பிரபஞ்ச புதிர் !! -ஏ.சுகுமாரன்
பிரம்மனே ! பிரபஞ்ச நாயகனே !
பிந்துவே ! பெரு ஓசையின் (BIG BANG) விளைவே !
எமையெல்லாம் படைத்தது ஆள்வது நீஎன்றால்
நீங்காத ஐயம் பல என்றும் உண்டு !
பசியும் பட்டினியும் கூட உன் படைப்பு தானா?
எத்தனை தொழில் செய்தாலும் துரத்தி வரும்
தொல்லைகளும் நீயே படைய்த்தயா ? பிறந்தோர்
அனைவரும் புசிதிருக்கும் வித்தையை ஏன்
படைக்க மறந்தாய்! " இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுக உலகியற்றியான் " என உன்னை
வான் புகழ் வள்ளுவர் சபித்த போதும் ஏன் வாளாயிருந்தாய்
படைத்தல் உன் பணி என்றால் உலகில் இத்தனை
நெருக்கம் ஏன் படைத்தாய் ! உன் கணக்கில் பிழையா ?
காலத்தின் இறுதியால் இந்த குழப்பமா ?
எம்மில் பலர் வாடுவதையும்
வெற்று குடங்கள் வீரமுரசு கொட்டுவதும்
நீயேன் உன் படைப்பில் அனுமதித்தாய் ?
மசால் வடை விற்பவன் மகாகவியை விட
வசதியாய் வாழ , மனிதன் படைத்த பணம்
உன் அனைத்து படைப்பையும் ஆளும் தகுதி
அடைந்தது எப்படி ? இறப்பில் தன்னே ஒற்றுமை
அடைகிறான் வாழும் போதோ ஆயிரம் வேற்றுமை
அவன் தவறால் மட்டும் இல்லாமல் தவிகிறானே !
கர்மத்தின் பம்பர சுழற்சி விசை இன்னும் உன்னிடம் தானே உள்ளது !!
தோற்றுவித்தோன் (உலகு இயற்றியான்) ஓர் மனிதனா? தேவனா? இல்லை ஓர் இயக்கமா?
புறவயப்படுத்தல் (பரந்து கெடுக உலகு இயற்றியான்) ஒருவகையான தப்பித்தல்தானே?
விதி என்பது கூட ஓர் வகையான கையாலாகத்தனம்தானே?
இங்கு கோபம் யார் மீது?
உலகை சீரழிய விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மனிதன் மீதா?
இல்லை, உருவாக்கியோன் என்று இனம் தெரியாத ஒரு குறி மீதான தாக்குதலா?
மின்தமிழ் சிறப்படையவில்லை என்றால் நான் பிரம்மனைத் தாக்கமுடியுமா?
யோசிப்போம்!
க.>
2008/9/26 annamalai sugumaran <amirth...@gmail.com>:
> பிரபஞ்ச புதிர் !! -ஏ.சுகுமாரன்
>
> பிரம்மனே ! பிரபஞ்ச நாயகனே !
> பிந்துவே ! பெரு ஓசையின் (BIG BANG) விளைவே !
> எமையெல்லாம் படைத்தது ஆள்வது நீஎன்றால்
Good lamentation, addressed to the Creator!. I enjoyed. Thanks. BALU --- On Fri, 26/9/08, annamalai sugumaran <amirth...@gmail.com> wrote: |
நான் இதை வாதம் பண்ண எழுதவில்லை , சிந்தனைக்கு ,எனக்கும்
சான்றோர் பலர் பதில் பெறவாய்ப்பு கிடைக்கும் எனத்தான்
எழுதுகிறேன்
பசி இருப்பதால் மனிதன் உழைக்கிறான். பசி இல்லா உலகில் ஆக்கம் இருக்காது
என்பது வேந்தரின் வாதமாக இருக்கலாம்.
ஆனால் வள்ளுவன் காலத்திலேயே தமிழ் மண்ணில் பட்டினி கிடந்தோர் நிறைய
(இல்லையெனில் அவன் ஏன் பிரம்மனுக்கு சாபம் கொடுக்க வேண்டும்?) எனில்,
எங்கோ தவறு...ஆரம்பத்திலேயே நடந்திருக்கிறது.
இதை men took a wrong turn என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி.
ஆனாலும் மண்ணில் எல்லோரும் வாழ வழியுண்டு. வசதியும் உண்டு. ஆனால்
மனிதனின் சுயநலம் எனும் கருவி எல்லாவற்றையும் பாழ்பண்ணிவிடுகிறது.
புல்லையும், புழுவையும், கல்லுக்குள் தேரையையும் வாழ வைக்கும் இறைவன்
நம்மையும் வாழ வைப்பான் என்று 'சும்மா' இருக்கவா முடிகிறது? "இருந்து
பார்!" என்கின்றன ஞானிகளின் சரிதம். அவ்வளவு 'தில்' நமக்கு இல்லை. சாமி
என்பதே நம் வாழ்வில் சும்மா தொட்டுக்க ஊறுகாய் போல் தானே!
இதை விடுத்து மார்க்ஸ், எங்கல்ஸ் சொல்வது போல் சமதர்ம சமுதாயம்
உருவாக்கலாமென்றால் அதுவும் தோற்றுக்கொண்டே வருகிறது.
எனக்கென்னவோ சவால் மனிதனுக்குத்தான் என்று படுகிறது. பிரம்மனைத் திட்ட
மாட்டேன் (அதுவொரு ஆள் என்று கொண்டால்).
கண்ணன்
2008/9/27 annamalai sugumaran <amirth...@gmail.com>:
ஆதி சங்கரர் சொல்லித்தந்த நியதி படி நேதி நேதி என ஒன்று ஒன்றாய்
கழித்து வந்தால் உலகு இயற்றியான் நிச்சயமாய் கை கால்களுடன்
காலாட்டி கொண்டிருக்கும் மனித ருபமில்லை , அதனினும் உயர்வு தான்
தேவனுமில்லை தேவ கூட்டமுமில்லை ,
இத்தனை ஜீவனின் கணக்கு
வழக்கு கையாளும் சாத்தியம் நிச்சயமாய் இல்லை .
எல்லா இய்யகமும் காரண காரிய நியதி படி இயற்கையான விதி தான்
தண்ணீர் காய்ச்சினால் நீராவி அவது போல் எல்லாம் நியதிதான்
நமக்கு தான் என்ன செய்தால் என்ன வரும் என ஆராய தெரியவில்லை .
குழுவுக்கு ஒரு நியதி , தனி மனிதனுக்கு ஒரு நியதி என
எல்லாம் செட் ஆகி விட்டது , நியதியை மாற்றும் சுட்ஷுமம்
ஞானியர்க்கே தெரியும் .
ஆனாலும் மனிதன் கடவுள் இல்லாது வாழ இயலாது
மேலும் சிந்திப்போம்
அன்புடன்
ஏ.சுகுமாரன்
--
சுவாரசியமான சிந்தனைதான்...
,
எங்கோ தவறு...ஆரம்பத்திலேயே நடந்திருக்கிறது.
ஆனாலும் மண்ணில் எல்லோரும் வாழ வழியுண்டு. வசதியும் உண்டு. ஆனால்
மனிதனின் சுயநலம் எனும் கருவி எல்லாவற்றையும் பாழ்பண்ணிவிடுகிறது.
தங்கள் இதை நகைச்சுவைக்கு சொலியதகவே நினைக்கிறேன் .
தேடி நிதம் சோற்று தின்று
பசி என்பது வெறும் வயிற்றுப் பசி மட்டும்தானா...?உலகில் எல்லாப் பசியும் உண்டே,ஆனால் மற்ற எந்தப் பசிக்காகவும்மனிதன் இறப்பதில்லையே, ஏன் வயிற்றுப்பசிக்கு மட்டும் இரக்கிறான்எண் சாண் உடலுக்கு வயிறே ப்ரதானமா...?
மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்
புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
தளிர்ப்புரையும் திருவடியென் தலைமே லவ்வே
திருநெடுந்தாண்டகம் எனும் திருமங்கையின் அருளிச்செயல் இப்படி
ஆரம்பிக்கிறது. என்னைப்படாதபாடு படுத்துகிற பாசுரம். காலாட்சேபம் கேட்டு
ஆழ்பொருள் அறிய வேண்டும். நிற்க.
முன்னுருவில் அவன் மின்னுருவாய் வந்தான். BigBang எனும் பிரயோகம்
சத்தத்தை நினைவூட்டுகிறது. ஆயின் தோன்றியது ஓர் ஒளிப்பரப்பே. அது
மின்னுருவாய் இருந்தது. அப்போதுதான் அணு, அணுத்துகள் எனும் பருப்பொருள்
தோற்றமுற்றது. சத்தம் இருக்க வாய்ப்பில்லை.
பருப்பொருளுக்கு (matter) ஆதாரமான சைதன்யத்தை ஜோதி என்றே
கண்டுணர்கின்றனர் நம் பெரியோர்.
கண்ணன்
ஓருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம்,
ஈருருவன் என்பர் இருநிலத்தோர், ஓருருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர்,
நீதியால் மண்காப்பார் நின்று
ஒன்றும் தேவும் உலகும் உயிரும்
மற்றும் யாது இல்ல
அன்று நான்முகன் தன்னோடு தேவர்
உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு
திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க, மற்றைத்
தெய்வம் நாடுதிரே?
திருவாய்மொழி
உலகம்யாவையுமதாமுளவாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையான் அவன்
தலைவன், அன்னவர்க்கே சரண், நாங்களே
கம்பன்
scientists cannot look back in time beyond that early epoch, the actual big bang is hidden from them. There is no way at present to detect the origin of the universe. Further, the big bang theory does not explain what existed before the big bang. It may be that time itself began at the big bang, so that it makes no sense to discuss what happened "before" the big bang.
But in 1964, particle physicist Peter Higgs discovered a sub-atomic particle which is now known as the Higgs boson. Scientists believe that the Higgs boson gives all matter it's mass, and thus it is considered a fundamental particle. More recently, the Higgs boson has been known by a more colorful name as the 'God Particle'. It is very interesting how the Higgs boson got this new name. The scientific community thinks that it is very surprising for this Higgs boson to get the name 'God particle.'.
Even in the recent , largest man-made experiments in history. In the Alps along the Swiss-French border,India's contribution is $10-billion effort in search of the universe's missing matter by smashing particles like during the Big Bang is equally impressive. Around 200 of the 2,000 scientists doing the experiment are from India
Raja Ramanna Centre for Advanced Technology director Vinod Chandra Sahni says: "No collisions will take place on that day . September 10 simply marks the launch wherein two beams will be sent in the tunnel, one clockwise and the other anti-clockwise.
The particle smashing at close to speed of light (about 300,000 km per second) will start on October 21. Some particles will collide, triggering new particles that could help scientists understand the universe better."
The tunnel, buried 100 metres underground, is lined with sensors and 1,600 superconducting magnets across eight sectors, which are held at an operating temperature of 271 degrees below zero — colder than outer space. The LHC accelerator, which is accurate to a nanosecond, will be used to slam particles into each other to try to recreate the conditions at the beginning of time — as in the Big Bang.
(*இவைகள் வலையில் இருந்து திரட்டபட்டவைதான் )
ஆனால் இவை யாவும் இது வரை எதையும் உறுதியாக கூறாத போது
நமது உபநிஷத்துக்கள் இந்த பிரபஞ்ச வெடிப்பு விரிவாக்கம்
இவைகளை பிந்து, நாதம் , கலா என முன்றாக வ்வரிதுள்ளதாக
கூறுவதாக பாரதிய வித்யா பவன் வெளியிட்டுள்ள
'The Big Bang and the Bhagavad Gita,' R.A.S. Koacha
என்ற புத்தகத்தில் எழுதி உள்ளதாக எனக்கு நண்பர்கள் சிலர்
தகவல் அனுப்பியுரிந்தனர் .
