தை பிறந்தால் - ஆண்டு பிறக்கும்!

301 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Jan 10, 2008, 4:31:02 PM1/10/08
to minT...@googlegroups.com
தை மாத முதல் நாளை தமிழ் புத்தாண்டாக விரைவில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

சென்னை சங்கமம் கலை விழாவை வியாழக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது:

சென்னை சங்கமம் கலை விழாவின் தொடக்கமாக இங்கு நடத்தப்பட்ட ஞாயிறு போற்றுதும் கலை நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திருந்தது. தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை புதிய தலைமுறையினருக்கு அவர்களில் சிலரைக் கொண்டே பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி அனைவரின் பாராட்டுக்கும் உரியது.

கடந்த ஆண்டு நடைபெற்ற தொடக்க விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சித்தரிக்கும் விதத்தில் பல்வேறு வகை நிகழ்ச்சிகளை ஒரே நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கி இருப்பது சிறப்பாக அமைந்துள்ளது.

இந்த விழாவில் தமிழர்களின் பாரம்பரிய இசையான தப்பாட்டம் இடம் பெற்றிருந்தாலும் ஆட்டம் சரியான ஆட்டமாகவே அமைந்திருந்தது.

நமது பண்பாடு, கலை, கலாசாரம், இலக்கியம், வரலாறு, இன எழுச்சி ஆகியவை இதன் மூலம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

எனக்கு யோகா கற்றுக் கொடுக்க வந்த தேசிகாச்சாரியார் "நாராயண நமஹ" என சொல்ல சொன்னார். வட மொழியில் அமைந்துள்ள அந்த வார்த்தைகளை உச்சரிப்பதற்கு பதிலாக "ஞாயிறு போற்றுதும்" என்ற வார்த்தைகளை உச்சரிக்கலாமா என்று கேட்டேன்.

அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். பின்னர் ஒரு முறை வட மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு தேசிகாச்சாரியார் யோகா கற்றுக் கொடுக்கும் போது "நாராயண நமஹ" வார்த்தைக்கு பதிலாக "ஞாயிறு போற்றுதும்" வார்த்தைகளை பயன்படுத்தியதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். இப்படியாவது சிலப்பதிகாரத்தின் புகழ் வெளி மாநிலங்களில் பரவுகிறதே என்ற மகிழ்ச்சி எனக்கு.

சென்னையில் 2-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழா இனி ஆண்டுதோறும் நடைபெற வேண்டும்.

தமிழகத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட புலவர்கள் ஆராய்ந்து தை மாத முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என கண்டுபிடித்துள்ளனர். இதை ஏற்று, தை மாத முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்றார் கருணாநிதி.

 
தமிழ் மையத்தின் இயக்குநர் ஜெகத் காஸ்பர், சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன், மாநிலங்களவை உறுப்பினரும், சென்னை சங்கமம் விழாவின் ஒருங்கிணைப்பாளருமான கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

Narayanan Kannan

unread,
Jan 10, 2008, 5:55:54 PM1/10/08
to minT...@googlegroups.com
On Jan 11, 2008 6:31 AM, Kannan Natarajan <thar...@gmail.com> wrote:>
> எனக்கு யோகா கற்றுக் கொடுக்க வந்த தேசிகாச்சாரியார் "நாராயண நமஹ" என சொல்ல சொன்னார். வட மொழியில் அமைந்துள்ள அந்த வார்த்தைகளை உச்சரிப்பதற்கு பதிலாக "ஞாயிறு போற்றுதும்" என்ற வார்த்தைகளை உச்சரிக்கலாமா என்று கேட்டேன். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். >>

கலைஞர் யோகா கற்றுக் கொண்டார் என்றும், அப்போது "நாராயண நமஹ" என்று சொல்ல
வேண்டி வந்தது என்பதும் எனக்குப் புதிய சேதி!! ஞாயிறு போற்றுதும்
என்றாலும் அது நாரண வழிபாடே! ஸ்ரீராமாயணத்தில் ஸ்ரீராமருக்கு அகத்தியர்
சொன்னதாக வரும் 'ஆதித்யஹிருதயத்தில்' கதிரவனை 'சூர்யநாராயணன்' என்றுதான்
அகத்தியர் விழிக்கிறார். கருணாநிதி என்றாலே அது இராமனையே குறிக்கும்.
கலைஞர் முன்பொரு பேட்டியில் ஆழ்வார்களைப் பற்றிச் சொல்லும் போது
"ஆழ்வார்கள் எம் நெஞ்சை ஆள்பவர்களே!" என்று சொல்லியிருக்கிறார்.

கண்ணன்

Kannan Natarajan

unread,
Jan 10, 2008, 6:39:08 PM1/10/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
கருணாநிதி,கருணாகரன்,அஞ்சுகம்,தயாளு,இவைகள் எல்லாம் இராமாயணத் தொடர்புடையனவே. எந்த யோகப் பயிற்சியும்,ஒரு மந்திரம் சொல்லித் தொடங்குவதாக நான் கேட்டதில்லை! தேசிகாச்சாரியார்,வட மாநிலத்தில் போய்,"ஞாயிறு போற்றுதும்" என்று கூறியது ஏனோ! பள்ளி நாட்களில்,உடற்பயிற்சி என்று தொடங்கி,"யோகாப்பியாசம்" என்ற தொடராகி,"யோகாசனா" என்ற ஈறு குறைந்து, இன்று "யோகா" என்று உலகம் முழுவதும் உருட்டல் மிரட்டல்களோடு, சாமியார் சந்தையில், சர்வதேசப் பண்டமாகிவிட்டது. முதலமைச்சர் செய்வதால் யோகா,முன்னேற்றக் கழகத்தின் கொள்கையாகிவிடும்! அதிமுகவும் மற்ற கழங்களும்,ஒரு வேளை "தாய்.சீ"யை இறக்குமதி செய்யவேண்டியிருக்கும்!
 
Yoghurt - Yoga + Heart - யோகர்ட் என்றாகித் தயிர்சாதம்,யோகிகளுக்கு பராசதமாகிவிடும் போலும்!
 
சூர்யநாராயணன், சிவசூரியனைப் போல, சிவசந்திரன்,இராமச்சந்திரன் என்ற பெயர்கள் நிலவுகின்றன்.
 
ஒய்வில் நாம் பழந்தமிழில் தோய்வது என்றாலும்,வாழும் நாட்டின் வாழ்க்கைச் சூழல்களை நுண்ணிய தகவல்களோடு நூதனமாக வரைந்து காட்டும் முனைவர் நாராயணன் கண்ணன் அவர்களின் பார்வையும்,எழுத்தோவியமும் "உதிர் இலை கால"த்தில் பக்கந்தோறும் பளிச்சிடுகின்றன. இவ்வாறு தான், தமிழுக்குப் புது வரவு சேர்க்கமுடியும்.
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

Narayanan Kannan

unread,
Jan 10, 2008, 7:31:51 PM1/10/08
to minT...@googlegroups.com
On Jan 11, 2008 8:39 AM, Kannan Natarajan <thar...@gmail.com> wrote:
> வணக்கம்,

> முதலமைச்சர் செய்வதால் யோகா,முன்னேற்றக் கழகத்தின் கொள்கையாகிவிடும்!
> அதிமுகவும் மற்ற கழங்களும்,ஒரு வேளை "தாய்.சீ"யை இறக்குமதி
> செய்யவேண்டியிருக்கும்!
> Yoghurt - Yoga + Heart - யோகர்ட் என்றாகித் தயிர்சாதம்,யோகிகளுக்கு
> பராசதமாகிவிடும் போலும்!
>

ஹா! ஹா!!

>
> ஒய்வில் நாம் பழந்தமிழில் தோய்வது என்றாலும்,வாழும் நாட்டின் வாழ்க்கைச்
> சூழல்களை நுண்ணிய தகவல்களோடு நூதனமாக வரைந்து காட்டும் முனைவர் நாராயணன் கண்ணன்
> அவர்களின் பார்வையும்,எழுத்தோவியமும் "உதிர் இலை கால"த்தில் பக்கந்தோறும்
> பளிச்சிடுகின்றன. இவ்வாறு தான், தமிழுக்குப் புது வரவு சேர்க்கமுடியும்.

மிக்க நன்றி. ஒரு காலத்தில் மாய்ந்து, மாய்ந்து எழுதியதுண்டு.
இலக்கியத்தில் தோய்ந்திருந்த என்னை சமூக சேவகனாக மாற்றிய புண்ணியம்
திருமிகு.சுபாஷிணியைச் சாரும் :-) இப்போது இலக்கியம் செய்யவே நேரமில்லை
:-(

கண்ணன்! உதிர் இலை காலம் பற்றிய உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து
கொள்ளுங்களேன். அதை நான் என் வலைப்பதிவில் இட்டுவிடுகிறேன். நன்றி.

கண்ணன்

வேந்தன் அரசு

unread,
Jan 10, 2008, 7:32:32 PM1/10/08
to minT...@googlegroups.com
On Jan 10, 2008 4:31 PM, Kannan Natarajan <thar...@gmail.com> wrote:

ஆராய்ந்து தை மாத முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என கண்டுபிடித்துள்ளனர். இதை ஏற்று, தை மாத முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்றார் கருணாநிதி.

 

 
அப்போ ஒரு நாள் விடுப்பு போச்சுதா? ஏப். 14 ல்
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

ஆமாச்சு

unread,
Jan 11, 2008, 2:23:34 AM1/11/08
to மின்தமிழ்
ஆராய்ச்சிகளுக்கு பின் முடிவுக்கு வருவது ஒரு ரகம். முடிவை வைத்துக்
கொண்டு ஆதாரங்களைத் தேடி ஆய்வு நடத்தி அறிவிப்பது புது ரகம். :-)

இன்று பொதுவாகவே பின்னதுக்கே அதிக மவுசு இருக்கு ;-)

அன்புடன்
ஆமாச்சு

ஆமாச்சு

unread,
Jan 11, 2008, 9:32:02 AM1/11/08
to மின்தமிழ்
On Jan 11, 3:55 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> முன்பொரு பேட்டியில் ஆழ்வார்களைப் பற்றிச் சொல்லும் போது
> "ஆழ்வார்கள் எம் நெஞ்சை ஆள்பவர்களே!" என்று சொல்லியிருக்கிறார்.


முதலை அழுதுதேன்னு கஜேந்திரன் நம்பிக்கைத் தர தனது தும்பிக்கையைத் தர,
அழுதுக்கிட்டுருந்த முதலை அப்படியே கபக்குன்னு கவ்விச்சாம்!

