மாநில அரசுகளும் மத்திய அரசும் போட்டி போட்டுக்கொண்டு பரிசுகள்
அறிவிக்கின்றனர்.... வெறும் கண்துடைப்பு ..... பிந்திராவின் தந்தை ஒரு
கோடீஸ்வரர்...அதனாலே தான் அவரால் தனது மகனின் ஆர்வத்தையும் ஆசையையும் பல
கோடி ருபாய் கொண்டு உலகத்தர பயிற்சி சாதனங்கள் வாங்கி தர
முடிந்தது...அப்போது எங்கே போனது இந்த அரசு...
அவரைபோல ஆயிரம் பேர் - ஏன் அவரை விட திறமை சாலிகள் பலரும் ஏழை
குடும்பத்தில் பிறந்து ஒலிம்பிக் கனவை கண்டு ரோட்டரத்தில் கிடக்க
கூடும்.....
இன்றைக்கு இருக்கும் விளையாட்டு துறையில் எவ்வளவு பேர் நிஜமாகவே களத்தில்
இறங்கி உள்ளனர்....பட்டினி கிடந்தவனுக்கு தான் உணவின் ருசி தெரியும்....
பந்தயத்தில் தோற்றவனுக்கு தான் வெற்றியின் வெறி வரும்... கேரளத்து தட கல
பெண்கள் - எங்கே இப்போது காணோம்.....பாலு தூக்கும் பெண்கள் எங்கே....
ஹாக்கி என்ன ஆயிற்று....
இலக்கை அடைந்த அவருக்கு பரிசு கொடுங்கள்.....இல்லை நோக்கி செல்லும் இளம்
செல்வங்களுக்கு பணம் கொடுத்து அடுத்த போட்டிக்கு தயார்
செய்யுங்கள்....இல்லையேல் பல முறை நடந்தார்போல வெறும் மார்தட்டி கொண்டு
மீண்டும் ௨0/௨0 பார்த்துவிட்டு .....அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பரிசு
விழுமா என்று லாட்டரி சீட்டு வங்கி வையுங்கள்...
ஏழ்மையைக் காரணம் காட்டி இந்தியா இனிமேலும் பின் தங்க முடியாது.
இந்தியாவில் இல்லாத பணக்காரர்களா? இந்தியாவில் செலவழிக்கும் போதுதான்
தெரிகிறது, நகர விலைவாசி என்பது அமெரிக்காவை ஒத்து இருப்பது. விலையில்
மட்டும் அமெரிக்கா போல் இருந்தால் போதாது. விளையாட்டிலும் அமெரிக்கா போல்
ஆகவேண்டும்! எத்தனை மல்டி மில்லியன் கம்பெனிகள் இந்தியாவிலுண்டு. அவை ஏன்
ஸ்பான்சர் செய்வதில்லை. ஏன் பிந்திரா அப்பா போல் மற்ற பணக்கார அப்பாக்கள்
யோசிப்பதில்லை?
100 கோடி மக்கள் உள்ள ஒரு நாடு 20 பேரை ஒலிம்பிக்கிற்கு அனுப்புவது
கேவலமாக உள்ளது! சிங்கப்பூர் டீம் இதைவிடப் பெரியது!
இந்தியா தன் காலனித்துவ தாழ்வு மனப்பான்மையிலிருந்து மீள வேண்டும்.
சீனா இந்தியாவை விட ஏழை நாடுதான். ஆனால் இன்று ஒலிம்பிக் நடத்துகிறது,
இதுவரை தங்கப்பதக்கம் பெற்ற நாடுகளில் முதன்மையாக நிற்கிறது!
இந்தியர்களே விழித்தெழுங்கள்!!
http://emadal.blogspot.com/2008/08/blog-post_2850.html
கண்ணன்
2008/8/12 vj kumar <vj.ep...@gmail.com>:
--
"Be the change you wish to see in the world." -Gandhi
விளையாட்டிற்கும் தேசபக்திக்கும் சம்மந்தமில்லை தேனீயாரே! வேண்டுமானால்
ரஷ்யா, சீனா, குயுபா போன்ற கம்யூனிஸ்டு நாடுகளுக்கு அது பொருந்தலாம்
(இதில் எனக்கே மாற்றுக்கருத்துண்டு!) ஆனால் சந்தைப் பொருளாதார
முதலாளித்துவ நாடுகளில் விளையாட்டை இயக்குவதும் சந்தையே!
விளையாட்டிற்கென்று இந்தியாவில் சந்தை (மார்கெட்) இல்லை. கிரிக்கெடிற்கு
சந்தை உள்ளது. வேறு விளையாட்டிற்கு இல்லை.
