--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இந்த விளக்கங்களின் பின்னணியில் உங்கள் வினாவிற்கு உரிய விடையைக் காண முயல்வோம்.
1. உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு
2. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
இந்த இரு தொடர்களில் சிக்கலுக்குரிய சொல் உலகம் என்பது. உலகம் என்னும் சொல் எதற்கு அடையாகிறது என்பதைப் பொருத்துப் பொருள் மாறுபடும்.
முதல் தொடரில் உலகம் செம்மொழிக்கு அடையானால் உலகின் கண் உள்ள அனைத்துச் செம்மொழிகளையும் குறிக்கும். அவற்றில் ஒன்றாகிய தமிழுக்கு மாநாடு எனப் பொருள் கொள்ள வாய்ப்பேற்படும். (உலகம் இத்தொடரிலும் தமிழுக்கு அடையாக வாய்ப்புள்ளது என்பதையும் கருத்தில் கொள்க)
இரண்டாவது தொடரில் தனிஒரு பகுதியில் மட்டுமன்றி உலகெங்கினும் பரவியுள்ள தமிழ் என்னும் பொருள் தருவதால் உலகம் தமிழுக்கு அடையாகிறது. அப்படிப்பட்ட தமிழாகிய செம்மொழிக்கு மாநாடு எனப் பொருள்படும்.
முதல் தொடரிலும் அப்பொருளைப் பெற முடியும். ஆனால் இரண்டாவது தொடரில் தெளிவாக அப்பொருள் தருவதால் இத்தொடரைத் தேர்ந்தெடுத்திருப்பர் என்பது என் கருத்து. வேறு காரணங்களும் இருக்கலாம்.
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு;
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு;
உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு!!
இவற்றுள் எது சரி? கோவைத் தமிழ், நெல்லைத் தமிழ் போன்று உலகத்தமிழும்
ஒன்றா??
On May 27, 10:32 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/5/28 ananda rasa thiruma <aaraa...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > இந்த விளக்கங்களின் பின்னணியில் உங்கள் வினாவிற்கு உரிய விடையைக் காண
> > முயல்வோம்.
> > 1. *உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு
> > 2. **உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
> > *இந்த இரு தொடர்களில் சிக்கலுக்குரிய சொல் உலகம் என்பது. உலகம் என்னும் சொல்
மிக்க நன்றி!
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு;
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு;
உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு!!
இவற்றுள் எது சரி? கோவைத் தமிழ், நெல்லைத் தமிழ் போன்று உலகத்தமிழும்
ஒன்றா??
செரமப் படுத்தாதீங்ணா , இனிம மாத்தீரவா முடியு ?
தேவ்
On May 28, 12:18 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/5/28 பழமைபேசி <pazamaip...@gmail.com>
//உலகமெங்கும் இருக்கும் தமிழாகிய செம்மொழிக்கு மாநாடு எனப்
பொருள்படும். //
தமிழாகிய செம்மொழியா?? செம்மொழியாகிய தமிழா??
மொழியை ஆராய்ச்சி செய்யக் கூடிய மாநாட்டின் தலைப்பையே ஆராய்ச்சி செய்வது
எதிர்பாராத ஒன்றுதான். மன்னிக்கவும்.
இன்னும் மற்றவரது கருத்துகளை எதிர் நோக்குகிறேன்.
பணிவுடன்,
பழமைபேசி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> பண்பு உருபு ‘ஆகிய‘ இரு சொற்களுக்கு இடையே மறைந்து வருமானால் அது பண்புத் தொகை.
> ஆக பண்புத் தொகையில் இரண்டு சொற்கள் இருக்கும். இந்த இரண்டு சொற்களில் பண்புப்
> பெயர் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
> எ.டு- 1. செந்தமிழ்= செம்மை+தமிழ், 2. நாற்பது= நான்கு+பத்து,
> 3. தென்னை மரம் = தென்னை + மரம்
> முதல் எடுத்துக்காட்டில் செம்மை என்பது பண்புப் பெயர், தமிழ் என்பது
> பொருட்பெயர்.
ஆனந்தராசா
தமிழ் என்பது பொருள் இல்லை; அதுவும் பண்புதான்.
நம் காதில் சிலர் பேசும் போது சப்தங்கள் விழுகின்றன. சில சப்தங்களை நாம்
தமிழ் எனவும், வேறு சில சப்தங்களை ஆங்கிலம் எனவும், வேறு சில சப்தங்களை
கன்னடம் எனவும் சொல்கிறோம். இப்படி காதில் விழும் சம்பதங்களை இனம்
காணுவது நம் மூளை. இதைத்தவிர தமிழ் என்றோ, தெலுங்கு என்றோ, ஆங்கிலம்
என்றோ எந்த “பொருளும்” வெளியுலகில் இல்லை.
மொழி - அதாவது தமிழ், ஆங்கிலம் போன்ற தனிப்பட்ட மொழிகள் - மேஜை,
நாற்காளி, தென்னைமரம் போல பொருள்கள் இல்லை.
ஒருவர் பேச்சை `கன்னடம்` என் இனம் கண்டவுடன்; `அவர் பேச்சு கன்னடப்
பேச்சு` என பேச்சுக்கு பண்பு கொடுக்கிறோம்.
விஜயராகவன்
On 28 May, 02:56, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:ஆனந்தராசா
> பண்பு உருபு ‘ஆகிய‘ இரு சொற்களுக்கு இடையே மறைந்து வருமானால் அது பண்புத் தொகை.
> ஆக பண்புத் தொகையில் இரண்டு சொற்கள் இருக்கும். இந்த இரண்டு சொற்களில் பண்புப்
> பெயர் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
> எ.டு- 1. செந்தமிழ்= செம்மை+தமிழ், 2. நாற்பது= நான்கு+பத்து,
> 3. தென்னை மரம் = தென்னை + மரம்
> முதல் எடுத்துக்காட்டில் செம்மை என்பது பண்புப் பெயர், தமிழ் என்பது
> பொருட்பெயர்.
தமிழ் என்பது பொருள் இல்லை; அதுவும் பண்புதான்.