அந்த நாராயணன்தான் காப்பாத்தணும் ;-)

அன்புடன்,
ஆமாச்சு

வேந்தன் அரசு

unread,
Jan 11, 2008, 10:41:04 AM1/11/08
to minT...@googlegroups.com


2008/1/11 ஆமாச்சு <shrira...@gmail.com>:

ஆராய்ச்சிகளுக்கு பின் முடிவுக்கு வருவது ஒரு ரகம். முடிவை வைத்துக்
கொண்டு ஆதாரங்களைத் தேடி ஆய்வு நடத்தி அறிவிப்பது புது ரகம். :-)

இன்று பொதுவாகவே பின்னதுக்கே அதிக மவுசு இருக்கு ;-)
 
 
தை முதல்நாளை புத்தாண்டு பிறப்பாக வைப்பதில் யாருக்கு என்ன பிரச்சனை?
 
உலகம் சுழல்வது சுலொ ஆகிடுமா?
 

Tirumurti Vasudevan

unread,
Jan 11, 2008, 10:55:45 AM1/11/08
to minT...@googlegroups.com
சித்திரையே இருந்துவிட்டால் யாருக்கு என்ன பிரச்சினை? உலகம் சுத்துவது
வேகமாகி விடுமா?

தமிழகத்திலேயே தலையாய பிரச்சினை இதுதானோ?
திவா

2008/1/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:


> தை முதல்நாளை புத்தாண்டு பிறப்பாக வைப்பதில் யாருக்கு என்ன பிரச்சனை?
>
> உலகம் சுழல்வது சுலொ ஆகிடுமா?
--

My blogs: http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

வேந்தன் அரசு

unread,
Jan 11, 2008, 11:59:58 AM1/11/08
to minT...@googlegroups.com


2008/1/11 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:

சித்திரையே இருந்துவிட்டால் யாருக்கு என்ன பிரச்சினை? உலகம் சுத்துவது
வேகமாகி விடுமா?

தமிழகத்திலேயே தலையாய பிரச்சினை இதுதானோ?
திவா
 
ரொம்ப சின்ன பிரச்சனைதானுங்க. அதனால் மாற்றுவதும் பிரச்சனை இல்லையே. குஜராத்திகள் போல் அன்று புதுகணக்கு எழுதும் ஆள் யாரும் தமிழகத்தில் இல்லை.
 
 


2008/1/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com >:
> தை முதல்நாளை புத்தாண்டு பிறப்பாக வைப்பதில் யாருக்கு என்ன பிரச்சனை?
>
> உலகம் சுழல்வது சுலொ ஆகிடுமா?
--
My blogs: http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Tirumurti Vasudevan

unread,
Jan 11, 2008, 7:05:16 PM1/11/08
to minT...@googlegroups.com
2008/1/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
>
>
>
> 2008/1/11 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:
>
>
> > சித்திரையே இருந்துவிட்டால் யாருக்கு என்ன பிரச்சினை? உலகம் சுத்துவது
> > வேகமாகி விடுமா?

விடை காணமே!
திவா

வேந்தன் அரசு

unread,
Jan 11, 2008, 7:34:49 PM1/11/08
to minT...@googlegroups.com


2008/1/11 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:

2008/1/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
>
>
>
> 2008/1/11 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:
>
>
> > சித்திரையே இருந்துவிட்டால் யாருக்கு என்ன பிரச்சினை? உலகம் சுத்துவது
> > வேகமாகி விடுமா?

விடை  காணமே!
திவா
 
 
ஆகாது.
 
வடமொழி பேசுவார் இல்லாமல் போச்சு
உலகம் சுத்துவது நிற்கலே
தென்மொழியும் பேசுவார் இல்லாமல் அழியலாம்
உலகம் சுத்துவது நிற்காது
நம் தாய்மொழியாக  ஆங்கிலத்தை இன்றைக்கே மாற்றிக்கலாம்.
உலகம் சுத்துவது நிற்காது.
 
 
 

இரவா

unread,
Jan 11, 2008, 8:02:12 PM1/11/08
to minT...@googlegroups.com

சுழலும் உலகம் மண் உருண்டை  என்று எந்த மேதை சொன்னான்?

ஏர் பின்னது உலகம் என்றால், உலக உருண்டை  ஏர்க்குப் பின்னால் போகிறது என்றா பொருள்?

ஒவ்வொருவனும் தன் தகப்பன் இவன் என்று அடையாளம் காட்ட, முதலெழுத்தைக் குறிப்பது போல, 
ஒரு இனத்தின் நாகரீகத்தைக் குறிப்பால் காட்ட  தைத் திங்கள் முதல் நாள்
தமிழ்ப் புத்தாண்டு என்று கூறுவர்.

சித்திரை என்பபது விக்கிரமாதித்தன் பிறந்த நாளைக் குறிக்கிறது.. அவனின் பிறந்த நாளை,  தமிழன்  ஏன் குறிப்பிட, கொண்டாட  வேண்டும்.?

 

                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

ஆமாச்சு

unread,
Jan 11, 2008, 9:12:15 PM1/11/08
to மின்தமிழ்


On Jan 12, 6:02 am, "இரவா" <vasudevan...@gmail.com> wrote:
> சித்திரை என்பபது விக்கிரமாதித்தன் பிறந்த நாளைக் குறிக்கிறது.. அவனின் பிறந்த
> நாளை, தமிழன் ஏன் குறிப்பிட, கொண்டாட வேண்டும்.?
>

பொதுவா சித்திரை ஒன்றைக் காட்டிலும் தைதான் பாரதம் நெடுகிலும் கோலாகலமாகக
கொண்டாடப் படுகிறது. பல்வேறுப் பெயர்களில். தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டி
ஒரு இஞ்சுக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது, தொழில் நட்பமெல்லாம்
வளரா அக்காலத்துலேயே நாங்க கண்ணுக்குத் தெரியாத மின் சுவர்
போட்டுக்கிட்டுருந்தோம்.. நாங்க தனி.. இப்படி சொல்லிக்கத் தான் இது
பயன்படும்.

தமிழர்கள் சித்தரைப் புத்தாண்டைக் கொண்டாட மற்றவர்கள் தையைப் புத்தாண்டாக
அறிவிப்பார்களாக! அப்போ ஆய்வாளர்கள் ஒன்று கூடி சித்திரையே நமது
புத்தாண்டுளன்னு சொல்லலாமுங்கோ! நமக்கும் மத்தவங்களுக்கும் எந்தத்
தொடர்பும் இல்லைபன்னு காட்ட வேண்டி அவசியம் இருக்கு பாருங்க!

Kannan Natarajan

unread,
Jan 11, 2008, 11:45:20 PM1/11/08
to minT...@googlegroups.com

தமிழர் புத்தாண்டு எது? சித்திரையா? தையா? - நக்கீரன், 11 January 2007


சனவரி புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே!

சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை? தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன. அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி வடிவங்களே!

இப்போது வழங்கும் பிரபவ தொடங்கி சய ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையாதலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940)

60 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதனாலும் அது மிகக் குறுகிய காலத்தைக் (60ஆண்டுகள்) கொண்டுள்ளதாலும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாது. ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர் பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியமுடியாது. (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன்மொழி நூல் -1940)

மேற்குறிப்பிட்டவை மூலமாக 60 ஆண்டு வந்தவழி, அது நடைமுறைக்கு நாட்டில் வந்த ஆண்டு, வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாமை ஆகியன பற்றிய செய்திகளை நாம் அறிய முடிகிறது.

கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குழுந்தைகள்தாம் 60 தமிழ் ஆண்டுகள் என்பது புராணக் கதை.

இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆபாசமானது. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது. மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.

இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் (சமுதாயம்), நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியாது.

இந்த 60 ஆண்டு முறையும் பிறவும் தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்பதற்குச் சான்றாக விளங்குவதால் அறிவு ஆசான் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழர்கள் மானமும் அறிவும் உள்ள மக்கள் என்றும் சித்திரை தமிழர்களது புத்தாண்டு அல்லவென்றும் சொன்னார்கள்.

இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.

திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு தைத் திங்கள் முதல்நாள் பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள.

இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் "மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்" என்று விளக்கம் தந்தார்.

இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் அடங்குவர்.

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டுடன் (2007) 31 அய்க் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2038.

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. எனவே இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும்.

தமிழர்களுக்கு தையில் தொடங்கும் ஒரு தொடர் ஆண்டு தேவை. வேண்டுமென்றால் சித்திரையை இந்துக்களது புத்தாண்டாகக் கொண்டாடலாம்.

தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு வானியல் அடிப்படையும் உண்டு. அன்றுதான் ஞாயிறு தனது தென் திசை நோக்கிய செலவை முடித்துக் கொண்டு வட திசை நோக்கிய செலவை மகர இராசியில் இருந்து மேற்கொள்கிறது.

எனவே தமிழர் தை முதல் நாளை புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் பிறந்த நாள் என முப்பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டும். .

தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று பன்னூ றன்று
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு  - (புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)
 

Kannan Natarajan

unread,
Jan 12, 2008, 12:07:51 AM1/12/08
to minT...@googlegroups.com
01. சித்திரை Chiththirai mid-April to mid-May சுறவம் Suravam mid-January to mid-February
02. வைகாசி Vaikaasi mid-May to mid-June கும்பம் Kumbam mid-February to mid-March
03. ஆனி Aani mid-June to mid-July மீனம் Meenam mid-March to mid-April
04. ஆடி Aadi mid-July to mid-August மேழம் Mezham mid-April to mid-May
05. ஆவணி Aavani mid-August to mid-September விடை Vidai mid-May to mid-June
06. புரட்டாசி Purattaasi mid-September to mid-October ஆடவை Aadavai mid-June to mid-July
07. ஐப்பசி Aippasi mid-October to mid-November கடகம் Kadakam mid-July to mid-August
08. கார்த்திகை Kaarththigai mid-November to mid-December மடஙகல் Madangal mid-August to mid-September
09. மார்கழி Maarkazhi mid-December to mid-January கன்னி Kanni mid-September to mid-October
10. தை Thai mid-January to mid-February துலை Thulai mid-October to mid-November
11. மாசி Maasi mid-February to mid-March நளி NaLi mid-November to mid-December
12. பங்குனி Panguni mid-March to mid-April சிலை Silai mid-December to mid-January


உங்கள் இடது புறம் இருப்பது பழைய முறை, வலது புறம் இருப்பது புது முறை.
தை--         சுறவம்                                         
மாசி --    கும்பம்
பங்குனி-- மீனம்
சித்திரை --மேழம்
வைகாசி --விடை
ஆனி --     இரட்டை
ஆடி --      கடகம்
ஆவணி --மடங்கல்
புரட்டாசி --கன்னி
ஐப்பசி --    துலை
கார்த்திகை-- நளி
மார்கழி --   சிலை
 
ஞாயிறு--      ஞாயிறு
திங்கள்--      திங்கள்
செவ்வாய் --செவ்வாய்
புதன்--         அறிவன்
வியாழன்--  வியாழன்
வெள்ளி --  வெள்ளி
சனி--            காரி


நன்றி:http://www.muthamilmantram.com/viewtopic.php?f=176&t=20091&p=235517

ஆமாச்சு

unread,
Jan 12, 2008, 12:27:29 AM1/12/08
to மின்தமிழ்


On Jan 11, 9:59 pm, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
>
> குஜராத்திகள் போல் அன்று புதுகணக்கு எழுதும் ஆள் யாரும் தமிழகத்தில் இல்லை.
>

நீ பிறந்த அதே நாளில் அடுத்த வீட்டு நாயும் பொறந்துன்னு ஒரு வெள்ளத்துரை
சொன்னாராம். அதெப்படி ஒரு நாய் பொறந்த நாளில் நான் பிறந்திருக்கலாமுன்னு
தன் பிறந்த நாளையே மாத்தி வைச்சுகிட்டானாம் ஒருத்தன்.