இந்தியாவில் இன்னும் சரியாக மார்கெடிங் மேனேஜ்மெண்டு சொல்லித்தருவதில்லை
போலுள்ளது. அமெரிக்காவில் பாதிக் கருப்பர்களின் கனவு விளையாட்டு வீரராக
வேண்டுமென்பதே. ஏனெனில் அங்கு "காசு" உள்ளது. விரைவில் புகழும், பணமும்
சம்பாதிக்கமுடியும்.
இந்தியாவில் மூளையுண்டு. அதை வைத்து பிற நாட்டு வளர்ச்சிக்கு இந்திய மனித
வளம் பயன்பட்டு வருகிறது. அவ்வளவுதான். இந்தியா இன்னும் தன் முழுத்திறமை
அறிந்து செயல்படவில்லை. திறமைக்கு முக்கியம் கொடுத்து, திறமையினால்
உலகப்புகழ் பெறலாம் எனும் கனவு கூட அவர்களிடம் இல்லை! வெறும்
மின்(சம்)சாரக்கனவுதான் இருக்கிறது! இந்தியா முதலில் சினிமா/மீடியா எனும்
பிசாசிடமிருந்து விடுபட வேண்டும்.
கண்ணன்
என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்...
நாட்டின் உடையை உடம்பில் அணிந்து அதன் கோடியை கையில் சுமந்து அதன்
பெருமையை தலையில் சுமந்து மக்களின் எதிர்பார்ப்பை மனதில் சுமந்து .....
ஒரு வாழ்வின் தவத்தை பூர்த்தி செய்து போட்டியில் வென்ற அந்த வீரன் -
பின்னர் நெஞ்சை நிமிர்த்தி தேசிய கீதம் முழங்க மணிக்கொடி முதல் இடத்தில்
பறக்கும் பொது அதை வணங்கும் உணர்வு - இந்த புவியில் எனது நாடு முதன்மை
இடம் பெற்றது என்று அவன் கொள்ளும் பெருமிதம்... அதுவே தேசபக்தி.. கோடி
பணம் அதற்க்கு ஈடு செய்யாது... பணம் குறிக்கோளாக இருந்தால் ... வெறும்
விளையாட்டு கோட்டாவில் மத்திய /மாநில வேலை கிட்டும் வரையிலும் தான் அது
ஊக்குவிக்கும்..
தேச பக்தி இல்லாத எதுவுமே, அது விளையாட்டாக இருந்தாலும் சரிவெற்றி பெறாது
2008/8/12 vj kumar <vj.ep...@gmail.com>
--
மனிதமும்,உலகமும் காப்போம்
அன்புள்ள
தமிழ்த்தேனீ
--
மனிதமும்,உலகமும் காப்போம்
அன்புள்ள
தமிழ்த்தேனீ
சிந்திக்க வேண்டிய கருத்து... அடிமையாய் இருந்த பொது அமுத சுரபி என
நாடு தோறும் பல சிந்தனையாளர்களும் அறிஞர்களும் வெள்ளம் போல
பெற்றெடுத்த நாடு - சுதந்திரம் வந்த பிறகு முடங்கி விட்டது ஏன்.
இந்த வெறும் வயிறு தானே அன்று சிந்தனை தீயை தேசம் எங்கும்
விளைத்து.... இன்றும் பட்டினி பஞ்சம் விட்டபாடு இல்லையே ... இருப்பினும்
பகுத்தறிவு ஆன்மிகம் கலை என்று செழித்த தேசம் கனவு கூட கானா வறண்ட
நிலமானது ஏன்.