அதில் பிரம்மா பிக் பாங் க்கு முன்னேயும் அதற்க்கு பின்னேயும்
உள்ளதாகவும் ,
பிர என்பதற்கே சமஸ்கிருத வேர் அளவில்லாது பெரிதாக விரிவடைதல் எனவும்
வெடிப்புக்கு பின் அது சப்த பிரமனாக ஆனதாகவும்
அந்த பிரபஞ்ச அடிப்படை நாதமே ஓம் எனும் ஓம்காரம் .
சப்த பிரமாவின் குறியேடும் அதுவே ஆகும் எனவும்
பிரம்மா ஒன்றே என்றும் உள்ளது ,
எதுவும் புதியதாக உருவாக்கபடுவதில்லை ,
ஒன்று மற்றொன்றாக மாறுகிறது
அதன் விதையிலேயே உள்ளது தான் காரணமாய்
மாறுதல் அடைகிறது ..என பலவாறு பிக் பாங் நியதி பற்றி
உள்ளதாக தெரிகிறது ,
எனவே தான் நாதம், சப்தம் என எழுதினேன் .
நானும் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கவில்லை .
ஆனாலும் கூட திரு கண்ணன் குறிபிட்டது போல நம்
தமிழ் வேதங்களிலேயே திருநெடுந்தாண்டகம் எனும் திருமங்கையின்
பாடல்களில்
"மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்
புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
தளிர்ப்புரையும் திருவடியென் தலைமே லாவவே"
என்ற வரிகளும் ,
தன்னுள்ளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுள்ளே திரைத்தெழுந் தடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே யடங்குகின்ற நீர்மைநின் கண் நின்றதே
திருமழிசை ஆழ்வார்
ரெ.காவின் கேள்விக்கு இப்படியும் பதில் சொல்லிப்பார்க்கலாம்:
> இறைவன் பிறந்தது big bang-இற்கு முன்பா பின்பா?
இறைவன் இருந்தான், இருக்கிறான், இருப்பான் என்பதற்கு மனிதனே ஆதாரம். மனிதனே சாட்சி.
எப்படி?
பொருள் முதல்வாதம்:
உலகில் எல்லாம் எதேட்சையாய் நடக்கின்றன. காரண-காரியம் என்று விளக்க
வேண்டிய அவசியமில்லை. உலகு எதேட்சையாய் தோன்றியது. உலகில் உயிர்
எதேட்சையாய் தோன்றியது. உயிர்தோற்றத்தை 'இயற்கைத் தேர்வு' வழி நடத்த
இன்று பிரம்மிக்கத்தக்க complexity கொண்ட உயிர்கள் உலவுகின்றன. அப்படி
உருப்பெற்றவன்தான் மனிதன். மனிதன் சிந்திக்கிறான். சிந்தனையில் கற்பனைகள்
தோன்றுகின்றன. கற்பனையில் கடவுள் தோன்றுகின்றான். எனவே கடவுளைப்
படைத்தவன் மனிதன். எனவே கடவுள் நிச்சயமாக பெருவெடிப்பிற்கு பின் தான்
பிறந்தான். (இதுதான் விஞ்ஞானிகள் பலரின் நிலைப்பாடு).
கருத்து முதல்வாதம்
உலகில் எல்லாச் செயல்களும் காரண காரியம் கொண்டே இயங்கின்றன. ரயில்
ஓடுகிறது என்றால் ரயிலை உருவாக்கியவன் என்று ஒருவன் இருக்கவேண்டும். உலகு
இருக்கிறது என்றால் 'உலகு இயற்றியான்' ஒருவன் இருக்க வேண்டும். எனவே
இப்பிரபஞ்சத் தோற்றத்திற்கான காரணி ஒன்றுண்டு. அதற்குப் பெயர் இறைவன்.
எனவே இறைவன் பெருவெடிப்பிற்கு முன்னும், பின்னுமுண்டு.
இனியறிந்தேன் எம்பெருமான்! என்னை-இனியறிந்தேன்
காரணன் நீ, கற்றவை நீ, கற்பவை நீ நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன் நான்!
(திருமழிசை)
அவனே காரணன். அவன் இருப்பதால் மனிதன் இருக்கிறான். ஒரு தொடர்சியின்
காரணமாக அவன் உள்ளான்.
சொல்லினால் தொடர்ச்சிநீ, சொலப்படும் பொருளும்நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதிநீ
சொல்லினால் படைக்கநீ படைக்க வந்து தோன்றினாய்
சொல்லினால் சுருங்கநின் குணங்கள் சொல்ல வல்லரே?
(திருமழிசை) (இது குவாண்டம் பிஸிக்ஸ் - கற்றையியல் விளக்கம். நான்
இருப்பதால் என் தொடர்ச்சியின் மூலமாக ஆதிப்பொருளுக்குப் போதல்)
எனவே,
நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே!
நீ என்னையின்றி இலை ( திருமழிசை ஆழ்வார்)
கண்ணன்
என்ன சார்! வள்ளுவம் என் சமயம் என்று எழுதிக்கொண்டு வள்ளுவரையே வம்பிலே
மாட்டுகிறீர்கள் :-))
இந்த வாதத்தில் ஒரு பிழையுண்டு. இது அருதப்பழசான வாதம். இதற்கெல்லாம்
என்றோ விடை கண்டு தமிழ்ச் சமயம் எங்கோ போய்விட்டது. நீங்கள்
'அடியைப்பிடிடா பாரத பட்டா' என்று....;-)
நாராயணன் என்பது தெய்வ விளக்கம். அது வெறும் பெயரன்று. அதன் பொருள்
இருவிதமாக அமைகிறது:
நாரணன் என்பது நித்ய வஸ்துக்களின் இருப்பிடம். நித்ய வஸ்துக்கள் என்பவை
பருப்பொருள் (matter), ஆன்மா. அவனே இவற்றின் காரணி. அவை தங்குவதற்கு
இடமாக இருப்பவன்.
நாரணன் என்றால் நித்ய வஸ்துக்கள் இருப்பதற்கு ஆதரமாக உள்ளவன். அதாவது
அவற்றுள் பரந்து, அந்தர்யாமியாக இருப்பவன்.
எனவே அவனே ஆதாரம். அவனை இயற்றியவன் ஒருவன் கிடையாது. மிக ஆழமான பொருள்ள
திருவாய்மொழி கீழே (திருமழிசையே உங்களுக்கு விளக்கம் அளித்திருப்பார்
என்று நம்பினேன்)
திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே
கண்ணன்
பாயிரம் பாடிய வள்ளுவனைக்கூட துணைக்கு அழைத்துக் கொள்ளலாமே ;-)
அவர் இயற்றவில்லை சார். என்ன சார், தமிழ் கூட புரியமாட்டேன் என்கிறது உங்களுக்கு!
தன்னுள்ளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுள்ளே திரைத்தெழுந் தடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே யடங்குகின்ற நீர்மைநின் கண் நின்றதே
வாழ்க தமிழ்!
கண்ணன்
பசி என்பது வெறும் வயிற்றுப் பசி மட்டும்தானா...?உலகில் எல்லாப் பசியும் உண்டே,ஆனால் மற்ற எந்தப் பசிக்காகவும்
காற்று இல்லாவிடில் உயிர் போய்விடும்,நீரில்லாவிடில் உயிர் போய்விடும்,வயிற்றுக்கு உணவில்லாமல் போனாலும் உயிர் போய்விடும்
பாயிரம் பாடிய வள்ளுவனைக்கூட துணைக்கு அழைத்துக் கொள்ளலாமே ;-)
அவர் இயற்றவில்லை சார். என்ன சார், தமிழ்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
அன்புள்ள
கடவுளைப் பற்றிய உங்கள் புரிதல் அவ்வளவு என்று சொல்லுங்கள். எங்கள்
வள்ளுவப் பேராசான் ஓர் பாமரன் என்று சொல்லாதீர்கள். வள்ளுவம் என் சமயம்
என்று சொல்லும் உங்களால் அது முடியலாம். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு
முன்னரே எவ்வளவு நளினமான (sophisticated) ஒரு கருதுகோளை முன்வைத்துள்ளான்
தமிழன் என்று உணரும் போது என்னாலப்படி எண்ணமுடியவில்லை. சாமி கும்பிடு
இல்லாட்டக் கண்ணைக்குத்தும் என்று அவன் சொல்லவில்லை.
தீயினுட் டெறல் நீ பூவினு னாற்றநீ
கல்லினுள் மணியுநீ சொல்லினுள் வாய்மைநீ
அறத்தினு ளன்பு நீ மறத்தினுள் மைந்துநீ
வேதத்து மறைநீ பூதத்து முதலுநீ
வெஞ்சுட ரொளியுநீ திங்களு ளளியுநீ
அனைத்துநீ யனைத்தினுட் பொருளுநீ
(பரிபாடல் 3/63-68)
உங்கள் வாதங்களையும் உள்ளடக்கி சொல்லிப்போந்த திருவாய்மொழியை உங்களால்
பாராட்ட முடியாமல் இருக்கலாம். என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை!
உளன் எனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள்
உளனலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளனென, இலனென விவைகுண முடைமையில்
உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே
வாழ்க.
கண்ணன்
உங்கள் பாணியே அலாதியானதுதானே! இப்படி ஏதாவது கேள்வி கேட்டுவிட்டு அறுவடை
செய்வதுதான் உங்களுக்கு வழக்கமாற்றே! கோலாலம்பூரில் நடந்த தமிழ் இணைய
மாநாட்டில் இப்படியொரு கேள்வி நீங்கள் கேட்கப்போய்தானே தமிழ் மரபு
அறக்கட்டளை என்ற அமைப்பே உருவானது. உங்கள் கேள்விகள் எப்போதும்
அறிவுச்சுடரைத் தூண்டுபவையே.
தன்னிலை விளக்கமாகச் சில.
எனக்கு ஆழ்வார்களை இச்சமயத்தில் தூக்கிப்பிடிக்க வேண்டுமென்றில்லை. நான்
பலமுறை சொல்லியவாறு எனக்கு சைவ சித்தாந்தத்தில், சைவ மறைகளில்
அதிகப்பரிட்சயமில்லை. எனக்குத் தெரிந்த ஆழ்வார் பாசுரங்களை முன்வைத்தேன்.
அவை தமிழ் மெய்யறிவு எனும் ஒரே காரணத்தினால். எனக்குத் தெரியும் வள்ளலார்
பிரபஞ்ச சிருஷ்டி பற்றி அளப்பரிய சேதிகளைச் சொல்லியிருப்பது. ஈடுபாடு
உள்ளவர்கள் பேச முன்வர வேண்டும் என்பதே என் ஆசை.
அறிவியலும், மெய்யியலும் வெவ்வேறா? இத்தேடலுக்குப் பின் இன்னும் இது
தெளிவாகியிருக்கிறது. பிரபஞ்ச ரகசியங்கள் நம்முள்தான் ஒளிந்திருக்கின்றன.
அதனால்தான் நாசூக்காக திருமழிசையின் பாசுரங்களைப் போட்டேன் (நானின்றி நீ
இல்லை). அன்று தொடக்கம் இன்றுவரை ஒன்றின் நீட்சியாக மற்றது என்றுதான்
வளர்ந்து வந்திருக்கிறோம். இல்லையெனில் என்றோ (4 பில்லியன்) தோன்றிய
அமீபாவிற்கும், மனிதனுக்கும் 99.9% மரபு ஒற்றுமை இருக்க சாத்தியமில்லை.
அதே போல் பெருவெடிப்பில் தோன்றிய துகள்களை இன்று நாம் அளந்து கொண்டிருக்க
வேண்டியதில்லை.
அறிவியல் மனித அறிவு கொண்டு பேருண்மையைத் தேடுகிறது. தத்துவமும் அதே
சாதனத்தைக் கொண்டுதான் உண்மையைத் தேடுகிறது. உண்மை ஒன்று என்பதால் இரண்டு
புள்ளியும் கட்டாயம் சேர்ந்தே ஆகவேண்டும். இது வெறும் சந்தர்ப்ப
வசமில்லை.
ஆன்மீகத்தில்தான் அநுபூதி என்றில்லை, அறிவியலிலும் அது உண்டே!