ஆமாச்சு

unread,
Jan 12, 2008, 12:38:30 AM1/12/08
to மின்தமிழ்
On Jan 12, 9:45 am, "Kannan Natarajan" <thara...@gmail.com> wrote:
> சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை.
> சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள்
> தமிழ்ப் பெயர்களாக இல்லை? தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம்
> பெற்றுள்ளன. அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும்
> மாறான வடமொழி வடிவங்களே!
>

இதில் மராத்திய, நாயக்க, ராயராட்டசியில் நாமிருந்த காலங்களின் தாக்கம்
இருக்குமென்பது எம் யூகம்..

> இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு
> முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து
> தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப்
> பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில்
> ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி
> வைத்தார்.

இதில் இவர்களின் புலமைக்கும் சான்றாண்மைக்கும் மதிப்பளிக்கும் அதே
வேளையில் ஆங்கிலேயர்கள் நமது நாட்டைப் பற்றி, அறிவியலின் பெயரை வைத்து
கூறிய அபிப்ராயங்களை ஏற்கும் மனோபாவம் இவர்களிடத்தே இவர்கள் இயற்றிய
நூல்கள் சிலவற்றில் காணக்கிட்டியது.

> திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு தைத் திங்கள்
> முதல்நாள் பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும்
> அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள.

இதுதான் காரணமென்றால் :-) முதல் வருடத்தின் தை மாதத்தில் வள்ளுவர்
பிறந்தார் எனவும் கொள்ளலாமே!

ஆமாச்சு

unread,
Jan 12, 2008, 12:41:38 AM1/12/08
to மின்தமிழ்
பயனுள்ள தகவல்.

> உங்கள் இடது புறம் இருப்பது பழைய முறை, வலது புறம் இருப்பது புது முறை.
> *தை-- சுறவம்

சரி

> மாசி -- கும்பம்

?? கும்பம் இங்கேர்ந்து அங்கேப் போச்சா அங்கேர்ந்து இங்கே வந்ததா?

> ஆடி -- கடகம்

?? இங்கேர்ந்து அங்கேப் போச்சா அங்கேர்ந்து இங்கே வந்ததா?

அன்புடன்
ஆமாச்சு
ஆமாச்சு

Tirumurti Vasudevan

unread,
Jan 12, 2008, 12:43:36 AM1/12/08
to minT...@googlegroups.com
//பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது பின்னர் ஆவணி

ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல்
மாதமாக மாற்றப்பட்டது. எனவே இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம்
முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும்.//

ஆதாரம்?

//தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு வானியல் அடிப்படையும்
உண்டு. அன்றுதான் ஞாயிறு தனது தென் திசை நோக்கிய செலவை முடித்துக் கொண்டு
வட திசை நோக்கிய செலவை மகர இராசியில் இருந்து மேற்கொள்கிறது. //

இது அறிவியல் ரீதியாக தவறு.

வானியல் ரீதியாக கொள்வதானால் சித்திரை நக்ஷத்திரத்துக்கும்
வருடப்பிறப்பிற்கும் சம்பந்தம் உண்டு. விளக்கம் வேண்டினால் ஆங்கில
விக்கிபீடியா பார்க்கவும்.

//சித்திரை என்பபது விக்கிரமாதித்தன் பிறந்த நாளைக் குறிக்கிறது.. அவனின்
பிறந்த நாளை, தமிழன் ஏன் குறிப்பிட, கொண்டாட வேண்டும்.?//

ஹாஹாஹா

ஆராய்ச்சியாளரே! விக்கிரம ஆண்டு கணக்கு சந்திரன் கதியை ஒட்டி வருவது.
சித்திரை முதல் மாதமாக கொண்ட புழக்கத்தில் இருக்கும் புத்தாண்டு சூரிய
கதியை அடிப்படையாக கொண்டது.

திவா

வேந்தன் அரசு

unread,
Jan 12, 2008, 9:15:25 AM1/12/08
to minT...@googlegroups.com
>தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு வானியல் அடிப்படையும் உண்டு. அன்றுதான் ஞாயிறு தனது தென் திசை நோக்கிய செலவை முடித்துக் கொண்டு வட திசை நோக்கிய செலவை மகர இராசியில் இருந்து மேற்கொள்கிறது
 
அது டிசம்பர் 21 ஆல்லது 22 ல் அல்லவா?

Kannan Natarajan

unread,
Jan 12, 2008, 3:38:17 PM1/12/08
to minT...@googlegroups.com
From: Pathmarajah Nagalingam 
To: HinduC...@yahoogroups.com  
Sent: Saturday, January 12, 2008 6:55 AM
Subject: [HinduCalendar] Pongal to be made Tamil New Year day:
Karunanidhi


I am all for it! It makes eminent sense for a new year to begin
with the first day of spring. Right now we are celebrating tamil new
year on the sidereal vernal equinox, that is,14th April or 1st
Chittirai. This makes no seasonal sense. 

The Tamil calendar followed today is solar; the month begins on the
sameday as a Sankranti if it occurs before sunset. The Kali Era
(commencing3101 BCE - Year 0) is followed in TN, Bengal and
Bangladesh, along withthe Southern Jovian cycle. Whereas most of the
rest of India follow the Vikrama Era (57 CE - Year 0).

However we should inform the TN govt that the first day of spring
(northwards movement of the sun oruttarayana) is Dec 23rd, and not
14th Jan.

The rishis of the Vedic Age used different seasons to celebrate
different festivals,calculation of the seasons was very important
for them. Accordingly,they divided the year into the summer and
winter solstices. When the sun travelled towards the north, it was
the summer solstice; when it travelled towards the south, it was the
winter solstice. 

They divided the year into twelve parts: Tapah, Tapasya, Madhu,
Madhav,Shukra, Shuchi, Nabhas, Nabhasya, Is, Urja, Sahas and
Sahasya. Tapah to Suchi formed the summer solstice and Nabhas to
Sahasya the winter solstice. This kind of calculation continued to be
used till 1500 BC.

We should go back to these months beginning with Tapah, and the
first day of Tapah would be the New Year!  It synchronises with the
seasons.

The mention of Falguni (spring) full moon in Vedic literature
suggests that lunar months were also calculated at that time.
However, at that time,only the new moon, the full moon and the
eighth lunar day were calculated.

With the passage of time, more panchankams evolved.Around 1000 BC,
this types of almanac started its year with the summer solstice and
contained twelve months. In this, 30 lunar days and 27 stars were
counted. For almost 1500 years, this kind of almanac wasused for the
calculation of time and for religious and social occasions.

The almanac was 'improved' around the 4th and 5th centuries AD when
newer methods of calculations were adopted. Some of the people who
played aleading role in this were AryaBhatta, VarahaMihira, and
BrahmaGupta.They based the calculation of time on astrology and
added the position of stars and planets, their movements,
auspicious/inauspicious times,lunar days etc to the almanac.

The last revision of the panchangam was done in 1952 under the
aegis of the Indian government.Under the chairmanship of the famous
scientist Meghnad Saha, a Calendar Reform Committee was set up which
reviewed the existing almanacs andrecommended certain reforms. At
its recommendation, the publication ofthe panchankam was brought
under the purview of the government and from1957, almanacs are being
published by the Indian government in twelve languages.

Additional reading:

http://www.math.nus.edu.sg/aslaksen/projects/akshay-urops.pdf

Regards.

Pathma

ஆமாச்சு

unread,
Jan 13, 2008, 12:30:14 AM1/13/08
to மின்தமிழ்

வேந்தன் அரசு

unread,
Jan 13, 2008, 9:54:21 AM1/13/08
to minT...@googlegroups.com


On Jan 13, 2008 12:30 AM, ஆமாச்சு <shrira...@gmail.com> wrote:


http://www.thinnai.com/?module=displaystory&story_id=60604141&format=html
 
சங்க காலத்தில் சித்திரை மாதத்தில்தான் புத்தாண்டு கொண்டாடப்பட்டது என்பதற்கும் எந்த சான்றும் ஆசிரியர் காட்டவில்லை.  புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் கூட இல்லை.
 