சங்கிலிகள் முடக்கினால் தான் சிந்தனை பிறக்குமோ
இதை தானே நாங்கள் சொல்கிறோம்....பிந்திராவின் தந்தை அவருக்கு என
உலகத்தரம் வாய்ந்த பயிற்சி கூடம் அமைத்து கொடுத்தார்....விளைவு உங்கள்
எதிரில்....இப்படி அரசு அல்லது தனியார் துறை நிறுவனங்கள் செய்து
கொடுத்தால் நிலைமை மாறும். இருவரிடமும் இப்போது பணம் நிறைய்ய உண்டு -
அரசு செய்தால் நடுவில் உள்ள முதலைகள் உண்டபின் ஒன்றும் மிஞ்சாது
...அதனால் தனியார் துறையே ஒரே வழி
ஒவ்வொரு பாகிஸ்தானியருக்கும் உள்ளே இருக்கும் தேச பக்திஅனேகமாக இந்தியர்களிடம் மிகவும் குறைவு என்பதே உண்மைதேச பக்தி இல்லாத எதுவுமே, அது விளையாட்டாக இருந்தாலும் சரிவெற்றி பெறாது
இந்தியா முதலில் சினிமா/மீடியா எனும்
பிசாசிடமிருந்து விடுபட வேண்டும்.உண்மைதான் ஆனால் விளையாட்டு ஆர்வலர்கள்விளையாட்டுக்கு முதல் இடம் கொடுக்கிறார்கள்மற்றவற்றிர்க்கு அடுத்த இடம்தான் கொடுக்கிறார்கள்அது சரி நாமோ, அரசாங்கமோ விளையாட்டுக்குஎன்ன மதிப்பு கொடுக்கிறோம் என்பதே என் கேள்வி
அப்போது ஒலிம்பிக் தர பட்டியலில் அவரது பெயர் மட்டும் தானே வர வேண்டும்
...அவரது நாடு ஏன் வருகிறது .... மேலும் பதக்கம் அளிக்கும் பொது எதற்கு
நாட்டின் கோடியை உயர்த்துகின்றனர்... அது தனி மனித லட்சியம் .... தனது
நாட்டின் குடி / கோடி உயர.....
பெண்கள் வாலிபால், அமெரிக்கக் கோச் ஒரு கொரியர்.
கனடா நாட்டு பல வீரர்கள் சீக்கியர்கள்அடையாளங்கள் மாறுவதே இல்லை என்றுதான் நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள்இங்கும் அந்தக் கொரியரின் தேசம் பெருமை அடைகிறதுசீக்கியரின் தேசமும்பெருமை அடைகிறதுஉங்கலைப் போன்ற அறிஞ்ஞர்களால் சுட்டிக் காட்டப் படுகிறது பெருமையாகஅடையாளங்கள் எங்கு போனாலும் அழிவதில்லை
முதலில் குழந்தைகளை விளையாடச் சொல்லுங்கள், இலட்சியக் கனவுகளை வளர்த்துவிடுங்கள். நாடு தானே முன்னேறும்!
வீடுயர நாடுயரும்ஒப்புக் கொள்ளுகிரேன்நம் பழக்க வழக்கங்கள் ,விளையாட்டுக்கள்தற்போது அருகிவிட்டனஇந்தக் காலத்து பிள்ளைகளைப் பார்க்கும் போதுஅனுதாபம் வருகிரது.அவர்கள் பொதி சுமக்கும்யந்திரமாகி விட்டனர்
ஜெர்மனியிலும் இது உண்டு! ஆனால் அங்கு இந்த மாற்றத்தைக் காணவியலாது.
அவர்கள் போர் என்றாலே நொந்து நூலாய் போயிருக்கிறார்கள். அங்கு தேவாலயப்
போக்குவரத்தும் குறைவு (வட ஜெர்மனியில் முக்கியமாக). போர் எல்லாவற்ரையும்
மாற்றி இருக்கிறது!
சுவிஸ் இதுவரை எந்தப் போரிலும் கலந்து கொள்ளாத நாடு. அதனால் இருக்கலாம்.
ஸ்வீடன் நாட்டாரிடம் கேட்டால் வேறு கதை சொல்வர் (உலகிலேயே மிகவும்
அகிம்சை உள்ள நாடு அது).
கொரியாவிலும் இந்தக் கட்டாய இராணுவப் பயிற்சியுண்டு.
இராணுவப் பயிற்சி பலருக்கு பொறுப்பையும், நல்லலொழுக்கத்தையும் தரலாம்.
ஆனால் அடிப்படையாக இராணுவப் பயிற்சி என்பது கொலையாளிகளை உருவாக்கும்
பட்டறை. சம்மந்தமே சம்மந்தமில்லாமல் அமெரிக்க இராணுவ வீரர்கள்
வியட்நாமிலும், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் கொலையுண்டனர். பொதுமக்கள்
இப்போது யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.
இராணுவப் பயிற்சி என்பதன் உளவியல் அடிப்படை "அடுத்தவனை நம்பாதே!" என்பது.
எனது இஸ்ரேல் நண்பன் சொல்வான் "எதிராளி என்னை மதிய உணவிற்கென்று
திட்டமிட்டால் நான் காலை உணவிற்கு அவனைப் பலியாக்கிவிடுவேன்" என்று. இந்த
மனப்பான்மைதான் நான்காம் உலகப்போருக்கான அடித்தளம் (கவனம்..கவனம்...)
