2008/7/23 devoo <rde...@gmail.com>:
> Crude oil - கரட்டு நெய்
அது என்ன கரட்டு நெய்? நெய் என்பது பால்/தயிர் திரிபு. உண்மையைச்
சொல்லப்போனால் crude oil லிருந்து வரும் ஏனைய எண்ணெய்களை (petrol,
kerosine, benzene) வேண்டுமானால் நெய் என்று சொல்லலாம். மூல எண்ணெய்யை
எப்படி நெய் என்று சொல்வது? அது நெய் போல் கெட்டியாக இருந்தாலும்?
கண்ணன்
மனிதமும்,உலகமும் காப்போம்
கண்ணன்
2008/7/25 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
crude oil என்பதைக் கச்சா எண்ணெய் என்றுதான் தமிழகப்பத்திரிக்கைகள்
எழுதுகின்றன. 'கச்சா' இந்தி என்று நினைக்கிறேன்.
எப்படியும் வெண்ணெயோ நெய்யோ அல்ல :-) அது கருப்பு மண்டி!!
கண்ணன்
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்
2008/7/25 Kannan Natarajan <thar...@gmail.com>:> "கச்சா" - தமிழா! கச்சையிலிருந்து வந்ததா?crude oil என்பதைக் கச்சா எண்ணெய் என்றுதான் தமிழகப்பத்திரிக்கைகள்
>
எழுதுகின்றன. 'கச்சா' இந்தி என்று நினைக்கிறேன்.
எப்படியும் வெண்ணெயோ நெய்யோ அல்ல :-) அது கருப்பு மண்டி!!
கண்ணன்
> இத்தொடர் "எண்ணெய்க்(என்னைக்) கவர்ந்த இணையாக வலம் வருகிறது"!
எனது ஒரு எளிய கேள்வி. தமிழ் பற்று இயல்பாக இருக்கவேண்டும். மேடை முழுக்கமாக, பிரசாரமாக, வேறு ஏதோ காரணங்களுக்காக் முரட்டுத்தனமாக முன்வைப்பதாக இருக்கக் கூடாது. இதெல்லாம் போக, மொழி கேட்கவும், உணரவும் அழகாகவும் இனிமையயகவும் இருக்க வேண்டும். பொருளற்ற வீண் அலைசசலாகக் கூடடது இந்த தூய தமிழ்த் தேட்டம். கச்சா எண்ணெய என்று இருந்தால் என்ன கெட்டு விட்டது? அதை ஏன் கரட்டு நெய் என்று அவலப்படுத்த வேண்டும்.
கச்சை என்றால் தமிழ்குறுவாளை கச்சையில் சொருகிக் கொள்வார்கள்
கோமாளித்தனமே சிலர் பிறவிக்குண்மாக, தெரிந்த ஒன்றேயாக இருக்கும் போது யாரரென்ன செய்யமுடியும்? வெ.சா.
2008/7/25 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>கோமாளித்தனமே சிலர் பிறவிக்குண்மாக, தெரிந்த ஒன்றேயாக இருக்கும் போது யாரரென்ன செய்யமுடியும்? வெ.சா.சாரி உதாரணம் தப்போ?அண்மையில் மருத்துவ மனையில் பிள்ளகள் பெற்ற தாயர்கள் இருவருக்குள் அந்த ஆண்குழந்தை தன்னுடைய்தே என்று போராட்டம்.பெற்ற குழந்தை வேண்டும் என சண்டை இல்லை.ஆண் குழ்ந்தை வேண்டும் என்று சண்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
தூங்கினவன்கன்ரு கடாக் கன்ரு
இரவா
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
சரி, இப்போது விளங்குகிறது. கரட்டு என்றால் பாறை, நெய் என்றால் எரிபொருள்.
கரட்டுநெய் என்று விட்டுப் பார்க்கலாம். 'வெல்லும் சொல் நிற்கும்'.
மேலும் தொடருங்கள்...
கண்ணன்
உண்மைதான். அறிவியலுக்குப் புறம்பான, சமகால நளினமற்ற ஒரு
வக்கிரமனப்பான்மை உலவுகிறது. இனவாதத்தை எதிர்த்து உலகே குரல் கொடுத்துக்
கொண்டிருக்கும் போது நாம் பத்தாம்பசலிகள் போல் இங்கு உரையாடினால் அதில்
'நளினம்' இல்லைதான்.
