இவர் 1859இல் "தமிழ் புளூராக்" என்ற பெயரில் ஆங்கிலத்தில் தமிழ்ப் புலவர்களைப் பற்றியும் அவர்களின் வரலாறு குறித்தும் ஒரு நூல் எழுதினார்.
புராண மயமாகச் சொல்லப்பட்டு வந்த தமிழ்ப் புலவர்களின் கதைகளை ஒரு வரலாற்று நூலாக்கும் முதல் முயற்சி இதுதான். கி.பி. 45இல் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த புளூராக் என்ற அறிஞர் கிரேக்க நாட்டுப் புலவர்களைப் பற்றி எழுதிய வரலாற்று நூல்தான் உலகில் தோன்றிய முதல் இலக்கிய வரலாறாகக் கருதப்படுகிறது.ஆகா! இச்சேதி முன்பே தெரியாமல் போய்விட்டதே!
இது குறித்து முன்பு தமிழ் இணையம் (தமிழ்.நெட்) குழுவில் நிறைய மடல்கள்
வந்தன.
இ.பா. இதை மறுக்கிறார். திராவிமாச்சாரியர் என்று திருமழிசை
அழைக்கப்படுவதாலும், பிற காரணங்களாலும் அவர் சிவவாக்கியர் அல்ல என்று
நிருவுகிறார். இந்த முஸ்லிம் reference எப்பாடல் என்று தெரிந்தால் நலம்.
சித்தர் பாடல்களில் நிறைய இடைச்செருகல் உண்டு. அந்தக் காலத்தில் எழுதிய
எல்லோருமே சித்தர் என்று போட்டுக் கொண்டனர். எத்தனை அகத்தியர்?
> 1920இல் உ.வே.சா. பரிபாடல் நூலைப் பதிப்பித்தபோது அதன் உரையாசிரியர் யாரென்று
> அறியாமல் இருந்தார். இரா.இராகவையங்கார்தான், பரிபாடலின் உரையாசிரியர்
> பரிமேலழகர் என்பதை நிறுவுகிறார். அதனை உ.வே.சா.வும் ஏற்றுக்கொள்கிறார். இத்தகைய
> வரலாற்றையெல்லாம் நோக்கும்போது காசிச் செட்டிக்கு மேற்கூறிய நூல்களின்
> ஆசிரியர்கள் பெயர் தெரியாமலிருந்தது வியப்பானதல்ல.
>
ஓகோ! logical. பரிமேலழகர் என்ற பெயரைப் பார்த்தாலே இவர் வைணவர் என்று
தெரிகிறது. இவர் பரிபாடலுக்கு உரை செய்திருக்க வாய்ப்புள்ளது.
க.>