இச்சார்ல்சுடன் = Charleston
ஒரு நிமிடம் புரியவில்லை, மணி.
அன்புடன்,
நா. கணேசன்
உங்கள் பார்வைக்கு, தினமணியில் கட்டுரை ஒன்று:
ஏற்புடையதா அயல்மொழிச் சொற்கள்?
ராஜ்கண்ணன், தினமணி
அயல்மொழிச் சொற்களை அப்படியே ஏற்கலாமா, கூடாதா என்பது பற்றிய சர்ச்சை
தொடங்கி ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாகப் போகிறது. தூய தமிழில்தான் பேச
வேண்டும் என்கிற பழ. கருப்பையா போன்றவர்கள் ஒருபக்கம். மொழி மக்களுக்குப்
புரியும்படி இருப்பதற்காகத்தான் என்கிற ஈ.வே.கி.ச. இளங்கோவன் போன்றோர்
இன்னொருபக்கம். திராவிடப் பாரம்பரியத்தினரே பலர் பிறமொழி கலந்து பேசுவதை
வழக்கமாக்கிக் கொண்டு விட்டனர்.
÷புதுக்கவிதை எழுதும் தமிழுணர்வுக் கவிஞர்களில் பலர் வடமொழிச் சொற்களைக்
கையாள்வதுதான் சிறப்பு என்று கருதுவது வேடிக்கையாக இருக்கிறது. சிநேகம்,
பரிச்சயம், சுவாசம், பிரியம், ஜீவன் போன்ற வார்த்தைகளில்லாத
புதுக்கவிதைகளை எண்ணிவிடலாம் போலிருக்கிறது. தமிழைச் சுவாசிக்கிறோம்
என்பவர்களின் பெயர்கள் வடமொழிப் பெயர்களாக அல்லவா இருக்கிறது. சிநேகனும்,
விஜயும், மனுஷ்யபுத்ரனும், மாலதி மைத்ரியும், சாரு நிவேதிதாவும்
தனித்தமிழ் இயக்கத்தினரின் பார்வையில் தீண்டத்தகாதவர்களாகி இருப்பார்களே?
÷தமிழில் முதல் டாக்டர் பட்டம் பெற்றவரும் சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில
தமிழ் அகராதி தலைமைத் தொகுப்பாளருமான அ. சிதம்பரநாதன் செட்டியார்
"சொல்லும் பொருளும்' என்ற தலைப்பிட்ட தமது கட்டுரையில் "இன்றியமையாத
இடங்களில் வழக்குப் பயிற்சி அதிகமாகிவிட்ட சொற்களை ஆளுவது குற்றம் ஆகாது.
உதாரணமாக மோட்டார், ரயில், சைக்கிள், பேனா, பாங்கி ஆகிய சொற்களை அப்படியே
ஆளுவதாற் பெரிய குற்றம் வாராது. அவை தமிழே போல் அமைந்து தமிழ் மொழியிலே
இக்காலத்திற் சேர்ந்து கலந்துவிட்டன. அவற்றை தானியக்கி, பொறியியக்கி,
ஈருருளி, மை எழுதுகோல், பண்டாரம் முதலிய சொற்களைக் கொண்டு அப்புறப்படுத்த
முயலுவது கடினமாகும்' என்று குறிப்பிடுகிறார். (தமிழோசை - முல்லை
நிலையம்).
÷தமிழ்மொழி மீது தீவிர பற்றுக் கொண்டு ஜீவானந்தம் என்கிற தனது பெயரை
(பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் சொரிமுத்து) "உயிர் இன்பன்' என்று
மாற்றிக் கொண்டதோடு, மேடையில் தனித்தமிழில் மணிக்கணக்காகச்
சொற்பொழிவாற்றும் ஆற்றல் மிக்கவராகவும் விளங்கினார் ஜீவா. அவர்
சிராவயலில் நடத்தி வந்த ஆசிரமத்துக்கு ஒருமுறை தமிழறிஞர் வ.ரா. (வ.
ராமசாமி) வந்திருந்தார். அன்று "நாடும் இளைஞர்களும்' என்ற தலைப்பில் ஜீவா
ஒரு மணிநேரம் தூய தமிழில் உரையாற்றினார். அதனைக் கேட்ட வ.ரா. மிகவும்
வியப்படைந்து ஜீவாவிடம், "இம்மாதிரி பிரசங்கத்தை நான் கேட்டதே இல்லை.