இல்லையெனில் ஐன்ஸ்டைன் ஒருமித்த கருத்தாக்கம் (unified field theory,
general relativity theory) பற்றிப்பேசும் போது உணர்ச்சி வசப்பட்டு,
"கடவுடளின் சிந்தனை என்னவென்று அறியும் வரை உறங்கமாட்டேன்" (ஏறக்குறைய
இப்படிப் பொருள்படும்படி) என்று சொல்லியிருக்கமாட்டார். அவரது
கண்டுபிடிப்பின் நீட்சியாக அணுகுண்டு நாகசாயியில் வெடித்த போது துடியாய்
துடித்துவிட்டார்.
என்னைப் பொருத்தவரை இந்திய மெஞ்ஞானத்தில் பேசப்படும் பல விஷயங்கள்
அறிவியலே. அத்வைதம், விசிஷ்ட்டாத்வைதம், துவைதம் எல்லாம் விஞ்ஞானிகள்
பேசும் field theory, weak forces etc. என்பவையே. தேவர்கள், அரம்பரையர்
என்பதெல்லாம் இவ்வகையான field அல்லது forces. இல்லையெனில் கற்றையியல்
விஞ்ஞானிகளில் பெரும்பாலோர் இந்திய உப்நிஷதங்களையும், கீதையையும்
மேற்கோள் காட்டவேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு ஆழ்வார்களைத் தெரியாது.
அதனால்தான் நான் அவர்களை மேற்கோள் காட்டுகிறேன் :-)
இது முடிவில்லாத தேடல்தானே ரெ.கா. தீபம் அணையாமல் காக்க வேண்டியது நம் கடமை!
உங்களைப் போல் எனக்கும் மற்றோர் கருத்துக்களை அனுபவிக்கும் சுகம் உண்டு.
இன்னும் பேசுங்கள் நண்பர்களே!
கண்ணன்
2008/9/29 karth...@gmail.com <karth...@gmail.com>:
வள்ளுவப் பேராசான் ஓர் பாமரன் என்று சொல்லாதீர்கள். வள்ளுவம் என் சமயம்
என்று சொல்லும் உங்களால் அது முடியலாம். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு
முன்னரே எவ்வளவு நளினமான (sophisticated) ஒரு கருதுகோளை முன்வைத்துள்ளான்
நன்றி திரு ரெ.கா. அவர்களே ,
எல்லாவித தற்க்கால அறிவியல் கண்டுபிடிப்புகளும் சுமார் 200ஆண்டுகளாகத்தானே! .
கலிலியோவை நாமும் பிற நாட்டு மாணவர்களும் அறிந்த அளவிற்கு
வராகாமிகிறரை அவர்கள் அறிவார்களா ?
நமது சித்தர்கள் கண்ட அறிவியல் எத்தனை பேருக்கு தெரியும் ?
நம்மை பற்றி நமக்கு பெருமிதம் இல்லை ..
பிறநாட்டு அறிவியலாளர்கள் ஏராளமாகச்
சிந்தித்து, ஏராளமாகப் பணச் செலவு செய்து ஏராளமாக ஆய்வுகள் நடத்தி
ஒன்றைக் கண்டு பிடித்து அறிவியல் பூர்வமாக வெளியிட்டபின்
நாம் அட டா ! இதை எங்கள் நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு
முன்னே எழுதி வைத்து உள்ளனர்ரே எனக்கூறுகிறோம் .
ஆனால் இருப்பதை தானே கூறுகிறோம் .
இப்போது நடப்பதை ஒத்து இருப்பதால் அவைகளுக்கு அர்த்தம் நமக்கும்
இப்போது தான் புரிகிறது .
ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகள் காலம் மாறும் போது
உண்மைகளும் முன்னேறி முடிவுகள் மாறுகின்றன
.
நமது சித்தர்களும் ஞானியரும் இந்த பெரு வெடிப்பு பற்றி ஆராயவேண்டும் என்று ஆராயவில்லை .
ஆனால் மெய்ஞானம் வரபெற்றதும் அவர்களுக்கு பிரபஞ்ச பேரறிவுடன்
ஒரு தொடர்பு ஏற்படுகிறது , ஆராயாமல் அவர்கள் உணர்வதை
அவர்கள் வழி மொழியில் குறிப்பாக சொல்லியிருக்கிறார்கள் .
இதில் நேரடி அர்த்தம் நமக்கு புரிய கொஞ்சம் கடினம் ஆக உள்ளது .
" நாதத்தில விந்துவும நாத விந்துக்களில
தீதற்றுஅகம வந்த சிவன சகதி என்னவே
போதித்து ஞானம கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையிலவந்தேழும விந்துவே "
நன்றி திரு வேந்தன் அவர்களே ,
கடவுள் மனிதனை விட்டு என்றும் பிரிந்ததில்லை
கி.பி 10 ஆம் நூற்றாண்டுக்கு பின் மட்டுமல்ல
இன்றுவரை கேட்பவருடன் பேசிக்கொண்டுதான்
இருக்கிறார் .ஆனால் கேட்க்க தான் யாரும் தயார் இல்லை
வள்ளலார் முதல் விசிறி சாமியார் என்று
யோகியரும் ஞானியரும் நமிடையே
இருந்து தான் வருகின்றனர்
நாம் தான் பாடல்களை தொகுப்பதை விட்டுவிட்டோம்
என கூறலாம் .. திரு முறைகள் தற்காலம்
உள்ளவர்கள் பாட முடியாது என முடிவுக்கு
வந்துவிட்டோம்
வள்ளலார் எழுதிய ஏராளமான பாடல்களையே பொய் என
நம்ப மறுத்து சிதம்பரம் நிதி மன்றத்தில் ஆறுமுக நாவலர்
வழக்கு தொடுத்தார் .
அன்றைய பக்தி செயல்கள் புரியப்பட்டு
பெரியபுராணம் என தொகுக்கப்பட்டது .
இந்த காலத்தில் இவ்வாறு யாரவது நடந்து கொண்டால்
அவர்கள் இருக்கும் இடம் நிச்சயமாக
கிழ்பாக்கம் ஆக தான் இருக்கும் .
கடவுள் மனிதனோடு பேச மறுக்கவில்லை
நாம் தான் பேசினாலும் நம்ப மறுக்கிறோம்
கடவுளே நம்பிக்கை சம்மந்த பட்ட விஷயம் தான் .
அன்புடன்
ஏ.சுகுமாரன்
ஏன் நாம் பாரதியை விட்டு விட்டோம் அவன் ஒரு சித்தன். அவன் ஒரு ஆழ்வான்.
அவனொரு பக்தன்.
அற்புதமான "நாராயண கவசம்" செந்தமிழில் பாடிய வேங்கடகிருஷ்ணன்
நாங்குநேரியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
http://emadal.blogspot.com/2008/05/blog-post_07.html
God is dead என்று மேற்குலகு சொல்லலாம், தமிழ் மரபறிந்த நாம் சொல்லலாமா?
"சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" என்று உறவாடி வந்த
தமிழல்லவோ நாம் பேசுவது!
கண்ணன்
2008/9/30 annamalai sugumaran <amirth...@gmail.com>:
திருமந்திரம் பேசும் பிரபஞ்சத்தோற்றம், வள்ளலாரின் திருவருட்பா பேசும்
பிரபஞ்சம் பற்றியெல்லாம் இன்னும் ஆழமாக ஆராய்ந்து அறிவியலுக்கும், நம்
மரபிற்குமுள்ள ஒற்றுமைகளை ஆங்கிலத்தில் வெளியிட வேண்டும்.
இங்கு இரண்டு ஆய்வுகளை முன்னுதாரணமாகச் சொல்லலாம். இந்த ஒற்றுமை பற்றி
மேற்குலகில் முதலில் புத்தகமாக எழுதியவர், Fritjof Capra
Preface quote from Carlos Castaneda's "The Teachings of Don Juan":
"Any path is only a path and there is no affront, to oneself or to
others, in dropping it if that is what your heart tells you. Look at
every path closely and deliberately. Try it as many times as you think
necessary. Then ask yourself, and yourself alone, one question…Does
this path have a heart? If it does, the path is good; if it doesn't
it is of no use."
(இதை விட அழகாக வேறு எப்படி, நம் பக்தி இலக்கியத்திற்கு விளக்கம் சொல்லமுடியும்?)
http://web.ionsys.com/~remedy/TAO%20OF%20PHYSICS.htm
http://en.wikipedia.org/wiki/The_Tao_of_Physics
அடுத்து Amit Goswami எழுதிய "Self Aware Universe". இவரது அழகான நேர்காணலை
Scientific Proof of the Existence of God - An interview with Amit
Goswami by Craig Hamilton
http://www.wie.org/j11/goswami.asp
இத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய பத்திரிக்கை "What
is enlightment?" Magazine!
on Amit Goswami: http://en.wikipedia.org/wiki/Amit_Goswami
கண்ணன்
2008/9/30 annamalai sugumaran <amirth...@gmail.com>:
>
>
மன்னிக்க. முதலில் நானும் வேந்தனை வழி மொழிந்து பெருவெடிப்பில் ஓசை
இருந்திருக்காது என்று எழுதினேன். அது தவறு என்று இப்போது அறிந்து
கொண்டேன். பெருவெடிப்பின் போது தோன்றிய ஒலி அலைகளைக் கேட்க:
http://faculty.washington.edu/jcramer/BigBang/BBSnd100.wav
இது பற்றிய விளக்கமறிய
The Sound of the Big Bang, John G. Cramer, Professor of Physics,
University of Washington Seattle, WA 98195-1560
http://faculty.washington.edu/jcramer/BBSound.html
நமது பிரவண மந்திரத்தை ஒலிக்கச் செய்து ஒப்பு நோக்கலாம்.
கண்ணன்
மன்னிக்க. முதலில் நானும் வேந்தனை வழி மொழிந்து பெருவெடிப்பில் ஓசை
இருந்திருக்காது என்று எழுதினேன். அது தவறு என்று இப்போது அறிந்து
கொண்டேன்.
--
எதற்கு வம்பு? இயற்பியல் பேராசிரியர் தொடுப்பு கொடுத்துள்ளேன். ஒன்று
அவரிடம் கேளுங்கள் இல்லை தேடிப் புரிந்து கொள்ளப்பாருங்கள் :-)
சரி, அமித் கோஸ்வாமி நேர்காணல் படித்தீர்களா? ;-)
கண்ணன்
2008/9/30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
வேந்தரே!
எதற்கு வம்பு? இயற்பியல் பேராசிரியர் தொடுப்பு கொடுத்துள்ளேன். ஒன்று
அவரிடம் கேளுங்கள் இல்லை தேடிப் புரிந்து கொள்ளப்பாருங்கள் :-)
அன்புசால் திரு வேந்தன் அவர்களே ,எந்த அதிர்வுகளும் பரவ ஒரு ஊடகம் தேவைதான் .
அது ஆடியோ வீடியோ , ரேடியோ எந்த அலை வரிசையில்
இருந்தாலும் ஆனால் நாம் பல நேரம் கண் முடிய படியே
பார்கிறோமே , கனவு காண்கிறோமே , அதையும்
மூளை சாதா காட்சி போல் பதிவு செய்கிறதே அது
எந்த அலை வரிசை
மாணிக்கவாசகர்,ஆழ்வார்கள் ,திருமூலர் ,அருணகிரி போன்றோர்
பாடல்கள் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை போலும் .
சரி விஷயத்து வருவோம் , நாதம் தோன்றியதா ?
"ரேடியோ அலைகளுக்கு ஊடகம் தேவை இல்லை. பாழ்வெளி போதும். ஒளியும் அவ்வாறே.ஆனால் ஒலிக்கு ஊடகம் தேவை.
பெரு வெடிப்பின் போது ஒளி தோன்றி இருக்கும். ஒலி இல்லை."
ஒலி , ஓளி போன்றவை இரண்டுமே ஒன்றுதான் .