தேசியம் என்பதற்கு வேறொரு கோணமுண்டு. தேசபக்தி என்ற சொல்லாடல்
'சுதந்திரம் வேண்டி தேசபக்தி கொள்ளுதல்' என்ற அர்த்தத்தில் மட்டும்
பொருள் கொள்கிறது. மற்றபடி தேசிய உணர்வு என்பது மனிதனைப் பிரித்து
அல்லல்பட வைக்கும் உணர்வு.
நான் காந்தி வழி. இக்கருத்தில் பலர் உடன்படாமல் இருக்கலாம்.
அன்பே சிவம்.
கண்ணன்
2008/8/13 <jaa...@gmail.com>:
--
"Be the change you wish to see in the world." -Gandhi
பிந்த்ராவுக்கு கோடிகளும், லட்சங்களும் குவிந்து வருகின்றன. தொழில்முறையில் விளையாட்டை மேற்கொள்ள விரும்பும் எண்ணற்ற இந்திய இளைஞர்களுக்கு பிந்த்ராவின் வெற்றி, நிச்சயம் உற்சாக டானிக்காக இருக்கும்.
அபிநவைப் போன்ற ஏராளமான இளைஞர்கள் "உறுதி கொண்ட நெஞ்சும், தினவு பெற்ற தோளுமாக," வெற்றி இலக்கை நோக்கிக் கடுமையாக உழைத்து வருகிறார்கள். ஆனால் உழைப்புக்கேற்ற உடல் உரம் இன்றி, களத்தில் இறங்கியவுடனேயே தோல்வியைத் தழுவுகிறார்கள்.
நம் விளையாட்டு வீரர்களின் தோல்வியில் மாபெரும் பங்கு வகிப்பது, உணவுப் பழக்கம். சத்துணவு இன்மையால் உடல் தளர்ந்து, உற்சாகம் குன்றி, தோல்வியைத் தழுவும் வீரர்கள் ஏராளம்.
விளையாட்டில் சாதனை படைத்தபிறகு வீரர்களுக்கு பணத்தையும், பரிசையும் அள்ளிக் கொடுக்கும் அரசு, அவர்களின் ஆரம்பகாலப் பயிற்சிக்கும், உணவுக்கும் ஒரு பைசாகூட கொடுப்பதில்லை என்பதே நிஜம்.
ஒரு மாணவனிடம் குறிப்பிட்ட விளையாட்டின் மீது ஆர்வமும், திறமையும் மறைந்திருந்தால், அதை வெளிக் கொண்டு வருபவர்கள் பெரும்பாலும் பெற்றோரே. தங்கள் கை காசைப் போட்டு பிள்ளைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க முயற்சிப்பவர்களும் பெற்றோரே.
பள்ளியிலோ, கல்லூரியிலோ வாய்ப்புகள் கிடைத்தால், அதைப் பிடித்து முன்னேறும் இளைஞர்களே அதிகம்.
மாவட்ட, மாநில அளவில் சாதனை படைக்கும் விளையாட்டு வீரர்களில் பெரும்பாலானவர்கள், சாதாரண, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே.
சத்தான உணவோ, தேர்ந்த பயிற்சியாளர்களோ இல்லாமல் மொட்டிலேயே கருகிப் போகும் வீரர்கள் பலர்.கொண்டைக் கடலைக்குக்கூட வழியில்லாமல், சாதாரண அரிசிச் சாப்பாட்டைச் சாப்பிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீரர்கள், வீராங்கனைகள் ஏராளம்.
உள்ளிட்ட தனிநபர் விளையாட்டுகளில், பயிற்சி பெற்ற, திறமைவாய்ந்த பயிற்சியாளர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. நல்ல "கோச்" கிடைக்க வேண்டும் என்றால் வேறு மாநிலத்துக்கோ, மாவட்டத்துக்கோ செல்ல வேண்டியுள்ளது. நிறையப் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.
நடுத்தர விளையாட்டு வீரனால் பயிற்சிக்காகப் பெருந்தொகையைச் செலவிட முடிவதில்லை. உயிர் சுருங்கி, உடல் நோக கடும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஜொலிக்கும் வீரர்களுக்கு, மாவட்ட அளவிலோ, மாநில அளவிலோதான் வெற்றி கிடைக்கிறது. சர்வதேச அளவில் சாதனை படைக்கும் அளவுக்கு அவர்களின் உடலில் வலு இருப்பதில்லை.
குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, களத்திலிருந்தே விலகி வெற்றிக் கனவை தொலைத்துவிடுகிறார்கள். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்குப் பிறகு பயிற்சியாளர்களாக மாறிவிடுகிறார்கள்.
எல்லாத் தடையையும் தாண்டி, சர்வதேச அளவில் பிரகாசிப்பவர்கள் அபிநவ், விஸ்வநாதன் ஆனந்த், சானியா போன்று விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே.
வெற்றிக்குப் பிறகு விளையாட்டு வீரர்களுக்கு பணமாகவும், பொருளாகவும் வாரி இறைக்கும் மத்திய, மாநில அரசுகள், விதையிலேயே வேரூன்ற அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காதது ஏன்?
பழ மரத்தை நாடி வரும் பறவைகள்போல், வெற்றிக்குப் பிறகு ஏராளமான வாய்ப்புகள் தேடி வருவது இயல்புதானே. விதையிலிருந்து வேரூன்றி, செடியாகி மரமாவதுதான் கடினம்.
பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் மறைந்திருக்கும் விளையாட்டுத் திறமையைக் கண்டறிந்து உற்சாகமூட்டி, ஊக்குவிக்கும் முயற்சியில் ஆசிரியர்கள் அக்கறை காட்டவேண்டும். தகுதியான வீரர்களின் உணவு, பயிற்சி, போட்டிகளில் பங்கேற்பதற்காகும் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்.
இந்திய விளையாட்டு வீரர்களின் வெற்றி பகல் கனவாகப் போனதற்கு மற்றுமொரு முக்கியக் காரணம், கல்வி. விளையாட்டா, கல்வியா என்ற கேள்விக்கு, கல்வியே பிரதானம் என்பதே பெரும்பாலானோரின், நடுத்தர வர்க்க இந்தியர்களின் பதிலாக இருக்கிறது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் இளம் விளையாட்டு வீரர்கள், பயிற்சிக்காக கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. அதனால் மற்ற மாணவர்களைப் போல தினமும் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்று படிக்க முடிவதில்லை. தினசரி சேரும் பாடச்சுமை அழுத்த, தேர்வில் தோல்வியைத் தழுவ நேரிடுகிறது. அல்லது சராசரி மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற நேரிடுகிறது.
இந்தத் தோல்வியை, சராசரி இந்தியப் பெற்றோரால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பொருளாதார ரீதியாகக் காலூன்ற "விளையாட்டைவிட படிப்பே மேல்' என்ற எண்ணமே பெரும்பாலான பெற்றோர்களின் ரத்தத்தில் ஊறிக்கிடக்கிறது. அதனாலேயே விளையாட்டில் திறமையும், ஆர்வமும் இருக்கும் வீரர்களில் பலர், படிப்புடன் ஒதுங்கி விடுகிறார்கள்.
இப்படிப்பட்ட வீரர்களுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டியது அரசின் கடமை. விளையாட்டு வீரர்களுக்கென தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்வதும், அவர்களின் வசதிக்கேற்ப தேர்வு எழுத அனுமதிப்பதும் அவசியம்.
இதற்காக அந்த வீரர்கள் படிக்கும் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினருடன் பேசி, உரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிப்பதற்கு ஆகும் செலவு, ஆசிரியர்களுக்கான கூடுதல் ஊதியம் போன்றவற்றை அளிக்கவும் அரசு முன்வரவேண்டும்.
இரும்புபோல் உடலும், சாதனை படைக்கத் துடிக்கும் நெஞ்சமும் கொண்டவர்கள் நம் இளைஞர்கள். வறுமையும், வசதியின்மையும் அவர்களின் ஆர்வத்தை எந்தவிதத்திலும் அணைபோட அனுமதிக்கக்கூடாது.
கண்ணன்!
இங்கு சுவிற்சர்லாந்தில் ஒரு இளைஞனிடம் இந்த தேசபக்தி குறித்த பதில்
சற்று வித்தியாசமாக இருந்தது.அவனுக்கு எனக்கும் நடந்த உரையாடலை அப்படியே
எழுத்தில் தருகின்றேன்.
http://www.rediff.com/sports/2004/aug/30oly-ind.htm
நான்கு வருடங்கள் ...மற்ற நாடுகள் பயிற்சிக்கும் வெற்றி வாகை அடையும்
முறை பற்றியும் சிந்தனை கொண்டு இருப்பார்கள்....நம்மர்வர்களோ சென்ற
முறையை விட நல்ல சாக்கு போக்கு சொல்ல கற்றுகொண்டிருப்பார்களோ ????
எதோ ஒரு தங்கம் கிட்டியது....குத்து சண்டையில் வெண்கலம் கிடைக்குமா ??
இந்த முறை என்ன நொண்டி சாக்கு பட்டியல் வருமோ ?