இவ்விதம் பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் மிகச் சிலரே' என்று
பாராட்டிவிட்டு, வேறு ஓர் ஆக்கமான யோசனையையும் சொன்னார். ""உங்களை நான்
மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் நன்மையை உத்தேசித்து,
தமிழ் மொழியின் வளர்ச்சியையும் உத்தேசித்து, தயவுசெய்து தனித் தமிழை
விட்டு விடுங்கள். நீங்கள் என்னதான் அபூர்வமாகப் பேசியபோதும், உங்களுடைய
தமிழைப் பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியாது. இது மக்களுடைய மொழியல்ல''
என்பதாகும் அந்த யோசனை.
÷அவரது அந்த யோசனை அன்றைக்கு ஜீவாவுக்கு கசப்பானதாகவே இருந்தது. ஆயினும்,
காலவரையில் ஏற்பட்ட அனுபவத்தில் அவர் தமது தூய தமிழ் போக்கினை மாற்றிக்
கொள்ள வேண்டியதாயிற்று.
÷1927-ம் ஆண்டுவாக்கில் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை
மாநாட்டிலும், சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்திலும்
கலந்துகொண்ட ஜீவா, மறைமலையடிகளாரைப் பார்க்கப் போனார். மறைமலையடிகள்
சென்னை, பல்லாவரத்தில் குடியிருந்தார்.
÷மறைமலையடிகள் வீட்டை அடைந்து, கதவைத் தட்டியபோது கேட்ட குரல் ஜீவாவை
அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கேட்ட குரல், தனித்தமிழ் இயக்கத்தின் ஆதர்ச
நாயகனாகக் கருதப்பட்ட சுவாமி வேதாச்சலத்தின் குரல். அது தனித் தமிழாக
இருக்கவில்லை.
÷""யாரது போஸ்ட்மேனா?'' என்று தனது இனிய மொழியில், தனித்தமிழ் வித்தகர்
ஜீவாவை வரவேற்றார். அடுத்தபடியாக
""என்ன காரணம் பற்றி வந்தீர்கள்'' என்ற வினா.
""காரணம் என்ற வார்த்தை தமிழ்ச் சொல்லா அல்லது பிற மொழிச் சொல்லா?''
என்று ஜீவா திரும்பக் கேட்டார்.
÷"எம்மொழிச் சொல் என்று இன்னும் முடிவு கட்டப்படவில்லை'' மறைமலையடிகளின்
பதில்.
""ஏது, மூலம் எனும் சொற்கள் தமிழ்ச் சொற்கள் தாமே?'' ஜீவா கேட்டார்.
÷""ஆமாம்'' அவரது பதில்.
""அங்ஙனமாயின் ஏது, மூலம் ஆகிய சொற்களைப் புழங்குதல் அன்றோ
சால்புடைத்து''
""ஆம்!''
÷இப்படிப் பதில் சொல்லிவிட்டு, சுவாமி வேதாச்சலம், பேச்சின் போக்கைத்
திசை திருப்ப வேண்டி, நூல் நூற்பதையும், கதர் ஆடை அணிவதையும் கடுமையாகத்
தாக்கிப் பேச ஆரம்பித்தார்.
ஜீவாவோ, கடுமையாகப் பதில் சொல்லி அடிகளாரின் வாதத்தை மறுத்துவிட்டு
வெளியேறினார்.
÷தனித் தமிழ் இயக்கத்தின் தலைவராக மதிக்கப்பட்ட தூய தமிழ்வாதியான சுவாமி
வேதாச்சலமும், அவர் கூட்டத்தினரும் சம்ஸ்கிருத எதிர்ப்பாளர்களாக
இருந்ததோடு மட்டுமல்லாமல், ஆங்கில ஆதரவாளர்களாக இருப்பதை ஜீவா உணரலானார்.
யதார்த்த வாழ்வில், மறைமலை அடிகளாரால் தூய தமிழை உபயோகிக்க முடியவில்லை
என்கிற உண்மையும் புலப்படலாயிற்று.