தமிழ் நாட்டின் வரலாற்றுக்கு மகாபாரத்தை சுட்டுவது என்ன வாதம்னு தெரியலே
 
சூரியனை அடிப்படையாக கொண்ட தமிழ் மாதக்கணக்கின் புத்தாண்டு சூரியனின் இயக்கத்தை தொடர்புகொண்டதாக இருக்க வேண்டும்
 
டிசம்பர் 23 அலது 24 ல் சூரியன் தன்  தென்திசை செலவில் இருந்து மீள்கிறான்.  அந்த மீட்சியால் குளிர் குறைவது தொடங்கும். அந்த மீட்சிக்கு பின் சூரியன் புகும் முதல் ராசி சுறவம், என்றால் தை அன்று தான் புத்தாண்டு வரவேண்டும்
 

ஆமாச்சு

unread,
Jan 13, 2008, 12:38:30 PM1/13/08
to மின்தமிழ்


On Jan 13, 7:54 pm, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
> On Jan 13, 2008 12:30 AM, ஆமாச்சு <shriramad...@gmail.com> wrote:
>
>
>
> >http://www.thinnai.com/?module=displaystory&story_id=60604141&format=...
>
> சங்க காலத்தில் சித்திரை மாதத்தில்தான் புத்தாண்டு கொண்டாடப்பட்டது என்பதற்கும்
> எந்த சான்றும் ஆசிரியர் காட்டவில்லை. புத்தாண்டு கொண்டாடும் வழக்கம் கூட
> இல்லை.
>
> தமிழ் நாட்டின் வரலாற்றுக்கு மகாபாரத்தை சுட்டுவது என்ன வாதம்னு தெரியலே
>

தமிழர்கள் சித்தரைப் புத்தாண்டைக் கொண்டாட மற்றவர்கள் தையைப் புத்தாண்டாக
அறிவிப்பார்களாக! அப்போ ஆய்வாளர்கள் ஒன்று கூடி சித்திரையே நமது
புத்தாண்டுளன்னு சொல்லலாமுங்கோ! நமக்கும் மத்தவங்களுக்கும் எந்தத்
தொடர்பும் இல்லைன்னு காட்ட வேண்டி அவசியம் இருக்கு பாருங்க!

வேந்தன் அரசு

unread,
Jan 13, 2008, 1:01:33 PM1/13/08
to minT...@googlegroups.com


2008/1/13 ஆமாச்சு <shrira...@gmail.com>:
இந்தியா என்பது வடமொழி, வேதம் இவற்றின் பிறப்பால் என்று சொல்லுவோர் இருக்கும் வரை அதை எதிர்த்து போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.
 
ஒவ்வொரு தமிழ் சொல்லுக்கும் வேர் வடமொழிதான் என்று இன்னும் சொல்லி திரிவோர் இருக்காங்களே
 
 
 
 
 

venkatram dhivakar

unread,
Jan 14, 2008, 2:22:02 AM1/14/08
to minT...@googlegroups.com
>>>>ஒவ்வொரு தமிழ் சொல்லுக்கும் வேர் வடமொழிதான் என்று இன்னும் சொல்லி திரிவோர் இருக்காங்களே<<<<<<<
 
வேந்தரே!
 
அறியாதவர் இப்படி சொன்னால் செவியில் ஏன் போட்டுக்கொள்ளவேண்டும்.
 
அறிந்தவர்கள் குறிப்பாக நாயன்மார்களும், ஆழ்வார்களும் மிக அழகாக தமிழையும் வடமொழியையும் ஆண்டவனின் இருகண்கள் என சொல்லிவிட்டார்கள். இரண்டு கண்கள் இரண்டு காட்சி காணமுடியுமா?
 
ஒருவேளை வடமொழி பயின்ற தமிழர்கள் மேற்படி தமிழைக் குறை சொன்னாலும், பாவம் அவர்களுக்கு ஒரு கண்ணில் அதாவது  தமிழ்க்கண் பார்வையில் சற்று கோளாறு - என்று மன்னித்துவிடுங்கள்..
 
திவாகர்
 

Tirumurti Vasudevan

unread,
Jan 14, 2008, 2:45:56 AM1/14/08
to minT...@googlegroups.com
அறியா வினா
தமிழில் வேர் சொற்களுக்கு அகராதி உண்டா?

திவா

ஆமாச்சு

unread,
Jan 14, 2008, 6:35:35 AM1/14/08
to மின்தமிழ்


On Jan 14, 12:45 pm, "Tirumurti Vasudevan" <agnih...@gmail.com> wrote:
> அறியா வினா
> தமிழில் வேர் சொற்களுக்கு அகராதி உண்டா?
>

அவற்றுக்கு நிகண்டுகள் என்று பெயர். திவாகர நிகண்டு, சூளாமணி நிகண்டு
இப்படி பல உண்டு.. மதுரைத் திட்டத்தில் இரண்டு நிகண்டுகள் இருக்கிறது..
தமிழ் கற்கும் முறைதனை சுட்டும் போது "நிகண்டு கற்று.." எனத் துவங்கும்
செய்யுளை வாசித்த நினைவிருக்கு.. மீண்டும் வாசிக்க நேரும் போது அறியத்
தருகிறேன்..

Kannan Natarajan

unread,
Jan 14, 2008, 4:32:31 PM1/14/08
to minT...@googlegroups.com
இன்று பொங்கல் திருநாள். தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட சூரியக் கடவுள் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தரும் சமூக, கலாசாரத் திருநாள். இந்த ஆண்டு தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் ஆணைப்படி சமத்துவப் பொங்கல் தினம் மாநிலம் எங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது முக்கியமான திருப்புமுனை. இனி வரும் ஆண்டுகளில் தமிழர்தம் ஆண்டு தை மாதத்திலிருந்து தொடங்கும் என்பதும் நல்ல அறிகுறி.

"தூரத்தில் நெருப்பை வைத்து சாரத்தைத் தருகின்ற' சூரியக் கடவுளுக்கு புதுப்பானை வைத்து, மஞ்சளும், இஞ்சியும் சேர்த்து மங்கல நாணைக் கட்டி, பாலையும் பச்சரிசியையும் பக்குவமாய் கூட்டி, கரும்புத் தோரணத்தின் கீழ், சூரியக் கதிர் படும் இடத்தில் வெட்டவெளியில் உற்றார் உறவினர் புடைசூழ பொங்கலிட்டு மகிழும் நன்னாளே பொங்கல் திருநாள்.

தென்னாட்டில் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் சூரியன், வடக்கு நோக்கி நகர்ந்து அங்கு குளிரில் வாடும் வடவர்களின் வாட்டத்தைப் போக்கத் தொடங்கும் (உத்தராயண) முதல் நாள்.

சூரியனுக்கும், சூரியனின் துணையோடு குலம் விளங்க அரிசி, காய்கறி, பழங்களைச் சாகுபடி செய்து தரும் தலைமகன்களாம் உழவர்களுக்கும், அந்த உழவுத்தொழிலுக்கு உற்ற துணையாக விளங்கும் ஆவினங்களுக்கும் ஒருங்கே நன்றி பாராட்டும் ஒப்பற்ற திருநாள்.

பொங்கலிடவும், அந்தப் பால் பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று உற்சாகக் கூச்சலிடவும், பொங்கிய பொங்கலை உற்றார் -உறவினர், நண்பர்களுடன் பகிர்ந்து உண்ணவும் தமிழர்கள் ஒதுக்கிக் கொண்டுள்ள நன்னாள்.

புத்தாடை அணிந்து, புது நகைகள் பூட்டி, எந்தத் திசையில் திரும்பினாலும் உற்சாகமும் உயிர்த்துடிப்புமாய் தமிழ் இனம் மகிழும் நாள் பொங்கல்.

பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. சங்கமம் என்ற சிறப்புக்கலை நிகழ்ச்சிகள் அவற்றில் குறிப்பிடத்தக்கது. அத்துடன் பொங்கல் கவியரங்கம், பட்டிமன்றங்கள், சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்க நாட்டிய விழா, சிறப்பு இசை நிகழ்ச்சி என்று பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சமத்துவப் பொங்கல்: முதல்வர் அறிவித்தபடி அரசு அலுவலகங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் சமத்துவப் பொங்கல் தினம் வெகு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது. கரும்பு, வாழை, மஞ்சள், இஞ்சி, பச்சரிசி, பால் என்று அதிகாரிகளும் வாங்கிவந்து பொங்கல் சமைத்து அனைவருடனும் பகிர்ந்துகொண்டிருப்பது உண்மையிலேயே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற மதப் பாகுபாடு இல்லாமல் அனைத்து மதத்தவரும், சாதிகளைச் சேர்ந்தவர்களும் தமிழர்கள் என்ற ஒரே இனமாய் திரண்டு கொண்டாடி மகிழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு இருவேறு முக்கியத்துவங்களும் இருக்கிறது. ஒன்று இனிப்பானது, மற்றொன்று (இன்றுவரை) கசப்பானது.

தை மாத முதல் நாளையே இனி திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாளாகக் கொள்ளலாம் என்ற முடிவு இனிப்பானது. அந்த முயற்சி தொடர்ந்து மக்களிடையே பழக்கத்துக்குவந்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

ஜல்லிக்கட்டு: தமிழ் இனத்துக்கே தனிச் சொத்தான காளையை அடக்கும் மஞ்சு விரட்டு நிகழ்ச்சிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது கசப்பான செய்தி. அத் தடையை நீக்க தமிழக அரசின் சார்பில் மனுச் செய்யப்பட்டிருக்கிறது. தமிழர்தம் மனம் குளிரும் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

வாழ்த்து அட்டைகள் மூலம் பொங்கல் வாழ்த்தை அனுப்பிய காலம் மாறி, வீதியில் வண்ணக் கோலம் மூலம் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பழக்கம் தமிழ்நாடு முழுக்க பரவியிருக்கிறது. இனி தமிழர்தம் வாழ்வில் ஒற்றுமையும் ஆக்கப்பூர்வ செயல்களும் அதிகரிக்க பொங்கல் திருநாள் வழிகோல வேண்டும்.

இங்குள்ள தமிழர்கள் மட்டும் அல்ல ஈழம், மலேசியா போன்ற வெளிநாட்டுத் தமிழர்களும் இனிதாக வாழும் வழி ஏற்படட்டும்.

நன்றி: தினமணி - http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080114111543&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=

2008/1/14 ஆமாச்சு <shrira...@gmail.com>:

Kannan Natarajan

unread,
Jan 14, 2008, 4:36:46 PM1/14/08
to minT...@googlegroups.com
தமிழ்ச் சொற்கள் எப்படி உருவாயின, அவை எந்தெந்த வடிவங்களைப் பெற்றன, அவற்றின் வெவ்வேறு பொருள் என்ன என்பதையெல்லாம் விவரிக்கும் நூலைத் தமிழக முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வெளியிடுகிறார்.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அறிவியல் அணுகுமுறையில் தமிழ்ச் சொற்கள் எவ்வாறு உருவாகின்றன, எந்தெந்த இடத்தில் எந்தெந்த வகையில் அவை அமைகின்றன என்ற பல்வேறு பொருள்களை இந்த நூல்கள் விவரிக்கும். ஆய்வாளர்கள், மொழியியல் வல்லுநர்களுக்கு இந்நூல்கள் பெரிதும் உதவும்.

மேலும் இச்செய்தியைப் பார்க்க,நன்றி - தினமணி - http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNM20080114130520&Title=Chennai+Page&lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist =

 

Narayanan Kannan

unread,
Jan 14, 2008, 7:56:40 PM1/14/08
to minT...@googlegroups.com
அடடா!

