வடிவேலு பரிதாபமாகக் கதறுவார். டேய்... ஏண்டா இப்படி பில்டப் கொடுத்து
உசுப்பேத்தியே என்னிய அடி வாங்க விடுறீங்க... என்று
அந்த நிலையில் நான்.
அந்த மதகைத் தாண்டிச் செல்லும் ஆளின் நிலையில் கமலம் அம்மையார்.
மேடம். வீரம் எல்லாம் இல்லை. எங்கள் ஊரில் இதை வெட்கம் கெட்ட தனம் என்று
சொல்வார்கள். இதற்காக என் மீது என்னவெல்லாம் பழி சுமத்துகிறார்கள் - எப்படி
எல்லாம் என்னை அமைதியாக்க விரும்புகிறார்கள் என்பது இங்கே டெல்லிக்கு வந்து
பார்த்தீர்கள் என்றால் தெரியும்.
என் நல்ல நேரம். இதுவரை ஏதோ ஆரோக்கியமாக நடமாடிக் கொண்டு இருக்கிறேன்.
என் பக்கம் நிறைய பேர் சேர்ந்து விட்டார்கள் இப்போது.
எல்லாவற்றுக்கும் மேலாக அன்னை பராசக்தி அருள் புரிந்து வருகிறாள்.
> நான் எந்தப் பதவிக்கும் போட்டியிடவில்லை.
> திரு பென்னேஸ்வரன் அவர்களே நான் உங்கள் நிலையில் பல முறை இருந்தபோதும்
> இதே தவறை செய்திருக்கிறேன்
> ஆனால் நல்ல உள்ளம் கொண்ட நேர்மைக்காகப் பாடு படுகிற சிலரும் இதுபோல்
> பதவிகள் வகிக்க ஒதுங்கி நிற்பதால்தான் ஊழல் பெருச்சாளிகள் பதவிகளைப்
> பிடித்துக்கொண்டு நாட்டைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்
> நாமும் இது போல பதவிகளையும் கைப்பற்றி நேர்மையாக துணிவாக பல காரியங்கள்
> செய்யவேண்டும்
> நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம் இருக்கிறோம்
> என்ன ஆதரவு வேண்டும் சொல்லுங்கள்
> காத்திருக்கிறோம்
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
> 6-11-09 அன்று, Kamala Devi <saahith...@yahoo.com.sg> எழுதினார்:
>> ஆச்சர்யமாக இருக்கிறது, இவரது வீரதீர சாஹஸங்கள், பறறி படிக்க,
>> இவ்வளவு பெரிய ஆளா சார் நிங்ஙள், ??
>> தமிழுக்காக இப்படியெல்லாம் கஷ்டப்பட்டாலும் ,
>> வெற்றி எப்போதுமே கருத்து கந்தசாமிக்குத்தானே.
>> நன்மைக்குப்போராடினால் ஈஷ்வரன் எப்போதுமே ரக்ஷிப்பார்.
>> கமலம் .
>> http://www.kamalagaanam.blogspot.com
>> ------------------------------
>> *From:* PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
>> **
>> **மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது..
>> டெல்லியில் இதுவரை பல அமைச்சர்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்து அதிகாரம்
>> செய்து விட்டுப் போயிருக்கிறார்கள். பல பாராளுமன்ற உறுப்பினர்கள். பல ஐஏஎஸ்
>> அதிகாரிகள். பலமுறை நான் எழுதியும் அவாக்ளிடம் பேசியும் இதுவரை ஒரு ஆதரவும்
>> கிடைக்கவில்லை.
>> இங்கு ஜாதியை வைத்து மிரட்டிக் கொண்டு இருக்கிறார்கள். நான் எதிர்ப்வர்கள்
>> தவறான வகையில் தங்கள் ஜாதியைப் பயன்படுத்துகிறார்கள். தங்களை எதிர்ப்பவர்களை
>> ஜாதியின் பெயர் சொல்லி இடுப்பின் கீழ் உதைக்கிறார்கள்.
>> இப்போது என்னை என்ன சொல்லி்த் திட்டினாலும் கவலைப்படப் போவதில்லை என்ற
>> முடிவில் இந்த செயல்பாடுகளைத் துவக்கி இருக்கிறேன். மக்களும் என்னைப் புரிந்து
>> கொண்டு என் பக்கம் சேரத் துவங்கி விட்டார்கள்.
>> சென்ற ஆண்டு இதே நவம்பரில் டெல்லித் தமிழ்ச் சங்கத்தில் ஜனநாயகத்துக்குப்
>> பெரும் ஆபத்து நேர இருந்தது. அப்போது பதவியில் இருந்தவர்கள் சட்ட விரோதமாக
>> தங்களுடைய பதவிக் காலத்தை நீட்டித்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கினார்கள்.
>> தனி ஒருவனாக வெளியில் வந்து அவர்களை எதிர்த்தேன். என்னை பலவகைகளில்
>> அவர்கள் சிறுமைப்படுத்தினார்கள். டெல்லி்த் தமிழர்கள் அனைவருக்கும் இது
>> தெரியும்.
>> ஒரு கட்டத்தில் பெரும் கூட்டமே என்னுடன் சேர்ந்தது. ஜனநாயகத்துக்கு
>> வேட்டு வைக்க நினைத்தவர்களை தமிழ்ச் சங்கத் தேர்தலில் படு பயங்கரமாகத்
>> தோல்வி அடைய வைத்தோம். நான் எந்தப் பதவிக்கும் போட்டியிடவில்லை.
>> இப்போதும் இறைவன் அந்தக் கருணையை என் மீது காட்ட வேண்டும். உங்களைப் போன்ற
>> நல்லவர்களின் ஆசிகளும் பக்கபலமும் எனக்கு இருக்கிறது என்கிற மகிழ்ச்சியும்
>> நெகிழ்வும் எப்போதும் எனக்கு உண்டு.
>> அன்புடன்
>> பென்னேஸ்வரன்
>> 2009/11/6 N. Kannan <navannak...@gmail.com>
>>> அன்பின் பென்:
>>> மின்தமிழ் சார்பாக ஏதாவது கடிதம் துணை புரியும் எனக்கருதினால் சொல்லுங்கள்.
>>> நாங்கள் எல்லோரும் உங்கள் சார்பு.
>>> க.>
>>> 2009/11/6 PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
>>> ஒரு நியாயமான இடத்துக்குப் போய் நிற்கும் நாள் வெகு அருகில் இருக்கிறது
>>>> என்றுதான் நினைக்கிறேன்.
>> ------------------------------
...