தினம் ஒரு பாடல்

8 views
Skip to first unread message

AKR

unread,
Nov 4, 2009, 3:14:19 PM11/4/09
to minT...@googlegroups.com
நமது நாட்டின் பல பகுதிகளை பண்டைக் காலத்திலிருந்து ஆண்ட மன்னர்கள் அனைவரும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாதிருக்கவும், நிலத்தடி நீர் குறையாமல் இருக்கவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவுமென்றே பல்வேறு இடங்களில் ஏரிகள் வெட்டி மழை நீரைச் சேமித்தனர். அந்தக் காலததில் மக்களின் முக்கியமான தொழில்களாகப் பெரும்பாலும் விவசாயம், நெசவு, வாணிகம், கைவினைப் பொருட்கள் செய்தல், சிற்பம் வடித்தல், ஓவியம் வரைதல் போன்றவையே விளங்கின. தற்காலம் போல அடுக்கு மாடிக் கட்டடங்கள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் முதலியவை மிகவும் குறைந்த அளவிலேயே செயல் படுத்தப்பட்டன.
 
அவ்வாறு நம் முன்னோர்கள் ஏற்படுத்திய ஏரிகள் ஒன்றன்பின் ஒன்றாக மண்மேடாக்கப் பட்டு வீட்டுமனைகளாக மாறும் போக்கு தற்காலத்தில் பெருகியுள்ளது. இது மிகவும் ஆபத்தானதாகும். இத்தகைய போக்கை மாற்றி மத்திய மாநில அரசுகள் தரிசு நிலங்களில் ஏரிகள் வெட்டி மழை நீரைச் சேகரிக்கும் திட்டத்தைப் பரவலாக அமுல்படுத்த வேண்டும். இல்லாவிடில் இன்னும் சிறிது காலத்தில் நிலத்தடி நீர் குன்றி உயிர் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்.
 
ஏரிகள் நிறைய வெட்டப்பட்டால் அவற்றின் கரையில் சோலைகளும் பூங்காக்களும் ஏற்படுத்தி சுற்றுலாத் தலங்களாக அமைத்து அதன்மூலம் வருவாய் ஈட்டவும் வழி செய்யலாம். அது மட்டுமா? காதலர்கள் தங்களது வாழ்வை மிகவும் இனிமையாகவும் சுகமாகவும் அமைத்துக் கொள்ளவும் பூங்காற்று வீசும் ஏரிக் கரைகள் உதவும்.
 
 
படம்: முதலாளி
இயற்றியவர்ள: கவிஞர் கா.மு. ஷெரிஃப்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்ததரராஜன்
 
ஏரிக் கரையின் மேலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
 
தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போற பெண்ணே
ஏஏஏ..ஏ.. ஏஏஏஏ.. ஏஏ.. ஏஏஏஏஏஏஏ... ஏஏஏ....
தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போற பெண்ணே
சிட்டுப் போல போற பெண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே
 
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
 
மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே
மச்சான் வரும் வேளையிலே
மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே
கோவம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண்மயிலே
கோவம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண்மயிலே
 
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

N. Kannan

unread,
Nov 4, 2009, 5:47:17 PM11/4/09
to mint...@googlegroups.com
இந்த இசை எனும் வித்தையை (magic) என்னவென்று சொல்வது?

இப்பாடலை எத்தனை முறை மனம் மகிழ்ந்து கேட்டிருப்போம்?

கவிதையாய் எழுதினால் `உறிச்ச கோழி` போல் எளிமையாய் முழிக்கிறது பாடல்.
ஆனால் இசை சேரும் போது தோகை விரித்தாடும் மயில் போல் என்ன ஆட்டம்?

இம்மாதிரி சினிமாப்பாடல்களின் மனமகிழ்வு பாடலில் உள்ளதா? இசையில் உள்ளதா?

சினிமா என்பதே ஆயிரம் தேனிக்கள் கட்டும் தேன்கூடு என்று தோன்றுகிறது.
மாயை என்பதன் உச்ச கட்ட வெளிப்பாடு!