திரு விஜயராகவன்,What he actually means by பொருட்பெயர் is Noun. When he calls a noun a noun, what could be your objection?
பொருட்பெயர் poruṭ-peyar, n. < id. +. 1. Noun derived from the name of a concrete object; பொருளடியாகப் பிறந்த பெயர்ச்சொல். (நன். 132.) 2. Name of a thing; ஒரு
Vijayaraghavan
On 28 May, 11:33, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/5/28 விஜயராகவன் <viji...@gmail.com>
> ஹரிகி.- Hide quoted text -
>
> - Show quoted text -
I think you are right hariKi. I read பொருட்பெயர் literally instead of
On May 28, 8:00 am, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> //தமிழாகிய செம்மொழியா?? செம்மொழியாகிய தமிழா??//
> தமிழ்மொழி என்றுதான் சொல்கிறோம். தமிழ் என்பது சிறப்புப் பெயர். மொழி என்பது
> பொதுப் பெயர். எனவே தமிழ்மொழி என்பது இருபெயரொட்டுப் பண்புத் தொகை. மொழி
> என்பதற்கு அடையாக செம்மை சேர்ந்து ‘தமிழ்ச் செம்மொழி‘ என வந்துள்ளது. அதாவது
> தமிழாகிய செம்மொழி எனப் பொருள்படுகிறது. தமிழ் > தமிழ்மொழி > தமிழ்ச் செம்மொழி
> திரு விஜயராகவன் வினாவிற்கு என்சார்பாக விடையளித்த, தமது கருத்தையும் பதிவு
> செய்த திரு ஹரிகி அவர்களுக்கும் நன்றி
> அன்புடன்
> ஆராதி
>
> 2010/5/28 விஜயராகவன் <viji...@gmail.com>
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
"உலகச் செம்மொழித்தமிழ் மாநாடு", மற்றும் "உலகத் தமிழ்ச்செம்மொழி
மாநாடு",
இரண்டுமே *சரி*. ("உலகம்" ஒரு சொல்*;* "செம்மொழித்தமிழ்" ஒரு சொல் -
"உலகம்" ஒரு சொல்*; "*தமிழ்ச்செம்மொழி" ஒரு சொல்).
"உலக*ச்* செம்மொழி*த் *தமிழ் மாநாடு", மற்றும் "உலகத் தமிழ்ச் செம்மொழி
மாநாடு"
இரண்டுமே *தவறு. *
("உலகம்" ஒரு சொல்*; "*செம்மொழி" ஒரு சொல்*; "*தமிழ்" ஒரு சொல்
"உலகம்" ஒரு சொல்*; "*தமிழ்" ஒரு சொல்*; "*செம்மொழி" ஒரு சொல்)
*இரு சொற்களை இணைக்கவே மெய்யெழுத்தை சந்தியாக உபயோகப்படுத்த வேண்டும்.
*சும்மா ச், ப், த், ட் ன்னு மெய்யெழுத்தெல்லாவற்றையும் போட்டு, தொடர்
வண்டி
(டிரெயின்) மாதிரி இழுத்துக் கொண்டு சென்றால், தமிழ்க்கொலை தான்
நடக்கும்.
"*தொகை*" என்பது வேறு.
தமிழ் இலக்கணப்படி, "தொக்கி வருவது தொகை".
தொக்கி வருவதென்றால், "*மறைந்து வருவது*" என்று பொருள்.
> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our
> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/minTamil-Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -
தமிழ் > தமிழ்மொழி > செம்மை + தமிழ்மொழி = செந்தமிழ்மொழி??
On May 28, 8:00 am, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> //தமிழாகிய செம்மொழியா?? செம்மொழியாகிய தமிழா??//
> தமிழ்மொழி என்றுதான் சொல்கிறோம். தமிழ் என்பது சிறப்புப் பெயர். மொழி என்பது
> பொதுப் பெயர். எனவே தமிழ்மொழி என்பது இருபெயரொட்டுப் பண்புத் தொகை. மொழி
> என்பதற்கு அடையாக செம்மை சேர்ந்து ‘தமிழ்ச் செம்மொழி‘ என வந்துள்ளது. அதாவது
> தமிழாகிய செம்மொழி எனப் பொருள்படுகிறது. தமிழ் > தமிழ்மொழி > தமிழ்ச் செம்மொழி
> திரு விஜயராகவன் வினாவிற்கு என்சார்பாக விடையளித்த, தமது கருத்தையும் பதிவு
> செய்த திரு ஹரிகி அவர்களுக்கும் நன்றி
> அன்புடன்
> ஆராதி
>
> 2010/5/28 விஜயராகவன் <viji...@gmail.com>
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
ஆராதி அவர்களே
தங்களிடமிருந்து மறுபடியும் மாறுபடுகிறேன். (இப்டித்தான் ஸ்கூலிலும்
காலேஜுலும் வாத்தியாரை கேள்வி கேட்டு சங்கடத்துள்ளானேன்; ஜெயின் காலேஜ்
ரசாயன லெக்சரர் கேள்வி கேட்டதினால் வெளியே போனு சொல்டார். ஆனால் நாய்வால்
நிமிராது).
”செம்மை என்பது பண்புப் பெயர்” என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நான்கு,
பத்து என்பவை பொருட்பெயர்கள் - அதாவது nouns.
இப்படி ஒரு வாக்கியம் படியுங்கள் “ பத்து ஐந்து இரண்டுகளினால்
ஆகின்றது” . இதில் பத்து, இரண்டு இரண்டும் பொருட்பெயர்கள். எல்லா
எண்களும் பொருட்பெயர்கள்.
இரண்டாவதாக, தென்னைமரம் என்பது ஒரு சொல், ஒரு பொருட்சொல். அதை தென்னை
ஆகிய மரம் என பிரிக்க முடியாது.
மூன்றாவதாக `ஆகிய` என்ற 3 உபயோகங்களில் ( 1. செம்மை ஆகிய தமிழ், 2.
நான்கு ஆகிய பத்து, 3. தென்னை ஆகிய மரம் )
முதல் பிரயோகம்தான் சரியாக படுகின்றது. ’ஆகிய` என்றால் ஒரு பொருள்
மற்றொரு பொருளாக மாறுவதன் அர்த்தத்தை கொடுக்கிறது. .