இந்தச் 'சங்கமம்' நிகழ்ச்சி பற்றி புகைப்படங்களோ அல்லது வீடியோப் படங்களோ
(YouTube) இருந்தால் அனுப்பி வைக்கவும்!!

பொங்கலோ பொங்கல்!!

கண்ணன்

2008/1/11 Kannan Natarajan <thar...@gmail.com>:
> தை மாத முதல் நாளை தமிழ் புத்தாண்டாக விரைவில் அறிவிக்கப்படும் என்று முதல்வர்
> கருணாநிதி தெரிவித்தார்.
>
> சென்னை சங்கமம் கலை விழாவை வியாழக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது:
>

Kannan Natarajan

unread,
Jan 14, 2008, 8:04:00 PM1/14/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
தமிழ் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் - அருட்தந்தை காஸ்பர் தான் சங்கமத்தின் அமைப்பாளரும். தமிழ் மையம் இணையத்தில் உள்ளதாமே!
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

Kannan Natarajan

unread,
Jan 14, 2008, 8:05:26 PM1/14/08
to minT...@googlegroups.com
இந்த பக்கத்தையும் பாருங்கள்.
 

Kannan Natarajan

unread,
Jan 14, 2008, 11:20:53 PM1/14/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
கரும்பு,இஞ்சி,மஞ்சள் இவை எந்த நாட்டில் முதலில் பயிராக விளைந்தன? அதியமான் மரபினர் கரும்புப் பயிரை வேறெங்கிருந்தோ கொண்டுவந்ததாக ஒளவையார் பாடியுள்ளாரே!
 
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் - புறம் 99 & 392
 
இதை விளக்கமுடியுமா!

Narayanan Kannan

unread,
Jan 14, 2008, 11:25:45 PM1/14/08
to minT...@googlegroups.com
2008/1/15 Kannan Natarajan <thar...@gmail.com>:

> வணக்கம்,
>
> கரும்பு,இஞ்சி,மஞ்சள் இவை எந்த நாட்டில் முதலில் பயிராக விளைந்தன? அதியமான்
> மரபினர் கரும்புப் பயிரை வேறெங்கிருந்தோ கொண்டுவந்ததாக ஒளவையார் பாடியுள்ளாரே!
>
> அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் - புறம் 99 & 392
>

நாம் கிழக்கேதான் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது.
நெல் ஆசியப்பயிர். கன்னலும் ஆசியப் பயிராக இருக்க வாய்ப்புண்டு.

கண்ணன்

வேந்தன் அரசு

unread,
Jan 15, 2008, 9:28:44 AM1/15/08
to minT...@googlegroups.com

 

 
2008/1/14 Narayanan Kannan <nka...@gmail.com>:

2008/1/15 Kannan Natarajan <thar...@gmail.com>:
> வணக்கம்,
>
> கரும்பு,இஞ்சி,மஞ்சள் இவை எந்த நாட்டில் முதலில் பயிராக விளைந்தன? அதியமான்
> மரபினர் கரும்புப் பயிரை வேறெங்கிருந்தோ கொண்டுவந்ததாக ஒளவையார் பாடியுள்ளாரே!
>
> அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் - புறம் 99 & 392
>
கருப்பாக இருப்பதால் கரும்பு, கன்னல் என்றும் பேர் வைத்தனர்
 
வடமொழியில் கரும்புக்கு என்ன பேர் (காளம், கிருஷ்ணம் என்று பேரா?)
 
கரும்பு, கன்னல் காளம், கிருஷ்ணம் எல்லாம் ககரத்தில் இருந்து பிறந்த்ருக்கலாம்
 
காக்கை கருப்பாய் இருப்பதால் கருப்பு ககரத்தில் இருந்து பிறந்திருக்க்லாம் 
 
 
அதே போல் இரா- இருள் - இரும்பு
 

Kannan Natarajan

unread,
Jan 16, 2008, 4:03:54 AM1/16/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
கரும்பு என்பது சங்க காலத்திலேயே பயன்கொண்ட அரிய சொல்லாகத் திகழ்கிறது! "கரு" என்பது அரிய, விரும்பத்தக்க என்ற பொருளுடையதாக இருக்கலாம்! அயற்சொல் மருவிய வடிவெனக் கருதலாமா?(யவனர் போல)
 
வடமொழியில் "இக் ஷு" என்று அழைக்கப்படுகிறது,அதை,தமிழில் இக்கு என்பர். அயல்மொழிகளில்,கரும்புக்கு என்ன பெயர் என்று காணவேண்டும். இந்தியாவின் வடபுலமோ,தென்கிழக்கு ஆசிய நாடோ,அதியமானின் முன்னோர் சென்ற அல்லது அறிந்த நாடாகயிருக்க வேண்டும். கி.மு 326ல் அலெக்சாண்டர் இந்தியாவின் வடமாநிலத்தில்;இந்த இனிப்பு முங்கிலைக் கண்டனராம்!( http://www.siu.edu/~ebl/leaflets/sugar.htm )
 
கரும்பின் நிறம்  இளஞ்செம்மை நிறமாதலால்,கரிய நிறத்தை காரணமாகச் சொல்ல முடியவில்லை.
 
இஞ்சி - சீனவில் "ஜியாங்"(Jiang) எனத் தோன்றி,ஆங்கிலத்தில் Zingiber என ஆயிற்று. சுக்கு - உலர்ந்தது என்று பொருள்.(http://en.wikipedia.org/wiki/Ginger)
 
மஞ்சளும் - தென்னாசியப் பயிர் தான். மங்கல் நிறமே மஞ்சள்,மங்கலம் என்று ஆகியிருக்க வேண்டும்.தெலுங்கில், "பசுப்பு" என்று பெயர்.பழம்பெரும் நடிகை கண்ணாம்பாவை - "பசுப்பு"லேடி என்று அழைத்தார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். ( http://en.wikipedia.org/wiki/Turmeric)
 
ஆராய,ஆராய ஆழங்காண முடியவில்லை!

Tirumurti Vasudevan

unread,
Jan 16, 2008, 5:33:45 AM1/16/08
to minT...@googlegroups.com
தில்லியில் படித்த காலத்தில் "கன்னே கா ரஸ்" என தெருவில் விற்பார்கள்.
கரும்பு சாறுதான்!
திவா

Kannan Natarajan

unread,
Jan 16, 2008, 6:35:36 AM1/16/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
"கன்னே கா ரஸ்" - அப்படியானால், "கன்னல் இரசம்" தான். கன்னல் என்ற சொல் தமிழ்ச்சொல்லாயிற்றே! ஆனால், கரும்பு விளைச்சல் வட மாநிலங்களில் தொடங்கியது என்கிறார்களே! வடபுலத்தில் இருந்து என்று எழுதாமல், இடம் குறிப்பிடாமல், ஒளவையார் பாடல் இருக்கிறது!

Narayanan Kannan

unread,
Jan 16, 2008, 7:28:09 AM1/16/08
to minT...@googlegroups.com
On 1/16/08, Kannan Natarajan <thar...@gmail.com> wrote:
> வணக்கம்,
>
> கரும்பு என்பது சங்க காலத்திலேயே பயன்கொண்ட அரிய சொல்லாகத் திகழ்கிறது! "கரு"
> என்பது அரிய, விரும்பத்தக்க என்ற பொருளுடையதாக இருக்கலாம்! அயற்சொல் மருவிய
> வடிவெனக் கருதலாமா?(யவனர் போல)
>

கன்னல் திராவிடப் பயிர் இல்லை என்று சொல்கிறது கீழுள்ள கட்டுரை:

SUGARCANE : HISTORY : IN THE WORLD

Sweetness which came from Asia

The word from which the name sugar originated is, probably, "grain",
"sarkar", in Sanskrit.

In the eastern part of India, sugar was called "shekar", while the
Arab people knew it as "al zucar", which was transformed into the
Spanish "azucar", and from there, to "açúcar", in Portuguese.

In France, sugar is called "sucre" and, in Germany, "zucker", and from
there into English "sugar".

An extremely controversial subject is that of defining how long
sugarcane has been present in the world - between 12,000 years and
6,000 years. The place in which the plant germinated for the first
time is also unknown, due to the quantity of hybrid Gramíneas that
exist and the lack of documentation certifying its origin.

One line of researchers considers that sugarcane first grew in
Polynesia; some risk Papua New Guinea as the cradle of the Gramínea.
Scholars who admit that cane was known 6,000 years ago indicate
Indonesia, the Philippines and North Africa as natural expansions in
the 2000 years after the plant was first recorded.

The majority of historians, however, accept the theory that sugarcane
appeared between 10,000 and 12,000 years ago and set the date of 3000
B.C. for cane to have traveled from the Malaysian Peninsula and
Indochina to the Bay of Bengal.

But there is one fact about which all historians agree: sugarcane's
Asian origin.

It was introduced into China in about 800 B.C. and raw sugar was
already produced in 400 B.C. However, it was only from 700 A.D. that
it began to be traded. There are reports of its westward expansion,
reaching India and Persia, which date from 510 B.C., from the Persian
military expedition by Emperor Darius to India. The cane and its sweet
juice were kept secret, because the product from the plant was rare
and luxurious, principally for the people removed from the trade among
the Asians.

In 327 B.C., Alexander "The Great" had witnessed the consumption of
cane in India. His admiral, Nearchos, said that he had found " a cane
which made honey without bees", and scribes observed the Indians while
they chewed the Gramíneae. Theopharstus, in 287 B.C., described the
marvel as " Honey that is in a staff ".

நன்றி: http://www.unica.com.br/i_pages/cana_historia_mundo.asp

வேந்தன் அரசு

unread,
Jan 16, 2008, 2:17:39 PM1/16/08
to minT...@googlegroups.com
எந்த நாட்டில் கரும்பு இனங்களில் எண்ணிக்கை அதிகமோ அந்த நாடுதான் அதன் தாயகமாக் இருக்கும்.

Kannan Natarajan

unread,
Jan 16, 2008, 6:01:38 PM1/16/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
திருவள்ளுவருக்கு கரும்பு தெரிகிறது, இனிப்பு தெரியவில்லை!
 
"சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
 கொல்லப் பயன்படும் கீழ்." - 1078.
 
பாலோடு தேனைக் கலக்கிறார்,
 
"பாலொடு தான்கலந் தற்றே; பணிமொழி
 வாலெயிறு ஊறிய நீர்." 1121
 
தேன் தெரிந்த மணிவாசகர்,கறந்த பாலில் கன்னலையும்,நெய்யினையும்க் கலக்கிறார்.
 
"கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தார் போல்ச்
 சிறந்து அடியார் சிந்தனையும் தேன் ஊறி நின்று," சிவபுராணம்
 
தங்கள் தகவல் ஆழமானது.அடிக்கடி பயன்படுத்துவது சர்க்கரை, ஆனால், எங்கள் பாட்டி "அஸ்கா","சீனி" என்று சொல்வது நினைவிற்கு வருகிறது. இம்மூன்று சொற்களும் மறுவியச்சொற்களாக உள்ளன.
 
வானவர் நாடு என்றும், வானா எனப்படும் ஜாவாவைக் குறிப்பிடுவது, தாங்கள் குறிப்பிடுவது போல, கீழே நாட்டிலிருந்து, இந்தப் பயிர் வந்ததாக நானும் படித்திருக்கிறேன்.கிழக்காசிய நாடுகளின் பெயர்களை சங்ககாலத்தினர் எப்படி வழங்கினர் என்று தெரியவில்லையே!
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்
 

Kannan Natarajan

unread,
Jan 16, 2008, 6:20:01 PM1/16/08
to minT...@googlegroups.com
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை வந்ததாலும், எருமை மாடு மீது பிறந்ததாலும், குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு ஆகாது என்று திடீரென்று பீதி கிளம்பியதால், அதிர்ச்சியும், பரபரப்பும் அடைந்த பெண்கள், வீட்டின் முன்பு தேங்காயை உடைத்து, அதில் நெய் தீபம் ஏற்றி, குல தெய்வத்தை நினைத்து மனம் உருக வழிபட்டனர்.
 
முதலில் சென்னையில் உருவான பீதியும், பரபரப்பும் சில மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவி, பக்கத்தில் உள்ள புதுச்சேரி மாநிலத்தையும் எட்டிப் பிடித்தது. தமிழகத்தில் அவ்வப்போது ஏதாவது பீதியும், புரளியும் வந்து விடுகின்றன. குறிப்பாக, பண்டிகை நாட்களும், மாதப் பிறப்பு, ஆண்டு பிறப்பு போன்ற நாட்கள் வருகின்ற கிழமைகளை வைத்து, ஏதாவது பீதி கிளம்பி விடுகிறது. குடும்பத்தில் ஆண்களுக்கு ஆகாது என்றும், தங்கைகள் இருந்தால் மஞ்சள் சேலை எடுத்துக் கொடுக்க வேண்டும், பச்சை சேலை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று பீதிகளும், வதந்திகளும் பலவிதம். ஆனாலும், எதையும் மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வதில்லை.

தங்களது காதுகளுக்கு குறிப்பிட்ட தகவல் வந்து சேர்ந்தால் போதும், அடுத்த நிமிடமே தோஷத்தை கழிப்பதற்கான வேலைகளை கச்சிதமாக நிறைவேற்றி விடுகின்றனர். இந்த ஆண்டு பொங்கல் செவ்வாய்க்கிழமை வந்ததால், குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு ஆகாது என்றும், இல்லை... இல்லை... எருமை மீது பொங்கல் பிறந்திருக்கிறது, அதனால், ஆண்களுக்கு ஆகாது என்றும் நேற்று முன்தினம் இரவு முதலில் சென்னையில் பீதி கிளம்பியது. எருமை மீது பொங்கல் பிறந்திருப்பதால், வீட்டின் முன்பு தேங்காய் உடைத்து, அதில் நெய் தீபம் ஏற்றி குல தெய்வத்தை நினைத்து மனம் உருக வழிபட்டால் தோஷம் நீங்கும் என்று சில ஜோதிடர்கள் கூறினர்.

இந்த தகவல், சென்னை நகர மக்களிடையே காட்டுத் தீ போல் பரவியது. அடுத்த சில மணி நேரத்தில் நகர் முழுவதும் தகவல் பரவி, பெண்கள் அனைவரும் வீட்டின் முன்பு தேங்காயை உடைத்து, நெய் தீபம் ஏற்றி குல தெய்வத்தை வழிபட்டனர். கிண்டி, அசோக் நகர், அம்பாள் நகர், ராஜிவ் காந்தி நகர், அயனாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பெண்கள் தோஷ நிவர்த்தி வழிபாட்டை நிறைவேற்றினர். அதிலும், குடும்பத்தில் ஒரு ஆண் இருந்தால் ஒரு தேங்காயை உடைத்து வழிபட வேண்டும் என்றும், இரண்டு ஆண்கள் இருந்தால் இரண்டு தேங்காய்களை உடைத்து நெய் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் பீதி பரவியது. அதன்படி பல இடங்களில் இரண்டு, மூன்று தேங்காய்களை எல்லாம் உடைத்து தீபம் ஏற்றினர்.

ஆண்களுக்கு ஆகாத தகவல், சென்னைக்கு பக்கத்தில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் தாவியது. அவர்கள் சும்மா இருப்பார்களா? அம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், பதற்றத்துடன் வீட்டின் வாசலில் தேங்காயை உடைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் மணவாள நகர், பொன்னேரி, மீஞ்சூர், காரனோடை, சோழவரம், பேரம்பாக்கம், கடம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென பல வீடுகளின் தெரு வாசலில் தேங்காய் உடைத்து தீபம் ஏற்றப்பட்டது. சில இடங்களில் அரிசியின் மேல் வாழை இலை வைத்து அதன் மீது அகல் தீபம் ஏற்றப்பட்டது. இது குறித்து அப்பகுதியில் விசாரித்த போது, சூஇந்த ஆண்டு பொங்கல் தினம் செவ்வாய் கிழமை பிறந்துள்ளது. இது ஆண் பிள்ளைகளுக்கு ஆகாது; தோஷம் ஏற்படும். அதற்கு பரிகாரமாகத் தான் தெரு வாசலில் தேங்காய் உடைத்து விளக்குகள் ஏற்றுகிறோம்' என்றனர்.

இதையறிந்த சிலர், மற்ற வீடுகளின் கதவுகளைத் தட்டி வதந்தியைப் பரப்பினர். சிலர், வெளியூரில் உள்ள தங்களது உறவினர்களுக்கு போன் மூலம் வதந்தியை பரப்பினர். இந்த பீதி அப்படியே காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பரவியது. இப்படியே வேலுார், திருவண்ணாமலை உட்பட மாநிலம் முழுவதும் பரவியது.பீதி தகவல் பலரது மூலம் பரவியதால், பரிகார பூஜைகளின் தன்மையும் பல இடங்களில் மாறி, மாறி இருந்தன. சென்னையில் தேங்காயை உடைத்து, அதன் இரண்டு மூடிகளிலும் நெய்யை ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டனர். வேலுார், திருவண்ணாமலை மாவட் டங்களில் வாழை இலையை விரித்து, அதன் மேல் பச்சை அரிசியை பரப்பி, அதற்கு மேல் தேங்காயை வைத்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

திருவண்ணாமலை, விழுப்புரம் என்று அப்படியே பக்கத்தில் உள்ள புதுச்சேரி மாநிலத்திலும் பீதி பரவியது. லாஸ்பேட்டை, முதலியார்பேட்டை, உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, சாரம், தேங்காய் திட்டு என பல்வேறு பகுதிகளிலும் அங்கும் பெண்கள் தேங்காயை உடைத்து தீபம் ஏற்றி வழிபட்டனர். பொங்கல் பிறந்த தினம் ஆண்களுக்கு ஆகிறதோ; இல்லையோ, நேற்று முன்தினம் பரவிய பீதியால் தேங்காய், நெய் வியாபாரம் மட்டும் அமோகமாக நடந்துள்ளது.
 
நன்றி: தினமலர் - http://www.dinamalar.com/

Narayanan Kannan

unread,
Jan 16, 2008, 7:17:51 PM1/16/08
to minT...@googlegroups.com
2008/1/17 Kannan Natarajan <thar...@gmail.com>:

>கிழக்காசிய நாடுகளின் பெயர்களை சங்ககாலத்தினர் எப்படி
> வழங்கினர் என்று தெரியவில்லையே!
>

சங்காலத்திற்கு ஏன் போக வேண்டும். ஆழ்வார்கள் காலத்தில் எப்படி
வழங்கினர்? உலகின் ஆகப்பெரிய திருமால் கோயில் கம்போடியாவில்
அங்கோர்வாட்டில் இருக்கிறது. ஆழ்வார்கள் அதைப் பாடாமல்
இருந்திருப்பார்களா? அப்படியெனில் என்ன பெயர் சொல்லி அந்நாட்டை
அழைத்தனர்? "கம்போஜம்" "கம்போசம்" ? அப்படியொரு சொல்லாட்சி ஆழ்வார்
பாடல்களில் இருக்கிறதா?

சங்கத்தவர் ரோம, கிரேக்க நாடுகளை எப்படி அழைத்தனர்? "பட்டுப்பாதை"
பன்னெடுங்காலமாக இந்தியாவை கிழக்கு, மேற்கு என்று சேர்கிறது!

கண்ணன்

kra narasiah

unread,
Jan 17, 2008, 12:37:29 AM1/17/08
to minT...@googlegroups.com
During my research for kadal vazhi vanikam, I have not seen any reference to Eastern countries against trade though.
But West, Yes see akananuuru 149
which says
"yavanar tantha vinaimaN nankalam
ponnodu vanthu kaRiyodu peyarum
valangezhu musiRi "

Silappathikaram also mentions only Yavanar

narasiah

2008/1/17 Kannan Natarajan <thar...@gmail.com>:

கண்ணன்

____________________________________________________________________________________
Never miss a thing. Make Yahoo your home page.
http://www.yahoo.com/r/hs

naa.g...@gmail.com

unread,
Jan 17, 2008, 6:32:45 AM1/17/08
to மின்தமிழ்


There is mention of SE Asia in sangam literature. I remeber reading it
in:
See R. Raghavaiyangar's book on Tamil history, Annamalai university.
There is mention of Yava-th-thiivu (Java).

(That time, there was no press at Annamalai. Swami Vipulanandar's
Yaazh nuul & RR's books
were printed by Swami Chidbhavanandar at Tirpparaaythurai.

BTW, Chidbhavanandar's Geethaa commentary in Tamil was popular,
(he's my mother's relative - of course, in his puuvaasiramam. & a
chiththappaa of Bharatratna C. Subramaniam).