ஒரே அலை வரிசை ( frequency) தொடரின் பகுதிகள்
பெருவெடிப்பின் போது அதனுடன் ஓளி தோன்றியதாக
நீங்கள் ஒத்துகொள்கிறேர்கள்
ஆனால் ஆடியோ அலைவரிசை என்பது 20-20000 c/s வரை உள்ள அலைவரிசை ( frequency)
இது பரவ இது மிக குறைவான வேகத்தில் உள்ளதால்
இதற்க்கு ஒரு காரியார் தேவை ( carrier freqency ), அது இல்லாமல் அது
பரவ இயலாது .
ஆனால் மறற ஓளி , மற்றும் கலர் போன்றவற்றுக்கான
அலை வரிசை சற்று வேகம் கூடியதால் தானே பரவும் .
ஆனால் எந்த துடிப்பும் தீடிர் என 20000 c/s என்ற நிலையை
அடையாது , எனவே முதலில் நாதம் தோன்றி பின் ஓளி தோன்றி
பின் அதில் செயல்கள் தோன்றியிருக்க கூடும் .
ஆனால் அதை பார்ப்பதற்கு அப்போது எந்த மனிதனும் இல்லை
எல்லாம் அனுமானம் தான் ..
இவைகளை நான் 40 வருடங்களுக்கு முன் படித்தேன்
இன்னும் கூட இந்த பாடங்கள் மாறாமல் இருகிறதா என தெரியவில்லை .
மூளையில் நினைவுகள் பதிவு:
இன்னும் முற்றிலும் புரிந்துகொள்ளாத புதிரை சொல்லி இன்னொரு புதிரை புரிய வைக்கிறீர்களே!!
நினைவுகள் பதிவுக்கு இந்துமதம் ஒன்னும் சொல்லலையா?
நினைவுகள் பதிவுக்கு இந்துமதம் ஒன்னும் சொல்லலையா
நினைவுகள் பதிவுக்கு இந்துமதம் ஏராளமாக ஞானத்தை வழ்ங்கயுள்ளது.
சமஸ்காரம் பற்றியும் மனிதனின் முன்று நிலைகள் பற்றும்
ஜாக்ரத , ஸ்வப்பன ,தூகநிலை என மூன்று நிலைகளை பற்றும் மிக விரிவாக அலசி உள்ளது .
இப்போது பெருவெடிப்பில் சப்தம் ஒளியுடன் சேர்த்து வந்தது என்பது தான் என்கருத்து
நான் கூறியவை தப்பு என கற்று அறிந்தோர் கூறினால்
மகிழ்வுடன் தெரிந்து கொள்வேன்
அன்புடன்
ஏ.சுகுமாரன்
இதுவொரு facinating field!
என்னால் தெளிவாக கலர் கனவு காணமுடியும்.
கனவில் அன்றொரு பாசுரம் (மணவாள மாமுனிகள் பற்றியது) மிகத்தெளிவாக அட்சர
சுத்தமாக யாரோ சொல்ல நான் கேட்டேன். குறித்து வைத்துக் கொள்ளவில்லையே
என்று வருந்துகிறேன்.
கனவில் என்னால் சுகந்தமான மணத்தை உணரமுடிகிறது.
கனவில் புவியீர்ப்பு சக்திக்கு உட்படாமல் பறக்க முடிகிறது.
ஆச்சர்யம் என்னவெனில் கனவில் ஐம்புலன்களும் உறங்குகின்றன என நினைத்தேன்.
அது இல்லையெனத் தெளிவாகத் தெரிகிறது. நிஜ உலகப் பருப்பொருள் ஸ்பரிசம்
இல்லாமல் கனவில் ஸ்பரிக்க முடிகிறது, காணும் பொருள் இல்லாமல் காண
முடிகிறது, நுகரும் பொருள் இல்லாமல் நுகரமுடிகிறது. குரு நேரடியாக வராமல்
உபதேசம் பெறமுடிகிறது.
ஸ்தூல உடம்பு போல் சூட்சும உடம்பொன்று உண்டு என்று கனவு தெளிவாகச்
செப்புகிறது. அப்படியெனில் இந்த சூட்சும உடம்பு எத்தகையது? அதன் வடிவம்
எதனால் ஆனது. அவை பருப்பொருளின் எத்துகள் கொண்டு நிர்மாணம் பெறுகிறது.
இதை போசான் எனலாமா? Subatomic particles எனலாமா? இதை அப்ராகிருத ஸ்வரூபம்
என்கிறது நம் மரபு.
கண்ணன்
நிச்சயமாக ஓசை எழுகிறது திரு வேந்தன் அவர்களே !
நல்லவேல்லை அது ஆடியோ அலை வரிசையில்
வாராததால் நமது காதுகள் தப்பித்தன
நாம் வாழும் உலகத்திலேயே முன்று அடுக்குகளாக
முன்று நிலை வாழ்க்கை நம்மை சுற்றி நடக்குதுன்னா
நம்புவிர்களா ? காயத்ரி இதை தான் ஓம் பூர் , புவ , ஸ்வா
என்கிறது
அன்புடன்
ஏ.சுகுமாரன்
நிச்சயமாக ஓசை எழுகிறது திரு வேந்தன் அவர்களே !
நல்லவேல்லை அது ஆடியோ அலை வரிசையில்
வாராததால் நமது காதுகள் தப்பித்தன
அன்பின் சுகுமாரன்:
முடிவற்ற தேடலுக்கு முடிவேது. இப்போதைக்கு இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.
உங்கள் கவிதையின் தொடர்பான கருத்துப்பரிமாறல் பல புதிய தெளிவுகளைத்
தந்துள்ளன. நன்றி.
கடவுள் என்பது கவிதை. கவிதா மனோபாவம் உள்ளவர்களுக்கு கவிதை ரசிக்கிறது.
ருசி உள்ளவர்களுடன் கவிதையப் பகிர்ந்து கொள்ளலாம். ருசி இல்லாதவரைத்
தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுவதே மேல். பசி உள்ளவனிடம் உணவு கொடுத்தால்
செல்லும்.
கடவுளைப் புரிந்து கொள்ளுதல் என்பது ஒரு விஷயம். கடவுளை வைத்து
எழுத்துள்ள பிரம்மாண்டமான மதம் எனும் ஸ்தாபனத்தைப் புரிந்து கொள்ளுதல்
என்பது ஒரு விஷயம். பலரது வெறுப்பு 'மதம்' எனும் ஸ்தாபனத்திலுள்ள
குறைபாடுகளால் எழுகிறது. முதலில் இருப்பது தத்துவம். இரண்டாவது
சமூகவியல். குழம்பிக்கொள்ளக்கூடாது. பலருக்கு இக்குழப்பம் தீர்ந்த
பாடில்லை.
அறிவியலுக்கும், மதம் எனும் ஸ்தாபனத்திற்கும் அன்றிலிருந்து 'லடாய்'தான்.
ஆனால், தத்துவம் என்ற அளவில் கடவுளைப் புரிந்து கொள்ளுவதில் அறிவியலுக்கு
என்றும் அடங்காப் பசியுண்டு. ஏனெனில் முனைவர் பட்டம் என்பது Doctor of
Philosophy தான். எனவே அறிவியல் அனைத்தும் பிரம்ம தத்துவத்தை நோக்கியே
பயணிக்கின்றன. இதில் கிழக்கு-மேற்கு என்ற பேதமில்லை. பருப்பொருள் மூலம்
தேடினாலும் (material search), ஆன்மவியல் மூலம் தேடினாலும் (spiritual
search) அடையும் இடம் ஒன்றுதான். இதை மிகத்தெளிவாக பதி, பசு, பாசமென்று
சைவ சித்தாந்தமும், ஈஸ்வரன், சித், அசித் என்று ஸ்ரீவைஷ்ணவமும் கண்டு
கொண்டுள்ளன. சித்தும், அசித்தும் 'அவன்' அங்கங்களே. எனவே அறிவியல் ஒரு
நாள் அங்கு வந்து சேரும். வந்து கொண்டு இருப்பது காணக்கிடைக்கிறது.
அடுத்து சிவ, வைஷ்ணவ பேதம். சின்ன மேற்கோள் காட்டினால் கூட
பொறுத்துக்கொள்ள முடியாத அளவு சில தமிழ் மனம் இப்பேதத்தில்
ஊறிக்கிடக்கிறது. தமிழ் மெய்யறிவு என்பது ஒன்றுதான். நாம் வணங்கும்
துறைகளை பல, பலவாக்கி வைத்திருப்பதும் அவன் மீது வேட்கை விளைவிக்கவே
என்று சொல்கிறார் நம்மாழ்வார். இதே கருத்தை சுவாமி விவேகாநந்தரும்
சொல்கிறார். நமக்குள்ள புரிதல் நிலைக்கு இன்னும் நிறைய 'துறை'கள்
வரவேண்டுமென்று.
வணங்கும் துறைகள் பலபல ஆக்கி, மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில் லாய்,நின்கண் வேட்கை எழுவிப்பனே. (இயற்பா)
வள்ளலார் தமது திருவருட்பாவில் 'பித்து ஏறும் வண்ணம் பிளவு பட்ட
மனமுடையோருக்கு அவன் காட்சி அரிது" என்று சொல்கிறார்.
தத்துவ பதியே தத்துவம் கடந்த
தனித்ததோர் சத்திய பதியே
சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர்
தமக்குளே சார்ந்தநற் சார்பே
பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப்
பெறல்அரி தாகிய பேறே
புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து
பொதுநடம் புரிகின்ற பொருளே
கடவுள் என்பதோர் புரிதல். ஒரு தேடலின் தெளிவு. ஓர் கவிதை.
இப்புரிதல் என்பது அவரவர் பக்குவம், மனோபாவம் சார்ந்தது. கவிதை சிலருக்கு
அவசியமாகப்படலாம். கவிதை இல்லாமலே வாழ்தலும் சாத்தியமே.
உங்களையெல்லாம் நான் மனதார நேசிக்கிறேன். "நெஞ்சு நிறைய நேசம் வைத்தால்
குறை தெரியாது" என்பார்கள்.
--
A.Sugumaran
Amirtham Intl
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
--
A.Sugumaran
Amirtham Intl
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
தாவரம் 19 லக்ஷம் கரு வேறுபாடுகள்
நீர் வாழ்வன 10 லக்ஷம் கரு வேறுபாடுகள்
ஊர்வன 15 லக்ஷம் கரு வேறுபாடுகள்
பறவைகள் 10 லக்ஷம் கரு வேறுபாடுகள்
விலங்கு 10 லக்ஷம் கரு வேறுபாடுகள்
மனிதர் 9 லக்ஷம் கரு வேறுபாடுகள்
தேவர் 11 லக்ஷம் கரு வேறுபாடுகள்
இதில் மிகவிந்தையானது மனிதரில் இத்தனை
ரகங்களா? என்பது தான் , மனிதரில் நாய் , மனிதரில் நரி ,
மனிதரில் புலி என பல்வேறு வகைகள் இன்னும்
தன் பரிணாம வாசனை போகாத மனிதர்கள்
அவர்கள் மனிதரில் மனிதனாகி மனிதரில் தேவராக
எத்தனை எத்தனை பிறவிகள் வேண்டுமோ .?
ஞானம் விட்டுபோகமல் இருந்தால் தன் இது சாத்தியம்
அதுவும் நமது வளர்ச்சி முன் நோக்கியே இருக்கவேண்டும்
வாசனையால் ஆசை மிகுதியால் சற்றே பின்னோக்கினால்
மேலும் கூடும் வரும் பிறவி ..
திரு கண்ணன் அவர்கள் கூறிய படி Amit Goswami எழுதிய "Self Aware Universe" சுருக்கத்தை படித்தேன் .
அவர் கூறுகிறார் human beings may not be the end of it, human beings certainly right now seem to be an epitome, but this may not be the final epitome. I think we have a long way to go and there is a
long evolution to occur yet
மனித பிறவியின் பயனே ஒரு நிலை உயருவதே .
இது ஒரு தேவனாகும் முயற்சி எனக்கூறுவார்கள்
நாமும் சற்று உயர சிந்திப்போம்
அன்புடன்
-ஏ.சுகுமாரன்
இது பற்றி யோசிக்க வேண்டும்!
