று உள்ளூர்க்காரர் சொன்னாராம். 

தமிழகத்தில் நீங்கள் என்ன தான் கூப்பாடு போட்டாலும் இங்கே இருப்பது ஒன்றே ஒன்றுதான் அது ஆங்கிலவழி.
 
மாற்றுவழி ஒன்றும் இல்லாதவரை அதுதான் இங்கே இருக்கும். 
எப்படியிருந்தாலென்ன.  ஆட்டம் நடக்கவேண்டுமே.
அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும்.  மானேஜர் இஷ்டம்போல் புரோகிராம் மாற்றப்படும்
நன்றி
நாகராசன்

2011/8/22 விஜயராகவன் <vij...@gmail.com>
On 22 Aug., 16:22, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:

N. Kannan

unread,
Aug 22, 2011, 7:39:39 PM8/22/11
to mint...@googlegroups.com
அன்பின் முனைவர் பால்ராஜ்

2011/8/22 R.M. Paulraj <rmp...@yahoo.co.uk>


>
> தமிழ் எதையும் புறந்தள்ளியதில்லை (சமஸ்கிருதம் போலவே); நீங்கள் குறிப்பிட்டுள்ள‌துபோல. ஆனால், 'தமிழ்ப்படுத்தி' ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு கம்பரை உதாரணமாகக் கூறும் வழக்கம் எனக்கும் உண்டு.
>

உண்மைதான். Rishikesh என்பதைப் பெரியாழ்வார் இருடிகேசா! என்கிறார்.
Sridhar என்பதைச் சிரீதரா! என்கிறார். ஆனால் எப்போதும் அப்படி இல்லை. பல
வடமொழிச் சொற்களை அப்படியே கையாளும் வழக்கமும் உண்டு. ஒலிப்பொருத்தம்
இருந்தால் போதும் போலுள்ளது. இல்லையெனில் வள்ளுவன் ”மங்கல்ம் என்ப
மனைமாட்சி” எனச் சொல்லாட மாட்டான்.


> அவ்வளவு ஏன், 'தமிழ்ப்படுத்துவதற்கான' விதிமுறைகளைதான்  தொல்காப்பியரே தந்துவிட்டாரே. பின் வேற்றுமொழிச் சொற்களை ஏற்றுக்கொள்வது குறித்து விவாதம் தேவைதானா என்றே கேட்கத்தோன்றுகிறது. கால ஓட்டத்தில் தமிழ் வடிவம் பெற்றுவிட்ட சொற்களை, அவை தமிழ் சொற்கள்தான் என்று வாதிடுவதும் தேவையற்றது.
>

இது ஏற்புடைய கருத்து. சென்னை மொழியில் `என்னப்பா! நாஷ்டா ஆச்சா!
என்கிறார்கள். மலேசியா போனால், `பசி ஆறினீர்களா?` என்கிறார்கள்.
உண்மையில் தமிழில் Breakfast எனும் சொல் கிடையாது. பசி ஆறுதல் என்பது
Breakfast ன் தமிழாக்கம். எனவே இவையிரண்டில் எதைத்தமிழ் எனக்கொள்வது?

தமிழின் திசை அறிதல் சிரமாக உள்ளது.

தொல்காப்பியரின், `தமிழ்ப் படுத்தல்` விதிகூட சாதீயச் சிந்தனையின் விளைவோ
என்று பின்நவீனத்துவம் கேட்கிறது. சுத்தப் படுத்துதல், தீட்டு போன்ற
கருத்துக்கள் சாதீய அடையாளங்கள். அந்தக் காலத்தில்
தீட்டுப்பட்டுவிட்டால் நீர் தெளித்து பயன்படுத்துவர் (சமீபத்தில் ஒரு
மலையாள தலித் அதிகாரி பயன்படுத்திய காரை நீர் தெளித்து
சுத்தப்படுத்தப்போய், சேதி அமர்களப்பட்டது). அதுபோல்,
‘தமிழ்ப்படுத்திவிட்டால்’ ஏற்றுக்கொள்ளலாம் போல :-)

வெண்பாப் பாடும் வழக்கம் சமகால தமிழ்ப்போக்கில் இல்லாத போது பழைய தமிழ்
விதிகள் தளர்ந்து போகின்றன. புதுக்கவிதையில் தனித்தமிழ் தேடுதல் கடினம்!

தனித்தமிழ் ஒரு விளையாட்டு. பேரா. சொல்வதைப் போல் ஓட்டையான கருவி
என்றாலும் இருப்பதை வைத்துதானே விளையாட முடியும் :-))

நா.கண்ணன்

Maravanpulavu K. Sachithananthan

unread,
Aug 22, 2011, 10:36:57 PM8/22/11
to மின்தமிழ்
ஒரு அரசர் ஒரு சூழ் நிலையில் தமிழில் தடை செய்து இருக்கலாம் - அது
இன்னும் நிரூபிக்கப் பட வில்லை. ஆனால் மொத்தமாக எந்த அர்சாவது தமிழை
விட்டில் பேசாதே, தெருவில் பேசாதே என ஆனை கொடுத்த தொனியில்
சச்சிதாநந்தம்
எழுதினார், அதற்குத்தான் இத்தனை கேள்வி.
வினாவுக்கு விடையாக,
Sanskrit Inscriptions of Tamilnadu: A Literary Study Charu Madhavan
பார்க்கலாம். செய்திகள் மேலும் தெளிவாகும். நன்றி
Reply all
Reply to author
Forward
0 new messages