எ.கா. எதிரியாகிய பாகிஸ்தானை பலர் வெறுத்தனர் ; பிரதிவாதியாகிய நான்
குற்றசாட்டுகளை மறுக்கிறேன்.
ஓரளவு `ஆகிய` என்பது சமன்வயத்தை காட்டுகிறது. ஆங்கிலத்தில் `ஆகிய` என்பதை
becomes , equivalent to, as என புரிந்து கொள்கிறேன். `ஆகிய`வின்
மற்றோர் உபயோகம் பல பொருட்சொல்ற்களை ஒன்று சேர்ப்பது.
உதாரணங்கள்:
1.இஸ்லாம்,கிறிஸ்துவம், யூதம் ஆகிய மதங்களின் தோற்றுவாய் ஆபிரகாம்
2.ஒருவருக்கு லக்னம், ராசி ஆகிய இரண்டும் ஒன்றாக அமைந்தால் என்ன பலன்?
3.மா, வாழை மற்றும் பப்பாளி ஆகிய பழ வகைகள் உஷ்ணப் பிரதேசங்களில்
உற்பத்தி ஆகிறன.
அதனால் `செம்மை ஆகிய தமிழ்` 100% பொருத்தமாக இல்லை - என் காதுகளுக்கு
`நான்கு ஆகிய பத்து` என்பது நிச்சயமாக சரியாக இல்லை. அதேபோல்தான் `தென்னை
ஆகிய மரம்` உம் இருக்கு
விஜயராகவன்
உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
உலகத்தை ஒட்டி ஒற்று வருவதால், உலகம், தமிழ், செம்மை ஆகியன மொழியின் மீது
ஒட்டுவதாக இருக்கிறது.
இந்த ஒற்றுக்குண்டான விளக்கத்தையும் தெரியப்படுத்துவீர்களாக!!
அடுத்து, தமிழ்ச் செம்மொழி மாநாடு எனக் குறிப்பிடுவதைக் காட்டிலும்,
செம்மொழி மாநாடு என்றே பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது.
இதைப் பற்றியும் தங்கள் கருத்துகளை அறிய முற்படுகிறேன்.
பணிவுடன்,
பழமைபேசி.
On May 28, 11:25 am, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> 1.//தமிழ் > தமிழ்மொழி > தமிழ்ச் செம்மொழி //
>
> 2.//தமிழ் > தமிழ்மொழி > செம்மை + தமிழ்மொழி = செந்தமிழ்மொழி??//
> இரண்டுமே வெவ்வேறு பொருள் உடையன.
> முதல் தொடரில் செம்மொழி என்பதற்குத் தமிழ் அடையாகும். அதாவது உலகில் உள்ள பல
> செம்மொழிகளில் தமிழ்ச் செம்மொழி என வேறுபடுத்துவதாக இத்தொடர் பொருள்படுகிறது.
> அதாவது இலத்தீன் செம்மொழி, சீனச் செம்மொழி, சமஸ்கிருதச் செம்மொழி
> என்பனவற்றிலிருந்து வேறுபடுத்தித் தமிழைக் காட்டத் தமிழ்ச்செம்மொழி என்னும்
> தொடர் பயன்படுகிறது.
>
> இரண்டாவது தொடர் தமிழ் மொழிவழக்கைப் பற்றியது. தமிழுக்கு அடை செம்மை.
> கொடுந்தமிழ் என்னும் வழக்கை இதனோடு ஒப்பிட்டுப் பார்ப்பதால் இதனை அறியமுடியும்.
> அதாவது கடுமையான பொருள் விளங்காத அரிய சொற்களைத் தமி்ழில் பயன்படுத்தினால் அது
> கொடுந்தமிழ். அதனின்றும் வேறுபடுத்தி இயல்பான நல்ல வழக்குச் சொற்களைப்
> பயன்படுத்தினால் அது செந்தமிழ். அதனோடு மொழி என்பதும் சேர்ந்து செந்தமிழ் மொழி
> என்றாகிறது.
> முதல் தொடர் உலகமொழிகளோடு தமிழை ஒப்பிட்டுப் பேசுகிறது. இரண்டாவது தொடர்
> தமிழ்நாட்டு அளவில் தமிழ் வழக்கைக் குறிப்பிட்டுக்காட்டுகிறது.
> வேறொரு அன்பரின் பங்களிப்பு என்பதாக ஒரு பதிவு காணப்படுகிறது. இது அந்த
> அன்பரின் கருத்து. அவருடைய சந்தேகம் அன்று. இலக்கணத்தைப் பற்றிப் பேசும் போது
> எந்த அடிப்படையில் அவர் அக்கருத்தைப் பதிவு செய்துள்ளார்? அதற்கான சான்று என்ன
> என்பதை அறியாமல் அதைப் பற்றி விளக்கம் அளிப்பது பொருத்தமாகாது.
> அன்புடன்
> ஆராதி
>
> 2010/5/28 பழமைபேசி <pazamaip...@gmail.com>
> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit
> > our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil-Hide quoted text -
அடேங்கப்பா! என்ன அழகான தமிழ். என்ன பொறுமை, என்ன அமைதி. மிக்க நன்றி
ஆராதி அவர்களே. மின்தமிழுக்கு அணி சேர்க்கிறீர்கள்.
கி.ரா எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவரைக் காண ஆவல். இம்முறை
வரும் போது ஒரு புதுவை சந்திப்பு ஏற்பாடு செய்தால் என்ன? சுகு, நீங்கள்,
தி.வா, கிரா எல்லோரும் அருகில், அருகில்தானே?
க.>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
--
ரெ.கா.
ஆராதி அவர்களே
வழக்காறையும் கருத்துகோள்களையும் நாம் தனியாக பார்க்க வேண்டும். மொழி
என்பது வழக்காறு. அதனால்தான் நாம் பெண்பாலுக்கு `ள்` முடிவு, சில சமயம்
`டி` என வைத்துள்ளொம். மொழியை சரியாக பேச கற்க்க வேண்டுமானால்,
பிரயோகிக்க வேண்டுமானால் வழக்காற்றைதான் பின்பற்ற வேண்டும். அதில் மாற்று
கருத்து இல்லை.
நீங்கள் சொல்லும் பல்பொடி, பல்ப்பொடி, பறபொடி வேற விஷயம். அது தற்கால
இலக்கணத்தை தொல்காப்பியர் கண்ணாடியினால் பார்ப்பதின் விளைவு.
தற்காலத்திலேயே கணிசமான தொகையினர் `திருடள்` என பேச ஆரம்பித்தால்,
அங்கும் குழப்பம் வரும். ஆனால் நிலைமை அப்படியில்லை. தமிழ் பேசும் உலகம்
பூராவும் `திருடி` தான் வழக்கு. அதில் வழுக்கு இல்லை..
ஆனால் மொழியை பற்றிய கூறுபாடுகளை (analysis, understanding) `மரபு` என
ஏற்க்கமுடியாது. மரபின் புரிதல் சரியாக இல்லாமல் இருக்கலாம், போதுமானதாக
இல்லாமல் இருக்கலாம், உபயோகமானதாக இல்லாமல் இருக்கலாம், தேவை இல்லாதவையாக
இருக்கலாம். அப்போதெல்லாம், நாம் நம் கூறுபாடுகளை உபயோகிக்க வேண்டும்.
அப்போதெல்லாம் நாம் மரபை ஒதுக்கி விட்டு, நமக்கு எது சரியாகப் படுகிறதோ
அதை முன்வைக்க வேண்டும், பின்பற்ற வேண்டும். நாம் வாழும் உலகின்
புரிதலுக்கு மரபு முன்னிறுத்துவது தடையாக இருக்கும். தொல்காப்பிய
இலக்கணம் இதற்க்கு நல்ல உதாரணம்.
மரபு இலக்கணம் என்பது ஒரு தியரிதான், தியரி செயல்முறைகளை செம்மையாக
விளக்காவிட்டால், நாம் தியரியை மாற்றிக் கொள்ள வேண்டும்.
>
> முன்னுரை சற்று நீண்டுவிட்டது. பொருத்துக்கொள்ளுங்கள்.
> பத்து, நான்கு என்பன பண்புப் பெயர்கள் என தமிழ் மொழி மரபு சொல்கிறது. மரம் என
> வழங்கும் ஒரு பொருளைக் குறிக்க ஏன் கிரம் என வழங்கவில்லை எனக் கேட்டால் பதில்
> இல்லை.
மரம் என்பது வழக்கு. எண்கள் பண்புப் பெயர்கள் என்பது தியரி, கருத்து
அவ்வளவுதான். நீங்கள் “பத்து மூன்றினால் சரியாக வகுபடாது” என சொன்னால்,
எல்லோரும் புரிந்து கொள்வர் , இலக்கணம் தெரியாதவர்கள் கூட. ஆனால் மரம்
என்பதை வேறுவிதமாக சொன்னால், யாருக்கும் புரியாது. அதனால், உங்கள்
உவமானங்கள் சரியில்லை
ஏன் எப்படி என ஒரு கட்டத்திற்கு மேல் கேட்க முடியாது. இதனை
> ஒத்துக்கொண்டு மேலே பேசலாமே தவிர எண்ணுப் பெயர்களைப் பொருட்பெயர்கள் எனச்
> சொன்னால் அடிப்படையில் மாறுபடுகிறோம். ஒரு மொழி அமைப்பை ஏற்றுக்கொள்ள
> மறுக்கிறோம்.
நாம் மொழி அமைப்பு பற்றிய தியரியில் மாறுபடுகிறோம், ஆனால் மொழி அமைப்பை
ஏற்க்கிறோம். ஏனெனில் நீங்கள் ”எண்ணுப் பெயர்களைப் பொருட்பெயர்கள்” என
சொல்லும் போது, நீங்கள் என்ன சொல்வறீர்கள் என எனக்கு புரிகின்றது, ஆனால்
உங்களுடன் சம்மதம் இல்லை அவ்வளவுதான்.
நம் தனிக் கருத்தைப் பதிவு செய்கிறோம். (இவ்வாறு தனிக் கருத்தைப்
> பதிவு செய்வது தவறு என்று சொல்லவில்லை. ஒரு தனிக் கருத்து வெற்றிபெற்றுப்
> பொதுக் கருத்தாக மாறும் வரை தனிக்கருத்து என்று மட்டுமே கருதப்பெறும்)
”வெற்றி”க்கு அளவுகோள் என்ன? எதை பொதுக்கருத்து என சொல்லுவீர்கள்?
>
> உங்கள் கருத்துக்கு இசைவாகத் தமிழிலும் சிந்தித்திருக்கிறார்கள்.
> எ.டு- ‘வடை நன்றாக இருந்தது. நாலு சாப்பிட்டேன்.’ என்னும் தொடரில் நாலு என்பது
> நீங்கள் சொல்வதுபோலப் பொருட் பெயராகவே கருதப்படுகிறது. அதாவது நான்கு எனனும்
> எண்ணிக்கை இந்தத் தொடரில் பண்பைக் குறிக்காமல் பொருளைக் குறிக்கிறது. அதனால்
> இது பொருளுக்கு ஆகிவந்தமையால் ஆகுபெயர். தமிழின் மிகச் சிறந்த சிந்தனையில்
> ஆகுபெயர் குறிப்பிடத்தக்கது.
நான் நான்கு என சொல்லும் போது ஆகு பெயரை சொல்லவில்லை, ஒரு எண்ணை
குறிக்கிறேன். வேண்டுமானால் எண்ணைப் பற்றிய எண்ணத்தை விரிவாக
பார்க்கலாம்.
இத்தொடரில் அதனைப் பண்பாகத் தமிழில்
> பார்ப்பதில்லை.
அதனால் தமிழில் சொல்லைத் தனியாக வைத்துப் பொருள் சொல்வது
> பொருந்தமாக இருக்காது. மொழிச் சூழலில் எப்பொருள் குறிக்கிறது என்பதையும்
> பார்க்கவேண்டும். நான்கு என்பது தனிச் சொல் நிலையில் பண்புப் பெயர். இந்தக்
> குறிப்பிட்ட தொடரில் ஆகுபெயர். இங்கே அது குறிப்பிது பொருளை என்பதில் எந்தச்
> சிக்கலும் இல்லை.
ஆகு பெயரில் ஒரு சிக்கலும் இல்லை
>
> ஆகிய என்னும் சொல்லைப் பற்றியும் சிந்திக்கலாம். ஆகிய என்பது பண்பு உருபானால்
> அது இடைச் சொல். ஆகு என்னும் வினையடியாகப் பிறந்த சொல்லானால் பெயரெச்சம்.
> இவற்றில் எந்த ஆகிய பற்றி பேசுகிறோம் என்பதைத் தெளிவாக வரையறை செய்துகொண்டு
> பேசுவது தேவை.
> //1.இஸ்லாம்,கிறிஸ்துவம், யூதம் ஆகிய மதங்களின் தோற்றுவாய் ஆபிரகாம்
> 2.ஒருவருக்கு லக்னம், ராசி ஆகிய இரண்டும் ஒன்றாக அமைந்தால் என்ன பலன்?
> 3.மா, வாழை மற்றும் பப்பாளி ஆகிய பழ வகைகள் உஷ்ணப் பிரதேசங்களில்
> உற்பத்தி ஆகிறன.//
> என்னும் எடுத்துக்காட்டுக்கள் பெயரெச்சமாக வந்துள்ள ஆகிய என்பது வினைச்
> சொல்லைப் பற்றியது.
> முதலில் பேசியது பண்பு உருபு ஆகிய என்னும் இடைச்சொல்லைப் பற்றியது.
> தென்னை மரம் ஆங்கிலத்தில் coconut tree என அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு
> சொற்கள் தனித் தனியே குறிக்கப்படும் போது தரும் பொருளையே இணைந்து வரும் போது
> தருகின்றனவா? தனியாக வரும்போது coconut என்பதன் இலக்கணப் பொருள் என்ன? இணைந்து
> வரும் போது அதன் இலக்கணப் பொருள் என்ன?
>
> உங்கள் காதுக்கு நிறைவளிக்க வில்லை எனச் சொல்லியுள்ளீர்கள். உங்கள் தனிப்பட்ட
> எந்தக் கருத்தும் மற்றவர்க்கு ஏற்றதாகவும் இருக்கலாம், மாற்றமானதாகவும்
> இருக்கலாம். மொழி வழக்கு என்பது பொதுக் கருத்து. அத்ன் ஒவ்வாரு கூறும் பொதுக்
> கருத்தாக இருந்தால்தான் அனைவரும் பயன்படுத்த முடியும்.
நான் மொழி வழக்கு பற்றி பேச வில்லை, அதைப் பற்றிய புரிதலை பேசுகிறேன்.
வழக்கமாக தென்னைமரம் என்பது ஒரு பொருட்சொல். ஏன்தென்னைமரத்திற்க்கு
அப்படி பெயர் வந்தது என்பது வேறு விஷயம்.
நான் “காதுக்கு நிறைவளிக்க வில்லை” என எழுதியது `செம்மை ஆகிய தமிழ்` என
நீங்கள் கொடுத்த உதாரணம். செம்மை என்பதை Classical என எடுக்க வேண்டுமா
அல்லது Excellent என எடுக்க வேண்டுமா என புரியவில்லை. மேலும் அப்படி
எழுதுவதில் சில சிக்கல்கள் இருக்கும்போல் தோன்றுகிறது. ஆதனால்தான்
நிறைவளிக்க வில்லை என subjective ஆக சொன்னனே தவிர, அறுதியிட்டு
சொல்லவில்லை.
விஜயராகவன்
//உலகம் + தமிழ் என்னும் போது உலகின் கண் பரவியுள்ள தமிழ் எனப் பொருள்
கொள்கிறோம். //
உலகளாவிய மாநாடு என்று என்னைப் போல, பிறரும் நினைத்திருக்கக் கூடும்.
இவ்விழையின் துவக்கத்திலேயே கூட ஒரு கருத்து அது போல வெளிப்பட்டு
இருப்பதை நீங்கள் காணலாம். அது சரியா? தவறா??
பணிவுடன்,
பழமைபேசி.
> 2010/5/29 பழமைபேசி <pazamaip...@gmail.com>
> ...
>
> read more »- Hide quoted text -
ஆசங்கம் என்றாள் லெக்சிகான் சந்தேகம், ஆட்சேபம் என இரு அர்த்தங்களை
கொடுக்கின்றது.
1000 வருடங்களாக யாரும் இந்த வார்த்தையை உபயோகிப்பதில்லை. தமிழ் கூகிளில்
போட்டால் 10 பக்கம் வருகின்றன , எல்லாம் தங்கள் உபயம்.
ஏன் பல நூற்றாண்டுகளாக பயன்படாத வார்த்தையை பிரயோகித்தீர்கள் ,
எல்லோருக்கும் தெரியும் சந்தேகம், ஆட்சேபனை என்ற இரண்டு சொற்கள்
கிடைக்கும் போது??
விஜயராகவன்
On 27 May, 23:03, பழமைபேசி <pazamaip...@gmail.com> wrote:
> ஓர் ஆசங்கை! <http://maniyinpakkam.blogspot.com/2010/05/blog-post_27.html>
> மக்களே, நான் ஒரு தமிழ் மாணவன். அன்றாடம் தவறாது தமிழ் கற்று வருகிறேன்.
> அவ்வகையிலே, உங்கள் உதவியோடு மேலதிகமாக ஒன்றை இன்று கற்க விரும்புகிறேன்.
>
> நான் எழுப்பப் போகிற வினாவானது, அறிவிலித்தனமான மற்றும் பக்குவமற்ற வினாவாகவும்
> இருக்கக் கூடும். அப்படி இருப்பின் பொறுத்தருள்வதோடு, எம்மடமையை அகற்றித்
> தெளிவித்திடுவீராக!
>
> பண்புத்தொகை என்பது பண்புப் பெயரைச் சேர்த்து வரும் பெயர்ச் சொல். அப்படியா?
> அப்படியானால், பண்புப்பெயர் என்றால் என்ன?? பண்பைக் குறிப்பது பண்புப் பெயர்;
> செம்மை, வட்டம், பசுமை என்பன போன்ற பண்புகளைக் குறிப்பது.
>
> இப்படியான பண்புகளைத் தாங்கி வரும் பெயர்ச் சொல், பண்புத்தொகை. பெருங்கடல்,
> செந்தமிழ், பசும்போன் முதலானவை அதற்கான உதாரணங்கள். செம்மையான தமிழ், செந்தமிழ்
> என்று ஆகிறது.
>
> செம்மையான மொழி செம்மொழி. அந்த வகையிலே செம்மொழியான தமிழ், செம்மொழித் தமிழ்.
> இந்த செம்மொழித்தமிழுக்கு, உலகந் தழுவிய அளவிலே ஒரு மாநாடு. ஆக, அந்த நல்லதொரு
> நிகழ்வுக்கான பெயர்ச்சொல், *உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு* என்று வரும்.
> தருக்கம் சரியாக இருக்கிறதா? நிச்சயமாக, சரியாக இருப்பதைப் போலத் தோணக்கூடும்.
>
> அப்படியானால், ஏன் *உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு* என்று அழைக்கிறோம்? இங்கே,
> தமிழ் என்பது ஒரு பண்பைக் குறிக்கிறதா?? கன்னடச் செம்மொழி, தெலுங்குச் செம்மொழி
> என்பவை பண்பால் குறிப்பதாகுமா??
>
> *செம்மொழித் தமிழ்* என்பதில் பெருமையின் வீரியம் தூக்கலாக இருக்கிறதா? அல்லது,
> தமிழ்ச் செம்மொழி என்பதில் தமிழுக்கான பெருமையின் வீரியம் அதிகமா?? அன்பு
> கூர்ந்து, எனக்குள் தலைதூக்கி இருக்கும் இந்த ஆசங்கத்தை விரட்டி அடிக்க உதவி
> புரியுங்கள் தமிழரே!!
>
> *வேர்கள் தமிழில்!
> விழுதுகள் உலகெங்கும்!!
> *
விஜயராகவன்
திரு பழைமைபேசி
கிராம வழக்கில் இருக்கும் எத்தனையோ சொற்கள் நகரவாசிக்களுக்குத்
தெரிவதில்லை என்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
உதாரணம்: ஒறம்பு, மூகாற்றுதல்.....
புழக்கத்தில் கொண்டு வருவதும் எனது முயற்சியே!!
பணிவுடன்,
பழமைபேசி.
> > பழமைபேசி.- Hide quoted text -
எண்கள் பொருட் பெயர்கள் என்னும் உங்கள் கருத்தை விளக்குங்கள். எண்கள் பொருட் பெயர்கள் என்னும் கருத்தை நீங்கள் முன்வைத்தால், தமிழில் உள்ள வகைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றாகும். அதனால்தான் அதன் ஒரு பிரிவான பொருட்பெயர் என்னும் வகையில் எண்களை அடக்குகிறீர்கள். ஒரு இலக்கணக் கருத்தை ஏற்று அதன் கலைச் சொல்லை உங்கள் விளக்கத்திற்குப் பயன்படுத்தும்போதே இப்போது கூறப்படும் பண்புப் பெயர் என்னும் வகைக்குள் அடங்கும் என்பதை மறுப்பதாகக் கூறுவது எப்படிப் பொருத்தமாகும். விரிவாக விளக்குங்கள். ஆவலோடு அறியக் காத்திருக்கிறேன்.
உங்கள் கருத்துக்கு இசைவாகத் தமிழிலும் சிந்தித்திருக்கிறார்கள்.
> எ.டு- ‘வடை நன்றாக இருந்தது. நாலு சாப்பிட்டேன்.’ என்னும் தொடரில் நாலு என்பது
> நீங்கள் சொல்வதுபோலப் பொருட் பெயராகவே கருதப்படுகிறது. அதாவது நான்கு எனனும்
> எண்ணிக்கை இந்தத் தொடரில் பண்பைக் குறிக்காமல் பொருளைக் குறிக்கிறது. அதனால்
> இது பொருளுக்கு ஆகிவந்தமையால் ஆகுபெயர். தமிழின் மிகச் சிறந்த சிந்தனையில்
> ஆகுபெயர் குறிப்பிடத்தக்கது.
நான் நான்கு என சொல்லும் போது ஆகு பெயரை சொல்லவில்லை, ஒரு எண்ணை
குறிக்கிறேன். வேண்டுமானால் எண்ணைப் பற்றிய எண்ணத்தை விரிவாக
பார்க்கலாம்.
வட்ட மாநாடு, மாவட்ட மாநாடு, மண்டல மாநாடு, மாநில மாநாடு, மண்டல மாநாடு,
தென்னிந்தியக் மாநாடு, இந்திய மாநாடு, உலக மாநாடு, தெற்காசிய மாநாடு
போன்றன புழக்கத்தில் நீங்கள் காணலாம். அதிலே மறைந்து இருக்கும் பொருள்
என்ன? பூகோள ரீதியாக, அந்தந்தப் பகுதிகளுக்குள் இருப்பவர்களுக்கான மாநாடு
என்றுதானே பொருள்??
அந்த வகையிலே, உலகத்தில் இருக்கும் அனைவரும் கலந்து கொள்ளக் கூடிய மாநாடு
எனப் பொருள் கொள்வதா?? அல்லது தாங்கள் கூறியபடி உலகம் முழுமைக்கும் பரவிய
தமிழ்ச் செம்மொழிக்கான மாநாடு எனப் பொருள் கொள்வதா??
On May 29, 9:57 am, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> திரு பழைமைபேசி
> ///உலகளாவிய மாநாடு என்று என்னைப் போல, பிறரும் நினைத்திருக்கக் கூடும்.
> இவ்விழையின் துவக்கத்திலேயே கூட ஒரு கருத்து அது போல வெளிப்பட்டு
> இருப்பதை நீங்கள் காணலாம். அது சரியா? தவறா??///
>
> உலகளாவிய மாநாடு என்பதால் என்ன சொல்ல வருகிறோம். அளாவிய என்பதற்குப் பரவிய
> என்பதுதானே பொருள். மாநாடு உலகம் எல்லாம் பரவியது என்பது சரியாக இருக்குமா?
> மொழி உலகம் எல்லாம் பரவியது என்பது சரியாக இருக்குமா?
> மொழி பரவியுள்ளதா? மாநாடு பரவியுள்ளதா? மொழி பரவல் என்பது தமிழுக்கும் பெருமை.
> மேலும் இந்திய மொழிகளில் அயல்நாடுகளிலும் ஆட்சி மொழியாக உள்ள மொழி தமிழதான்
> என்னும் பெருமையை உட்கொண்டே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எனப் பெயரிட்டு
> இருப்பார்கள் என நினைக்கிறேன்.
> அன்புடன்
> ஆராதி
>
> 2010/5/29 பழமைபேசி <pazamaip...@gmail.com>
இங்கே நான் சற்று மாறுபடுகிறேன்.
வட்ட மாநாடு, மாவட்ட மாநாடு, மண்டல மாநாடு, மாநில மாநாடு, மண்டல மாநாடு,
தென்னிந்தியக் மாநாடு, இந்திய மாநாடு, உலக மாநாடு, தெற்காசிய மாநாடு
போன்றன புழக்கத்தில் நீங்கள் காணலாம். அதிலே மறைந்து இருக்கும் பொருள்
என்ன? பூகோள ரீதியாக, அந்தந்தப் பகுதிகளுக்குள் இருப்பவர்களுக்கான மாநாடு
என்றுதானே பொருள்??
மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் == மதுரையைச் சார்ந்த காமராசர் நினைவான
பல்கலைக் கழகம்
சென்னைப் பல்கலைக் கழகம் == சென்னையைச் சார்ந்த பலகலைக் கழகம்
நான் ஒரு மாணவன். எனவே புரிதலில் மாறுபாடு இருந்தால் தெரியப் படுத்தவும்.
நன்றிங்க,
பழமைபேசி.
On May 29, 10:33 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/5/29 பழமைபேசி <pazamaip...@gmail.com>
>
தேவ்
திருவாளர் ஹரிக்ரிஷ்ணன்
‘நாலு சாப்பிட்டேன்’ என்பதில் நாலு நாலு வடைக்கு நிற்கின்றது, அதனால்
அது பொருட்சொல் , அதை மறுக்கவில்லை. நான்கு என்பது வெறும் எண்ணை காட்டும்
போது கூட பொருட்சொல்தான், அதைதான் நான் சொன்னேன். முன்னர் ஆராதி நான்கு
என்பது அளவிற்க்கு பண்பு என்றார். அதைத்தான் ஒத்துக் கொள்ளவில்லை
>
> விஜயராகவன், I walked my weary way என்று ஆங்கிலத்தில் சொல்வதில்லையா? We know
> that the way is not weary; but it is the person who is passing through the
> way is weary. இதை ஆங்கிலத்தில் transferred epithet என்று சொல்கிறோம்.
> அப்படித்தான் தமிழிலும் இடவாகு பெயர், பொருளாகு பெயர், தானியாகு பெயர் என்று
> வகைவகையான ட்ரான்ஸ்ஃபர்ட் எபிதட்கள் இருக்கின்றன. I walked my weary way
> என்பதில் உள்ள weary என்பதற்கு என்ன இலக்கணக் குறிப்பு சொல்வீர்கள்? A talking
> parrot என்றால் பேசும் கிளி என்று பொருள். Walking-stick என்றால் நடக்கும்
> குச்சி என்றா பொருள்? கிளி பேசுகிறது. குச்சியா நடக்கிறது? talking parrotல்
> உள்ள talking என்பது present participle என்றும், walking-stick என்பதில்
> வாக்கிங் என்பதைத் தனியாகப் பிரிக்காமல், இரண்டு சொற்களையும் ஒன்றாகக் கூட்டி
> வாசிக்கவேண்டும் என்பதனால் ஒரு ஹைஃபன் போட்டு, அதை compound noun என்று
> சொன்னால் ஒப்புக்கொள்கிறோம். நாலு என்பது ஆகுபெயராக ஆக முடியாது என்று
> தீர்மானமாகச் சொல்லிவிடுகிறோம்.
>
> திருடள் என்பது இலக்கண விதிகளின்படி சரியான பயன்பாடுதான்.
இல்லை. திருடள் என்பதை யாரும் புரிந்து கொள்ளமாட்டர்கள் - அதனால் அது
இலக்கணம் இல்லை. இலக்கணம் மக்கள் புரிந்து கொள்ளாததைப் பற்றி
பேசுவதில்லை; ஒரு வாக்கியத்தையோ, சொல்லையோ புரிந்து கொள்ளும் போது,
எப்படி புரிகின்றனர் என்றுதான் விளக்குகின்றது
ஆனாலும், இலக்கணம்
> வகுத்தவர்கள் முதலிலேயே ஒன்று சொல்லிவிட்டார்கள். நாடக வழக்கினும் உலகியல்
> வழக்கினும். ஒன்று அந்த வடிவம் இலக்கிய ஆட்சி பெற்றதாக இருக்கவேண்டும்;
> அதைவிடவும் முக்கியமாக, தெருவில் போகிறவன் அந்த வடிவத்தை ஒத்துக்கொள்ள
> வேண்டும். It should be acceptable legal tender by the commoner. If it does
> not pass that acid test, that particular form, however correct it may be by
> established rules of grammar, that form would not gain currency. அன் விகுதி
> ஆண்பால், அள் விகுதி பெண்பால் என்ற விதிப்படி, திருடள் மட்டுமல்லாமல், ஒருவள்
> என்பதும்கூட சரியான வடிவங்கள்தாம். ஆனால் திருடனுக்குத் திருடியும் ஒருவனுக்கு
> ஒருத்தியும்தான் தெருவில் போகிறவனுடைய சாய்ஸ். அதனால் இலக்கணமும் அதை
> ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறது.
அந்த இலக்கணம் என் சாய்சும்தான். அதைத்தான் நானும் சொல்கிறேன்.
> ஆராதி ஆழப்படித்து, நன்கு உணர்ந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.
> விருப்பமிருந்தால் கேட்டுக்கொள்ளலாம். இல்லாவிட்டால், என் வீட்டு நாய்
> புதுசுகளைக் கண்டால் குரைப்பார்கள் என்று விருப்பம்போல் வாக்கியம் உருவாக்கிக்
> கொள்ளலாம்.
கேட்டுக்கொள்வது - passive listening and reading - மட்டுமில்லாமல்,
விவாதத்தில் ஈடுபடுவது தவறில்லை.
விஜயராகவன்
*ஆசங்கை ācaṅkai
, n. < ā-šāṅkā. 1. Doubt, suspicion; சந்தேகம். மழையென் றாசங்கை
கொண்டகொடை (கம்பரா. நாகபாச. 263). 2. Ob- jection; ஆட்சேபம்.
சமஸ்கிருதத்தில் இருந்து வராப்போல் இருக்கு.
தென்மாவட்டங்களில் இது பேச்சு வார்த்தை என்றால் சரிதான்.
க்ரியாவின் ரேடாரிலிருந்து தப்பி விட்டது.
விஜயராகவன்
> > - Show quoted text -- Hide quoted text -
ஆசங்கம் க்ரியாவில் இல்லை, கூகிளில் (பழமைபேசியை தவிர) இல்லை.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
आशंका – Doubt – ஆசங்கா
’ஆசங்கயா முக்தம்’ - பர்த்ருஹரி
‘இதி ஆசங்காயாம் ஆஹ’ – கதாதரர்
அவநம்பிக்கை என்னும் பொருளிலும் சில இடங்களில் கையாளப்படுகிறது.
’சங்கை’ என்னும் சொல் இதிலிருந்து தோன்றியிருக்கலாம்
தேவ்
On May 29, 11:31 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> அன்பு நண்பர் பழமை பேசி அவர்களுக்கு,
>
> சித்தர் மார்க்கத்தை சங்கை மார்க்கம் என்று கூறுவார்கள்.
> சங்கை என்பது இங்கே மறைபொருள் என்ற பொருளில்
> பயன்படுத்தப் படுகிறது.
> ஆசங்கை என்பது வெளிப்படையானது என்றும் சுத்தமானது என்றும் பொருள் தரலாம்.
>
> அன்புடன்
> நக்கினம் சிவம்
>
> 2010/5/29 விஜயராகவன் <viji...@gmail.com>
> http://nakinam.blogspot.com- Hide quoted text -
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
May 29, 10:22 am, விஜயராகவன்
>>> சமஸ்கிருதத்தில் இருந்து வராப்போல் இருக்கு. <<<आशंका – Doubt – ஆசங்கா
’ஆசங்கயா முக்தம்’ - பர்த்ருஹரி
‘இதி ஆசங்காயாம் ஆஹ’ – கதாதரர்
அவநம்பிக்கை என்னும் பொருளிலும் சில இடங்களில் கையாளப்படுகிறது.
’சங்கை’ என்னும் சொல் இதிலிருந்து தோன்றியிருக்கலாம்
ஆசங்கா – ஐயம், ஆசங்கை
*ஆசங்கை*
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று
*ஆசங்கை* கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய்
அணுகும்,
தேசம் கலந்த மறைவாணர், செஞ் சொல்அறிவாளர், என்று இம் முதலோர்
பாசம் கலந்த பசிபோல், அகன்ற பதகன் துரந்த உரகம்.
(கம்ப ராமாயணம் ; யுத்த காண்டம்)
------------------------------------------------------------------------------------------------------------------------------------
சங்கை
அகராதியில் இருந்து
s. doubt, uncertainty, ஐயம்; 2. fear, apprehension, அச்சம்; 3.
honour, reverence, கனம்; 4. custom, usage, வழக்கம்; 5. number; 6.
measure, estimate; 7. shank, கணைக்கால்; 8. evil spirit, பூத பிசாசு. ,
s. doubt, uncertainty, ஐயம்; 2. fear, apprehension, அச்சம்; 3. honour,
reverence, கனம்; 4. custom, usage, வழக்கம்; 5. number; 6. measure,
estimate; 7. shank, கணைக்கால்; 8. evil spirit, பூத பிசாசு.
உச்சரிப்பு: cangkai cangkai
ஆங்கில விளக்கம்:
சங்காதோஷம், demoniac possession, சங்கைக்கோளாறு.
சங்கைக் குரிய, venerable; reverend.
சங்கைக் கேடு, --யீனம், dishonour.
சங்கை பண்ண, சங்கிக்க, to honour.
சங்கை பொருந்திய, -போர்ந்த, honourable, respectable, venerable.
சங்கைமான், சங்கைவான், a respectable person.
காலசங்கை, the usage or practice of the times.
காற்றுச் சங்கை, possession by a demon.
மாறாத சங்கை, unviolable custom or practice.
சங்காதோஷம், demoniac possession, சங்கைக்கோளாறு.
சங்கைக் குரிய, venerable; reverend.
சங்கைக் கேடு, --யீனம், dishonour.
சங்கை பண்ண, சங்கிக்க, to honour.
சங்கை பொருந்திய, -போர்ந்த, honourable, respectable, venerable.
சங்கைமான், சங்கைவான், a respectable person.
காலசங்கை, the usage or practice of the times.
காற்றுச் சங்கை, possession by a demon.
மாறாத சங்கை, unviolable custom or practice.
http://wiki.senthamil.org/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/index.jsp
தேவ்
On May 29, 12:21 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
பணிவுடன்,
பழமைபேசி.
On May 29, 9:03 pm, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> திரு பழமைபேசி
> 2010/5/29 பழமைபேசி <pazamaip...@gmail.com>
To
ananda rasa thiruma <aaraa...@gmail.com>
and Palamaipesi
தோழர் ஆராதி வாழ்க (ரொம்பச் சொன்னா கோவிச்சுப்பார் :-))
க.>
2010/5/30 ananda rasa thiruma <aara...@gmail.com>:
அப்ப்ப்பா! எவ்வளவு அழகாக நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றை மிக, மிக
இதமாகச் சொல்கிறார்.
தோழர் ஆராதி வாழ்க (ரொம்பச் சொன்னா கோவிச்சுப்பார் :-))
க.>