இந்த பூர்வஜென்ம "வாசனை" என்றால் என்ன? This is a unique Indian way of
looking at life. Is it memory? Can memory lost even after death? If so
how? Or it is just explaning the variations we see in a species. In
fact, in Darwinian evolution, Variation is the basis of evolution. If
there is no variation then there is no evolution. But biologists
explain variation on the basis of genetics. But Indian scholars
differe in this. They explain it based on memory! Is it a real science
or just metaphysical hypothesis? Only time will tell?
கண்ணன்
இதுவே நாம் பிரபஞ்ச உற்பத்தியின் உண்மைகளை அறிவியல் பூர்வமாக
அறிந்து கொள்ள ஒரு தடையாக இருக்கும் என நான் எண்ணுகிறேன்.
We are cetrtainly biased in favour our beloved Tamil saints and bent
on looking for scraps of
evidence in the big bang research to justfy that premise.
அதே வேளை இந்த கற்றையியல் அறிவியலாளர்களின் அறிவார்ந்த
கண்டுபிடிப்புக்களை
நாம் இதனால் மலிவு படுத்தி விடுகிறோம் என்றும் தோன்றுகிறது. இதனாலேயே
அறிவியலையும் ஆன்மீகத்தையும் தனித்தனியே பேசுவதே சிறந்தது என
நான் சொல்கிறேன்.
பரிணாம வளர்ச்சிகள் பற்றி கந்தரனுபூதி முதலான இலக்கியங்கள் சொல்லியவற்றை
நீங்கள் எடுத்துக் காட்டுகிறீர்கள். இதைப் பற்றி நாம் என்ன விவாதிக்க
முடியும்?
என்ன கருத்துச் சொல்ல முடியும்?
இது பற்றி யோசிக்க வேண்டும்!
இந்த பூர்வஜென்ம "வாசனை" என்றால் என்ன?
உண்மைதான். பிறந்தவுடன் கன்றுக்கு தாய்மடி போக வேண்டுமென்று
எப்படித்தெரிகிறது? அறிவியல் சொல்லும் இவையெல்லாம் மரபுடன் இயைந்து வரும்
செயலென. டி.என்.ஏ எனப்படும் மரபு வேதிமம் இம்மாதிரி நினைவுகளை
மர்மக்குறியீடுகளாக தன்னுள் புதைத்து வைத்து, ஒரு தலைமுறையிலிருந்து
அடுத்த தலைமுறை என்று பரப்பிவருகிறது. இதனால்தான், விலங்குகள் (யானையும்
சேர்த்து) நீரில் நீந்தும் தன்மை பெறுகின்றன, எப்பயிற்சியும் இல்லாமல்.
ஏனெனில் நமது தோற்றம் நீரில் ஆரம்பிக்கிறது.
க.>
அன்புள்ள திரு ரெ.கா.அவர்களுக்கு ,
//அறிவியலாளர்கள் - இங்கு கற்றையியல் ஆய்வாளர்கள் எனக் கொள்க -
முன்முடிபுகள் ஏதுமின்றி பிரபஞ்சத் தோற்றத்தை ஆராய்கிறார்கள்.
ஆனால் இதைப்பற்றி வெளியிலிருந்து பேசிக்கொண்டுள்ள நாம் நமது
ஞானிகளும் சித்தர்களும் சொல்லியிருப்பதைப் பிடித்துக் கொண்டு அதற்கேறப
இது இருக்கிறதா என ஒப்பிடுவதிலேயே குறியாக இருக்கிறோம்.//
அன்பின் திரு கண்ணன்,
இந்த டி.என்.ஏ ஆதியில் இருந்து ஓவொரு உயிர்வகைக்கும்
மாறவே இல்லையா ? அல்லது மாறுதலுக்கு உள்பட்டதா ?
மாறும் என்றால் எதனால் ?
தற்போதைய மாடுகள் சிக்னலை பார்த்து சாலையை
கடக்கிறதே அந்த அறிவு டி.என்.ஏ மூலம் வந்ததா ?
எல்லாவற்றிக்கும் அடிப்படை குணம் உள்ளது
சிங்கம் சிங்கமகாதான் இருக்கும்
எப்படியும் மாறது .
மனிதனின் அடிப்படை குணம் என்ன ?
பசியும் ,இனவிருத்தியும் தானா ?
விலங்கிலிருந்து நாம் எந்தவழியில்
மாறுபடுகிறோம் ?
மனம் என்பது இருப்பதால் தானே மனிதன்
அந்த மனதை பற்றி நமது அடிப்படை
பாடத்தில் ஏன் இல்லை .?
விஞானம் கண்ணால் காணும் பூத
உடலை பற்றிதானே கூறுகிறது.
ஆனால் நாம் பல் ஆயிரம் ஆண்டுகளாக
மனதை பற்றியே ஆய்து வருகிறோம் .
ஒவொரு மனித மனமும்
அத்தனை பூர்வஜன்மத்தை தாங்கிய
நுண் பொருள் , அது இல்லாமல்
மனிதன் இயயங்க இயலாது .
புலன்கள் மனதின் தொடர்பு இன்றி
வேலை செய்யாது .
பூர்வஜன்ம தொடர்பு மனதின் மூலம் வருகிறது
நமது விதி ஊழ் டி.என்.ஏ மூலம் வருகிறது என கொள்ளலாமா ?
அன்புடன்,
-ஏ.சுகுமாரன்
அன்புள்ள
மிக அற்புதமாக இவ்விழையைக் கொண்டு செல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
வேதாந்தம் என்பது ஓர் methodology. தத்துவம் என்பதே கணிதம் போல்,
கூர்மையான வாதங்கள் கொண்டதுதான். அது அறிவியலுக்கு எவ்விதத்திலும்
சளைத்தது இல்லை. அதனால்தான் நான் உயிரியலில் முனைவர் பட்டம் வாங்கினாலும்
Doctor of Philosophy என்றுதான் பட்டமளிக்கப்படுகிறேன். இதன் பொருள்,
எனக்கு தர்க்கரீதியாக தரவுகளைக் கணிக்கவும், அதிலிருந்து சாரத்தைக்
காணவும் தெரிகிறது என்பதே. எனவே என்னால் அவ்வளவு எளிதாக இந்திய மெஞ்ஞானம்
வேறு, மேலைத்திய அறிவியல் வேறு என்று பிரித்து இனம் காண முடியவில்லை.
சரி, இது உங்கள் முன் இடுகைக்கான பதில்.
உங்கள் கேள்விகளுக்கு வருவோம்.
அறிவியல் பார்வை என்பது பௌத்தம் போல் ஓர் இருத்தலியல் பார்வை. இரண்டிலும்
கடவுளைப் பற்றிய கேள்விக்கு "மௌனமே" பதில். இப்படித்தான் ரெ.காவும்
புரிந்து கொள்கிறார் என்று நம்புகிறேன்.
உலகின் வேறுபாடுகளை விளக்க நம்மவர் கொண்ட கொள்கை கன்மவினை, பூர்வ
ஜென்மம், வாசனை. இதனால் மிக அழகாக எதையும் விளக்க முடியும். ஆனால்
அறிவியல் போல் பரிசோதிக்க முடியாது. அதுதான் வேறுபாடு.
டி.என்.ஏ இன் தோற்றமே மிகவும் complex. அதுவொரு உயிர் முடிச்சு என்பதை
விட கணித முடிச்சு என்றே சொல்ல வேண்டும். Permutation/combination கொண்டு
இன்று உலகில் காணும் அத்தனை வேறுபாடுகளையும் இச்சிறு மூலக்கூறால் கொண்டு
வந்துவிடமுடியும்.
மேலும், இது பரிணானமமுறும் தன்மையது. அடிப்படையில் இம்மூலக்கூறு ஒரு செல்
உயிரிலிருந்து மில்லியன் செல் உயிரியான மனிதன் வரை ஒன்றாக இருக்கிறது.
ஆனால் mutation எனும் மாற்றத்தினால் சிறு, சிறு மாறுதல் அடையும் போது
குணங்கள் மாறுகின்றன.
மனிதனுள் ஓர் விலங்கு எப்போதும் உறங்கிக்கொண்டே இருக்கிறது. அது
தவிர்க்கவியலாதது. ஏனெனில் விலங்கிலிருந்தே நாம் பரிணாமமுற்றோம். நமது
அறிவு அவற்றின் அறிவிலிருந்து மேம்பட்டு இன்றுள்ள நிலைக்கு வந்துள்ளது.
ஓரறிவு, ஈரறிவு என்று நாம் ஆறறிவுப்பிராணியாக உலவுகிறோம். இதுவொரு
வகைப்படுத்தலே தவிர மாடு எந்த வகையிலும் நமக்குக்குறைந்தது அல்ல.
அதற்குத்தேவையான சூழல் ஞானம் இயற்கையாக அமையப்பெற்றதே.
ஆயின் மனிதன் போன்ற மிகப்பெரிய மூளை (கொள்ளளவு) கொண்ட உயிர்களுக்கு
இயல்பாக கணிதம், இசை, தத்துவம் போன்றவை வந்து வாய்க்கின்றன. நமது மூளை
ஓர் சூப்பர் கம்யூட்டர் போல. அதனால் கோடிக்கணக்கான சேதிகளை நொடியில்
கையாண்டு விடை சொல்லமுடியும். மனம் என்பது மூளையின் செயல்பாட்டால்
வருகிறது என்று விஞ்ஞானம் நம்புகிறது.
ஆயினும் நினைவு என்பது எவ்வாறு, எங்கு சேமிக்கப்பட்டு பயனுக்கு வருகிறது
என்பது இன்னும் ஆயுபொருளாகவே உள்ளது.
பூர்வஜென்மம் என்று சொல்வதை நினைவுகள் கொண்டு விளக்கிவிடமுடியும்.
உண்மையில் யாரும் இறப்பதில்லை. உடல் மடிகிறது. ஆயின் நினைவுகள்
வாழ்கின்றன. இந்நினைவுகள் டி.என்.ஏயின் பராமரிப்பில் உயிர் விட்டு உயிர்
தாவுகிறது. அல்லது ஓர் உயிரை இன்னொரு உயிர் உண்ணும் போது வந்து படிகிறது.
மெத்தப்படித்த எலியின் மூளையை இன்னொரு எலிக்கு சாராகக் கொடுத்த போது
புதிய எலிக்கு படிக்காமலே திறமைகள் வந்துவிட்டன. எனவே நினைவு என்பது ஓர்
சுழற்சியில் இருந்து கொண்டே இருக்கிறது. மனித மூளை அதை பராமரித்து,
தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்துகிறது.
இது அறிவியல் தரும் விளக்கம்.
கண்ணன்
2008/10/8 annamalai sugumaran <amirth...@gmail.com>:
நன்றி தேனியார் அவர்களே ,
//சம்பந்தமே இல்லாத ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் புரிந்து கொண்டு குழந்தை பெற்றாலும்
ஒரு சிலரின் குழந்தைகளுக்கு பெண் வழிப் பாட்டனாரின் குணாதிசயங்கள்
அப்படியே வருகிறது , இன்னும் சிலரது குழந்தைகளுக்கு பில்லை வழிப் பாட்டனாரின் குனாதிசயங்கள் தானாகவே வருகிறது
இன்னாருக்கு இன்ன குணங்கள் என்று முடிவு செய்வது யார்,,?//
இது மட்டுமா
முன்னர் நமதிச்சையால் பிறந்தோம் இல்லை
இறுதியும் நம் வசமில்லை
இதுவரை விஞான கண்டுபிட்டிப்பு எதுவும் சாவுக்கு முடிவு
காண இயலவில்லை .
மன்னாதி மன்னரும் மாண்டுதான் போனார்கள்
நமது இச்சையால் வேண்டியபோது நம்மால்
குழந்தை பெறமுடியவில்லை .
அதன் குணங்களும் நமது விருப்பப்படி
உருவாக்க இயலவில்லை .
புத்தருக்கு முயன்று தோற்றதும்
இளங்கோ துறவி யானதும்
ராஜீவ் பிரதமர் ஆனதும் முயற்சியின்
தோல்வியால் தான்
இவை எல்லாம் விஞாணத்தை குறை கூற அல்ல .
நமது தேடுதல் இன்னும் முற்றுபெறவில்லை என்பதே .
இன்னும் விடை கிடைக்கும் வரை தோண்டி பார்ப்போம்
சான்றோர் பலர் இந்த குழுவில் இருப்பதால் .
உங்கள் அலசலுக்கும் விஞ்ஞானப்பதில் உள்ளது (Now I play the game of a Scientist :-)
விஞ்ஞானம் என்பது மெல்ல, மெல்லப் புரிந்துகொள்ளும் தன்மையது. உதாரணமாக
கீழைச் சூரியன் வரும் போது மெல்ல, மெல்ல விடிந்து ஒவ்வொரு நாடாக
விழித்துக் கொள்வது போல். இன்று பல கேள்விகளுக்கு விடை தெரியாமல்
இருக்கலாம். ஆனால், நமக்கு இதுவரை தெரிந்துள்ள அறிவியல் கொண்டு மேலும்,
மேலும் ஆராயும் போது ஓர் நாள் புரியாத பல விஷயங்களுக்கு விடை கிடைக்கும்.
இதை மிக அழகாகச் சுட்டும் ஐன்ஸ்டைனின் வசனம்:
The most incomprehensible thing about the universe is that it is
comprehensible, Einstein
கண்ணன்
2008/10/8 annamalai sugumaran <amirth...@gmail.com>:
2008/9/29 Narayanan Kannan <nka...@gmail.com>
2008/9/30 annamalai sugumaran <amirth...@gmail.com>:
மன்னிக்க. முதலில் நானும் வேந்தனை வழி மொழிந்து பெருவெடிப்பில் ஓசை
இருந்திருக்காது என்று எழுதினேன். அது தவறு என்று இப்போது அறிந்து
கொண்டேன்.கண்ணன்.ஊடகம் இல்லாமல் ஒலி எப்படி பரவும்?ஊடகத்தில் ஏற்படும் அதிர்வுகள்தானே ஒலி.பெரு வெடிப்புக்கு பின்னரே ஊடகம் தோன்றியதுஅதனால் ஒலி இருக்க வாய்ப்பே இல்லை
.ஒரு குடுவையில் வெற்றிடத்தை உருவாக்கி அதனுள் ஒரு கொள்ளு பட்டாசை குடுவையின் சுவர்களுக்கு படாமல் மிதக்கவிட்டு பின் வெடிக்கசெய்து ஒலிவருதா என பாருங்கள்
//இதுவே நாம் பிரபஞ்ச உற்பத்தியின் உண்மைகளை அறிவியல் பூர்வமாக
அறிந்து கொள்ள ஒரு தடையாக இருக்கும் என நான் எண்ணுகிறேன்.
We are cetrtainly biased in favour our beloved Tamil saints and bent
on looking for scraps of
evidence in the big bang research to justfy that premise.
அதே வேளை இந்த கற்றையியல் அறிவியலாளர்களின் அறிவார்ந்த
கண்டுபிடிப்புக்களை
நாம் இதனால் மலிவு படுத்தி விடுகிறோம் என்றும் தோன்றுகிறது. இதனாலேயே
அறிவியலையும் ஆன்மீகத்தையும் தனித்தனியே பேசுவதே சிறந்தது என
நான் சொல்கிறேன்.//
நமக்கு எல்லாம் முன்பே தெரியும் என்று நினைப்பது தான்
நம் முன்னேற்றத்திற்கு தடை .
நம்மிடம் என்ன இருக்கிறது என நாம் தெரிந்து கொள்ளவது
நம் முன்னேற்றத்திற்கு துணை புரியும்
நம்மிடம் கண்முடித்தனமான நம்பிக்கை
தான் அதிகம் உள்ளது .
நம்மிடம் உள்ளதை ஆராச்சிக்கு உட்படுத்துவதால்
எந்த தவறும் இல்லை .
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்
//பரிணாம வளர்ச்சிகள் பற்றி கந்தரனுபூதி முதலான இலக்கியங்கள் சொல்லியவற்றை
நீங்கள் எடுத்துக் காட்டுகிறீர்கள். இதைப் பற்றி நாம் என்ன விவாதிக்க
முடியும்?
என்ன கருத்துச் சொல்ல முடியும்?//
Respected sirs,
Based on present aspects, universe(prabanjam) is from the vetridam only. Like energy from atomic collision.
If we go in to deep, finally anything will become to zero that is nothing (sunium/vetridam).
Research (theory) with practical (karma) may give solution for an issue.
Thanks and regards,
A. Karthikeyn,
Executive QC/R&D,
Bharat starch industries,
Pondicherry.
|
|
வெற்றிடமென்று ஏதுமில்லை. சூனியம் என்பதும் ஒன்றுமில்லாமல் போவதில்லை.
அளக்கமுடியாத அளவிற்கு நுண்ணிப்போகிறது என்று பொருள். அணுவிற்குள்,
அணுவென்று தோண்டி எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் விஞ்ஞானிகள் (subatomic
particles, matter-antimatter)
பூஜியத்திற்குள்ளே நின்று ராஜியத்தை ஆளுகின்றான்
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனைப் புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்
என்று கண்ணதாசன் இவ்வுண்மையைச் சொல்கிறார். ஒன்றிலிருந்துதான் ஒன்று
தோன்றமுடியும். ஒன்றுமே இல்லாததிலிருந்து ஒன்றுமே தோன்றமுடியாது என்பதே
உண்மை.
எனவேதான், தமிழ்ச் சமயங்களும், தற்போது அமித் கோசுவாமியும், இப்பரந்த
வெளி (அதில் கருங்குழிகளுண்டு, வெற்றிடமுண்டு) முதற்கொண்டு
அண்டப்பிரம்மாண்டங்களுக்கும் இருப்பிடமாக இறைவன் உள்ளான் என்று
சொல்கின்றன(ர்). நாம் உள்ளுக்குள் சென்றாலும் அப்பாலுக்கு அப்பால்
சென்றாலும் காண்பது ஒரே காட்சிதான். அது கடவுளின் காட்சியே. வெற்றிடம்
என்பதைச் சூட்சும சரீரம் எனப்புரிந்து கொண்டால் சரியாகிவிடும்.
இதைத்தான் "காற்று வெளியிடை" என்கிறான் பாரதி. காற்றே
கண்ணுக்குத்தெரிவதில்லை. ஆனால் காற்றின் இடைவெளியாகக் கண்ணன் உள்ளான்.
க.>
2008/10/8 arumugam karthikeyan <akarthi...@yahoo.co.in>:
ஆக மொத்தம் முடியிலே பலம் இருக்கிறது
இது அறிவியல் தரும் விளக்கம்.//
Dear Dr Kannan,
I used to spend time with the dancer/choreographer late Chandralekha on several subjects. Once I raised a point about a premature born baby who lived for exactly four days in the neonatal centre of the Child care hospital,and enquired the philosophy behind it Chandra explained in such simple words, that I wrote a short story titled "Avasaram" (Hurry), the story revolving around a new born who was impatient to even wait for 10 months, and again was impatient to live for long! The reason I gave was that according to Hindu theory everyone has to live through certain number of Janmas to attain self realisation. Let us assume it takes 10 janmas to realise, and each Janma lasts for about 50 years (average) it would take 500 years.
Wasn't this girl child very smart that she finished one of her janmas in just about six months plus four days? She would realise faster than others!
In 13th chapter of Gita Arjuna asks the difference between the Kshetra and the Kshetragna; Prakrti and Purusha, "Etat vethi tumichchami" - This is what I would like to know he says!
In 1962-64 I used to listen daily Swami Chinmayananda in Mumbai and this formed the basis for my second Muthiraikkathai in 1964, called "Athu Mudivall" (Death is not the end)
Yes you are right and as scientist you are able to see thru!
regds
narasiah
|
From: Narayanan Kannan <nka...@gmail.com> |
2008/10/8 annamalai sugumaran <amirth...@gmail.com>
//according to Hindu theory everyone has to live through certain number of Janmas to attain self realisation. Let us assume it takes 10 janmas to realise, and each Janma lasts for about 50 years (average) it would take 500 years.
Wasn't this girl child very smart that she finished one of her janmas in just about six months plus four days? She would realise faster than others!//
"கர்மத்தின் பம்பர சுழற்சி விசை இன்னும் உன்னிடம் தானே உள்ளது ?"
இது இந்த இழையின் ஆரம்பத்தில் நான் தொடுத்த வினா.
இது இந்த குழத்தைக்கு எப்படி சாத்தியமாயிற்று ?
முடிவை தன் வயப்படுத்த ?
முடிவுக்கு மேல் ஒரு நொடி கூட வேண்டிநின்றாலும்
கிட்டாது . முடிவதற்கு ஒரு நொடி முன்னும்
போக முடியாது . அந்த விசை நம்மிடம் இல்லை
ஒருவேளை தொட்டகுறை விட்ட குறை
இருந்ததால் , அந்த அம்மாவிடம் பெறவேண்டிய கடன்
இருந்ததால் இது நிழ்த்திருக்கலம் .
இதுமாதிரி கடன் வசூல் செய்ய பல பிறவி உண்டு .
நமது அம்மா, அப்பா பூர்வஜென்மத்தில்
நம்மிடம் கடன் பட்டவர்கள் .
நமது மகன் /மகள் வசூல் செய்ய வந்தவர்கள்
நாம் சரிவர அவர்களுக்கு கடமையை செய்யாவிட்டால்
நமது கடன் அடையாது .
இம்மாதிரியும் பல கதைகள் உண்டு
ஆனால் இந்த கர்ம சுழற்சிக்கு விஞனாபூர்வ
சாட்சி கேட்டால் நாம் கீதையைத்தான்
நாடவேண்டும் !
ஒப்புகொள்ளவேண்டுமே !
அன்புடன்
ஏ.சுகுமாரன்
2008/10/8 annamalai sugumaran <amirth...@gmail.com>
அப்படியே அண்ணா !
எனக்கு வயது 59 உங்களுக்கு 60 சரிதானே !
எய்ப்பு என்னைவந்து நலியும்போது
அங்குஏதும் நானுன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே!
இக்கட்டுரை இங்கு பொறுத்தமாக உள்ளது. வாசிக்க....
http://emadal.blogspot.com/2006/11/blog-post_25.html
க.>
மனித செல்களில் உள்ள மரபணுவின் அமைப்பு இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மற்ற உயினினங்களின் மரபணுவும் ஆயப்பட்டு வருகிறது.
உயிரினத்தின் வாழ்வுக்காலத்தை நிர்ணயிக்கும் மரணுக்கள் உண்டா என்று ஆய்ந்து
வருகிறார்கள்.
காட்டாக சில ஆய்வுகள்.
பழங்களை மொய்க்கும் ஈயின் வாழ்வுக் காலம் 35 நாள். ஒரு குறிப்பிட்ட
சூப்பராக்சைடு டிஸ்ம்யூடேஸ் என்ற புரதப்பொருளுக்குக் காரணமான மரபணு மாற்றப்பட்டால்
அவை 70 நாள் வாழ்கின்றன.
இரண்டு வாரமே வாழக்கூடிய ஸி எலிகன்ஸ் என்னும் வட்டப்புழு, மரபணு மாற்றத்துக்குப் பிறகு
சிலமாதங்கள் வாழ்கிறது. இந்த மாற்றத்தால் செல் அழியாமல் காக்கும் ஒரு புரதப்பொருளின்
அளவு அதிகமாகிறதாம்.
குரோமோசோம்களின் முனைகளில் டெலோமியர் என்னும் பொருள் உள்ளது. ஒவ்வொரு முறை
செல் புதுப்பிக்கப்படும்போது அது நீளம் குறைகிறது. அதற்கு டெலோமெரேஸ் என்ற என்சைமே
காரணம். இந்த என்சைம்மை செயலிழைக்க வைத்தால் செல்லின் வாழ்நாள் கூடுகிறது.
உயிரின் பதிரை ஒருநாள் விஞ்ஞானம் விடுவிக்கும் என்று தோன்றுகிறது.
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
----- Original Message -----
From: "Narayanan Kannan" <nka...@gmail.com>
To: <minT...@googlegroups.com>
Sent: Wednesday, October 08, 2008 2:12 AM
Subject: [MinTamil] Re: பிரபஞ்ச புதிர் !! -ஏ.சுகுமாரன்
இந்த நினைவுகள் பற்றி நான் முன்பு சொன்னதை வாழும் காலத்து நினைவு
மாற்றங்கள் அல்லது தொடர்ச்சி என்று சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அது புனர்ஜென்மம் பற்றி அல்ல. அறிவியல் இருப்புலகை மட்டுமே கணக்கில்
கொண்டு இயங்குகிறது. எனவே டார்வீனியன் பரிணாமத்தில் தேவர்கள் என்றொரு
இனம் கிடையாது.
நினைவுகள் புரதப்பொருளில் அடக்கம் கொள்ளலாமென நம்புவதால் ஒரு விலங்கையோ,
ஒரு மனிதனையோ (குறிப்பாக மூளைக்கறி சாப்பிடும் போது) உண்ணும் போது அவனது
நினைவுகள் பரிமாறப்பட வாய்ப்புள்ளது. எனவேதான் 700 கோடி மக்கள்
இந்தியாவில் சாத்வீக உணவு உண்கின்றனர். (அதிகமாக சிக்கன் 65
சாப்பிடுபவர்கள் கவனத்தில் கொள்க ;-)
நினைவுகள் தொடர்ந்து பரிமாற்றமடைவதை நம்மவர் "வாசனை" என்று குறிக்கலாம்.
இன்னும் யோசிக்க வேண்டும்!
கண்ணன்
2008/10/9 N. Swaminathan <nswami...@socal.rr.com>:
//மாப்பிள்ளை என்னால் மூச்சு இழுக்க முடியவில்லை
மூச்சு விட முடியவில்லை என்று சொல்லவில்லை//
விடும் மூச்சு , திரும்பி வரும் என்ற நம்பிக்கையில் தான் நாம்
மூச்சை விடுகிறோம் .
யார் மேல் நம்பிக்கை ?
கரையே இல்லாத கடல் கரை தாண்டாது
நம்பிக்கையில் தான் நியதிக்கு உட்பட்டு
இருக்கும் என்று தான் கடற்கரையில்
சென்று அமருகிறோம் .
இதில் முக்கியமான சங்கதி ஒன்று இருக்கிறது .
இறக்கும் போது இறுதியாக எண்ணும் எண்ணமே
அவனின் அடுத்த பிறவியின் பிரதானமான
குறிக்கோள் ஆக இருக்கும் , விட்ட இடத்தில் இருந்து
தான் பிறவியின் இழை தொடரும் .
ஆனால் இறுதியான எண்ணம் நமது
எண்ணப்படி வருமா என்பது நாம் வாழ்த்த வாழ்கையின்
பழக்கத்தை , பொறுத்தது .
கீதையிலும் எவன் என்னை நினைத்து கொண்டு
உயிர் துறக்கிறானோ அவன் பரமகதி
பெறுகிறான் என உறுதியாக கூறுகிறார் .
இதற்குத்தான் உஷாரான ஆழ்வார் ஒருவர்
திரு கண்ணன் சுட்டிக்காட்டியபடி
//அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே//
என்று என்ன உரிமையுடன்
சுவாதினமாக முன்பே சொல்லிவிட்டேன்
என்று துண்டு போட்டு வைக்கிறார் பாருங்கள் .
இதுதான் பக்தி ..
அன்புடன் ,-
ஏ.சுகுமாரன்
//அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே//'
என் மாமனாரும் இப்போதைக்கப்போதே சொல்லி வைத்திருக்கலாம்
அரங்கத்தரவணைப் பள்ளியானை
அது அல்ல விஷயம்
எது பக்தி என்பது இங்கு விஷயமல்ல
எது ப்ரபஞ்ச ரகசியம் என்பதே விசாரம்
அன்புள்ள திரு சுவாமிநாதன் அவர்களே ,
தங்கள் பதிலுக்கு நன்றி !
நவ ராத்திரிக்கு சில கோயில் போயிருந்தேன்
எனவே பதிலுக்கு தாமதம்
எனது எண்ணங்களை எழுதுகிறேன்
இதற்க்கு நான் ஒன்றும் சொந்தக்காரன் அல்ல .
ஆனால் என்ன உள்ளது என எழுதுகிறேன்
இதனால் நான் பழமை வாதியும்
ஆகிவிட மாட்டேன் .
ஒப்பிடுவதால் ஒன்றும்
குறைத்து விடமாட்டோம்
//உயிர்கள் வாழும் காலம் மரபணுவாலும் சூழலாலும் நிர்ணயிக்கப்படுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
மனித செல்களில் உள்ள மரபணுவின் அமைப்பு இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மற்ற உயினினங்களின் மரபணுவும் ஆயப்பட்டு வருகிறது.
உயிரினத்தின் வாழ்வுக்காலத்தை நிர்ணயிக்கும் மரணுக்கள் உண்டா என்று ஆய்ந்து
வருகிறார்கள்.
காட்டாக சில ஆய்வுகள்.
பழங்களை மொய்க்கும் ஈயின் வாழ்வுக் காலம் 35 நாள். ஒரு குறிப்பிட்ட
சூப்பராக்சைடு டிஸ்ம்யூடேஸ் என்ற புரதப்பொருளுக்குக் காரணமான மரபணு மாற்றப்பட்டால்
அவை 70 நாள் வாழ்கின்றன.//
இதில் உயிர்கள் வாழும் காலம் மரபணுவாலும் சூழலாலும் என்பது தான் சிந்தனையை தூண்டுகிறது .
சூழலை நிர்ணயிப்பதில்லே தான் ந்மது
பிரரர்தம் , சஞ்சிதம் வேலைசெய்ய்கிறது .
பிரரர்தம் என்பது நமது பரம்பரை கர்மம் ,
பாவ புண்ணியங்களின் மொத்த கணக்கு
நம்மாலும் , நமது முன்னோர் மூலமும்
வரும் சுமை .
இதில் பாவத்தால் வரும் துன்பத்தையும்
புண்ணியத்தால் வரும் இன்பத்தையும்
தனித்தனியே அனுபவித்துதான் ஆகவேண்டும்
ஒன்றை ஒன்றில் கழிக்க இயலாது .
சஞ்சிதம் என்பது மீதி உள்ள இப்போதே
கழிக்க வேண்டிய சுமை , அது
அடுத்த பிறவிக்கு தொடராது .
இவையெல்லாம் நமது கர்ம வினையை பற்றியும்
நமக்கு நடக்கும் நமது சக்திக்கு மீறி நடக்கும்
செயல் களுக்கு நமது முன்னோர் கண்டால்
விடை , விஞானம் விரைவில் இதையும்
சரிபார்க்கும் .
மற்றொரு வினா ?
இந்த மரபணு மாற்றம் எப்படி நடக்கும் .
இதில் பழங்களை மொய்க்கும் ஈயின்
பங்கு எதாவது உண்டா ?
இதில் பங்கு இல்லாத போது
அதன் வாழ்நாளை நீடிப்பது
நமது சுயனலனுக்கா ?
அல்லது அது அதற்க்கு வரமா ? சாபமா ?
இதில் என்ன இயற்கையுடன்
நமக்கு போராட்டம் ?
வேறு யாராவது வெளியில் இருந்து
மாற்ற வேண்டும் என்றால் அது யார் ?
சூப்பராக்சைடு டிஸ்ம்யூடேஸ் என்ற புரதம
போல் மனிதருக்கு வாழ்நாள் நீடிப்புக்கு
வேண்டிய புரத செறிவுக்கு தான்
அமுதம் என்று பெயரா ?
நம் முன்னோர் இதிலும் பலவேறு சிறந்த
ஆய்வுகளை நடத்யுள்ளனர் .
மரணமில்லா பெருவாழ்வு என வள்ளல் பெருமான்
மிக பெரிய விளக்கங்கள் கூறி உள்ளார் .
மரணமில்லா பெருவாழ்வு யோக முறையில்
சாத்தியம் என நிறுவி உள்ளனர் .
மேலும் வாழும் போது என்றும் இளமையை
இன்பமுடன் வாழவும் பல முறைகளை
யோகத்திலும் , வேறு மூலிகை பிரயோகத்திலும்
கண்டு அதை பயன் படுத்தியும் ,
காயகல்ப முறைப்படி இளமையுடன்
இன்புற்று இருந்திருக்கின்றனர் .
அவர்கள் கூறிய புரதம் நிறைத்த
நெல்லிகாய், கடுக்காய் முதலியவற்றின்
உண்மைகள் இன்று விஞான முறைப்படியும்
ஒப்புக்கொள்ள பட்டுள்ளது .
//இந்த என்சைம்மை செயலிழைக்க வைத்தால் செல்லின் வாழ்நாள் கூடுகிறது.//
நெல்லிகாய், கடுக்காய் , அமுரி , கிழாநெல்லி ,
இன்னும் எத்தனையோ , இவைகளை
ஆராய்தால் அது ஒரு தனி படலமாகும்
கயகல்பமும் , மரணமில்லா பெருவாழ்வுயும்
நம் சித்தர்களின் சீரிய சிந்தனையில்
ஆயிரகணக்கான ஆண்டுகளாய்
ஆய்வு செய்யப்பட்டு , பிரயோகத்தில் இருந்தது .
திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்த்தார்
போகர் 2000 ஆண்டுகள் வாழ்த்தார்
இன்னும் பெரிய பட்டியலே தரமுடியும்
ஆனால் ஒப்புகொள்ள இன்னும் பல காலம்
நாம் பொறுத்திருக்க வேண்டும் .
இன்னும் சற்று சிந்திப்போம் .
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்
அன்புடன் ,-
ஏ.சுகுமாரன்
உயிர்கள் வாழும் காலம் மரபணுவாலும் சூழலாலும் நிர்ணயிக்கப்படுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
மனித செல்களில் உள்ள மரபணுவின் அமைப்பு இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மற்ற உயினினங்களின் மரபணுவும் ஆயப்பட்டு வருகிறது.
உயிரினத்தின் வாழ்வுக்காலத்தை நிர்ணயிக்கும் மரணுக்கள் உண்டா என்று ஆய்ந்து
வருகிறார்கள்.
காட்டாக சில ஆய்வுகள்.
பழங்களை மொய்க்கும் ஈயின் வாழ்வுக் காலம் 35 நாள். ஒரு குறிப்பிட்ட
சூப்பராக்சைடு டிஸ்ம்யூடேஸ் என்ற புரதப்பொருளுக்குக் காரணமான மரபணு மாற்றப்பட்டால்
அவை 70 நாள் வாழ்கின்றன.
இரண்டு வாரமே வாழக்கூடிய ஸி எலிகன்ஸ் என்னும் வட்டப்புழு, மரபணு மாற்றத்துக்குப் பிறகு
சிலமாதங்கள் வாழ்கிறது. இந்த மாற்றத்தால் செல் அழியாமல் காக்கும் ஒரு புரதப்பொருளின்
அளவு அதிகமாகிறதாம்.
குரோமோசோம்களின் முனைகளில் டெலோமியர் என்னும் பொருள் உள்ளது. ஒவ்வொரு முறை
செல் புதுப்பிக்கப்படும்போது அது நீளம் குறைகிறது. அதற்கு டெலோமெரேஸ் என்ற என்சைமே
காரணம். இந்த என்சைம்மை செயலிழைக்க வைத்தால் செல்லின் வாழ்நாள் கூடுகிறது.
உயிரின் பதிரை ஒருநாள் விஞ்ஞானம் விடுவிக்கும் என்று தோன்றுகிறது.
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
புத்துயிராக்கம் என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஆய்வு. வருகின்ற 20
ஆண்டு ஆய்வுத்திட்டம் என்பதில் சாவை எப்படித்தள்ளிப்போடுவது என்பதே
முன்னிலையில் நிற்கிறது கொரியாவில்.