க.>

2009/11/5 AKR <akrcons...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Nov 4, 2009, 7:20:31 PM11/4/09
to mint...@googlegroups.com
மனத்தை அசைக்கும் இசை. உங்களுக்கு தெரியுமோ. ஆயிரம் வருடங்களுக்கு முன் சோழன் அமைத்த வீராணம் ஏரி வெட்டப்படவேயில்லை. இயற்கையாக அமைந்த மேடு பள்ளங்களை பயன் படுத்திய அதிசயம் அது. இன்று கோயில் குளங்களில், மாடமாளிகைகள்.


2009/11/5 N. Kannan <navan...@gmail.com>



--
இன்னம்பூரான்

akr

unread,
Nov 5, 2009, 7:05:12 AM11/5/09
to மின்தமிழ்
மொழியோடு இசை சேர சங்கீதமாகும்
முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும்

என்று கவிஞர் வாலி எழுதியது உண்மையே.


On Nov 5, 3:47 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> இந்த இசை எனும் வித்தையை (magic) என்னவென்று சொல்வது?
>
> இப்பாடலை எத்தனை முறை மனம் மகிழ்ந்து கேட்டிருப்போம்?
>
> கவிதையாய் எழுதினால் `உறிச்ச கோழி` போல் எளிமையாய் முழிக்கிறது பாடல்.
> ஆனால் இசை சேரும் போது தோகை விரித்தாடும் மயில் போல் என்ன ஆட்டம்?
>
> இம்மாதிரி சினிமாப்பாடல்களின் மனமகிழ்வு பாடலில் உள்ளதா? இசையில் உள்ளதா?
>
> சினிமா என்பதே ஆயிரம் தேனிக்கள் கட்டும் தேன்கூடு என்று தோன்றுகிறது.
> மாயை என்பதன் உச்ச கட்ட வெளிப்பாடு!
>
> க.>
>

> 2009/11/5 AKR <akrconsulta...@gmail.com>:

akr

unread,
Nov 5, 2009, 7:06:18 AM11/5/09
to மின்தமிழ்
வருவாய் ஈட்ட வீராணம் திட்டம் இருத்ததனாலேயே இதனை விட்டு வைத்தனர்
போலும்!

On Nov 5, 5:20 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:


> மனத்தை அசைக்கும் இசை. உங்களுக்கு தெரியுமோ. ஆயிரம் வருடங்களுக்கு முன் சோழன்
> அமைத்த வீராணம் ஏரி வெட்டப்படவேயில்லை. இயற்கையாக அமைந்த மேடு பள்ளங்களை பயன்
> படுத்திய அதிசயம் அது. இன்று கோயில் குளங்களில், மாடமாளிகைகள்.
> இ
>

> 2009/11/5 N. Kannan <navannak...@gmail.com>


>
>
>
>
>
> > இந்த இசை எனும் வித்தையை (magic) என்னவென்று சொல்வது?
>
> > இப்பாடலை எத்தனை முறை மனம் மகிழ்ந்து கேட்டிருப்போம்?
>
> > கவிதையாய் எழுதினால் `உறிச்ச கோழி` போல் எளிமையாய் முழிக்கிறது பாடல்.
> > ஆனால் இசை சேரும் போது தோகை விரித்தாடும் மயில் போல் என்ன ஆட்டம்?
>
> > இம்மாதிரி சினிமாப்பாடல்களின் மனமகிழ்வு பாடலில் உள்ளதா? இசையில் உள்ளதா?
>
> > சினிமா என்பதே ஆயிரம் தேனிக்கள் கட்டும் தேன்கூடு என்று தோன்றுகிறது.
> > மாயை என்பதன் உச்ச கட்ட வெளிப்பாடு!
>
> > க.>
>

> > 2009/11/5 AKR <akrconsulta...@gmail.com>:

Reply all
Reply to author
Forward
0 new messages