÷பிற்காலத்தில், தலைமறைவு வாழ்க்கையின்போது, மக்களுடன் ஜீவனுள்ள தொடர்பு
கொள்ள வேண்டும் என்றால், வ.ரா. சொன்னதுபோல், மக்கள் மொழியிலேயே பேச
வேண்டும் என்ற உண்மை அவருக்குப் புரியலாயிற்று. (ஜீவானந்தம் - டி.
செல்வராஜ் - சாகித்ய அகாதெமி).
÷இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம். "முரசொலி' நாளிதழில் மூதறிஞர் ராஜாஜியைப்
பற்றிக் குறிப்பிடும்போது இராசாசி என்றுதான் எழுதப்பட்டு வந்தது.
"முரசொலி' ஆசிரியருக்கு ராஜாஜியிடமிருந்து ஒரு தபால்கார்டு வந்தது. அதில்
அவர் எழுப்பியிருந்த கேள்வி இதுதான் - முரசொலியில் எம்.ஜி.ராமச்சந்திரன்,
எம்.ஜி.ராமச்சந்திரன் என்றும், ஜெயலலிதா, ஜெயலலிதா என்றும்
குறிப்பிடப்படும்போது தனது பெயர் மட்டும் ஏன் இராசாசி என்று
குறிப்பிடப்படுகிறது? அதுமுதல் "முரசொலி' அவரை மூதறிஞர் ராஜாஜி என்றே
குறிப்பிடத் தொடங்கியது.
÷வடமொழிக் கலப்பும் சரி, பிறமொழிக் கலப்பும் சரி, அடிப்படையையே
சிதைக்காமல் இருப்பதுவரை அனுமதிக்கப்படத்தான் வேண்டும். இல்லையென்றால்
மொழி வழக்கொழிந்து விடும். அதற்காகத் தேவையில்லாமல் ஆங்கிலம் கலந்து
பேசுவதும், பெயருக்குத் தமிழ் வார்த்தைகளைக் கையாண்டு பேசுவதும்
ஏற்புடையதல்ல. அப்பா, அம்மாவை - டாடி, மம்மி என்று கூப்பிடுவதும் தவறு.
அதற்காக ஜெட், ராக்கெட், பஸ், கார் போன்ற நவீன கண்டுபிடிப்புகளுக்குத்
தமிழ்ப் பெயர்களைத் தேடித் திரிவதும் தேவையில்லாத வேலை என்றே
தோன்றுகிறது.
வணக்கம். நான் பிற மனிதர்களை மதிப்பது மட்டுமன்றி, பிற மொழிகளையும்
மதிக்கிறேன். அதே வேளையில், எவ்வொரு மொழியும் தத்தம் தனித்தன்மையுடன்
இருப்பதை இரசிக்கிறேன். நவீனக் கண்டுபிடிப்புகளுக்குத் தமிழ்ப் பெயர்
கண்டுபிடித்தல் ஆகாது என்பது அவர் கருத்து. அதை நான் ஏற்றுக் கொள்ள
வேண்டும் என்பது அவசியம் இல்லையே. அதே போல நான் எழுதுவதையும் பிறர்
ஏற்றுக் கொண்டாக வேண்டும் என நான் ஒரு போதும் எண்ணவில்லை.
வாழ்க்கையில் எல்லாமும் எக்கணமும் ஒருவருக்குக் கிடைத்து விடுமா??
என்னிடம் அனைத்தும் இருப்பதாக என் மனைவி நினைத்திருக்க மாட்டாள். நானும்
அவ்விதமே. ஆனாலும், இருப்பதைக் கொண்டு விருத்தி கொள்ள ஆசைப்படுகிறோம்.
அதில் என்ன தவறு காண முடியும்?? 26 வரி வடிவங்கள் போதும் என ஒருவன்
எண்ணுகையில், இருக்கும் வரி வடிவங்களைக் கொண்டு இந்த அற்பன் ஏதோ எழுத
ஆசைப்படுகிறான். அவ்வளவே!!!
பணிவுடன்,
பழமைபேசி.
தமிழில் யாரும் `சார்ல்ஸ்` என்பதை இச்சார்ல்சு என எழுதுவதில்லை. இது
தனித்தமிழ் வெறியின் கைப்பாவையாகிய தமிழ் விகிபீடியாவிலும் பொருந்தும்.
சார்ல்ஸ் டார்வின், சார்ல்ஸ் பாபேஜ் எனதான் தமிழில் புழங்குகின்றது.