மொழி என்பது ஓர் கூட்டுமுயற்சி. வளரும் கரு. எது நிற்கும், எது
போகுமென்று யாரும் சொல்லமுடியாது. முடிந்தவரை நாம் சமகாலத் தமிழில்
எழுதிப்பழக வேண்டும். சுப்பிரமணிய சிவா அடிக்கடி, 'தமிழ் பாஷை' என்று
எழுதுகிறார். அது அக்கால வழக்கு. இப்போது யாரும் பாஷை (பாசை) என்று
எழுதுவதில்லை. அப்படி எழுதினார் என்பதற்காக சிவாவைச் சாட முடியாது. அவர்
காலத்தமிழில் அவர் எழுதினார். அவர் தமிழ் உணர்வு என்றும்
போற்றுதலுக்குரியது.
> அது சரி, "கல்ப்படமில்லாத உணவு என்று எதைச்சொல்கிறீர்கள். காரட்டும், உருளைக்
> கிழங்கும் வெங்காயமும் தக்காளியும் மிளகாயும் கலந்து விட்டால் அது கல்ப்பட
> உணவாகிவிடுமா? - வெ.சா.
ஆங்கில மொழியின் ஆளுமை கண்டு எல்லா மொழிகளும் அல்லாடுகின்றன. ஆனால்,
ஆங்கிலமோ, ஆங்கிலமாக இருக்கவில்லை. கர்மா, குரு, பண்டிதர், கறி, என்று
ஆயிரக்கணக்கான திசைச் சொற்கள் அங்கு. எல்லோருமே மொழியின் திமிர்தலில்
மிரண்டு போய்தான் உள்ளனர். மொழியில் மனிதன் உள்ளானா? அல்லது மொழி மனித
வரம்பில் உள்ளதா? :-)
கண்ணன்
> மொழி மனித வரம்பில் உள்ளது. அதை வளப்படுத்துவதும்,செம்மையடைய வழித்
> தோற்றுவிப்பது நம் அனைவரின் பொறுப்பு.
>
மொழிகள் உயிருள்ளவை. உறவாடும் தன்மை கொண்டவை. எவ்வளவுதான் ஜாதி பார்த்து,
ஜாதகம் பார்த்துக் கல்யாணம் செய்தாலும் 'கலப்புத் திருமணங்களை' தவிற்கவே
முடிவதில்லை. திமிர்தல் இயற்கை விதி. எல்லாம் 'நம்' கைக்குள் உள்ளது
என்று நினைப்பது ஒரு வகையான பேதமை :-) ஆயினும், வாழ்தல் நியதி என்பது ஒரு
நம்பிக்கையில் ஓடுகிறது. சங்க காலத்தில் பேசிய தமிழ் வழக்கில் எஞ்சி,
மிஞ்சியவை என்று ஒரு ஆயிரம் சொற்களைச் சொல்லலாம். தமிழில் உள்ளது ஒரு
லட்சம் வார்த்தை என்கிறார் '50 கிலோ தாஜ்மகால்' என்று எழுதிய வைரமுத்து.
வெறும் நூறு சொற்களை வைத்தே தனது நாவல்களைப் புனைந்து 'சாகித்ய அகாதமி'
பரிசு பெற்றுவிட்டார் ஓர் எழுத்தாளர் (சா.கந்தசாமி, சுபமங்களா
பேட்டியில்!).
ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றவாறு மொழிகள் வர்ண ஜாலம் செய்கின்றன. அதைக்
கண்டு சிரிக்கும் குழந்தை போல் மானுடம்...
கண்ணன்
அன்பfரே, இம்மாதிரியான உரையாடலில் நான் எவ்வளவு சாடப்பட்டாலும் எனக்கு மறுப்பில்லை. ஆனால் இங்கு சிலரிடம் ஃபாஸிஸ்ட் தனமான முரட்டுத்தனமும் கோமாளித்தனமும் ஒரு மாற்றமும் இல்லாது தவறாது தொடரப்பட்டு வருகிறது. அதில் க்ருத்துப் ப்ரிமாற்றம் இல்லை. வெறுப்பும் பகைமையுமே புகைவதாகத் தெரிகிறது.
ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றவாறு மொழிகள் வர்ண ஜாலம் செய்கின்றன. அதைக்
கண்டு சிரிக்கும் குழந்தை போல் மானுடம்...
> கண்ணன்.
>
> இந்த காலத்துக்கு வழக்கு தமிழ்மொழியில் நான் எழுத தொடங்கினால் என்னை குழுவில்
> இருந்து வெளியேற்றும் அளவுக்கு உங்களுக்கும் வெறுப்பு ஏற்படும்
>
இது தமிழின் சிக்கல் :-)
இப்போது சமகாலத் தமிழில்தான் நாம் எழுதிக்கொண்டு இருக்கிறோம். தமிழின்
பேச்சு வடிவம் வேறு. எழுத்து வடிவம் வேறு.
எழுதும் போது மொழி என்று எழுதினாலும், பேசும் போது, 'என்ன பாஷை
தெரியும்?' என்போம். என்ன மொழியில் கதைப்பாய்? என்று கேட்பதில்லை (இது
ஈழத்து வழக்கு). கிராமப்புரத்தில் சாம்பிடும் போது, 'தொட்டுக்க வெஞ்சனம்
வைக்கட்டா?' என்பார்கள். எழுதும் போது, 'சாப்பாட்டில் காய் கறிகள்
தேவையென்றால் சொல்லுங்கள்!' என்போம். இந்த வெஞ்சனம், பாஷை இவைகளை வடமொழி
என்றே யாரும் கருதுவதில்லை (இது என்ன கிருத்திரமமான பேச்சு :-) என்று
எண்ணுகிறீர்களா?)
பேசுவது போல் தமிழில் எழுதவே முடியாது. யாருக்கும் புரியாது!
தேவு, மூன்று சொற்கள் போட்டதற்கே இந்த இழை என்றால்...:-)?
கண்ணன்
2008/7/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
இது தமிழின் சிக்கல் :-)
> கண்ணன்.
>
> இந்த காலத்துக்கு வழக்கு தமிழ்மொழியில் நான் எழுத தொடங்கினால் என்னை குழுவில்
> இருந்து வெளியேற்றும் அளவுக்கு உங்களுக்கும் வெறுப்பு ஏற்படும்
>
இப்போது சமகாலத் தமிழில்தான் நாம் எழுதிக்கொண்டு இருக்கிறோம். தமிழின்
பேச்சு வடிவம் வேறு. எழுத்து வடிவம் வேறு.
எழுதும் போது மொழி என்று எழுதினாலும், பேசும் போது, 'என்ன பாஷை
தெரியும்?' என்போம்.
> க்ரியாவில் தமிழ் அல்லாத பேச்சு மொழி சொற்களை எல்லாம் சேர்த்து அவை எழுத்து
> மொழி எனற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடாது
அட விடமாட்டீர்கள் போலுள்ளதே. ஆங்கிலம் என்ற மொழியை எடுத்தால் எத்தனை
அகரமுதலிகள். ஒருமுறை தமிழ் படித்த ஒரு பிரெஞ்சுக்காரர் வீட்டில்
'இந்தியாவிலிருந்து கடன் வாங்கிய' சொற்கள் என்பதற்கே ஒரு அகராதி
வைத்திருக்கிறார்கள். பின் வட்டார வழக்கு அகராதி, கெட்ட வார்த்தைக்கென
அகராதி, பல சொல் ஒரு பொருள் களஞ்சியம் இன்னும் எத்தனையோ! தமிழ் செந்தமிழ்
என்ற போதிலும் அதன் மொழி அணுகல் என்பது மிகவும் பழமைக் கண்ணோட்டதில்
கட்டுபட்டியாக (conservative) இருக்கிறது. சத்தியமாகச் சொல்லுங்கள்
பார்ப்போம், நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் அகராதி பார்க்கும் வழக்கம்
உள்ளது?
சுஜாதா உயிருடன் இருக்கும் போது சென்னைப் பல்கலைக் கழகம், 'நாலாயிர
திவ்யப் பிரபந்த அகராதி' என்று ஒன்று போட்டதாம். வாங்க வேண்டுமென்ற
ஆசைதான். பதிப்பு இன்னும் உள்ளதா? என்று தெரியவில்லை. தமிழின் ஆழத்திற்கு
இன்னும் ஆயிரம் அகராதிகள் வேண்டும். விடுங்கள்!!
கண்ணன்