இது குறித்த என் வலைப்பதிவு
http://emadal.blogspot.com/2008/08/blog-post_10.html
நம்ம சித்த மருத்துவம் இதற்கு உதவினால் இந்தியா 10 வருடங்களில் முதல் உலக
நாடாகிவிடும். வருமானமுள்ள ஆய்வு ;-)
அதிக ஆயுளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பது அடுத்த கேள்வி!!
"கண்ணில் தெரியுது வானம் அது கைவசமாகாதோ?" இதுவே அறிவியல் உந்துதல்.
கண்ணன்
2008/10/10 annamalai sugumaran <amirth...@gmail.com>:
சாவு மிக அருகிலிருக்கும் போது எல்லோரும் ஞானியாகிவிடுகிறோம் ;-)
ஆனால், கிரேக்கியம் முடிவதற்குள் 'சம்சாரி' ஆகிவிடுகிறோம் ;-)
புனரபி ஜனனம், புனரபி மரணம் - ஆயினும் சாவு குறித்த நம் உண்மையான அக்கரை என்ன?
மனித உயிர் மட்டும்தான் இங்கு முக்கியமா? இந்தியாவில் இப்போது மொத்தமே
500 கானமயில்களே உள்ளதாக விக்கிபீடியா சொல்கிறது. மனிதனின் இந்த அதீத
நுகர்தலுக்கு ஏதேனும் கட்டுப்பாடு உண்டா? Habitat destruction மூலம்
ஆண்டிற்கு ஆயிரம் உயிரினங்கள் அழிகின்றன. முன்பெல்லாம் கண் விழித்து
வீட்டிற்கு வேளியே வந்தால் சிவன் கோயில் மதிற்சுவரில் மயில்கள் கூவும்.
அது இப்போது வெறும் நினைவு.
உங்கள் கேள்வி ஆழமான கேள்வி!
க.>
க.>
//எல்லோருக்கும் பொழுது விடிந்தது அவருக்கு மட்டும்
ஏன் பொழுது முடிந்தது
எல்லோரும் மூச்சை இழுத்து விடுகிறார்கள்
ஆனால் அவரால் மட்டும் இழுக்க முடியவில்லை மூச்சை
அது எதனால்...?
இந்த இரண்டிற்கும் நடுவில்தான் ப்ரபஞ்ச ரகசியமே இருக்கிறது//
//ஆக இன்னும் நமக்கு தெளிவாகவில்லை முருகனும்,அரங்கனும்,
சிவனும் விஷ்ணுவும், கணபதியும், கஜமுகாசுரனும்,
ப்ரகலாதனும் ஹிரண்யனும், நரசிம்மமும், ராவணனும் ராமனும்,கிருஷ்ணனும்
ந்ரகாசுரனும், எல்லோருமே ஒன்றுதான் என்று//
நான் பக்தி என கூறியது அந்த பாடலை "அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அராங்கத்தரவனைப்பல்லியனே" எழுதியவரை பற்றி தான் .
மரணத்துக்கு சமீபத்திய அனுபவம்
அனேகமாக பதிவு செய்தவரை ஒத்துதான் உள்ளது .
//எல்லோருக்கும் பொழுது விடிந்தது அவருக்கு மட்டும்
ஏன் பொழுது முடிந்தது
எல்லோரும் மூச்சை இழுத்து விடுகிறார்கள்
ஆனால் அவரால் மட்டும் இழுக்க முடியவில்லை மூச்சை
அது எதனால்...?//
அவர் வந்த வேலை முடிந்து விட்டது
எனவே புறப்பட்டு விட்டார்
அடுத்த வகுப்புக்கோ , செக்ஷனுக்கோ
மற்ற படுவார் , அவர் இப்பிறவியில்
கற்ற பாடத்தை பொறுத்து .
அன்புடன்,
ஏ.சுகுமாரன்
இது எதிர்வினையல்ல. ஓர் மாற்றுச் சிந்தனைக்கு (still I play the game of
a scientist :-)
நீங்கள் சொல்வது ஓர் இந்தியப் பார்வை. இது பற்றி முன்பு நாடி ஜோஸ்யம்
பற்றி எழுதியபோது (தமிழ்.வலை) அலசியிருக்கிறோம். இதை அறிவியல்
நம்புவதில்லை. காரணம்?
> ந்மது உடலில் உள்ள முக்கிய organs ஆன
> இதயம் , நுரையிரல் ,இரைப்பை ,சுரப்பிகள் ,
> குடல் எதுவும் நமது கட்டுப்பாட்டில் இல்லை .
> நாம் நினைத்து அதை நிறுத்துவதோ ,சரியாக இயங்க செய்வதோ
> நம்மால் முடியாது .
அமெரிக்காவிலிருக்கும் என் நண்பனுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயல்
இழந்த போது மாற்று வைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறான். இப்போது அவையும்
செயலிழந்துவிட்டன. இன்னொரு மாற்றுக்குக் காத்திருக்கிறான். மூளை தவிர
எல்லாவற்றையும் மாற்றிவிட முடிகிறது இப்போது (குழாய்க்குழந்தை பற்றி
கல்லூரியில் எழுதியது நினைவிற்கு வருகிறது!)
மீண்டும் ever flexible கன்மவினை, பிற வாதங்கள் கொண்டு இதற்கு
இந்தியமுறையில் விளக்கம் சொல்லமுடியும்.
அறிவியலில் ஒரு சோதனை உலகின் வேறெங்கு இருந்தாலும் செயல்பட வேண்டும்.
அப்போதுதான் ஏற்றுக்கொள்ளப்படும்.
நம் வாதங்கள் அனைத்தும் அடங்குவது சாஸ்திரப் பிரமாணம். கப்சிப் காராவடை ;-)
க.>
ஐன்ஸ்டைன் வாசகம் வாசித்தீர்கள்தானே!
இறைவன் எதையும் நம்மிடமிருந்து ஒளிப்பதில்லை. மெல்ல, மெல்ல அறிவோம்.
சித்தர்கள் செய்தது தனிமனித முயற்சி. அறிவியல் செய்வது பொது மனித வளர்ச்சி.
அறிவில் வெல்லும்! அதுவே இறைவனின் விருப்பமும்.
கண்ணன்
2008/10/10 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
எங்கள் அம்மாவிற்கு 8 பிள்ளைகளாம். நான் எட்டாவது என்பதால் கண்ணன். 6தான்
தங்கினோம்.
எங்கள் சித்திக்கு 6 பிறந்து இரண்டுதான் தங்கியது.
60களில் கூட இந்திய life expectancy 50ஐத்தாண்டவில்லை. இப்போது 60க்கு
வந்திருக்கிறது. அமெரிக்காவில் பல ஆயிரம் நூற்றாண்டுக்கிழங்கள்!!
எம்.ஜி.ஆர் மதிய உணவுத்திட்டம் ஆரம்பித்த பிறகு தமிழக ஜனத்தொகை வளர்ச்சி
நின்று இருக்கிறது. படித்த குழந்தைகள் பெரிவளாகி, குடும்பக்கட்டுப்பாடு
செய்து கொண்டதால்!
இவையெல்லாம் எப்படிச் சாத்தியம்? அறிவியல்..அறிவியல்.
2020 மனித வயது 200 எட்டும் என்பது ஓர் கணக்கு (உங்களைப்பாத்தா யாராவது
60 வயசுன்னு சொல்லுவாங்களா?)
மனிதர் சாவின்றி வாழ்வான் என்பதொரு அறிவியல் ஹேஷ்யம்!! நம் தலைமுறையில்
கூட அது நடந்துவிடலாம்!!
என்னைப் பொறுத்தவரை ஒரே வேண்டுதல். அதை எம் முதல்தாய் சடகோபனே சொல்லட்டும்!
நன்றாய் ஞானம் கடந்துபோய்
நல்லிந் திரிய மெல்லாமீர்த்து,
ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்
உலப்பி லதனை யுணர்ந்துணர்ந்து,
சென்றாங் கின்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசையற்றால்,
அன்றே யப்போ தேவீடு
அதுவே வீடு வீடாமே!!
இதுவே அறிவியல் தரும் மரணமில்லாப் பெருவாழ்வின் வீடாக அமைய வேண்டும்!
அதுவன்றி, பிணியும், பீடையும், வறுமையும், வன்முறையும் உள்ள உலகில்
மரணமில்லாப் பெருவாழ்வு பெற்று என்ன பயன்?
கண்ணன்
>> http://www.peopleofindia.net
>> rkc...@gmail.com
>> http://thamizthenee.blogspot.com
>>
>>
>> >>
>
--
"Be the change you wish to see in the world." -Gandhi
மனிதர் சாவின்றி வாழ்வான் என்பதொரு அறிவியல் ஹேஷ்யம்!! நம் தலைமுறையில்
கூட அது நடந்துவிடலாம்!!
நானும் அவ்வாறே எண்ணுகிறேன். இது குறித்த ஓர் அறிவியல் நேர்காணலை நான்
முன்பு வாசித்ததுண்டு. பல அறிவியலார் மரணத்தை வரவேற்றே உள்ளனர். ஆனாலும்
பலர் முரண்டு பிடித்துக்கொண்டு உள்ளனர்.
மரணம் என்பது பார்வை சார்ந்தது.
உதாரணமாக, மரணம் தனிநபருக்கு ஏற்படுகிறது, ஆயின் உயிர்மை வாழ்கிறது.
தனிமனித நினைவுகள் அழிகின்றன, சமூக நினைவுகள் வாழ்கின்றன.
என்னைப்பொருத்தவரை மரணமில்லா வாழ்வு என்பது கூட ஓர் persepectiveதான்.
எல்லோரும் எப்போதும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளோம். என் பெண் பிறந்தவுடன்
எங்கள் அம்மா கனவில் வருவது நின்றுவிட்டது என்றாள் அக்கா. பொருள் அம்மா
மீண்டும் பிறந்துவிட்டாள் என்று பொருள். என் பெண் எனக்கு இப்போ அம்மா +
பெண். இது எவ்வளவு பெரிய வரம்!!
கண்ணன்
ஒன்பது வழிகள் வைத்தான் உடல்விட்டு உயிர் போக
ஒரு வழியும் வைக்கவில்லை உயிர் வந்து உடல் சேர
இறைவனிடம் நான் கேட்டேன் இது என்ன ஓர வஞ்ஞனை ?
அவனளித்தான் பல பதில்கள் அத்தனையும் புரியவில்லை
ஆனாலும் ஒரு பதில் ஓரளவு புரிந்ததெனக்கு
ரகசியமாய் முணுமுணுத்தான் என் காதில் மட்டுமதை
இயற்கையின் சாகசமே அதிலிடங்கும் அதிசயமே
இயற்கையை வெற்றி கொள்ள என்னாலும் முடியவில்லை
இயற்கைதான் கடவுள் ,நான் கூட அதன் பிடியில்
தவிக்கிறேன் மீளாமல்
சொன்னால் நம்ப மாட்டாய்
ஒரே ஒரு முறை விதைத்தேன் ப்ரபஞ்ஜம் வளர்ந்தது
பல முறை அழித்துப் பார்த்தேன் உஹூம் ஒன்றுமே
பலனில்லை இனி இப் ப்ரபஞ்ஜம் நானே நினைத்தாலும் அழிக்க முடியாது ,இயற்கையை வெல்ல என்னாலும் முடியவில்லை !!!!!!!
நீ கேட்ட கேள்விக்கு விடை தெரியுமா உனக்கு ?
கேள்விகள் கேட்பது சுலபம்
உயிர் வந்து உடல் சேர ,இயற்கையை வெற்றி கொள்ள
வழி எதேனும் இருக்கிறதா ?
என்னைக் கேட்டான் இறைவன்
என்ன பதில் நான் சொல்ல ?
உங்களுக்கு தெரிந்தால் ரகசியமாய் என்னிடம்
சொல்லுங்கள்
அவனிடம் சொல்லுகிறேன் நான் .. .. ...!!!!!!!!
தமிழ்த்தேனீ