ஒரு அசோசியேஷனின் பொறுப்பாளராக இருக்கும் நீங்கள் எல்லோருக்கும் தெரியும்
தமிழில் எழுதுவதா, அல்லது புது வார்த்தைகளை கண்டுபிடிப்பதா? FeTNA என்பதை
மட்டும் எல்லா இடத்திலும் அப்படித்தானே போடுகின்றீர். அதை இப்பெட்டினா என
எழுதுவதில்லையே, அல்லது வஅதமகூ (வட அமெரிக்க தமிழ் மன்றங்களின் கூட்டு)
என தமிழில் எழுதுவதில்லையே. அல்லது fetna என எழுதுவதிலையே
தனித்தமிழ் இழுப்புகள் வந்தால் நாம் சமூகத்தில் இருப்பது மறந்துவிடுகிரது
மதிப்புடன்
விஜயராகவன்
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
அவ்வளவு தமிழ் பற்று உள்ளதாக கூறிக்கொள்பவர் தமிழ் எழுத்துக்கள் கொண்டு
மட்டும் எழுதி இருக்கலாமே, தமிழே அல்லாத ஆங்கில எழுத்துக்களின் துணை
எதற்கு ?
இச்சார்ல்சுடன் (Charleston) என்று பக்கத்தில் ஆங்கிலத்தில் போடுவதை விட,
நேரடியாக சார்ல்ஸ்டன் என்றே எழுதி .. இருக்கலாமே..
ஆங்கிலம் கலந்தால் தப்பில்லையாம். ஆனால்.... ஹ்ம்ம்ம்ம்
எல்லாம் வீம்பு தான்...
V
நீங்கள் இப்படி பொதுவாக தீர்மானிக்க முடியாது; கூகிளாண்டவரை கேட்டுப்
பாருங்கள் !! தினமணி, உயிர்மை, திண்ணை, ஆனந்தவிகடன், பிபிசி, கீற்று,
தனியார் பிளாக்குகள் போன்ற ஊடகங்கள், புஸ்தகங்கள் சார்ல்ஸ் என
எழுதுகின்றன. சார்லஸ் என எழுதுபவர்களும் நிறைய பேர் இருக்கின்றனர்.
சார்ல்ஸ் , சார்லஸ் இவைக்கிடையே தூரம் இல்லை.
இதை பிரச்சினையாக்குவது missing the wood for the trees
விஜயராகவன்
பணிவுடன்,
பழமைபேசி.
> ...
>
> read more »
பழமைபேசி, ` எங்கோ, யாதோ ஒரு மொழிக்காரன்` என நாம் ஒரு கனவுலகத்தில்
இருந்து பேசவில்லை. உங்கள் ஆர்வத்திலுள்ள பொது மக்கள் தமிழ் சங்கத்தைப்
பற்றி வெளியீடு செய்கின்றீர்கள். அதை எல்லோருக்கும் புரிய எழுதுமாறு
கோரிக்கை, அவ்வளவுதான்.
இந்த விஷயத்தில் `அவனுக்கென்ற வரிவடிவங்களை எழுதிக் கொள்வது` என்பது
சரியில்லை.
இந்த துண்டு பிரசார விஷயத்தில், நான் இப்படித்தான் எழுதுவேன், நான்
ஆர்பிட்ரரி ஆக இருப்பேன் என்றால். நாம் கூட்டாக வேறென்ன பிசினஸ் செய்ய
முடியும்.
Let us be business-like
விஜயராகவன்
Sanjose என்பதை நம்மவர்கள் சரிக்கட்டிப் ப்டிக்கும் போது, இச்சார்ல்சுடன்
என்பதையும் சரிக்கட்டி வாசிக்க முடியும் வல்லமை கொண்டவர்கள் நம்மவர்கள்
என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. அது உங்களுக்கும் தெரியும்.
மேலும், எனக்கு அக்கப்போர்களில் நம்பிக்கை இல்லை!!! :-)
பணிவுடன்,
பழமைபேசி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Nov 1, 10:19 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> ரெ.கா.வுக்கு ஒரு ஆமாம்.
> இ
>
> 2010/11/1 karthi <karthige...@gmail.com>:
> ...
>
> read more »
US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or hot water. His father, who later committed suicide, was a hardrock miner. His mother took in laundry from the local brothels to make ends meet.
Reid likes to say: "If I can make it in America, anyone can."
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil