ஓர் ஆசங்கை!

142 views
Skip to first unread message

பழமைபேசி

unread,
May 27, 2010, 6:03:33 PM5/27/10
to tamizh...@googlegroups.com, முத்தமிழ், மின்தமிழ், ilakkiy...@yahoogroups.com, ezhil
 

ஓர் ஆசங்கை!

மக்களே, நான் ஒரு தமிழ் மாணவன். அன்றாடம் தவறாது தமிழ் கற்று வருகிறேன். அவ்வகையிலே, உங்கள் உதவியோடு மேலதிகமாக ஒன்றை இன்று கற்க விரும்புகிறேன்.

நான் எழுப்பப் போகிற வினாவானது, அறிவிலித்தனமான மற்றும் பக்குவமற்ற வினாவாகவும் இருக்கக் கூடும். அப்படி இருப்பின் பொறுத்தருள்வதோடு, எம்மடமையை அகற்றித் தெளிவித்திடுவீராக!

பண்புத்தொகை என்பது பண்புப் பெயரைச் சேர்த்து வரும் பெயர்ச் சொல். அப்படியா? அப்படியானால், பண்புப்பெயர் என்றால் என்ன?? பண்பைக் குறிப்பது பண்புப் பெயர்; செம்மை, வட்டம், பசுமை என்பன போன்ற பண்புகளைக் குறிப்பது.

இப்படியான பண்புகளைத் தாங்கி வரும் பெயர்ச் சொல், பண்புத்தொகை. பெருங்கடல், செந்தமிழ், பசும்போன் முதலானவை அதற்கான உதாரணங்கள். செம்மையான தமிழ், செந்தமிழ் என்று ஆகிறது.

செம்மையான மொழி செம்மொழி. அந்த வகையிலே செம்மொழியான தமிழ், செம்மொழித் தமிழ். இந்த செம்மொழித்தமிழுக்கு, உலகந் தழுவிய அளவிலே ஒரு மாநாடு. ஆக, அந்த நல்லதொரு நிகழ்வுக்கான பெயர்ச்சொல், உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு என்று வரும். தருக்கம் சரியாக இருக்கிறதா? நிச்சயமாக, சரியாக இருப்பதைப் போலத் தோணக்கூடும்.

அப்படியானால், ஏன் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று அழைக்கிறோம்? இங்கே, தமிழ் என்பது ஒரு பண்பைக் குறிக்கிறதா?? கன்னடச் செம்மொழி, தெலுங்குச் செம்மொழி என்பவை பண்பால் குறிப்பதாகுமா??

செம்மொழித் தமிழ் என்பதில் பெருமையின் வீரியம் தூக்கலாக இருக்கிறதா? அல்லது, தமிழ்ச் செம்மொழி என்பதில் தமிழுக்கான பெருமையின் வீரியம் அதிகமா?? அன்பு கூர்ந்து, எனக்குள் தலைதூக்கி இருக்கும் இந்த ஆசங்கத்தை விரட்டி அடிக்க உதவி புரியுங்கள் தமிழரே!!


வேர்கள் தமிழில்!
விழுதுகள் உலகெங்கும்!!
 
பணிவுடன்,
பழமைபேசி.

Geetha Sambasivam

unread,
May 27, 2010, 9:46:14 PM5/27/10
to tamizh...@googlegroups.com, முத்தமிழ், மின்தமிழ்
நல்ல கேள்விதான், இவ்வளவு இலக்கணமா யோசிக்காட்டியும், எனக்கும் ஏன் செம்மொழித் தமிழ்னு சொல்றதில்லைனு தோன்றி இருக்கு. உலகத் தமிழ்ச் செம்மொழினா என்னமோ அந்நியப் பட்டமாதிரி, அர்த்தமே இல்லாத மாதிரியான  ஒரு உணர்வு. அதைச் சொல்லத் தெரியலை. நீங்க சொல்றாப்போல் இலக்கணப்பிழைனு இப்போப் புரியுது. பார்க்கலாம், நம் தமிழறிஞர்கள் என்ன சொல்றாங்கனு.

2010/5/28 பழமைபேசி <pazam...@gmail.com>
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

ananda rasa thiruma

unread,
May 27, 2010, 9:56:51 PM5/27/10
to mint...@googlegroups.com
திரு பழமை பேசி
பண்புப் பெயர், பண்புத் தொகை என்னும் இரண்டைப் பற்றியும் சிறிது காண வேண்டும்.
பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப் பெயர். வண்ணம், வடிவம், அளவு, சுவை, தன்மை ஆகியவற்றைக் குறிக்கும் பெயர்கள் பண்புப் பெயர்கள். எ.டு - நீலம், வட்டம், ஒன்று, இனிப்பு, நன்மை
எடுத்துக்காட்டில் உள்ள பெயர்கள் எல்லாம் தமக்குரிய பண்பைக் குறிப்பன. அதனால் அவை பண்புப் பெயர்கள்.

பண்பு உருபு ‘ஆகிய‘ இரு சொற்களுக்கு இடையே மறைந்து வருமானால் அது பண்புத் தொகை. ஆக பண்புத் தொகையில் இரண்டு சொற்கள் இருக்கும். இந்த இரண்டு சொற்களில் பண்புப் பெயர் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
எ.டு- 1. செந்தமிழ்= செம்மை+தமிழ், 2. நாற்பது= நான்கு+பத்து,
3. தென்னை மரம் = தென்னை + மரம்
முதல் எடுத்துக்காட்டில் செம்மை என்பது பண்புப் பெயர், தமிழ் என்பது பொருட்பெயர். அதாவது முதலில் உள்ளது பண்புப் பெயர் இரண்டாவதாக வந்துள்ளது பொருட்பெயர். இரண்டாவது எடுத்துக்காட்டில் நான்கு, பத்து என்னும் இரண்டு சொற்களுமே அளவைக் குறிக்கும் பண்புப் பெயர்கள். மூன்றாவது எடுத்தக்காட்டில் தென்னை, மரம் இரண்டுமே பொருட் பெயர்கள்.
இவை மூன்றுமே பண்புத் தொகைகள்தாம். இம்மூன்றுக்கும் இடையே ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வருவதால் இவற்றைப் பண்புத் தொகை என்பர். 1. செம்மை ஆகிய தமிழ்,
2. நான்கு ஆகிய பத்து, 3. தென்னை ஆகிய மரம் என்பன இவற்றின் விரி.
இவற்றில் மூன்றாவதாக உள்ள தென்னைமரம் என்பதை இருபெயரொட்டுப் பண்புத் தொகை எனச் சிறப்பித்துச் சொல்வர். அதாவது பண்பல்லாத இரண்டு பெயர்ச்சொற்கள் ஒட்டி பண்புத் தன்மை பெற்று வந்த ஒரு பெயர் என்பது இதன் பொருள்.ஒன்று சிற்ப்புப் பெயராகவும் மற்றொன்று பொதுப்பெயராகவும் இருக்கும் இருபெயரொட்டுப் பண்புப்பெயரில்.

அடுத்து நீங்கள் எழுப்பிய வினாவிற்குப் பொருள் கூறும்முன் அடைமொழியைப் பற்றியும் பார்க்க வேண்டும். (இதனைப் பண்புத் தொகையோடு இப்பொழுதைக்கு இணைத்துப் பார்க்க வேண்டாம். இது தனிக் கவனத்திற்கு உரியது)
அடைமொழி இரண்டு வகைப்படும். ஒன்று இனமுள்ளது. மற்றொன்று இனமில்லாதது.
எ.டு- 1. செஞ்ஞாயிறு, (செம்மை + ஞாயிறு) 2. தங்கத் தட்டு (தங்கம் +  தட்டு)
முதல் எடுத்துக்காட்டில் குறிக்கப்படும் பொருள் ஞாயிறு. அதற்கு அடைமொழி செம்மை என்பது.
இரண்டாவது எடுத்துக்காட்டில் தட்டு என்பது குறிக்கப்படும் பொருள். அதற்கு அடையாவத தங்கம்.
அடைமொழியின் நோக்கமே ஒரு பொருளை அதே போன்ற மற்றொரு பொருளிலிருந்து வேறுபடுத்திக் காடுவதுதான். ஆனால் மொழி வழக்கில் அதே போன்ற வேறு பொருள் இல்லாத போதும் சில சமயங்களில் அடை கொடுத்துக் குறிப்பிடும் வழக்கத்தைப்  பெரியோர்கள் கடைப்பிடித்துள்ளனர். அதனால் அதனைத் தவிர்க்க முடியாது.
அக்காலக் கருத்தில் ஞாயிறு ஒன்றுதான். அதனால் ஞாயிறு என்று சொன்னாலே போதும். அப்பொருளைக் குறிக்கும். இருந்தும் அதற்குச் செம்மை என்னும் அடைமொழி சேர்ந்துள்ளது. அதனால் இதனைத் தமிழில் இனமில்லா அடைமொழி என்று குறிப்பிட்டனர்.
இரண்டாவது எடுத்துக்காட்டில் தட்டுப் பல உள்ளன. அதனைப் பல்வேறு உலோகங்களால் செய்து பயன்படுத்தியுள்ளனர். இவ்வேறுபாட்டைக் காட்ட இது தங்கத் தட்டு, இது வெள்ளித் தட்டு, இது மண் தட்டு என  அடைமொழி தேவையாகிறது. அதனால் இரண்டாவது எடுத்துக்காட்டு இனமுள்ள அடைமொழியாகிறது. 

அடைமொழியின் இன்றைய பயன்பாட்டைக் காணலாம்.
மகாத்மா காந்தி - அல்லது காந்தி மகாத்மா. இங்கே ஒன்று சிறப்புப் பெயர், மற்றொன்று இயற்பெயர். காந்தி என்னும் பெயரில் பலர் இருக்கலாம். அவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட காந்தியின் சிறப்புப் பெயர் பயன்படுகிறது. அதனால் அது அடைமொழியாகிறது.(இங்கு இருபெயரொட்டை நினைத்துப் பார்க்கலாம்). இரண்டாவதாகக் காந்தி மகாத்மா என்னும் பொழுதும் அவரையே குறிக்கிறது. அப்படியும் கூறலாம். இயற் பெயர் பின்னர் வருவதே தக்கது என்பது இலக்கணம். அதனால் காந்தி மகாத்மா என்று குறிப்பிடுவது தவறாகாது.

இந்த விளக்கங்களின் பின்னணியில் உங்கள் வினாவிற்கு உரிய விடையைக் காண முயல்வோம்.
1. உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு
2.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
இந்த இரு தொடர்களில் சிக்கலுக்குரிய சொல் உலகம் என்பது. உலகம் என்னும் சொல் எதற்கு அடையாகிறது என்பதைப் பொருத்துப் பொருள் மாறுபடும்.
முதல் தொடரில் உலகம் செம்மொழிக்கு அடையானால் உலகின் கண் உள்ள அனைத்துச் செம்மொழிகளையும் குறிக்கும். அவற்றில் ஒன்றாகிய தமிழுக்கு மாநாடு எனப் பொருள் கொள்ள வாய்ப்பேற்படும். (உலகம் இத்தொடரிலும் தமிழுக்கு அடையாக வாய்ப்புள்ளது என்பதையும் கருத்தில் கொள்க)
இரண்டாவது தொடரில் தனிஒரு பகுதியில் மட்டுமன்றி உலகெங்கினும் பரவியுள்ள தமிழ் என்னும் பொருள் தருவதால் உலகம் தமிழுக்கு அடையாகிறது.  அப்படிப்பட்ட தமிழாகிய செம்மொழிக்கு மாநாடு எனப் பொருள்படும்.
முதல் தொடரிலும் அப்பொருளைப் பெற முடியும். ஆனால் இரண்டாவது தொடரில் தெளிவாக அப்பொருள் தருவதால் இத்தொடரைத் தேர்ந்தெடுத்திருப்பர் என்பது என் கருத்து. வேறு காரணங்களும் இருக்கலாம்.
நேரடியாக உங்கள் வினாவிற்கு இவ்விடையைக் கூறியிருக்கலாம். நீங்கள் பண்புப் பெயர், தொகையைப் பற்றிக் கேட்டமையால் அவற்றைப் பற்றியும தெரிந்ததைக் கூற நேர்ந்தது.
அன்புடன்
ஆராதி
2010/5/28 பழமைபேசி <pazam...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
May 27, 2010, 10:01:52 PM5/27/10
to mint...@googlegroups.com
விளக்கத்தில் உள்ள வேறுபாடுகள் புரிகிறது. என்றாலும் ????பார்க்கலாம், மற்றவர்கள் பதிலையும்.

2010/5/28 ananda rasa thiruma <aara...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 27, 2010, 10:06:02 PM5/27/10
to mint...@googlegroups.com
மன்னிக்கணும், உலகத் தமிழ்ச்செம்மொழிக்கும், உலகச்செம்மொழித் தமிழுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கியதில் என்று சொல்லி இருக்கணும். வேறே மாதிரி அர்த்தம் வந்து விட்டது.

2010/5/28 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Hari Krishnan

unread,
May 27, 2010, 10:32:12 PM5/27/10
to mint...@googlegroups.com
2010/5/28 ananda rasa thiruma <aara...@gmail.com>
இந்த விளக்கங்களின் பின்னணியில் உங்கள் வினாவிற்கு உரிய விடையைக் காண முயல்வோம்.
1. உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு
2.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
இந்த இரு தொடர்களில் சிக்கலுக்குரிய சொல் உலகம் என்பது. உலகம் என்னும் சொல் எதற்கு அடையாகிறது என்பதைப் பொருத்துப் பொருள் மாறுபடும்.
முதல் தொடரில் உலகம் செம்மொழிக்கு அடையானால் உலகின் கண் உள்ள அனைத்துச் செம்மொழிகளையும் குறிக்கும். அவற்றில் ஒன்றாகிய தமிழுக்கு மாநாடு எனப் பொருள் கொள்ள வாய்ப்பேற்படும். (உலகம் இத்தொடரிலும் தமிழுக்கு அடையாக வாய்ப்புள்ளது என்பதையும் கருத்தில் கொள்க)
இரண்டாவது தொடரில் தனிஒரு பகுதியில் மட்டுமன்றி உலகெங்கினும் பரவியுள்ள தமிழ் என்னும் பொருள் தருவதால் உலகம் தமிழுக்கு அடையாகிறது.  அப்படிப்பட்ட தமிழாகிய செம்மொழிக்கு மாநாடு எனப் பொருள்படும்.
முதல் தொடரிலும் அப்பொருளைப் பெற முடியும். ஆனால் இரண்டாவது தொடரில் தெளிவாக அப்பொருள் தருவதால் இத்தொடரைத் தேர்ந்தெடுத்திருப்பர் என்பது என் கருத்து. வேறு காரணங்களும் இருக்கலாம்.

அருமையான விளக்கம்.  உலகம் என்பதை மாநாடு என்பதுடன் கூட்டவேண்டும்.  இப்படிக் கொண்டுகூட்டாவிட்டால் பல திருக்குறள் பாக்களுக்கே விளக்கம் சொல்வது தடுமாற்றமாகிப் போகும்.  எனவே, இப்படி மாற்றிக்கூட்டுவது வழக்கத்தில் உள்ள ஒன்றுதான்.  (சில இடங்களில் எனக்கு மாற்றுக் கருத்துண்டு.  உதாரணமாக டாக்டர் திரு. வி கே அரசு என்பதற்கு பதிலாக திரு டாக்டர் விகே அரசு என்றும்; கவிஞர் திரு சுந்ரனார் என்பதற்கு மாறாக, திரு கவிஞர் சுந்தரனார் என்றும் எழுதுகிறார்கள்.  என்வரையில் இவை தவறானவை.  திரு என்பது பெயரை அண்மித்து இருக்கவேண்டிய ஒன்று.  பட்டங்களுக்கு முன்னால் திரு என்பதைச் சேர்ப்பது பொருத்தமற்றது.  அதுபோகட்டும்.)  உலகம் என்பது மாநாடு என்ற சொல்லோடு கூட்டப்படவேண்டிய ஒன்று.  ஆகவே இந்த ஆக்கம் சரியாக இருப்பதாகத்தான் எனக்குப் படுகிறது.  


--
அன்புடன்,
ஹரிகி.

பழமைபேசி

unread,
May 27, 2010, 11:46:50 PM5/27/10
to மின்தமிழ்
மிக்க நன்றி!

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு;
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு;
உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு!!

இவற்றுள் எது சரி? கோவைத் தமிழ், நெல்லைத் தமிழ் போன்று உலகத்தமிழும்
ஒன்றா??

On May 27, 10:32 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/5/28 ananda rasa thiruma <aaraa...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > இந்த விளக்கங்களின் பின்னணியில் உங்கள் வினாவிற்கு உரிய விடையைக் காண
> > முயல்வோம்.

> > 1. *உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு
> > 2. **உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
> > *இந்த இரு தொடர்களில் சிக்கலுக்குரிய சொல் உலகம் என்பது. உலகம் என்னும் சொல்

Hari Krishnan

unread,
May 28, 2010, 12:18:48 AM5/28/10
to mint...@googlegroups.com
2010/5/28 பழமைபேசி <pazam...@gmail.com>
மிக்க நன்றி!


உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு;
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு;
உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு!!

இவற்றுள் எது சரி? கோவைத் தமிழ், நெல்லைத் தமிழ் போன்று உலகத்தமிழும்
ஒன்றா??


சாத்திரங்கள் பலதேடினேன் - அங்குச்
சங்கையில்லாதன சங்கையாம்.
(பாரதி, கண்ணன் பாடல்கள்)

சங்கைக்கு சஙகையே இல்ல போல்ருக்கே!

devoo

unread,
May 28, 2010, 12:22:16 AM5/28/10
to மின்தமிழ்
தமிழாகிய செம்மொழிக்கு உலக அளவில் நடைபெறும் மாநாடு என்று கொண்டு
கூட்டி,
அந்வய பத விந்யாஸம் செய்து பொருள் கொள்க நண்பரே

செரமப் படுத்தாதீங்ணா , இனிம மாத்தீரவா முடியு ?


தேவ்

பழமைபேசி

unread,
May 28, 2010, 12:46:33 AM5/28/10
to மின்தமிழ்
அஃகஃகா.... மிகவும் இரசித்தேன்!!

On May 28, 12:18 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/5/28 பழமைபேசி <pazamaip...@gmail.com>

பழமைபேசி

unread,
May 28, 2010, 12:53:41 AM5/28/10
to மின்தமிழ்
ஆகா! அறிஞர் பெருமக்கள் கூடும் இந்த மின்தமிழ் குழுமத்தின் மீது
மாறாப்பற்றும், பெருமதிப்பும், நம்பிக்கையும் எனக்குள் உண்டு.
அரசியல் அற்று, தமிழை நுகரும் ஒரு சாமன்யனாகவே இவ்விழையைப் பார்க்கிறேன்.

//உலகமெங்கும் இருக்கும் தமிழாகிய செம்மொழிக்கு மாநாடு எனப்
பொருள்படும். //

தமிழாகிய செம்மொழியா?? செம்மொழியாகிய தமிழா??

மொழியை ஆராய்ச்சி செய்யக் கூடிய மாநாட்டின் தலைப்பையே ஆராய்ச்சி செய்வது
எதிர்பாராத ஒன்றுதான். மன்னிக்கவும்.
இன்னும் மற்றவரது கருத்துகளை எதிர் நோக்குகிறேன்.

பணிவுடன்,
பழமைபேசி.

Geetha Sambasivam

unread,
May 28, 2010, 3:09:22 AM5/28/10
to mint...@googlegroups.com
இது நல்ல பதில்!

2010/5/28 devoo <rde...@gmail.com>
360.gif

Tthamizth Tthenee

unread,
May 28, 2010, 4:04:47 AM5/28/10
to mint...@googlegroups.com
தமிழாகிய செம்மொழியா?? செம்மொழியாகிய தமிழா??
 
தற்போது  இருக்கும் நிலையில்
 
செம்மொழியாகிய தமிழ் என்றுதான் கொள்ளல் வேண்டும்
 
ஏனென்றால் தமிழாகிய செம்மொழிக்கு  இப்போதுதானே நாம் செம்மொழி என்று அங்கீகாரம் பெற்றுள்ளோம்,
 ஏற்கெனவே செம்மொழியாக இருந்த தமிழை  இப்போதுதானே நாம் செம்மொழி என்று ஒப்புக்கொண்டிருக்கிறோம்
 
எப்பொழுதுமே  ஏற்கெனவே இருப்பதை ,
 
நாம்தான் கண்டு பிடித்தோம் என்று சொல்லிக்கொண்டு பெருமை அடைவது நம் வழக்கமாயிற்றே
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
28-5-10 அன்று, பழமைபேசி <pazam...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

விஜயராகவன்

unread,
May 28, 2010, 6:22:08 AM5/28/10
to மின்தமிழ்
On 28 May, 02:56, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:

> பண்பு உருபு ‘ஆகிய‘ இரு சொற்களுக்கு இடையே மறைந்து வருமானால் அது பண்புத் தொகை.
> ஆக பண்புத் தொகையில் இரண்டு சொற்கள் இருக்கும். இந்த இரண்டு சொற்களில் பண்புப்
> பெயர் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
> எ.டு- 1. செந்தமிழ்= செம்மை+தமிழ், 2. நாற்பது= நான்கு+பத்து,
> 3. தென்னை மரம் = தென்னை + மரம்
> முதல் எடுத்துக்காட்டில் செம்மை என்பது பண்புப் பெயர், தமிழ் என்பது
> பொருட்பெயர்.


ஆனந்தராசா

தமிழ் என்பது பொருள் இல்லை; அதுவும் பண்புதான்.


நம் காதில் சிலர் பேசும் போது சப்தங்கள் விழுகின்றன. சில சப்தங்களை நாம்
தமிழ் எனவும், வேறு சில சப்தங்களை ஆங்கிலம் எனவும், வேறு சில சப்தங்களை
கன்னடம் எனவும் சொல்கிறோம். இப்படி காதில் விழும் சம்பதங்களை இனம்
காணுவது நம் மூளை. இதைத்தவிர தமிழ் என்றோ, தெலுங்கு என்றோ, ஆங்கிலம்
என்றோ எந்த “பொருளும்” வெளியுலகில் இல்லை.

மொழி - அதாவது தமிழ், ஆங்கிலம் போன்ற தனிப்பட்ட மொழிகள் - மேஜை,
நாற்காளி, தென்னைமரம் போல பொருள்கள் இல்லை.

ஒருவர் பேச்சை `கன்னடம்` என் இனம் கண்டவுடன்; `அவர் பேச்சு கன்னடப்
பேச்சு` என பேச்சுக்கு பண்பு கொடுக்கிறோம்.


விஜயராகவன்

Hari Krishnan

unread,
May 28, 2010, 6:33:45 AM5/28/10
to mint...@googlegroups.com


2010/5/28 விஜயராகவன் <vij...@gmail.com>

On 28 May, 02:56, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:

> பண்பு உருபு ‘ஆகிய‘ இரு சொற்களுக்கு இடையே மறைந்து வருமானால் அது பண்புத் தொகை.
> ஆக பண்புத் தொகையில் இரண்டு சொற்கள் இருக்கும். இந்த இரண்டு சொற்களில் பண்புப்
> பெயர் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
> எ.டு- 1. செந்தமிழ்= செம்மை+தமிழ், 2. நாற்பது= நான்கு+பத்து,
> 3. தென்னை மரம் = தென்னை + மரம்
> முதல் எடுத்துக்காட்டில் செம்மை என்பது பண்புப் பெயர், தமிழ் என்பது
> பொருட்பெயர்.


ஆனந்தராசா

தமிழ் என்பது பொருள் இல்லை; அதுவும் பண்புதான்.

திரு விஜயராகவன்,

What he actually means by பொருட்பெயர் is Noun.  When he calls a noun a noun, what could be your objection?  He is trying to explain things with the support of grammar just as we would do with English--like saying this is a noun, this is verb, this is a gerund and this is a present participle and so on.  

Therefore, it would be better to comment on such ideas after ascertaining what we have assumed to be the meaning is right.  OTOH, please do explain to me how does the word (if not the name) Tamil can be called or classified as a quality, nature or an attributive, which is what the name பண்பு you are attributing to the word Tamil purports/denotes.  When talking grammar, let us talk grammar.  
 

Hari Krishnan

unread,
May 28, 2010, 6:37:00 AM5/28/10
to mint...@googlegroups.com


2010/5/28 Hari Krishnan <hari.har...@gmail.com>


திரு விஜயராகவன்,

What he actually means by பொருட்பெயர் is Noun.  When he calls a noun a noun, what could be your objection?  


This may help:

பொருட்பெயர் poruṭ-peyar

n. < id. +. 1. Noun derived from the name of a concrete object; பொருளடியாகப் பிறந்த பெயர்ச்சொல். (நன். 132.) 2. Name of a thing; ஒரு

 

விஜயராகவன்

unread,
May 28, 2010, 6:53:26 AM5/28/10
to மின்தமிழ்
I think you are right hariKi. I read பொருட்பெயர் literally instead of
as a grammatical category.


Vijayaraghavan

On 28 May, 11:33, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/5/28 விஜயராகவன் <viji...@gmail.com>

> ஹரிகி.- Hide quoted text -
>
> - Show quoted text -

ananda rasa thiruma

unread,
May 28, 2010, 8:00:39 AM5/28/10
to mint...@googlegroups.com
//தமிழாகிய செம்மொழியா?? செம்மொழியாகிய தமிழா??//
தமிழ்மொழி என்றுதான் சொல்கிறோம். தமிழ் என்பது சிறப்புப் பெயர். மொழி என்பது பொதுப் பெயர். எனவே தமிழ்மொழி என்பது இருபெயரொட்டுப் பண்புத் தொகை. மொழி என்பதற்கு அடையாக செம்மை சேர்ந்து ‘தமிழ்ச் செம்மொழி‘ என வந்துள்ளது. அதாவது தமிழாகிய செம்மொழி எனப் பொருள்படுகிறது. தமிழ் > தமிழ்மொழி > தமிழ்ச் செம்மொழி
திரு விஜயராகவன் வினாவிற்கு என்சார்பாக விடையளித்த, தமது கருத்தையும் பதிவு செய்த திரு ஹரிகி அவர்களுக்கும் நன்றி

அன்புடன்
ஆராதி

2010/5/28 விஜயராகவன் <vij...@gmail.com>
I think you are right hariKi. I read பொருட்பெயர் literally instead of

பழமைபேசி

unread,
May 28, 2010, 8:24:09 AM5/28/10
to மின்தமிழ்
அருமையான பதில்.... தங்களுக்கு மிக்க நன்றி!!

On May 28, 8:00 am, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> //தமிழாகிய செம்மொழியா?? செம்மொழியாகிய தமிழா??//
> தமிழ்மொழி என்றுதான் சொல்கிறோம். தமிழ் என்பது சிறப்புப் பெயர். மொழி என்பது
> பொதுப் பெயர். எனவே தமிழ்மொழி என்பது இருபெயரொட்டுப் பண்புத் தொகை. மொழி
> என்பதற்கு அடையாக செம்மை சேர்ந்து ‘தமிழ்ச் செம்மொழி‘ என வந்துள்ளது. அதாவது
> தமிழாகிய செம்மொழி எனப் பொருள்படுகிறது. தமிழ் > தமிழ்மொழி > தமிழ்ச் செம்மொழி
> திரு விஜயராகவன் வினாவிற்கு என்சார்பாக விடையளித்த, தமது கருத்தையும் பதிவு
> செய்த திரு ஹரிகி அவர்களுக்கும் நன்றி
> அன்புடன்
> ஆராதி
>

> 2010/5/28 விஜயராகவன் <viji...@gmail.com>

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -

பழமைபேசி

unread,
May 28, 2010, 8:31:46 AM5/28/10
to மின்தமிழ்
முடியலை.... இதோ மற்றொரு அன்பரின் பங்களிப்பு:

"உலகச் செம்மொழித்தமிழ் மாநாடு", மற்றும் "உலகத் தமிழ்ச்செம்மொழி
மாநாடு",
இரண்டுமே *சரி*. ("உலகம்" ஒரு சொல்*;* "செம்மொழித்தமிழ்" ஒரு சொல் -
"உலகம்" ஒரு சொல்*; "*தமிழ்ச்செம்மொழி" ஒரு சொல்).


"உலக*ச்* செம்மொழி*த் *தமிழ் மாநாடு", மற்றும் "உலகத் தமிழ்ச் செம்மொழி
மாநாடு"
இரண்டுமே *தவறு. *
("உலகம்" ஒரு சொல்*; "*செம்மொழி" ஒரு சொல்*; "*தமிழ்" ஒரு சொல்
"உலகம்" ஒரு சொல்*; "*தமிழ்" ஒரு சொல்*; "*செம்மொழி" ஒரு சொல்)


*இரு சொற்களை இணைக்கவே மெய்யெழுத்தை சந்தியாக உபயோகப்படுத்த வேண்டும்.
*சும்மா ச், ப், த், ட் ன்னு மெய்யெழுத்தெல்லாவற்றையும் போட்டு, தொடர்
வண்டி
(டிரெயின்) மாதிரி இழுத்துக் கொண்டு சென்றால், தமிழ்க்கொலை தான்
நடக்கும்.


"*தொகை*" என்பது வேறு.
தமிழ் இலக்கணப்படி, "தொக்கி வருவது தொகை".
தொக்கி வருவதென்றால், "*மறைந்து வருவது*" என்று பொருள்.

> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our


> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at

> > >http://groups.google.com/group/minTamil-Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -

பழமைபேசி

unread,
May 28, 2010, 8:33:33 AM5/28/10
to மின்தமிழ்
//தமிழ் > தமிழ்மொழி > தமிழ்ச் செம்மொழி //

தமிழ் > தமிழ்மொழி > செம்மை + தமிழ்மொழி = செந்தமிழ்மொழி??


On May 28, 8:00 am, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> //தமிழாகிய செம்மொழியா?? செம்மொழியாகிய தமிழா??//
> தமிழ்மொழி என்றுதான் சொல்கிறோம். தமிழ் என்பது சிறப்புப் பெயர். மொழி என்பது
> பொதுப் பெயர். எனவே தமிழ்மொழி என்பது இருபெயரொட்டுப் பண்புத் தொகை. மொழி
> என்பதற்கு அடையாக செம்மை சேர்ந்து ‘தமிழ்ச் செம்மொழி‘ என வந்துள்ளது. அதாவது
> தமிழாகிய செம்மொழி எனப் பொருள்படுகிறது. தமிழ் > தமிழ்மொழி > தமிழ்ச் செம்மொழி
> திரு விஜயராகவன் வினாவிற்கு என்சார்பாக விடையளித்த, தமது கருத்தையும் பதிவு
> செய்த திரு ஹரிகி அவர்களுக்கும் நன்றி
> அன்புடன்
> ஆராதி
>

> 2010/5/28 விஜயராகவன் <viji...@gmail.com>

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -

ananda rasa thiruma

unread,
May 28, 2010, 11:25:40 AM5/28/10
to mint...@googlegroups.com
1.//தமிழ் > தமிழ்மொழி > தமிழ்ச் செம்மொழி //

2.//தமிழ் > தமிழ்மொழி > செம்மை + தமிழ்மொழி = செந்தமிழ்மொழி??//
இரண்டுமே வெவ்வேறு பொருள் உடையன.
முதல் தொடரில் செம்மொழி என்பதற்குத் தமிழ் அடையாகும். அதாவது உலகில் உள்ள பல செம்மொழிகளில் தமிழ்ச் செம்மொழி என வேறுபடுத்துவதாக இத்தொடர் பொருள்படுகிறது. அதாவது இலத்தீன் செம்மொழி, சீனச் செம்மொழி, சமஸ்கிருதச் செம்மொழி என்பனவற்றிலிருந்து வேறுபடுத்தித் தமிழைக் காட்டத் தமிழ்ச்செம்மொழி என்னும் தொடர் பயன்படுகிறது.

இரண்டாவது தொடர் தமிழ் மொழிவழக்கைப் பற்றியது. தமிழுக்கு அடை செம்மை. கொடுந்தமிழ் என்னும் வழக்கை இதனோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால் இதனை அறியமுடியும். அதாவது கடுமையான பொருள் விளங்காத அரிய சொற்களைத் தமி்ழில்  பயன்படுத்தினால் அது கொடுந்தமிழ். அதனின்றும் வேறுபடுத்தி இயல்பான நல்ல வழக்குச் சொற்களைப் பயன்படுத்தினால் அது செந்தமிழ். அதனோடு மொழி என்பதும் சேர்ந்து செந்தமிழ் மொழி என்றாகிறது.
முதல் தொடர் உலகமொழிகளோடு தமிழை ஒப்பிட்டுப் பேசுகிறது. இரண்டாவது தொடர் தமிழ்நாட்டு அளவில் தமிழ் வழக்கைக் குறிப்பிட்டுக்காட்டுகிறது.
வேறொரு அன்பரின் பங்களிப்பு என்பதாக ஒரு பதிவு காணப்படுகிறது. இது அந்த அன்பரின் கருத்து. அவருடைய சந்தேகம் அன்று. இலக்கணத்தைப் பற்றிப் பேசும் போது  எந்த அடிப்படையில் அவர் அக்கருத்தைப் பதிவு செய்துள்ளார்? அதற்கான சான்று என்ன என்பதை அறியாமல் அதைப் பற்றி விளக்கம் அளிப்பது பொருத்தமாகாது.

அன்புடன்
ஆராதி 

2010/5/28 பழமைபேசி <pazam...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

விஜயராகவன்

unread,
May 28, 2010, 1:24:03 PM5/28/10
to மின்தமிழ்
On 28 May, 02:56, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:


ஆராதி அவர்களே

தங்களிடமிருந்து மறுபடியும் மாறுபடுகிறேன். (இப்டித்தான் ஸ்கூலிலும்
காலேஜுலும் வாத்தியாரை கேள்வி கேட்டு சங்கடத்துள்ளானேன்; ஜெயின் காலேஜ்
ரசாயன லெக்சரர் கேள்வி கேட்டதினால் வெளியே போனு சொல்டார். ஆனால் நாய்வால்
நிமிராது).

”செம்மை என்பது பண்புப் பெயர்” என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நான்கு,
பத்து என்பவை பொருட்பெயர்கள் - அதாவது nouns.

இப்படி ஒரு வாக்கியம் படியுங்கள் “ பத்து ஐந்து இரண்டுகளினால்
ஆகின்றது” . இதில் பத்து, இரண்டு இரண்டும் பொருட்பெயர்கள். எல்லா
எண்களும் பொருட்பெயர்கள்.


இரண்டாவதாக, தென்னைமரம் என்பது ஒரு சொல், ஒரு பொருட்சொல். அதை தென்னை
ஆகிய மரம் என பிரிக்க முடியாது.

மூன்றாவதாக `ஆகிய` என்ற 3 உபயோகங்களில் ( 1. செம்மை ஆகிய தமிழ், 2.
நான்கு ஆகிய பத்து, 3. தென்னை ஆகிய மரம் )
முதல் பிரயோகம்தான் சரியாக படுகின்றது. ’ஆகிய` என்றால் ஒரு பொருள்
மற்றொரு பொருளாக மாறுவதன் அர்த்தத்தை கொடுக்கிறது. .

எ.கா. எதிரியாகிய பாகிஸ்தானை பலர் வெறுத்தனர் ; பிரதிவாதியாகிய நான்
குற்றசாட்டுகளை மறுக்கிறேன்.

ஓரளவு `ஆகிய` என்பது சமன்வயத்தை காட்டுகிறது. ஆங்கிலத்தில் `ஆகிய` என்பதை
becomes , equivalent to, as என புரிந்து கொள்கிறேன். `ஆகிய`வின்
மற்றோர் உபயோகம் பல பொருட்சொல்ற்களை ஒன்று சேர்ப்பது.

உதாரணங்கள்:

1.இஸ்லாம்,கிறிஸ்துவம், யூதம் ஆகிய மதங்களின் தோற்றுவாய் ஆபிரகாம்
2.ஒருவருக்கு லக்னம், ராசி ஆகிய இரண்டும் ஒன்றாக அமைந்தால் என்ன பலன்?
3.மா, வாழை மற்றும் பப்பாளி ஆகிய பழ வகைகள் உஷ்ணப் பிரதேசங்களில்
உற்பத்தி ஆகிறன.


அதனால் `செம்மை ஆகிய தமிழ்` 100% பொருத்தமாக இல்லை - என் காதுகளுக்கு
`நான்கு ஆகிய பத்து` என்பது நிச்சயமாக சரியாக இல்லை. அதேபோல்தான் `தென்னை
ஆகிய மரம்` உம் இருக்கு

விஜயராகவன்

பழமைபேசி

unread,
May 28, 2010, 3:23:11 PM5/28/10
to மின்தமிழ்
நேரம் எடுத்து விளக்கிச் சொல்வதற்கு மீண்டும் நன்றி! தங்கள் விளக்கம்
ஏற்புடையதாகவும் நிறைவாகவும் உள்ளது.
இனி அடுத்த கட்டத்திற்கு நகர்வோம்.

உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

உலகத்தை ஒட்டி ஒற்று வருவதால், உலகம், தமிழ், செம்மை ஆகியன மொழியின் மீது
ஒட்டுவதாக இருக்கிறது.
இந்த ஒற்றுக்குண்டான விளக்கத்தையும் தெரியப்படுத்துவீர்களாக!!

அடுத்து, தமிழ்ச் செம்மொழி மாநாடு எனக் குறிப்பிடுவதைக் காட்டிலும்,
செம்மொழி மாநாடு என்றே பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது.
இதைப் பற்றியும் தங்கள் கருத்துகளை அறிய முற்படுகிறேன்.

பணிவுடன்,
பழமைபேசி.


On May 28, 11:25 am, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> 1.//தமிழ் > தமிழ்மொழி > தமிழ்ச் செம்மொழி //
>
> 2.//தமிழ் > தமிழ்மொழி > செம்மை + தமிழ்மொழி = செந்தமிழ்மொழி??//
> இரண்டுமே வெவ்வேறு பொருள் உடையன.
> முதல் தொடரில் செம்மொழி என்பதற்குத் தமிழ் அடையாகும். அதாவது உலகில் உள்ள பல
> செம்மொழிகளில் தமிழ்ச் செம்மொழி என வேறுபடுத்துவதாக இத்தொடர் பொருள்படுகிறது.
> அதாவது இலத்தீன் செம்மொழி, சீனச் செம்மொழி, சமஸ்கிருதச் செம்மொழி
> என்பனவற்றிலிருந்து வேறுபடுத்தித் தமிழைக் காட்டத் தமிழ்ச்செம்மொழி என்னும்
> தொடர் பயன்படுகிறது.
>
> இரண்டாவது தொடர் தமிழ் மொழிவழக்கைப் பற்றியது. தமிழுக்கு அடை செம்மை.
> கொடுந்தமிழ் என்னும் வழக்கை இதனோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால் இதனை அறியமுடியும்.
> அதாவது கடுமையான பொருள் விளங்காத அரிய சொற்களைத் தமி்ழில்  பயன்படுத்தினால் அது
> கொடுந்தமிழ். அதனின்றும் வேறுபடுத்தி இயல்பான நல்ல வழக்குச் சொற்களைப்
> பயன்படுத்தினால் அது செந்தமிழ். அதனோடு மொழி என்பதும் சேர்ந்து செந்தமிழ் மொழி
> என்றாகிறது.
> முதல் தொடர் உலகமொழிகளோடு தமிழை ஒப்பிட்டுப் பேசுகிறது. இரண்டாவது தொடர்
> தமிழ்நாட்டு அளவில் தமிழ் வழக்கைக் குறிப்பிட்டுக்காட்டுகிறது.
> வேறொரு அன்பரின் பங்களிப்பு என்பதாக ஒரு பதிவு காணப்படுகிறது. இது அந்த
> அன்பரின் கருத்து. அவருடைய சந்தேகம் அன்று. இலக்கணத்தைப் பற்றிப் பேசும் போது
> எந்த அடிப்படையில் அவர் அக்கருத்தைப் பதிவு செய்துள்ளார்? அதற்கான சான்று என்ன
> என்பதை அறியாமல் அதைப் பற்றி விளக்கம் அளிப்பது பொருத்தமாகாது.
> அன்புடன்
> ஆராதி
>

> 2010/5/28 பழமைபேசி <pazamaip...@gmail.com>

> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit


> > our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at

> > > >http://groups.google.com/group/minTamil-Hide quoted text -

ananda rasa thiruma

unread,
May 28, 2010, 8:54:08 PM5/28/10
to mint...@googlegroups.com
திரு விஜயராகவன்
என் அருமை நண்பர் என்னிலும் வயதில் பெரியவர் எழுத்தாளர் கி. ராஜநாராயணன். அவருடைய பல புத்தகங்கள் அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கப் பிழை பார்த்துக்கொடுப்பது என் வேலை. பிழைபார்த்துக் கொடுப்பது என்றால் அவர் தவறாக எழுதியிருப்பதாக நினைத்து அச்சகத்தில் பல இடங்களில் திருத்தம் செய்வார்கள். அவற்றை மறுபடியும் கி.ரா எழுதியவாறே திருத்தம் செய்ய வேண்டும். சான்றுக்கு ஒன்று சொல்கிறேன். பல்ப்பொடி, முதல்ப் பக்கம் என்றுதான் கி.ரா. எழுதுவார். அச்சகத்தில் அதைத் தவறு என்று கருதிப் பல்பொடி என்றோ பற்பொடி என்றோ திருத்துவர். அதை மறுபடியும் பல்ப்பொடி என்று திருத்த வேண்டியிருக்கும். பல்ப்பொடி என்பது தமிழ் இலக்கணப்படி பிழை வழக்கு. மக்கள் வழக்கிலும் காணமுடியாதது. ஆனால் அதுதான் சரியானது என்று கி.ரா. சொல்வார். இப்படி எழுதுவதையே இன்று வரை கடைப்பிடிக்கிறார். இது அவர் கருத்து. இதில் எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும் அவர் உரிமையில் அவர் சரி என நினைப்பதில் தலையிட எனக்கு உரிமையில்லை. அதனால் பல்ப்பொடி என்று திருத்தம் செய்வேன்.
தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள். உங்கள் கருத்துக்கள் எனக்குக் கி.ரா.வை நினைவுபடுத்தின. குறை சொல்வதற்காக இல்லை. உங்கள் அணுகுமுறைக்காக. ஏனெனில் உங்கள் கருத்து என்று சொல்லிவிட்டால், முடிவு செய்துவிட்டால் அதனைப் பற்றிப் பேச வாய்ப்பில்லை. இருவருமே ஒரு கருத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், சரியென்றால் மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைத்தால் விரிவாகப் பேசுவது பொருத்தமாகும்.

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு ஓர் அமைப்பு உண்டு. தமிழில் பெயர்களை ஆறாக வகைப்படுத்தியுள்ளார்கள். ஆங்கிலம் முதலிய வேறு மொழிகளில் ஆறு வகைப்பாடு தேவை இல்லை என நினைக்கலாம். அது அவர்கள் மொழி மரபு. ஒரு மொழியைப் பற்றிப் பேசும் போது அதன் மரபை ஏற்றுக் கொண்டுதான் பேச வேண்டியுள்ளது. அந்த மொழிமரபையே ஏற்றுக் கொள்ள மறுத்தால் மேலும் அதைப் பற்றிப் பேசுவதால் பயனில்லை.
அடுத்துத் தமிழ் உள்ளிட்ட உலகின் எல்லா மொழிகளும் குறைபாடு உள்ளவைதாம். என் தாய் தந்தை உறவினர் நண்பர் எல்லாரும் குறைபாடு உடையவர்கள்தாம். ஆனால் உலகில் வாழும் எந்த மனிதரையும் விட இவர்கள் எனக்கு உயர்ந்தவர்கள். அதேபோலத்தான் மொழியும்.
சான்றுக்கு ஒன்று சொல்கிறேன். அவன், அவள் - இச்சொற்களில் ன் இருத்தால் ஆணைக் குறிக்கும். ள் இருந்தால் பெண்ணைக் குறிக்கும். எளிய அடையாளம்.
ஒருவன், ஒருத்தி; திருடன், திருடி இச்சொற்களில் பெணைக் குறிக்க ஒருவள், திருடள் என ஏன் வழங்கவில்லை எனக் கேட்டால் பதில் இல்லை. இப்படித்தான் வழங்குகிறது. என்பதுதான் பதில். ஆங்கிலத்தில் ed சேர்த்தால் இறந்தாகாலம். run. runed; catch, catched என ஏன் வழங்கவில்லை. எனக் கேட்டால் பதில் இல்லை. இது வழக்காறு. அவ்வளவுதான்.

முன்னுரை சற்று நீண்டுவிட்டது. பொருத்துக்கொள்ளுங்கள்.
பத்து, நான்கு என்பன பண்புப் பெயர்கள் என தமிழ் மொழி மரபு சொல்கிறது. மரம் என வழங்கும் ஒரு பொருளைக் குறிக்க ஏன் கிரம் என வழங்கவில்லை எனக் கேட்டால் பதில் இல்லை. ஏன் எப்படி என ஒரு கட்டத்திற்கு மேல் கேட்க முடியாது. இதனை ஒத்துக்கொண்டு மேலே பேசலாமே தவிர எண்ணுப் பெயர்களைப் பொருட்பெயர்கள் எனச் சொன்னால் அடிப்படையில் மாறுபடுகிறோம். ஒரு மொழி அமைப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். நம் தனிக் கருத்தைப் பதிவு செய்கிறோம். (இவ்வாறு தனிக் கருத்தைப் பதிவு செய்வது தவறு என்று சொல்லவில்லை. ஒரு தனிக் கருத்து வெற்றிபெற்றுப் பொதுக் கருத்தாக மாறும் வரை தனிக்கருத்து என்று மட்டுமே கருதப்பெறும்)

உங்கள் கருத்துக்கு இசைவாகத் தமிழிலும் சிந்தித்திருக்கிறார்கள்.
எ.டு- ‘வடை நன்றாக இருந்தது. நாலு சாப்பிட்டேன்.’  என்னும் தொடரில் நாலு என்பது நீங்கள் சொல்வதுபோலப் பொருட் பெயராகவே கருதப்படுகிறது. அதாவது நான்கு எனனும் எண்ணிக்கை இந்தத் தொடரில் பண்பைக் குறிக்காமல் பொருளைக் குறிக்கிறது. அதனால் இது பொருளுக்கு ஆகிவந்தமையால் ஆகுபெயர். தமிழின் மிகச் சிறந்த சிந்தனையில் ஆகுபெயர் குறிப்பிடத்தக்கது. இத்தொடரில் அதனைப் பண்பாகத் தமிழில் பார்ப்பதில்லை. அதனால் தமிழில் சொல்லைத் தனியாக வைத்துப் பொருள் சொல்வது பொருந்தமாக இருக்காது. மொழிச் சூழலில் எப்பொருள் குறிக்கிறது என்பதையும் பார்க்கவேண்டும். நான்கு என்பது தனிச் சொல் நிலையில் பண்புப் பெயர். இந்தக் குறிப்பிட்ட தொடரில் ஆகுபெயர். இங்கே அது குறிப்பிது பொருளை என்பதில் எந்தச் சிக்கலும் இல்லை.

ஆகிய என்னும் சொல்லைப் பற்றியும் சிந்திக்கலாம். ஆகிய என்பது பண்பு உருபானால் அது இடைச் சொல். ஆகு என்னும் வினையடியாகப் பிறந்த சொல்லானால் பெயரெச்சம். இவற்றில் எந்த ஆகிய பற்றி பேசுகிறோம் என்பதைத் தெளிவாக வரையறை செய்துகொண்டு பேசுவது தேவை.
//1.இஸ்லாம்,கிறிஸ்துவம், யூதம்  ஆகிய மதங்களின் தோற்றுவாய் ஆபிரகாம்

2.ஒருவருக்கு லக்னம், ராசி ஆகிய இரண்டும் ஒன்றாக அமைந்தால் என்ன பலன்?
3.மா, வாழை மற்றும் பப்பாளி ஆகிய பழ வகைகள் உஷ்ணப் பிரதேசங்களில்
உற்பத்தி ஆகிறன.//
என்னும் எடுத்துக்காட்டுக்கள் பெயரெச்சமாக வந்துள்ள ஆகிய என்பது வினைச் சொல்லைப் பற்றியது.
முதலில் பேசியது பண்பு உருபு ஆகிய என்னும் இடைச்சொல்லைப் பற்றியது.
தென்னை மரம் ஆங்கிலத்தில் coconut tree என அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு சொற்கள் தனித் தனியே குறிக்கப்படும் போது தரும் பொருளையே இணைந்து வரும் போது தருகின்றனவா? தனியாக வரும்போது  coconut என்பதன் இலக்கணப் பொருள் என்ன? இணைந்து வரும் போது அதன் இலக்கணப் பொருள் என்ன?

உங்கள் காதுக்கு நிறைவளிக்க வில்லை எனச் சொல்லியுள்ளீர்கள். உங்கள் தனிப்பட்ட எந்தக் கருத்தும் மற்றவர்க்கு ஏற்றதாகவும் இருக்கலாம், மாற்றமானதாகவும் இருக்கலாம். மொழி வழக்கு என்பது பொதுக் கருத்து. அத்ன் ஒவ்வாரு கூறும் பொதுக் கருத்தாக இருந்தால்தான் அனைவரும் பயன்படுத்த முடியும்.
------------------------------------------------------------------------------------------
உங்கள் கெமிஸ்ட்ரி லக்சரர் எவ்வளவோ தேவலாம். என் வேதியியல் விரிவுரையாளர் நான் வகுப்பில் கேள்விகேட்டால் செய்முறைத் தேர்வில் தேற முடியாமல் செய்துவிடுவேன் என மிரட்டினார்.

உங்கள் வினாக்கள் விரிவாகப் பேசவேண்டியவை. என் விடைகள் உங்களுக்கு நிறைவளிக்காமல் போகலாம். மறுபடியும் பேசுவோம்.

அன்புடன்
ஆராதி


2010/5/28 விஜயராகவன் <vij...@gmail.com>

N. Kannan

unread,
May 28, 2010, 9:18:26 PM5/28/10
to mint...@googlegroups.com
2010/5/29 ananda rasa thiruma <aara...@gmail.com>:

> உங்கள் வினாக்கள் விரிவாகப் பேசவேண்டியவை. என் விடைகள் உங்களுக்கு
> நிறைவளிக்காமல் போகலாம். மறுபடியும் பேசுவோம்.


அடேங்கப்பா! என்ன அழகான தமிழ். என்ன பொறுமை, என்ன அமைதி. மிக்க நன்றி
ஆராதி அவர்களே. மின்தமிழுக்கு அணி சேர்க்கிறீர்கள்.

கி.ரா எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவரைக் காண ஆவல். இம்முறை
வரும் போது ஒரு புதுவை சந்திப்பு ஏற்பாடு செய்தால் என்ன? சுகு, நீங்கள்,
தி.வா, கிரா எல்லோரும் அருகில், அருகில்தானே?

க.>

ananda rasa thiruma

unread,
May 28, 2010, 9:40:19 PM5/28/10
to mint...@googlegroups.com
திரு பழமை பேசி
திரு விஜயராகவன் அவர்கள் வினாவிற்குக் கூறிய விடைகளையும் ஒரு முறை பார்த்துவிடுங்கள்.
தமிழில் சொல்லிலக்கணம், தொடரிலக்கணம் என இரண்டாகப் பிரித்துக்காண வேண்டும்.  தொடரிலக்கணம் என வரும்போதுதான் ஒற்றைப் பற்றிய தேவை அல்லது சிக்கல் எழுகிறது. தனியே இருக்கும்போது அன்று. தொடரிலக்கணம் என வரும்போது முதல் சொல் அடுத்த சொல் என இரண்டு இரண்டாகச் சேர்த்துக் கொண்டே போக வேண்டும்.
//உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு//
1.உலகம் + 2.தமிழ் + 3.செம்மொழி +4. மாநாடு
இந்த 4 சொற்களும் 1+2, 2+3, 3+4,  என அமைந்து தொடரிலக்கணம் உணர்த்தும்.  (இத்தொடரை 5, 6 சொற்களாகவும் பிரிக்கலாம். இப்போதைக்கு இது போதுமானது.)
உலகம் + தமிழ் என்னும் போது உலகின் கண் பரவியுள்ள தமிழ் எனப் பொருள் கொள்கிறோம். தமிழ் இலக்கணத்தில் ‘ உலகத் தமிழ்‘(1+2) என்னும் தொடரை ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை நிலைத் தொடர் என்பர்.
உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை அனைத்திலும் முதல் சொல்லீறு உயிராகவும் இரடண்டாம் சொல்லின் முதல் எழுத்து வல்லினமாகவும் இருந்தால் ஒற்று மிகும் என்பது இலக்கணம்.
அதனால் ஒற்று மிகுந்தது.
‘தமிழ்ச் செம்மொழி‘ (2+3) என்பது இருபெயரொட்டுப் பண்புத் தொகைநிலைத் தொடர். அதிலும் ஒற்று மிகும். (ய், ர், ழ் என்னும் மூன்று இடையின மெய்யெழுத்துக்களும் உயிர் ஈறோடு ஒற்றுமை உடையன. தமிழ் மொழி அமைப்பில் இந்த மெய்களைப் பற்றிய சுவையான செய்திகள் இங்குத் தேவையில்லாதவை)
‘செம்மொழி மாநாடு‘ (3+4) என்பதில் மாநாடு என்பது வல்லெழுத்தில் தொடங்காததால் ஒற்றுச் சிக்கல் ஏற்படவில்லை.
எனவே தமிழ் இலக்கண மரபுப்படி //உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு// என்பதில் தேவையான இடத்தில் ஒற்று மிகுந்துள்ளது.
(தொடரிலக்கணம் தொடர்பான மற்றொரு கருத்தும் உள்ளது. தழுவுதொடர், தழாத் தொடர் என்பன தொடர்பாக அறிய வேண்டியன. இங்கு விரிவஞசிக் கூறவில்லை.)

அடுததுத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்பது செம்மொழி மாநாடு என்றே அழைக்கப்படுகிறது என்பதைப் பற்றி.
நாம் அனைவரும் நம்முடைய அப்பா, அம்மாவிற்குத் தனித் தனியே பெயர் இருந்தும் அப்பா, அம்மா என்றே அழைக்கிறோம். சொல்கிறோம். அப்படி அழைக்கிறபோது, சொல்கிறபோது அச்சொற்கள் அவரவர் அப்பா, அம்மாவையே குறிப்பிடுகின்றன என்பதைப் புரிந்து கொள்கிறோம். அயலாரிடம் தெளிவிற்காக அவர்கள் பெயரைச் சொல்கிறோம்.  அதுபோலதமிழ்நாட்டில், தமிழ் நாட்டரசு நடத்தும் செம்மொழி மாநாடு தமிழ்ச் செம்மொழி மாநாடு என்பதை உட்பொருளாகக் கொண்டே செம்மொழி மாநாடு என்று சொல்கின்றனர். வேற்று நாட்டில் , வேற்று மாநிலத்தில் சொல்வதென்றால் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்றால்தான் விளங்கிக் கொள்வர்.
அன்புடன்
ஆராதி

2010/5/29 பழமைபேசி <pazam...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

ananda rasa thiruma

unread,
May 28, 2010, 9:50:28 PM5/28/10
to mint...@googlegroups.com
திரு கண்ணன்
அண்மையில் கி.ரா. துணைவியார் (நான் அம்மா என அழைப்பது வழக்கம்) என்னை வீட்டுக்கு அழைத்திருந்தார். உடனே எனக்குத் தோன்றியது நீங்கள் அவர் வீட்டிற்குச் சென்றதாகக் கூறியது. அதனால் கி.ராவிடம் கேட்டேன். உங்களுடையது பல ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த சந்திப்பு என நினைக்கிறேன். உடனே அவர் பதில் சொல்ல வில்லை. அடுத்து நான் நண்பர் சுகுமாரனுடன் தொடர்பு கொண்டு அவர் அழைப்பைச் சொல்லி, நீங்களும் வாருங்கள் என்றேன். அவரும் சென்ற ஞாயிற்றுக் கிழமை (23/05/10) அவரைப் பார்த்து 2 மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம். நண்பரை அழைத்ததில் ஒரு சுயநலம் உண்டு. அவர் கடிதங்களை தமிழ் மரபு அறக்கட்டளையில் பதிவு செய்ய வாங்க வேண்டும் என்று. அதனையும் பேசினோம். நண்பர் சுகுமாரன் உங்களிடம் விரிவாகப் பேசுவார். அனைவரும் வாருங்கள் அவரைச் சந்திப்போம்.
செப்டம்பர் 16ஆம் நாள் அவர் பிறந்த நாள். அந்நாளில் அவர் வீட்டில் பிறந்த நாள் விழா அன்பர்கள் கொண்டாடுவோம். அப்பொழுது கி.ரா. ஒரு சிற்றிதழ் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த ஆண்டிற்கு ரூபாய் 5000/-  பரிசளிப்பார். பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாய்ப்பிருந்தால் வாருங்கள். அனைவரும் போவோம்.
அன்புடன்
ஆராதி

2010/5/29 N. Kannan <navan...@gmail.com>

--

karthi

unread,
May 28, 2010, 11:03:31 PM5/28/10
to mint...@googlegroups.com
நானும் உங்களோடு ஒட்டிக்கொண்டு ஆராதிக்கு வணக்கம்.

ரெ.கா.

Innamburan Innamburan

unread,
May 28, 2010, 11:21:20 PM5/28/10
to mint...@googlegroups.com
இந்த நாரும் பின்னிக்கொள்கிறது.
இன்னம்பூரான்

2010/5/28 karthi <karth...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
May 29, 2010, 12:58:25 AM5/29/10
to mint...@googlegroups.com
பூக்களைத் தொடுக்கும்போது நாரை அடிக்கடி தண்ணீரில் தோய்த்து எடுப்பார்கள்
 
நாரும்  பூக்களும் வாடாமலிருக்க
 
அந்த தண்ணீராக நானும் வருகிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
29-5-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:



--

விஜயராகவன்

unread,
May 29, 2010, 8:07:11 AM5/29/10
to மின்தமிழ்


ஆராதி அவர்களே

வழக்காறையும் கருத்துகோள்களையும் நாம் தனியாக பார்க்க வேண்டும். மொழி
என்பது வழக்காறு. அதனால்தான் நாம் பெண்பாலுக்கு `ள்` முடிவு, சில சமயம்
`டி` என வைத்துள்ளொம். மொழியை சரியாக பேச கற்க்க வேண்டுமானால்,
பிரயோகிக்க வேண்டுமானால் வழக்காற்றைதான் பின்பற்ற வேண்டும். அதில் மாற்று
கருத்து இல்லை.

நீங்கள் சொல்லும் பல்பொடி, பல்ப்பொடி, பறபொடி வேற விஷயம். அது தற்கால
இலக்கணத்தை தொல்காப்பியர் கண்ணாடியினால் பார்ப்பதின் விளைவு.


தற்காலத்திலேயே கணிசமான தொகையினர் `திருடள்` என பேச ஆரம்பித்தால்,
அங்கும் குழப்பம் வரும். ஆனால் நிலைமை அப்படியில்லை. தமிழ் பேசும் உலகம்
பூராவும் `திருடி` தான் வழக்கு. அதில் வழுக்கு இல்லை..

ஆனால் மொழியை பற்றிய கூறுபாடுகளை (analysis, understanding) `மரபு` என
ஏற்க்கமுடியாது. மரபின் புரிதல் சரியாக இல்லாமல் இருக்கலாம், போதுமானதாக
இல்லாமல் இருக்கலாம், உபயோகமானதாக இல்லாமல் இருக்கலாம், தேவை இல்லாதவையாக
இருக்கலாம். அப்போதெல்லாம், நாம் நம் கூறுபாடுகளை உபயோகிக்க வேண்டும்.
அப்போதெல்லாம் நாம் மரபை ஒதுக்கி விட்டு, நமக்கு எது சரியாகப் படுகிறதோ
அதை முன்வைக்க வேண்டும், பின்பற்ற வேண்டும். நாம் வாழும் உலகின்
புரிதலுக்கு மரபு முன்னிறுத்துவது தடையாக இருக்கும். தொல்காப்பிய
இலக்கணம் இதற்க்கு நல்ல உதாரணம்.


மரபு இலக்கணம் என்பது ஒரு தியரிதான், தியரி செயல்முறைகளை செம்மையாக
விளக்காவிட்டால், நாம் தியரியை மாற்றிக் கொள்ள வேண்டும்.

>
> முன்னுரை சற்று நீண்டுவிட்டது. பொருத்துக்கொள்ளுங்கள்.
> பத்து, நான்கு என்பன பண்புப் பெயர்கள் என தமிழ் மொழி மரபு சொல்கிறது. மரம் என
> வழங்கும் ஒரு பொருளைக் குறிக்க ஏன் கிரம் என வழங்கவில்லை எனக் கேட்டால் பதில்
> இல்லை.


மரம் என்பது வழக்கு. எண்கள் பண்புப் பெயர்கள் என்பது தியரி, கருத்து
அவ்வளவுதான். நீங்கள் “பத்து மூன்றினால் சரியாக வகுபடாது” என சொன்னால்,
எல்லோரும் புரிந்து கொள்வர் , இலக்கணம் தெரியாதவர்கள் கூட. ஆனால் மரம்
என்பதை வேறுவிதமாக சொன்னால், யாருக்கும் புரியாது. அதனால், உங்கள்
உவமானங்கள் சரியில்லை


ஏன் எப்படி என ஒரு கட்டத்திற்கு மேல் கேட்க முடியாது. இதனை
> ஒத்துக்கொண்டு மேலே பேசலாமே தவிர எண்ணுப் பெயர்களைப் பொருட்பெயர்கள் எனச்
> சொன்னால் அடிப்படையில் மாறுபடுகிறோம். ஒரு மொழி அமைப்பை ஏற்றுக்கொள்ள
> மறுக்கிறோம்.


நாம் மொழி அமைப்பு பற்றிய தியரியில் மாறுபடுகிறோம், ஆனால் மொழி அமைப்பை
ஏற்க்கிறோம். ஏனெனில் நீங்கள் ”எண்ணுப் பெயர்களைப் பொருட்பெயர்கள்” என
சொல்லும் போது, நீங்கள் என்ன சொல்வறீர்கள் என எனக்கு புரிகின்றது, ஆனால்
உங்களுடன் சம்மதம் இல்லை அவ்வளவுதான்.


நம் தனிக் கருத்தைப் பதிவு செய்கிறோம். (இவ்வாறு தனிக் கருத்தைப்
> பதிவு செய்வது தவறு என்று சொல்லவில்லை. ஒரு தனிக் கருத்து வெற்றிபெற்றுப்
> பொதுக் கருத்தாக மாறும் வரை தனிக்கருத்து என்று மட்டுமே கருதப்பெறும்)


”வெற்றி”க்கு அளவுகோள் என்ன? எதை பொதுக்கருத்து என சொல்லுவீர்கள்?

>
> உங்கள் கருத்துக்கு இசைவாகத் தமிழிலும் சிந்தித்திருக்கிறார்கள்.
> எ.டு- ‘வடை நன்றாக இருந்தது. நாலு சாப்பிட்டேன்.’ என்னும் தொடரில் நாலு என்பது
> நீங்கள் சொல்வதுபோலப் பொருட் பெயராகவே கருதப்படுகிறது. அதாவது நான்கு எனனும்
> எண்ணிக்கை இந்தத் தொடரில் பண்பைக் குறிக்காமல் பொருளைக் குறிக்கிறது. அதனால்
> இது பொருளுக்கு ஆகிவந்தமையால் ஆகுபெயர். தமிழின் மிகச் சிறந்த சிந்தனையில்
> ஆகுபெயர் குறிப்பிடத்தக்கது.


நான் நான்கு என சொல்லும் போது ஆகு பெயரை சொல்லவில்லை, ஒரு எண்ணை
குறிக்கிறேன். வேண்டுமானால் எண்ணைப் பற்றிய எண்ணத்தை விரிவாக
பார்க்கலாம்.


இத்தொடரில் அதனைப் பண்பாகத் தமிழில்
> பார்ப்பதில்லை.

அதனால் தமிழில் சொல்லைத் தனியாக வைத்துப் பொருள் சொல்வது
> பொருந்தமாக இருக்காது. மொழிச் சூழலில் எப்பொருள் குறிக்கிறது என்பதையும்
> பார்க்கவேண்டும். நான்கு என்பது தனிச் சொல் நிலையில் பண்புப் பெயர். இந்தக்
> குறிப்பிட்ட தொடரில் ஆகுபெயர். இங்கே அது குறிப்பிது பொருளை என்பதில் எந்தச்
> சிக்கலும் இல்லை.


ஆகு பெயரில் ஒரு சிக்கலும் இல்லை


>
> ஆகிய என்னும் சொல்லைப் பற்றியும் சிந்திக்கலாம். ஆகிய என்பது பண்பு உருபானால்
> அது இடைச் சொல். ஆகு என்னும் வினையடியாகப் பிறந்த சொல்லானால் பெயரெச்சம்.
> இவற்றில் எந்த ஆகிய பற்றி பேசுகிறோம் என்பதைத் தெளிவாக வரையறை செய்துகொண்டு
> பேசுவது தேவை.
> //1.இஸ்லாம்,கிறிஸ்துவம், யூதம் ஆகிய மதங்களின் தோற்றுவாய் ஆபிரகாம்
> 2.ஒருவருக்கு லக்னம், ராசி ஆகிய இரண்டும் ஒன்றாக அமைந்தால் என்ன பலன்?
> 3.மா, வாழை மற்றும் பப்பாளி ஆகிய பழ வகைகள் உஷ்ணப் பிரதேசங்களில்
> உற்பத்தி ஆகிறன.//
> என்னும் எடுத்துக்காட்டுக்கள் பெயரெச்சமாக வந்துள்ள ஆகிய என்பது வினைச்
> சொல்லைப் பற்றியது.
> முதலில் பேசியது பண்பு உருபு ஆகிய என்னும் இடைச்சொல்லைப் பற்றியது.
> தென்னை மரம் ஆங்கிலத்தில் coconut tree என அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு
> சொற்கள் தனித் தனியே குறிக்கப்படும் போது தரும் பொருளையே இணைந்து வரும் போது
> தருகின்றனவா? தனியாக வரும்போது coconut என்பதன் இலக்கணப் பொருள் என்ன? இணைந்து
> வரும் போது அதன் இலக்கணப் பொருள் என்ன?
>
> உங்கள் காதுக்கு நிறைவளிக்க வில்லை எனச் சொல்லியுள்ளீர்கள். உங்கள் தனிப்பட்ட
> எந்தக் கருத்தும் மற்றவர்க்கு ஏற்றதாகவும் இருக்கலாம், மாற்றமானதாகவும்
> இருக்கலாம். மொழி வழக்கு என்பது பொதுக் கருத்து. அத்ன் ஒவ்வாரு கூறும் பொதுக்
> கருத்தாக இருந்தால்தான் அனைவரும் பயன்படுத்த முடியும்.


நான் மொழி வழக்கு பற்றி பேச வில்லை, அதைப் பற்றிய புரிதலை பேசுகிறேன்.


வழக்கமாக தென்னைமரம் என்பது ஒரு பொருட்சொல். ஏன்தென்னைமரத்திற்க்கு
அப்படி பெயர் வந்தது என்பது வேறு விஷயம்.


நான் “காதுக்கு நிறைவளிக்க வில்லை” என எழுதியது `செம்மை ஆகிய தமிழ்` என
நீங்கள் கொடுத்த உதாரணம். செம்மை என்பதை Classical என எடுக்க வேண்டுமா
அல்லது Excellent என எடுக்க வேண்டுமா என புரியவில்லை. மேலும் அப்படி
எழுதுவதில் சில சிக்கல்கள் இருக்கும்போல் தோன்றுகிறது. ஆதனால்தான்
நிறைவளிக்க வில்லை என subjective ஆக சொன்னனே தவிர, அறுதியிட்டு


சொல்லவில்லை.


விஜயராகவன்

பழமைபேசி

unread,
May 29, 2010, 9:17:06 AM5/29/10
to மின்தமிழ்
மீண்டும் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். வினாக்கள் எழுவதாலேயே தெளிவு
பிறக்கிறது. எனவே, இதோ இந்த மாணவனின் மற்றுமொரு வினா!!

//உலகம் + தமிழ் என்னும் போது உலகின் கண் பரவியுள்ள தமிழ் எனப் பொருள்
கொள்கிறோம். //

உலகளாவிய மாநாடு என்று என்னைப் போல, பிறரும் நினைத்திருக்கக் கூடும்.
இவ்விழையின் துவக்கத்திலேயே கூட ஒரு கருத்து அது போல வெளிப்பட்டு
இருப்பதை நீங்கள் காணலாம். அது சரியா? தவறா??

பணிவுடன்,
பழமைபேசி.

> 2010/5/29 பழமைபேசி <pazamaip...@gmail.com>

> ...
>
> read more »- Hide quoted text -

விஜயராகவன்

unread,
May 29, 2010, 9:41:03 AM5/29/10
to மின்தமிழ்
திருவாளர் பழமைபேசி

ஆசங்கம் என்றாள் லெக்சிகான் சந்தேகம், ஆட்சேபம் என இரு அர்த்தங்களை
கொடுக்கின்றது.

1000 வருடங்களாக யாரும் இந்த வார்த்தையை உபயோகிப்பதில்லை. தமிழ் கூகிளில்
போட்டால் 10 பக்கம் வருகின்றன , எல்லாம் தங்கள் உபயம்.

ஏன் பல நூற்றாண்டுகளாக பயன்படாத வார்த்தையை பிரயோகித்தீர்கள் ,
எல்லோருக்கும் தெரியும் சந்தேகம், ஆட்சேபனை என்ற இரண்டு சொற்கள்
கிடைக்கும் போது??


விஜயராகவன்


On 27 May, 23:03, பழமைபேசி <pazamaip...@gmail.com> wrote:
>  ஓர் ஆசங்கை! <http://maniyinpakkam.blogspot.com/2010/05/blog-post_27.html>
> மக்களே, நான் ஒரு தமிழ் மாணவன். அன்றாடம் தவறாது தமிழ் கற்று வருகிறேன்.
> அவ்வகையிலே, உங்கள் உதவியோடு மேலதிகமாக ஒன்றை இன்று கற்க விரும்புகிறேன்.
>
> நான் எழுப்பப் போகிற வினாவானது, அறிவிலித்தனமான மற்றும் பக்குவமற்ற வினாவாகவும்
> இருக்கக் கூடும். அப்படி இருப்பின் பொறுத்தருள்வதோடு, எம்மடமையை அகற்றித்
> தெளிவித்திடுவீராக!
>
> பண்புத்தொகை என்பது பண்புப் பெயரைச் சேர்த்து வரும் பெயர்ச் சொல். அப்படியா?
> அப்படியானால், பண்புப்பெயர் என்றால் என்ன?? பண்பைக் குறிப்பது பண்புப் பெயர்;
> செம்மை, வட்டம், பசுமை என்பன போன்ற பண்புகளைக் குறிப்பது.
>
> இப்படியான பண்புகளைத் தாங்கி வரும் பெயர்ச் சொல், பண்புத்தொகை. பெருங்கடல்,
> செந்தமிழ், பசும்போன் முதலானவை அதற்கான உதாரணங்கள். செம்மையான தமிழ், செந்தமிழ்
> என்று ஆகிறது.
>
> செம்மையான மொழி செம்மொழி. அந்த வகையிலே செம்மொழியான தமிழ், செம்மொழித் தமிழ்.
> இந்த செம்மொழித்தமிழுக்கு, உலகந் தழுவிய அளவிலே ஒரு மாநாடு. ஆக, அந்த நல்லதொரு
> நிகழ்வுக்கான பெயர்ச்சொல், *உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு* என்று வரும்.
> தருக்கம் சரியாக இருக்கிறதா? நிச்சயமாக, சரியாக இருப்பதைப் போலத் தோணக்கூடும்.
>
> அப்படியானால், ஏன் *உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு* என்று அழைக்கிறோம்? இங்கே,
> தமிழ் என்பது ஒரு பண்பைக் குறிக்கிறதா?? கன்னடச் செம்மொழி, தெலுங்குச் செம்மொழி
> என்பவை பண்பால் குறிப்பதாகுமா??
>
> *செம்மொழித் தமிழ்* என்பதில் பெருமையின் வீரியம் தூக்கலாக இருக்கிறதா? அல்லது,
> தமிழ்ச் செம்மொழி என்பதில் தமிழுக்கான பெருமையின் வீரியம் அதிகமா?? அன்பு
> கூர்ந்து, எனக்குள் தலைதூக்கி இருக்கும் இந்த ஆசங்கத்தை விரட்டி அடிக்க உதவி
> புரியுங்கள் தமிழரே!!
>
> *வேர்கள் தமிழில்!
> விழுதுகள் உலகெங்கும்!!
> *

ananda rasa thiruma

unread,
May 29, 2010, 9:44:43 AM5/29/10
to mint...@googlegroups.com
திரு விஜயராகவன்
ஒரு தன்னிலை  விளக்கம் புரிதலுக்காகச் சொல்ல வேண்டி யுள்ளது. ஒருகால் மரபிலக்கணம் பேசுவது, பழைமைக்காகத் தேவைப்படின் குரல் கொடுப்பது என்பதைக் கொண்டு பழைமைவாதியென்றோ, தனித்தமிழ் முதலிய ஏதேனும் ஓர் அணியிலோ சேர்ந்தவனாகக் கருத்து இருக்குமானால் அவை எனக்கு உடன்பாடில்லை எனப்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். புதுமையை வளர்ச்சிக்கு ஓரளவேனும் தேவைப்படுமானால் இன்றைய இளைஞர்களுக்கு இணையாக அதனை வரவேற்க விரும்புகிறவன் நான். ‘எல்லைக்கு உட்பட்ட அறிவு (அது அரசியலானாலும், தத்துவமானாலும், சமயமானாலும், சாதியானாலும், நாடானாலும், மொழியானாலும்) முழுமையானதாகாது‘ என்பான் பிரான்சிஸ் பேகன். அக்கருத்து எனக்கும் உடன்பாடானது. அதனால் புதிய சிந்தனைகள் எங்கெல்லாம் கிடைக்கிறதோ அவற்றைத் தேடிப் பெறுவதிலும் முடிந்தால் கடைப்பிடிப்பதிலும் ஆர்வம் உண்டு. இது ஒன்று.

அடுத்தது எந்தத் துறையைப் பற்றிப் பேசுகிறோமோ அதனைப் பற்றிய அடிப்படைகளையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதிலும் அழுத்தமான ஈடுபாடு உண்டு. அதனால் எனக்குத் தெரிந்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக, இருக்கும் தகவல்களின் அடிப்படையில் சில விளக்கங்களை இங்குப் பதிவு செய்துள்ளேன்.

உங்கள் கருத்தை எதிர்பபதாகவோ, மறுப்பதாகவோ எந்தச் சூழ்நிலையிலும் தயவு செய்து நினைக்க வேண்டாம். எல்லோர் கருத்தும் மதிப்புள்ளது என்பதைச் சுட்டிக்காடுவதற்காகத்தான் கி.ரா. பல்ப் பொடி, முதல்ப் பக்கம் என வழக்கில் இல்லாத நிலையில் மொழியைப் பயன்படுத்தவதைக் குறிப்பிட்டேன்.

உங்கள் கருதுகோளை அல்லது மொழிக்கொள்கையை முதலில் விளக்க வேண்டுகிறேன். அதனைப் புரிந்துகொண்ட பிறகு மேலும் அவரவர் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வோம்.

///நீங்கள் சொல்லும் பல்பொடி, பல்ப்பொடி, பறபொடி வேற விஷயம். அது தற்கால
இலக்கணத்தை  தொல்காப்பியர் கண்ணாடியினால் பார்ப்பதின் விளைவு.///
பல்பொடி, பற்பொடி என்பன இன்றைக்கும் உள்ள வழக்குகள். பல்ப்பொடி என்பது வழக்கில் இல்லாத ஒன்று என்ற அளவில் மட்டுமே சுட்டிக்காட்டப்பட்டது.  இதற்குத் தொல்காப்பியர் கண்ணாடி ஏன் தேவை? இன்னும் சொல்லப்போனால் தொல்காப்பியரின் மாறுபட்ட சிந்தனைகளில் பாதி அளவிற்குக் கூட இன்றும் மொழியில் பயன்படுத்த வில்லை என்பது என் எண்ணம். சான்றுக்கு நாய் என்பதை நாஇ என எழுதுவதும் சரி என்பது அவர் கருத்து. ஒருமை பன்மை என இரண்டு நிலையிலேயே தமிழில் சிந்தித்துக்கொண்டு இருக்கும் நிலையில் ஒருமை, இருமை, பன்மை என்னும் கருத்தை முன்வைக்கிறார். இப்படி அவர் புதிது புதிதாகச் சொல்லியுள்ள கருத்துக்களை அடுகிக் கொண்டே போகலாம்.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல காலவகையினானே‘
எனச் சொல்லிக் கொடுத்துதும் தமிழ் இலக்கணம் தான்.
இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின் எனச் சொன்னதும் இலக்கணம் தான்.
///ஆனால் மொழியை பற்றிய கூறுபாடுகளை (analysis, understanding) `மரபு` என

ஏற்க்கமுடியாது. மரபின் புரிதல் சரியாக இல்லாமல் இருக்கலாம், போதுமானதாக
இல்லாமல் இருக்கலாம், உபயோகமானதாக இல்லாமல் இருக்கலாம், தேவை இல்லாதவையாக
இருக்கலாம். அப்போதெல்லாம், நாம் நம் கூறுபாடுகளை உபயோகிக்க வேண்டும்.
அப்போதெல்லாம் நாம் மரபை ஒதுக்கி விட்டு, நமக்கு எது சரியாகப் படுகிறதோ
அதை முன்வைக்க வேண்டும், பின்பற்ற வேண்டும். நாம் வாழும் உலகின்
புரிதலுக்கு மரபு முன்னிறுத்துவது தடையாக இருக்கும். தொல்காப்பிய
இலக்கணம் இதற்க்கு நல்ல உதாரணம்.///
மொழி மரபு என்பது மொழி இலக்கணம் என்பதன் மாற்றுச் சொல். அந்தப் பொருளிலேயே என்னால் பயன்படுத்துப்பட்டது.

எண்கள் பொருட் பெயர்கள் என்னும் உங்கள் கருத்தை விளக்குங்கள். எண்கள் பொருட் பெயர்கள் என்னும் கருத்தை நீங்கள் முன்வைத்தால், தமிழில் உள்ள வகைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றாகும். அதனால்தான் அதன் ஒரு பிரிவான பொருட்பெயர் என்னும் வகையில் எண்களை அடக்குகிறீர்கள்.  ஒரு இலக்கணக் கருத்தை ஏற்று அதன் கலைச் சொல்லை உங்கள் விளக்கத்திற்குப் பயன்படுத்தும்போதே இப்போது கூறப்படும் பண்புப் பெயர் என்னும் வகைக்குள் அடங்கும் என்பதை மறுப்பதாகக் கூறுவது எப்படிப் பொருத்தமாகும். விரிவாக விளக்குங்கள். ஆவலோடு அறியக் காத்திருக்கிறேன்.

அன்புடன்
ஆராதி




2010/5/29 விஜயராகவன் <vij...@gmail.com>
விஜயராகவன்

ananda rasa thiruma

unread,
May 29, 2010, 9:57:42 AM5/29/10
to mint...@googlegroups.com
திரு பழைமைபேசி
///உலகளாவிய மாநாடு என்று என்னைப் போல, பிறரும் நினைத்திருக்கக் கூடும்.

இவ்விழையின் துவக்கத்திலேயே கூட ஒரு கருத்து அது போல வெளிப்பட்டு
இருப்பதை நீங்கள் காணலாம். அது சரியா? தவறா??///

உலகளாவிய மாநாடு என்பதால் என்ன சொல்ல வருகிறோம். அளாவிய என்பதற்குப்  பரவிய என்பதுதானே பொருள். மாநாடு உலகம் எல்லாம் பரவியது என்பது சரியாக இருக்குமா? மொழி உலகம் எல்லாம் பரவியது என்பது சரியாக இருக்குமா?
மொழி பரவியுள்ளதா? மாநாடு பரவியுள்ளதா? மொழி பரவல் என்பது தமிழுக்கும் பெருமை.
மேலும் இந்திய மொழிகளில் அயல்நாடுகளிலும் ஆட்சி மொழியாக உள்ள மொழி தமிழதான் என்னும் பெருமையை  உட்கொண்டே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எனப் பெயரிட்டு இருப்பார்கள் என நினைக்கிறேன்.

அன்புடன்
ஆராதி

2010/5/29 பழமைபேசி <pazam...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 29, 2010, 10:14:54 AM5/29/10
to mint...@googlegroups.com
ஆசங்கை என்பது இன்றும் தென்மாவட்டங்களில் வழங்கும் சொல்.

2010/5/29 ananda rasa thiruma <aara...@gmail.com>
திரு பழைமைபேசி

பழமைபேசி

unread,
May 29, 2010, 10:22:46 AM5/29/10
to மின்தமிழ்
ஆகா..... ஏன் புழங்கக் கூடாது எனவும் கூறி விடவும்.

கிராம வழக்கில் இருக்கும் எத்தனையோ சொற்கள் நகரவாசிக்களுக்குத்
தெரிவதில்லை என்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
உதாரணம்: ஒறம்பு, மூகாற்றுதல்.....

புழக்கத்தில் கொண்டு வருவதும் எனது முயற்சியே!!

பணிவுடன்,
பழமைபேசி.

> > பழமைபேசி.- Hide quoted text -

Hari Krishnan

unread,
May 29, 2010, 10:24:21 AM5/29/10
to mint...@googlegroups.com
2010/5/29 ananda rasa thiruma <aara...@gmail.com>
எண்கள் பொருட் பெயர்கள் என்னும் உங்கள் கருத்தை விளக்குங்கள். எண்கள் பொருட் பெயர்கள் என்னும் கருத்தை நீங்கள் முன்வைத்தால், தமிழில் உள்ள வகைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றாகும். அதனால்தான் அதன் ஒரு பிரிவான பொருட்பெயர் என்னும் வகையில் எண்களை அடக்குகிறீர்கள்.  ஒரு இலக்கணக் கருத்தை ஏற்று அதன் கலைச் சொல்லை உங்கள் விளக்கத்திற்குப் பயன்படுத்தும்போதே இப்போது கூறப்படும் பண்புப் பெயர் என்னும் வகைக்குள் அடங்கும் என்பதை மறுப்பதாகக் கூறுவது எப்படிப் பொருத்தமாகும். விரிவாக விளக்குங்கள். ஆவலோடு அறியக் காத்திருக்கிறேன்.

இந்த விவாதத்தில் ஈடுபடவேண்டாம் என்று ஒதுங்கியிருந்தேன்.  திரு விஜயராகவன் அவர்கள் ஆராதி அவர்கள் சொல்வதன் பொருளை விளங்கிக்கொண்டதன் பிறகு அதனை மறுப்பது நலம்.  ஆனால் அவர் அவ்வாறு விளங்கிக்கொண்டதைப்போல் தோன்றவில்லை.  எடுத்துக்காட்டாக இங்கே: 

 உங்கள் கருத்துக்கு இசைவாகத் தமிழிலும் சிந்தித்திருக்கிறார்கள்.
> எ.டு- ‘வடை நன்றாக இருந்தது. நாலு சாப்பிட்டேன்.’  என்னும் தொடரில் நாலு என்பது
> நீங்கள் சொல்வதுபோலப் பொருட் பெயராகவே கருதப்படுகிறது. அதாவது நான்கு எனனும்
> எண்ணிக்கை இந்தத் தொடரில் பண்பைக் குறிக்காமல் பொருளைக் குறிக்கிறது. அதனால்
> இது பொருளுக்கு ஆகிவந்தமையால் ஆகுபெயர். தமிழின் மிகச் சிறந்த சிந்தனையில்
> ஆகுபெயர் குறிப்பிடத்தக்கது.


நான் நான்கு என சொல்லும் போது ஆகு பெயரை சொல்லவில்லை, ஒரு எண்ணை
குறிக்கிறேன். வேண்டுமானால் எண்ணைப் பற்றிய எண்ணத்தை விரிவாக
பார்க்கலாம்.
‘நாலு சாப்பிட்டேன்’ என்றால் என்ன அர்த்தம்?  நான்கு என்ற பெயர்ச்சொல், இந்தக் குறிப்பிட்ட இடத்தில் வடைக்கு ஆகி வந்தது.  ‘இந்த மூணும் உருப்படாது’ என்று உங்க ஜெயின்காலேஜ் ரசாயன ஆசிரியர் சொல்லியிருந்தால் அந்த இடத்தில் மூன்று என்ற பெயர்ச்சொல், அவருடைய உருப்படாத மாணவர்களுக்கு ஆகிவந்தது.

விஜயராகவன், I walked my weary way என்று ஆங்கிலத்தில் சொல்வதில்லையா?  We know that the way is not weary; but it is the person who is passing through the way is weary.  இதை ஆங்கிலத்தில் transferred epithet என்று சொல்கிறோம்.  அப்படித்தான் தமிழிலும் இடவாகு பெயர், பொருளாகு பெயர், தானியாகு பெயர் என்று வகைவகையான ட்ரான்ஸ்ஃபர்ட் எபிதட்கள் இருக்கின்றன.  I walked my weary way என்பதில் உள்ள weary என்பதற்கு என்ன இலக்கணக் குறிப்பு சொல்வீர்கள்?  A talking parrot என்றால் பேசும் கிளி என்று பொருள்.  Walking-stick என்றால் நடக்கும் குச்சி என்றா பொருள்?  கிளி பேசுகிறது.  குச்சியா நடக்கிறது?  talking parrotல் உள்ள talking என்பது present participle என்றும், walking-stick என்பதில் வாக்கிங் என்பதைத் தனியாகப் பிரிக்காமல், இரண்டு சொற்களையும் ஒன்றாகக் கூட்டி வாசிக்கவேண்டும் என்பதனால் ஒரு ஹைஃபன் போட்டு, அதை compound noun என்று சொன்னால் ஒப்புக்கொள்கிறோம்.  நாலு என்பது ஆகுபெயராக ஆக முடியாது என்று தீர்மானமாகச் சொல்லிவிடுகிறோம்.  

திருடள் என்பது இலக்கண விதிகளின்படி சரியான பயன்பாடுதான்.  ஆனாலும், இலக்கணம் வகுத்தவர்கள் முதலிலேயே ஒன்று சொல்லிவிட்டார்கள்.  நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்.  ஒன்று அந்த வடிவம் இலக்கிய ஆட்சி பெற்றதாக இருக்கவேண்டும்; அதைவிடவும் முக்கியமாக, தெருவில் போகிறவன் அந்த வடிவத்தை ஒத்துக்கொள்ள வேண்டும்.  It should be acceptable legal tender by the commoner.  If it does not pass that acid test, that particular form, however correct it may be by established rules of grammar, that form would not gain currency.  அன் விகுதி ஆண்பால், அள் விகுதி பெண்பால் என்ற விதிப்படி, திருடள் மட்டுமல்லாமல், ஒருவள் என்பதும்கூட சரியான வடிவங்கள்தாம்.  ஆனால் திருடனுக்குத் திருடியும் ஒருவனுக்கு ஒருத்தியும்தான் தெருவில் போகிறவனுடைய சாய்ஸ்.  அதனால் இலக்கணமும் அதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறது.  

ஆராதி ஆழப்படித்து, நன்கு உணர்ந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.  விருப்பமிருந்தால் கேட்டுக்கொள்ளலாம்.  இல்லாவிட்டால், என் வீட்டு நாய் புதுசுகளைக் கண்டால் குரைப்பார்கள் என்று விருப்பம்போல் வாக்கியம் உருவாக்கிக் கொள்ளலாம்.  

என் தாத்தா ராமநாதபுரம் பக்கத்து முஸ்லீம் மக்களைப் போல பேசிக்காட்டுவார்.  (பின்வரும் வாக்கியத்தை ஒரு ஒப்பாரியைப்போல் பாடுவார்.)  அப்பா மகன்கீ பாம்பூ... அய்யோ கடிச்சுட்டாங்கோ.....அரே அல்லாஆஆரேஏஏஏ......  மாடு புல்லு மேஞ்சாங்கோ. மனுசன் வந்து வெரட்டிச்சு.  அப்படிப் பேசினாத்தான் ரைட்.  இனிமே இதான் ரன் அன்ட் மார்ட்டின் அப்படின்னு மின்தமிழ்ல சட்டம் இயற்றும்படி கண்ணனையும் கேட்டுக்கொள்கிறேன்.  தப்பு தப்பு தப்பு.....கண்ணன் சட்டம் போடுது...நாம எல்லாம் அப்டியே நடக்குது...இன்னா சரியா?

பழமைபேசி

unread,
May 29, 2010, 10:31:01 AM5/29/10
to மின்தமிழ்
இங்கே நான் சற்று மாறுபடுகிறேன்.

வட்ட மாநாடு, மாவட்ட மாநாடு, மண்டல மாநாடு, மாநில மாநாடு, மண்டல மாநாடு,
தென்னிந்தியக் மாநாடு, இந்திய மாநாடு, உலக மாநாடு, தெற்காசிய மாநாடு
போன்றன புழக்கத்தில் நீங்கள் காணலாம். அதிலே மறைந்து இருக்கும் பொருள்
என்ன? பூகோள ரீதியாக, அந்தந்தப் பகுதிகளுக்குள் இருப்பவர்களுக்கான மாநாடு
என்றுதானே பொருள்??

அந்த வகையிலே, உலகத்தில் இருக்கும் அனைவரும் கலந்து கொள்ளக் கூடிய மாநாடு
எனப் பொருள் கொள்வதா?? அல்லது தாங்கள் கூறியபடி உலகம் முழுமைக்கும் பரவிய
தமிழ்ச் செம்மொழிக்கான மாநாடு எனப் பொருள் கொள்வதா??

On May 29, 9:57 am, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> திரு பழைமைபேசி
> ///உலகளாவிய மாநாடு என்று என்னைப் போல, பிறரும் நினைத்திருக்கக் கூடும்.
> இவ்விழையின் துவக்கத்திலேயே கூட ஒரு கருத்து அது போல வெளிப்பட்டு
> இருப்பதை நீங்கள் காணலாம். அது சரியா? தவறா??///
>
> உலகளாவிய மாநாடு என்பதால் என்ன சொல்ல வருகிறோம். அளாவிய என்பதற்குப்  பரவிய
> என்பதுதானே பொருள். மாநாடு உலகம் எல்லாம் பரவியது என்பது சரியாக இருக்குமா?
> மொழி உலகம் எல்லாம் பரவியது என்பது சரியாக இருக்குமா?
> மொழி பரவியுள்ளதா? மாநாடு பரவியுள்ளதா? மொழி பரவல் என்பது தமிழுக்கும் பெருமை.
> மேலும் இந்திய மொழிகளில் அயல்நாடுகளிலும் ஆட்சி மொழியாக உள்ள மொழி தமிழதான்
> என்னும் பெருமையை  உட்கொண்டே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எனப் பெயரிட்டு
> இருப்பார்கள் என நினைக்கிறேன்.
> அன்புடன்
> ஆராதி
>

> 2010/5/29 பழமைபேசி <pazamaip...@gmail.com>

Hari Krishnan

unread,
May 29, 2010, 10:33:55 AM5/29/10
to mint...@googlegroups.com
2010/5/29 பழமைபேசி <pazam...@gmail.com>
இங்கே நான் சற்று மாறுபடுகிறேன்.


வட்ட மாநாடு, மாவட்ட மாநாடு, மண்டல மாநாடு, மாநில மாநாடு, மண்டல மாநாடு,
தென்னிந்தியக் மாநாடு, இந்திய மாநாடு, உலக மாநாடு, தெற்காசிய மாநாடு
போன்றன புழக்கத்தில் நீங்கள் காணலாம். அதிலே மறைந்து இருக்கும் பொருள்
என்ன? பூகோள ரீதியாக, அந்தந்தப் பகுதிகளுக்குள் இருப்பவர்களுக்கான மாநாடு
என்றுதானே பொருள்??

ஒரு சின்னக் கேள்வி.  பதில் சொல்லுங்க.  சென்னைப் பல்கலைக்கழகம். சென்னைக்கு அப்புறம் ப்பன்னா போடணும்.  மதுரை காமரசர் பல்கலைக் கழகம்.  மதுரைக்கு அப்புறம் க்கன்னா கிடையாது.  ஏனுங்க அப்படி?  இரண்டுமே பல்கலலைக் கழகங்கள், இரண்டிலும் ஊர்ப்பேருதானே இருக்கு?


பழமைபேசி

unread,
May 29, 2010, 10:43:23 AM5/29/10
to மின்தமிழ்
ஆகா...

மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் == மதுரையைச் சார்ந்த காமராசர் நினைவான
பல்கலைக் கழகம்
சென்னைப் பல்கலைக் கழகம் == சென்னையைச் சார்ந்த பலகலைக் கழகம்

நான் ஒரு மாணவன். எனவே புரிதலில் மாறுபாடு இருந்தால் தெரியப் படுத்தவும்.

நன்றிங்க,
பழமைபேசி.

On May 29, 10:33 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:


> 2010/5/29 பழமைபேசி <pazamaip...@gmail.com>
>

devoo

unread,
May 29, 2010, 10:54:46 AM5/29/10
to மின்தமிழ்
தந்த பலகையை நினைவூட்டும் அருமையான உரையாடல்


தேவ்

விஜயராகவன்

unread,
May 29, 2010, 11:11:16 AM5/29/10
to மின்தமிழ்
n 29 May, 15:24, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/5/29 ananda rasa thiruma <aaraa...@gmail.com>

திருவாளர் ஹரிக்ரிஷ்ணன்

‘நாலு சாப்பிட்டேன்’ என்பதில் நாலு நாலு வடைக்கு நிற்கின்றது, அதனால்
அது பொருட்சொல் , அதை மறுக்கவில்லை. நான்கு என்பது வெறும் எண்ணை காட்டும்
போது கூட பொருட்சொல்தான், அதைதான் நான் சொன்னேன். முன்னர் ஆராதி நான்கு
என்பது அளவிற்க்கு பண்பு என்றார். அதைத்தான் ஒத்துக் கொள்ளவில்லை


>
> விஜயராகவன், I walked my weary way என்று ஆங்கிலத்தில் சொல்வதில்லையா?  We know
> that the way is not weary; but it is the person who is passing through the
> way is weary.  இதை ஆங்கிலத்தில் transferred epithet என்று சொல்கிறோம்.
>  அப்படித்தான் தமிழிலும் இடவாகு பெயர், பொருளாகு பெயர், தானியாகு பெயர் என்று
> வகைவகையான ட்ரான்ஸ்ஃபர்ட் எபிதட்கள் இருக்கின்றன.  I walked my weary way
> என்பதில் உள்ள weary என்பதற்கு என்ன இலக்கணக் குறிப்பு சொல்வீர்கள்?  A talking
> parrot என்றால் பேசும் கிளி என்று பொருள்.  Walking-stick என்றால் நடக்கும்
> குச்சி என்றா பொருள்?  கிளி பேசுகிறது.  குச்சியா நடக்கிறது?  talking parrotல்
> உள்ள talking என்பது present participle என்றும், walking-stick என்பதில்
> வாக்கிங் என்பதைத் தனியாகப் பிரிக்காமல், இரண்டு சொற்களையும் ஒன்றாகக் கூட்டி
> வாசிக்கவேண்டும் என்பதனால் ஒரு ஹைஃபன் போட்டு, அதை compound noun என்று
> சொன்னால் ஒப்புக்கொள்கிறோம்.  நாலு என்பது ஆகுபெயராக ஆக முடியாது என்று
> தீர்மானமாகச் சொல்லிவிடுகிறோம்.
>
> திருடள் என்பது இலக்கண விதிகளின்படி சரியான பயன்பாடுதான்.


இல்லை. திருடள் என்பதை யாரும் புரிந்து கொள்ளமாட்டர்கள் - அதனால் அது
இலக்கணம் இல்லை. இலக்கணம் மக்கள் புரிந்து கொள்ளாததைப் பற்றி
பேசுவதில்லை; ஒரு வாக்கியத்தையோ, சொல்லையோ புரிந்து கொள்ளும் போது,
எப்படி புரிகின்றனர் என்றுதான் விளக்குகின்றது


 ஆனாலும், இலக்கணம்
> வகுத்தவர்கள் முதலிலேயே ஒன்று சொல்லிவிட்டார்கள்.  நாடக வழக்கினும் உலகியல்
> வழக்கினும்.  ஒன்று அந்த வடிவம் இலக்கிய ஆட்சி பெற்றதாக இருக்கவேண்டும்;
> அதைவிடவும் முக்கியமாக, தெருவில் போகிறவன் அந்த வடிவத்தை ஒத்துக்கொள்ள
> வேண்டும்.  It should be acceptable legal tender by the commoner.  If it does
> not pass that acid test, that particular form, however correct it may be by
> established rules of grammar, that form would not gain currency.  அன் விகுதி
> ஆண்பால், அள் விகுதி பெண்பால் என்ற விதிப்படி, திருடள் மட்டுமல்லாமல், ஒருவள்
> என்பதும்கூட சரியான வடிவங்கள்தாம்.  ஆனால் திருடனுக்குத் திருடியும் ஒருவனுக்கு
> ஒருத்தியும்தான் தெருவில் போகிறவனுடைய சாய்ஸ்.  அதனால் இலக்கணமும் அதை
> ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறது.

அந்த இலக்கணம் என் சாய்சும்தான். அதைத்தான் நானும் சொல்கிறேன்.

> ஆராதி ஆழப்படித்து, நன்கு உணர்ந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
>  விருப்பமிருந்தால் கேட்டுக்கொள்ளலாம்.  இல்லாவிட்டால், என் வீட்டு நாய்
> புதுசுகளைக் கண்டால் குரைப்பார்கள் என்று விருப்பம்போல் வாக்கியம் உருவாக்கிக்
> கொள்ளலாம்.


கேட்டுக்கொள்வது - passive listening and reading - மட்டுமில்லாமல்,
விவாதத்தில் ஈடுபடுவது தவறில்லை.

விஜயராகவன்

விஜயராகவன்

unread,
May 29, 2010, 11:22:03 AM5/29/10
to மின்தமிழ்
ஆசங்கம் க்ரியாவில் இல்லை, கூகிளில் (பழமைபேசியை தவிர) இல்லை.
லெக்சிகானில் ஒரு எண்ட்ரி

*ஆசங்கை ācaṅkai
, n. < ā-šāṅkā. 1. Doubt, suspicion; சந்தேகம். மழையென் றாசங்கை
கொண்டகொடை (கம்பரா. நாகபாச. 263). 2. Ob- jection; ஆட்சேபம்.


சமஸ்கிருதத்தில் இருந்து வராப்போல் இருக்கு.

தென்மாவட்டங்களில் இது பேச்சு வார்த்தை என்றால் சரிதான்.

க்ரியாவின் ரேடாரிலிருந்து தப்பி விட்டது.


விஜயராகவன்

> > - Show quoted text -- Hide quoted text -

Nakinam sivam

unread,
May 29, 2010, 11:31:32 AM5/29/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் பழமை  பேசி அவர்களுக்கு,

சித்தர் மார்க்கத்தை சங்கை மார்க்கம் என்று கூறுவார்கள்.
சங்கை  என்பது இங்கே மறைபொருள்  என்ற பொருளில்
பயன்படுத்தப் படுகிறது.
ஆசங்கை என்பது வெளிப்படையானது என்றும் சுத்தமானது என்றும்  பொருள் தரலாம்.

அன்புடன்
நக்கினம் சிவம்
 

2010/5/29 விஜயராகவன் <vij...@gmail.com>
ஆசங்கம்  க்ரியாவில் இல்லை, கூகிளில் (பழமைபேசியை தவிர) இல்லை.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

devoo

unread,
May 29, 2010, 11:47:56 AM5/29/10
to மின்தமிழ்
May 29, 10:22 am, விஜயராகவன்

>>> சமஸ்கிருதத்தில் இருந்து வராப்போல் இருக்கு. <<<

आशंका – Doubt – ஆசங்கா
’ஆசங்கயா முக்தம்’ - பர்த்ருஹரி
‘இதி ஆசங்காயாம் ஆஹ’ – கதாதரர்
அவநம்பிக்கை என்னும் பொருளிலும் சில இடங்களில் கையாளப்படுகிறது.

’சங்கை’ என்னும் சொல் இதிலிருந்து தோன்றியிருக்கலாம்

தேவ்

பழமைபேசி

unread,
May 29, 2010, 11:53:57 AM5/29/10
to மின்தமிழ்
நன்றிங்க!

On May 29, 11:31 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> அன்பு நண்பர் பழமை  பேசி அவர்களுக்கு,
>
> சித்தர் மார்க்கத்தை சங்கை மார்க்கம் என்று கூறுவார்கள்.
> சங்கை  என்பது இங்கே மறைபொருள்  என்ற பொருளில்
> பயன்படுத்தப் படுகிறது.
> ஆசங்கை என்பது வெளிப்படையானது என்றும் சுத்தமானது என்றும்  பொருள் தரலாம்.
>
> அன்புடன்
> நக்கினம் சிவம்
>

> 2010/5/29 விஜயராகவன் <viji...@gmail.com>

> http://nakinam.blogspot.com- Hide quoted text -

Nakinam sivam

unread,
May 29, 2010, 12:18:22 PM5/29/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் பழமை  பேசி அவர்களுக்கு,

இன்றைக்கும் விழுப்புரம் - கடலூர் - பாண்டிச்சேரி 
பகுதிகளில்
சங்கை என்பது  அசுத்த வார்த்தைகள் -
திட்டுதல் என்னும் பொருளில் பயன்படுத்தப் படுகிறது.
(சங்கை சங்கையாக கேட்டான் )
ஆக 
ஆசங்கை என்பது தூய்மையான வார்த்தை என்று பொருள் கொள்ளலாம்.

அன்புடன்
நக்கினம் சிவம்


2010/5/29 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Hari Krishnan

unread,
May 29, 2010, 1:21:13 PM5/29/10
to mint...@googlegroups.com


2010/5/29 devoo <rde...@gmail.com>

May 29, 10:22 am, விஜயராகவன்
>>> சமஸ்கிருதத்தில் இருந்து வராப்போல் இருக்கு. <<<

आशंका – Doubt – ஆசங்கா
’ஆசங்கயா முக்தம்’ - பர்த்ருஹரி
‘இதி ஆசங்காயாம் ஆஹ’ – கதாதரர்
அவநம்பிக்கை என்னும் பொருளிலும் சில இடங்களில் கையாளப்படுகிறது.

’சங்கை’ என்னும் சொல் இதிலிருந்து தோன்றியிருக்கலாம்


சாத்திரங்கள் பலதேடினேன் - அங்குச்
சங்கையில்லாதன சங்கையாம்

என்று பாரதியை மேற்கோள் காட்டியிருந்தேன்.  சங்கையில்லாதன=கணக்கில்லாதவை; எண்ணில் அடங்காதவை.  சங்கையாம்=சந்தேகத்துக்கு உரியனவாம் அப்படின்னு அர்த்தம்.  எண்ணிக்கை என்றும் ஐயம் என்றும் இரண்டு பொருள்.  

-இவர்
சங்கையில்லாத நிதியெல்லாம் - நம்மைச்
சார்ந்தது வாழ்த்துதிர் மன்னர்காள்

என்று பாஞ்சாலி சபதத்தில் துரியோதனன் பேசும்போது, சங்கை என்பதற்கு அளவில்லாத என்று பொருள்.

இதைத்தவிர ஜன ஸங்கை என்ற பிரயோகத்தை பாரதியின் கட்டுரைகளில் காணலாம். “ஜன ஸங்கையா ஸ்த்ரீகளுடைய ஆபரணங்களைக் கழற்றி அவர்களுடைய தலையைச் சிரைக்க வேண்டுமென்று சொன்னது?  ஜன ஸங்கையா விதவைகள் ஒரு நேரம்தான் சாப்பிடலாமென்று விதித்தது?”  என்றெல்லாம் மாதர் நிலைபற்றி விவேகாநந்தருடைய அபிப்பிராயம் என்ற கட்டுரையில் பாரதி எழுதுகிறான்.  சென்சஸ் என்ற பொருள்.  மக்கள்தொகைக் கணக்கு.

ஆஸேது என்பதைப்போல ஆஸங்கை (என்று எனக்குத் தோன்றுகிறது).  க்ரியாவுடையது தற்காலத் தமிழகராதி.  அதில் இந்தச் சொல் இல்லாவிட்டால் வியப்புக்கு ஏதும் இல்லை.  

devoo

unread,
May 29, 2010, 1:29:27 PM5/29/10
to மின்தமிழ்

ஸங்க்யா – ஜந ஸங்க்யா – மக்கள் எண்ணிக்கை
ஜன ஸங்கை என்றானது (கீதையின் ஸாங்க்ய யோகம்)

ஆசங்கா – ஐயம், ஆசங்கை


*ஆசங்கை*

வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று
*ஆசங்கை* கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய்
அணுகும்,
தேசம் கலந்த மறைவாணர், செஞ் சொல்அறிவாளர், என்று இம் முதலோர்
பாசம் கலந்த பசிபோல், அகன்ற பதகன் துரந்த உரகம்.

(கம்ப ராமாயணம் ; யுத்த காண்டம்)

------------------------------------------------------------------------------------------------------------------------------------
சங்கை

அகராதியில் இருந்து

s. doubt, uncertainty, ஐயம்; 2. fear, apprehension, அச்சம்; 3.
honour, reverence, கனம்; 4. custom, usage, வழக்கம்; 5. number; 6.
measure, estimate; 7. shank, கணைக்கால்; 8. evil spirit, பூத பிசாசு. ,
s. doubt, uncertainty, ஐயம்; 2. fear, apprehension, அச்சம்; 3. honour,
reverence, கனம்; 4. custom, usage, வழக்கம்; 5. number; 6. measure,
estimate; 7. shank, கணைக்கால்; 8. evil spirit, பூத பிசாசு.
உச்சரிப்பு: cangkai cangkai

ஆங்கில விளக்கம்:


சங்காதோஷம், demoniac possession, சங்கைக்கோளாறு.
சங்கைக் குரிய, venerable; reverend.
சங்கைக் கேடு, --யீனம், dishonour.
சங்கை பண்ண, சங்கிக்க, to honour.
சங்கை பொருந்திய, -போர்ந்த, honourable, respectable, venerable.
சங்கைமான், சங்கைவான், a respectable person.
காலசங்கை, the usage or practice of the times.
காற்றுச் சங்கை, possession by a demon.
மாறாத சங்கை, unviolable custom or practice.
சங்காதோஷம், demoniac possession, சங்கைக்கோளாறு.
சங்கைக் குரிய, venerable; reverend.
சங்கைக் கேடு, --யீனம், dishonour.
சங்கை பண்ண, சங்கிக்க, to honour.
சங்கை பொருந்திய, -போர்ந்த, honourable, respectable, venerable.
சங்கைமான், சங்கைவான், a respectable person.
காலசங்கை, the usage or practice of the times.
காற்றுச் சங்கை, possession by a demon.
மாறாத சங்கை, unviolable custom or practice.


http://wiki.senthamil.org/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/index.jsp

தேவ்

On May 29, 12:21 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:

ananda rasa thiruma

unread,
May 29, 2010, 9:03:58 PM5/29/10
to mint...@googlegroups.com
திரு பழமைபேசி
///இங்கே நான் சற்று மாறுபடுகிறேன்.


வட்ட மாநாடு, மாவட்ட மாநாடு, மண்டல மாநாடு, மாநில மாநாடு, மண்டல மாநாடு,
தென்னிந்தியக் மாநாடு, இந்திய மாநாடு, உலக மாநாடு, தெற்காசிய மாநாடு
போன்றன புழக்கத்தில் நீங்கள் காணலாம். அதிலே மறைந்து இருக்கும் பொருள்
என்ன? பூகோள ரீதியாக, அந்தந்தப் பகுதிகளுக்குள் இருப்பவர்களுக்கான மாநாடு
என்றுதானே பொருள்??

அந்த வகையிலே, உலகத்தில் இருக்கும் அனைவரும் கலந்து கொள்ளக் கூடிய மாநாடு
எனப் பொருள் கொள்வதா?? அல்லது தாங்கள் கூறியபடி உலகம் முழுமைக்கும் பரவிய
தமிழ்ச் செம்மொழிக்கான மாநாடு எனப் பொருள் கொள்வதா??///

நீங்கள் கூறியபடி மாநாட்டிற்குத் தொடர்புடைய இடத்தை வரையறை செய்ய அச்சொல்லிற்கு முன்னுள்ள அடைமொழிகள் பயன்படுகின்றன. அதாவது எந்த இடத்தில் நடக்கிறது அல்லது எந்த இடத்திற்கு உரியது என்பதைக் காட்ட இந்த அடைமொழிகள் தேவை. அப்பொழுதுதான் பொருள் தெளிவு ஏற்படும்.

உலக மாநாடு எனக் கொண்டால் உலகத்தில் நடக்கிற அல்லது உலகத்திற்குரிய மாநாடு எனப் பொருள்படும். ‘தமிழ்ச் செம்மொழி மாநாடு‘ என்று சொன்னாலே நீங்கள் குறிப்பிட்ட  ///உலகத்தில் இருக்கும் அனைவரும் கலந்து கொள்ளக் கூடிய மாநாடு/// என்னும் பொருள் வந்துவிடும். அப்பொழுது உலகம் என்பது தேவையற்ற அடையாகிறது. வழங்கப்பட்டு விட்ட ஒன்றிற்குத் தக்க காரணம் ஏதேனும் இருக்குமா என்பதைக் காணவே முயல்கிறோம்.
இவையெல்லாம் மொழி அமைப்பை ஒட்டிய கருத்துக்கள். இதற்கு அப்பால் பெயர்வைத்தவர்கள் அரசியல் செல்வாக்கு, புகழ் எனச்  சில காரணங்களைக் கருதியிருக்கலாம். அப்போது நீங்கள் குறிப்பிடும் பொருளுக்கும் வாய்ப்புள்ளது. அதற்கும் மொழியில் இடம் உண்டு. தான் இருக்கும் போதே உலகம் பாராட்டும் படியாகத் தமிழுக்கு ஒரு மாநாடு நடத்தவேண்டும் என முதல்வர் நினைத்து இப்பெயரை வைத்திருக்கலாம் .
உலக முதன்மொழி தமிழ் என்னும் பாவாணர் முதலியோர் கருத்தை அரண்செய்யவும் இப்பெயரை வைத்திருக்கலாம்.
இப்படி வேறுபல காரணங்கள் இருந்தால் அதற்கு ஏற்பவும் தமிழில் பொருள் கொள்ளமுடியும்.
உலக நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும் போது பிரெஞ்சு மொழியைப் பயன்படுத்துவார்கள் எனச் சொல்வார்கள். ஏனெனில் உலகம் முழுக்கப் பரவி மொழிகளில் பிரெஞ்சில் மட்டும்தான் ஒரு தொடருக்கு வேறு பொருள் கொள்ள முடியாது எனச் சொல்கின்றனர்.
தமிழில் எதைச் சொன்னாலும் அதனைப்  பல்வேறு பொருள் உள்ளதாகச் சூழலுக்கு ஏற்பப் பொருள் கொள்ள வாய்ப்புள்ளது. இதனை மொழியின் நெகிழ்ச்சித் தன்மை எனப் பாராட்டவும் செய்யலாம். மொழிக் குழப்பம் என ஒதுக்கவும் செய்யலாம்.

என் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த உங்களுக்கும் திரு விஜயராகவன்,  திரு ஹரிகி, திரு கண்ணன், திரு தேவ்,   திரு. இன்னம்பூரான், திரு தமிழ்த்தேனீ, திரு கீதா சாம்பசிவம், திரு கார்த்திக் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

அன்புடன்
ஆராதி



2010/5/29 பழமைபேசி <pazam...@gmail.com>

பழமைபேசி

unread,
May 29, 2010, 9:56:15 PM5/29/10
to மின்தமிழ்
தங்களிடம் இருந்து மேன்மையைக் கற்றேன். தமிழைக் கற்றேன். முன்மாதிரி ஐயா
நீர்.
வணக்கம்; நன்றி! வாழ்த்துகளும் வேண்டி,

பணிவுடன்,
பழமைபேசி.

On May 29, 9:03 pm, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> திரு பழமைபேசி

> 2010/5/29 பழமைபேசி <pazamaip...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 30, 2010, 2:17:52 AM5/30/10
to mint...@googlegroups.com
அருமையாகவும், பொறுமையாகவும் விளக்கங்கள் அளித்ததுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். மிக்க நன்றி.

2010/5/30 ananda rasa thiruma <aara...@gmail.com>

karuannam annam

unread,
May 30, 2010, 2:30:05 AM5/30/10
to mint...@googlegroups.com
:

> தங்களிடம் இருந்து மேன்மையைக் கற்றேன். தமிழைக் கற்றேன். முன்மாதிரி ஐயா
> நீர்.
> வணக்கம்; நன்றி! வாழ்த்துகளும் வேண்டி,
>
> பணிவுடன்,
> s.vinaitheerthan

To
ananda rasa thiruma <aaraa...@gmail.com>
and Palamaipesi

ananda rasa thiruma

unread,
May 30, 2010, 4:17:24 AM5/30/10
to mint...@googlegroups.com
அன்புள்ள மின் தமிழ் அன்பர்களுக்கு
லெனின் சோவியத் ருஷியாவின் ஆட்சிச் தலைமையில் இருந்த போது, மேடையில் பேசக் கூப்பிட்டால் அங்கிருப்பவர்கள் எல்லாம் தன்னைப் புகழ்ந்தவர்களைப் பார்த்துச் சொன்னார். ‘தோழர் லெனின்  என்பதற்குமேல் ஒரு வார்த்தை என்னைப் பற்றிப் பேசக்கூடாது. மக்களிடம் பேசவந்த கருத்தைப் பேசுங்கள்‘
இதையே பணிவோடு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் பாராட்டும் ஒவ்வொரு சொல்லும் உங்களிலிருந்து என்னை அன்னியப்படுத்துகிறது. நமக்குள் உள்ள நட்பில் இடைவெளியையும் எனக்கு மனச்சங்கடத்தையும் ஏற்படுத்துகிறது.
அறிவு ஒரு கூட்டுமுயற்சி. பலபேர் சேர்ந்து தேர் இழுப்பதுபோல், பலபேர் சேர்ந்து சிந்திக்கும்போது, உங்களுக்குத் தெரிந்ததை நானும், எனக்குத் தெரிந்ததை நீங்களும் என ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்கிறோம்.
அகமதாபாத்தில் பேச அழைத்தார்கள். அங்குத் தமிழர்கள் மிகுதியாக வாழ்கிறார்கள். இது 80களில் நடந்தது. வடஇந்தியாவில் முருகன் கோயில் உள்ளதா எனக் கேட்டேன். அவர்கள் இல்லை என்று சொன்னார்கள். ஏன் என்றேன். தந்தைக்கே பாடம் சொன்னவன் முருகன். தந்தையை விஞ்சியவன். தகப்பன் சாமி. இங்குள்ள மக்கள், எவ்வளவு வளர்ந்தாலும் தகப்பனுக்குப் புத்திசொல்லும் பண்பாடு இல்லை. அதனால் முருகனையும் இவர்கள் ஏற்பதில்லை என ஒருவர் சொன்னார். அக்கருத்து சரியா தவறா என்பது வேறு. ஆனால் தமிழ் நாட்டில் அறிவு பெரியவரிடம் இருந்தாலும் சிறியவரிடம் இருந்தாலும் மகனிடம் இருந்தாலும் ஏற்றுப் போற்று எனக் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்...
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே
என ஒரு அரசன் பாடுகிறான்.

எல்லோரும் ஒவ்வொருவிதத்தில் அறிவு சான்றவர்கள். எனக்கு இலக்கணமும் தத்துவமும் தெரியுமென்றால் வேறு சிலருக்கு கம்யூட்டரும், மருத்துவமும் தெரியும். பிறர் திறமை நமக்குத் தெரிவதில்லை. அவ்வளவுதான்.
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
 
அன்புடன்
ஆராதி

2010/5/30 karuannam annam <karu...@gmail.com>

N. Kannan

unread,
May 30, 2010, 9:20:12 AM5/30/10
to mint...@googlegroups.com
அப்ப்ப்பா! எவ்வளவு அழகாக நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றை மிக, மிக
இதமாகச் சொல்கிறார்.

தோழர் ஆராதி வாழ்க (ரொம்பச் சொன்னா கோவிச்சுப்பார் :-))

க.>

2010/5/30 ananda rasa thiruma <aara...@gmail.com>:

karuannam annam

unread,
May 30, 2010, 1:50:18 PM5/30/10
to mint...@googlegroups.com


2010/5/30 N. Kannan <navan...@gmail.com>

அப்ப்ப்பா! எவ்வளவு அழகாக நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றை மிக, மிக
இதமாகச் சொல்கிறார்.

தோழர் ஆராதி வாழ்க (ரொம்பச் சொன்னா கோவிச்சுப்பார் :-))

க.>
 
ரொம்பச்சொன்னா கோவிச்சுப்பார் :-))
 
 
!!!!!!!!!!!

NanRi Thiru Kannan  
S.Vinaitheerthan
 
 
 
 
Reply all
Reply to author
Forward
0 new messages