I'll give Ragavaiyangar's quote soon,
N. Ganesan

On Jan 16, 11:37 pm, kra narasiah <naras...@yahoo.com> wrote:
> During my research for kadal vazhi vanikam, I have not seen any reference to Eastern countries against trade though.
> But West, Yes see akananuuru 149
> which says
> "yavanar tantha vinaimaN nankalam
> ponnodu vanthu kaRiyodu peyarum
> valangezhu musiRi "  
>
> Silappathikaram also mentions only Yavanar
>
> narasiah
>
>
>
> ----- Original Message ----
> From: Narayanan Kannan <nkan...@gmail.com>
> To: minT...@googlegroups.com
> Sent: Thursday, January 17, 2008 5:47:51 AM
> Subject: [MinTamil] Re: தை பிறந்தால் - ஆண்டு பிறக்கும்!
>
> 2008/1/17 Kannan Natarajan <thara...@gmail.com>:
>
> >கிழக்காசிய நாடுகளின் பெயர்களை சங்ககாலத்தினர் எப்படி
> > வழங்கினர் என்று தெரியவில்லையே!
>
> சங்காலத்திற்கு ஏன் போக வேண்டும். ஆழ்வார்கள் காலத்தில் எப்படி
> வழங்கினர்? உலகின் ஆகப்பெரிய திருமால் கோயில் கம்போடியாவில்
> அங்கோர்வாட்டில் இருக்கிறது. ஆழ்வார்கள் அதைப் பாடாமல்
> இருந்திருப்பார்களா? அப்படியெனில் என்ன பெயர் சொல்லி அந்நாட்டை
> அழைத்தனர்?  "கம்போஜம்" "கம்போசம்" ? அப்படியொரு சொல்லாட்சி ஆழ்வார்
> பாடல்களில் இருக்கிறதா?
>
> சங்கத்தவர் ரோம, கிரேக்க நாடுகளை எப்படி அழைத்தனர்? "பட்டுப்பாதை"
> பன்னெடுங்காலமாக இந்தியாவை கிழக்கு, மேற்கு என்று சேர்கிறது!
>
> கண்ணன்
>
>       ___________________________________________________________________________­_________
> Never miss a thing.  Make Yahoo your home page.http://www.yahoo.com/r/hs- Hide quoted text -
>
> - Show quoted text -

Kannan Natarajan

unread,
Jan 17, 2008, 4:55:49 PM1/17/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
நன்றி திருவாளர்கள் நாராயணன் கண்ணன்,நரசைய்யா,நா.கணேசன்.
 
மாகவி பாரதியார் ஆதரங்களை எப்படியாவது சேகரித்து,வைத்துக்கொண்டே எழுதுவார் என்பார்கள். செய்தியாசிரியராகவும் இருந்ததால் போலும். பின்வரும் அவரின் "செந்தமிழ் நாடு", "தமிழ்ச் சாதி"பாடல் வரிகளைக் குறிக்க விரும்புகிறேன்."பேரனுக்கு பேரன் முகத்தைப் பார்த்துப் பாட்டனார் அடையாளத்தைக் காண்பதைப் போன்ற முயற்சி தான்! "கடலாழம் கண்ட நல்லறிஞர்" நரசைய்யாவும், இக்குழுமத்தில் மடலாடும் மதிவாணர்களும் உண்மைகளை அகழ்ந்து எடுக்கலாம்.
 
"சிங்களம் புட்பகம் சாவகம் - ஆதிய
       தீவு பலவினுஞ் சென்றேறி."
 சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
       தேசம் பலவும் புகழ் வீசி."    - செந்தமிழ் நாடு
 
"ஆப்பிரிக் கத்துக் காப்பிரிநாட்டிலும்
 தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
 பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
 பற்பல தீவினும் பரவி....."              - தமிழ்ச் சாதி
 
ஊணர்,பிஜி தீவுகள்,மிளேச்சர்,சோநகர் என்றும் சில இடங்களில் வருகின்றன. பாரதியாரின் உரைநடைப் புதையலைத் தேடவில்லை. "யவனர்" என்ற பெயர் வடமொழியிலும் உள்ளது.அது யாரை அங்கே குறிக்கிறது என்று தெளிவாகத் தெரியவில்லை!

kra narasiah

unread,
Jan 17, 2008, 6:55:18 PM1/17/08
to minT...@googlegroups.com
As far as my studies go, Yavana is a word rooted from Ionian: a member of of an ancient Hellenic people inhabiting Attica, parts of western Asia Minor, and the Aegean islands, from pre classical times. Ionia, is the central part of the west coast of Asia Minor
For Indians, any one from west was Ionian or in Tamil Yavanar
narasiah

----- Original Message ----
From: Kannan Natarajan <thar...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Friday, January 18, 2008 3:25:49 AM
Subject: [MinTamil] Re: தை பிறந்தால் - ஆண்டு பிறக்கும்!



Looking for last minute shopping deals? Find them fast with Yahoo! Search.

venkatram dhivakar

unread,
Jan 17, 2008, 11:36:24 PM1/17/08
to minT...@googlegroups.com
Please browse the following site ' an open letter to chief Minister' by Jayasree Saranathan.
 
Dhivakar

 

Kannan Natarajan

unread,
Jan 18, 2008, 12:54:53 AM1/18/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
"ஐயோனியா" என்ற பகுதியில் வாழ்ந்த மக்கள்,தாம் பேசும் மொழியினால் "ஐயோனியர்" எனப்பட்டனர். சங்ககாலத்தில்,எந்த இடத்திலும் யவனர் பேசிய மொழி பற்றிய குறிப்பில்லை! வடமொழியில் அந்தச் சொல்லுக்கு எப்படிப் பொருள் கண்டார்கள் என்று அறியமுடியவில்லை! மேலும்,தொல்காப்பியத்தின் படி "யகரத்தில்" தொடங்கும் தமிழ்ச்சொல்,தொலகாப்பியரிடம் இல்லை."அவனர்" என்றாவது சொல்லியிருக்கலாம்! ஐயோனிய நாட்டிலிருந்து வீரர்கள் பாரத நாட்டின் மேலைக் கடற்கரைக்குச் சென்ற குறிப்பில்லை!
 
பாண்டியன் தூதன், உரோமாபுரிக்குச் சென்றதாக இலக்கியக்குறிப்பில்லை! பொதுவாக அயல்நாட்டவரை, இந்தப் பெயரில்(யவனர்),அக்காலத்தில் அழைத்தார்களா?
 
புராணங்களில் ஐம்பத்தாறு தேசங்கள் என்ற வரிசையில், அயல்நாடுகளின் பெயர்களும் சேர்ந்திருக்கலாம்! இதற்கு ஆங்கில நூல்கள் தான் நமக்குத் துணை செய்ய வேண்டும். நீங்கள் சொன்னக் குறிப்பைத் தமிழில் எழுதியிருக்கிறார்கள் (முனைவர் துரை அரங்கணார் - பழந்தமிழ்ச் சிறப்புப் பெயர்கள்). கடலோடியாகிய உங்கள் கண்டுபிடிப்பு, புதிய வளம் சேர்க்கும்.
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

Kannan Natarajan

unread,
Jan 18, 2008, 1:57:30 AM1/18/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
ஐம்பதிற்கு மேற்பட்ட தமிழறிஞர்கள் அறுவது ஆண்டுக்கு முன்னர், திருவள்ளுவர் ஆண்டையும், தைத் திங்களை ஆண்டுப்பிறப்பாகவும் ஒரு தீர்மானம் செய்தனர். வடமொழி, தமிழ் மொழி, ஆங்கிலம் ஆய்ந்த பன்மொழியறிஞர்களும் பங்குப்பெற்றிருந்தனர். அந்த முடிவைத் தான் இப்போது அறிவித்திருக்கிறார்கள். இதில் தமிழக முதலமைச்சருக்கு தனிக்கருத்து இருக்கும் எனத் தோன்றவில்லை.
 
புதுமைகளை வரவேற்கத்தான் வேண்டும்."சூரியனை நமஸ்கரிப்பது" என்ற வகையில் சொன்னது தான்,"ஞாயிறு போற்றுதும்" என்ற சிலப்பதிகாரத் தொடர்.யோகம் அவர் தொடர்ந்து செய்கிறாரா என்று தெரியவில்லை! அவருடைய 'உத்தி' யோகம், தியாகம் நாம் அறிந்தவை. உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும் ஒன்றாக இணைவதாக, உலகம் தோன்றிய நாள் முதல் அவரவர்கள் முடிந்தவரை,"தூங்கினவன் தோலில் திரித்தவரைக் கயிறாக நீண்டு வருகிறது!" யோகப் பயிற்சியைத் தடைசெய்த நாடுகள் சில உள்ளன! ( http://clericalwhispers.blogspot.com/2007/09/uk-vicars-yoga-ban-stems-from-ignorance.html) சனாதனிகள் என்று சொன்னால் "அடிப்படைவாதிகள்" என்று சொல்லிவிடப் போகிறார்கள்!
 
காலம் என்ற கறையினால், கதைகள் என்ற களங்கத்தால் விளைந்தக் குற்றங்களை மக்கள் நம்புகின்றார்கள்! இந்த நிலையில், தமிழக முதல்வருக்குச் சார்பான திருக்குறளையும் பாருங்கள்;
 
"குடிபுறங் காத்தோம்பிக் குற்றம்; கடிதல்
 வடுவன்று வேந்தன் தொழில்." - 549
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

2008/1/18 venkatram dhivakar <venkdh...@gmail.com>:

Kannan Natarajan

unread,
Jan 18, 2008, 9:27:16 PM1/18/08
to minT...@googlegroups.com

தமிழ் மாதத்தின் துவக்கம் "தை" யா?

"முதல் தமிழ் மாதமாக தை மாதத்தை அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்,"என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தது நடைமுறைக்கு உகந்தது அல்ல என்று தமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர். தமிழ் முறைப்படி ஆண்டுகள், "திருவள்ளுவர் ஆண்டு" எனக் கணக்கிடப்படுகின்றன. கடந்த 2039 ஆண்டுகளாக இது நடைமுறையில் இருப்பதாக கணக்கிடப்படுகிறது. இதன்படி சித்திரை மாதம் தமிழ் மாதங்களில் முதல் மாதமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் நிர்வாக வசதிக்காக, ஆங்கில முதல் மாதமான ஜனவரியில் வரும் தை மாதத்தை முதல் தமிழ் மாதமாக மாற்ற அரசு நினைக்கிறது. ஏற்கனவே கடந்த தி.மு.க., ஆட்சியில் தை மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக மாற்ற எடுக்கப்பட்ட முயற்சி அமைச்சரவை வரை விவாதத்திற்கு கொண்டு சென்று பின் கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் அம்முயற்சி முதல்வரின் கருத்தின் மூலம் நடைமுறைக்கு வர உள்ளது. சூரிய குடும்பத்தில் முதன்மையானது சூரியன் தான். சித்திரை மாதத்தில் சூரியனின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்., அதாவது வெயில் உச்சத்தில் இருக்கும். எனவே சித்திரை மாதத்தை தமிழர்கள் முதல் மாதமாக பின்பற்றி வருகின்றனர். இப்பழக்கத்தை மாற்றினால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். பாரம்பரியத்தை மாற்றியது போல் ஆகி விடும் என்ற கருத்து நிலவுகிறது.கேரள மாநிலத்தவருக்கும் "சித்திரை விஷூ" முதல் மாதமாக இருக்கிறது. நிர்வாக வசதிக்காக அவர்கள் தங்கள் மாதத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
 
"தமிழ் முதல் மாதம்" குறித்து தமிழ் அறிஞர்கள் சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது.
 
சாலமன் பாப்பையா: அக்காலத்தில் தை மாதம் தான் முதல் தமிழ் மாதமாக இருந்ததாக கூறுகின்றனர். ஆனால் தமிழ் இலக்கியத்தில் அதற்கு ஆதாரம் இல்லை. அதே போல் சித்திரை மாதம் தான் முதல் மாதம் என்பதற்கும் ஆதாரம் இல்லை. ஆனால் சித்திரை தான் முதல் மாதம் என்று பொதுமக்களிடயே வழக்கத்தில் உள்ளது. தமிழ் மாதங்கள் பெயரில் வடமொழியும் கலந்துள்ளது. வழக்கத்தில் உள்ள விஷயத்தை மாற்றுவது கடினம். இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரிதாக போய்ச் சேராது. பெயரளவுக்கு வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். இது நடைமுறைக்கு ஒவ்வாதது.
 
கு.ஞானசம்பந்தன்: முன்பு தை மாதம் தான் முதல் மாதமாக இருந்ததாகவும், ஆங்கிலேயர் காலத்தில் இது மாறிவிட்டது என்றும் கூறுகின்றனர். ஆங்கிலத்தில் முன்பு 10 மாதங்கள் தான் இருந்தன. ரோமானிய மன்னன் அகஸ்டஸ், ஆகஸ்ட் மாதத்தையும், ஜீலியஸ் சீசர் ஜூலை மாதத்தையும் இடையில் சேர்த்தனர் என்று கூறுவதுண்டு. 12 மாதங்கள் என்று இருப்பதை இப்போது மாற்றினால் ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொள்வார்களா? "முதல் மாதம் தை" என்ற முதல்வரின் அறிவிப்பு நடைமுறை சாத்தியமா என தெரியவில்லை.

நன்றி: தினமலர் www.dinamalar.com

Narayanan Kannan

unread,
Jan 18, 2008, 10:45:33 PM1/18/08
to minT...@googlegroups.com
எங்க வாத்தியார் சாலமன் பாப்பையா சொல்லிட்டாரு. எனவேக் கூடவே கபடி பாடுகிறேன்....

வடக்கத்தியருக்கு மகிழ்வளிக்கும் வண்ணம் உத்திராயண சூரியன் வடக்கு நோக்கி
நகரும் அம்மாதம் தெக்கத்தியரான நமக்கு என்ன உவப்பைத் தரும்?

கன்னல் கரும்பு போல் கருத்த மேனியரான தமிழருக்கு சூரியன்
உச்சியிலிருக்கும் சித்திரைதான் அண்ணே உகந்த மாதம்!

ஆங்கிலேயே அடிவருடிகள் என்ற பட்டப் பெயர் இப்போ நமக்கெதற்கு? இல்லை,
கல்லக்குடியில் கல்லெறிந்துவிட்டு இப்போ அவர்கள் சார்பில் இருந்து கொண்டு
மகிழ்வது சாலுமோ!!

ஏதோ இன்னிக்கு போணி இவ்வளவுதான் :-)

கண்ணன்

2008/1/19 Kannan Natarajan <thar...@gmail.com>:

Kannan Natarajan

unread,
Jan 19, 2008, 3:57:24 AM1/19/08
to minT...@googlegroups.com
வணக்கம்,

தமிழ்ப் புத்தாண்டு - ஆவணியில் தொடங்கிய காலம்,தொல்காப்பியத்தில் இருந்தது.ஏதோ, ஒரு அறிஞர் சித்திரைக்கு மாற்றியதாகத் தெரிகிறது. புரட்சித் தலைவர்,அரசிதழில் திருவள்ளுவராண்டினை எழுதவைத்தவர். மறைந்த தலைமைச் செயலாளர் திரவியம் கூட தைத் திங்களை முதலாவதாக அறிவித்து 60  ஆண்டுப் பெயர்களை,தமிழாக்க வேண்டும் என்றார். அறிஞர் வா.சு.பா.மாணிக்கம், 60 ஆண்டுகளுக்கும் தமிழ்ப் பெயர்களை எழுதியிருக்கிறார். நலம்,குணம்,வளம்,செயல்,நெகிழ்வு போல அந்தப் பெயர்கள் அமைந்தன. இப்படியெல்லாம்"நேற்று நடந்தது எவருக்கும் தெரிவதில்லை!"
 
எந்த நடைமுறையும் வழகத்திற்கு வந்துவிட்டால் சனாதனிகள் முதல் சாலமன் வரையில் சரியென்று சொல்லிவிடுவார்கள்!!!
 
வைகாசி விசாகம் தான், திருவள்ளுவர் திருநாள் என்றும், சடைமுடியோடு இருக்கும் திருவள்ளுவருக்குக் கோயில் இருந்தும், வடிவத்தை மாற்றியப் போது நடைமுறைக்கு ஏற்றது என்று கைத்தாளம் போடவில்லையா! கல்கி எழுதியது போல இராகு காலத்தில், இரயில் ஏறமாட்டோமா!! எமகண்டத்தை மனத்தில் கொண்டு விமானத்தை விட்டு இறங்கிவிடுவோமா!!
 
"நமக்கென்ன கிழியட்டும் பழம் பஞ்சாங்கம்," என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும்,"சோதிடம் தனை இகழ்,"என்ற மாகவி பாரதியும் நமக்கு நினைவிற்கு வருவதில்லையா! திங்களில் தினமலருக்கும்,புதனில் தினகரனுக்கும்,வெள்ளியில் இந்துவிற்கும் வேறு வேறு செய்திகளைத் தந்துவிட்டால் போகிறது!!மாணவர்கள் மறுக்கவா போகிறார்கள்!
 
பட்டிமண்டபத்தில் ஒரு பக்கம் தானே வாதிட்டிருக்கிறார்கள்! புதிதாக இரண்டு மாதங்களைப் புகுத்திய போது,ரோமாபுரியினர் சபித்தார்களாம், பிறகு துதித்தார்கள்.
 
ஆரூட அடிவருடிகளாக இருந்த காலம் போய்,ஆங்கில அடிவருடிகளாக மாற்றுவது தானே,நீதிக் கட்சியின் இலட்சியம் என்பதை தமிழகம் 40 ஆண்டுகளுக்கு மேலாக நிறைவேற்றி வருகிறதே! சேதுவைப் பற்றி வரும் செய்தி, இப்போதே காதில் விழுகிறதே!

Kannan Natarajan

unread,
Jan 20, 2008, 12:59:21 AM1/20/08
to minT...@googlegroups.com
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!

கவிச்சக்ரவர்த்தி கம்பன், இராமாயணம் மட்டுமல்லாமல், உழவர் மேம்பாட்டை மையமாக வைத்து, "ஏர் எழுபது",என்ற எழுபது பாடல்கள் கொண்ட கவிதை நுாலையும் படித்தோர் வியக்கும் வண்ணம் அற்புதமாகப் படைத்துள்ளார். அதில் ஓர் அமுதத் தமிழ்ப் பாடல் இதோ:
"கார் நடக்கும் படி நடக்கும்
 காராளர் தம்முடைய
 ஏர் நடக்கு மெனில் எங்கும்
 இயலிசை நாடகம் நடக்கும்!
 சீர் நடக்கும்! திருநடக்கும்!
 திருவறத்தின் செயல் நடக்கும்
 பார் நடக்கும்! படை நடக்கும்!
 பசி நடக்க மாட்டாதே!"
என்பது கம்பன் கவிதை.
"மழை பொழிந்தால் உழவரின் ஏர் நடக்கும்! ஏர்த் தொழில் சிறந்தால், இயலிசை நாடகம் ஆகிய முத்தமிழும் எங்கும் முழங்கும்! சிறப்பெல்லாம் நடக்கும்! செல்வம் கொழிக்கும்! செல்வத்தால் திருவறத்தின் செயல்களும் நடக்கும்! இந்தப் பாரே நடக்கும்! படைச் செயலும் சிறப்பாக நடக்கும். ஆனால், பசி மட்டும் நடக்காது," என்பது இதன் பொருள்.
"தமிழர் திருநாள்" என்றும் "பொங்கல் திருநாள்" என்றும் புராணப்படி "மகர சங்கராந்தி" என்றும், போற்றப் பெறும் திருநாள் உழவர்களை மையமாக வைத்து அமைவதால் உழவர் திருநாள் என்றும் போற்றப் பெறும்.
சூரிய வழிபாடு: உழவுத் தொழிலுக்கு மிகவும் உறுதுணையாக அமைபவன் சூரியனே! சூரிய வெப்பமே ஆவியாகிக் குளிர்ந்து, மேகமாகி மழை பொழியக் காரணமாதலால், பொங்கல் நாளில், படையலிட்டு சூரியனையே வழிபடுவது தொன்று தொட்ட மரபாகும். எனவே, பொங்கல் நாளில், கண் கண்ட கடவுளாகிய சூரிய பகவானே முதலிடம் பெறுகின்றனர். ஆதிசங்கரர், இந்து மதத்தை வழிபாட்டு நோக்கில் சைவம், வைணவம், சாக்தம், சவுரம், கவுமாரம், காணாபத்யம் என ஆறு வகையாக அமைத்து, அதற்குச் "சண்மதம்" என்றும் பெயர் கொடுத்தார்.
சைவம் -            சிவ வழிபாடு.
வைணவம்-        திருமால் வழிபாடு.
சாக்தம்     -         சக்தி வழிபாடு
சவுரம்      -         சூரிய வழிபாடு.
கவுமாரம்-         முருகன் வழிபாடு.
காணாபத்யம் - கணபதி வழிபாடு.
இவற்றுள் சூரிய வழிபாட்டை "சவுரம்" என்று குறிப்பிடுவார் ஆதிசங்கரர். இவர் காலம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே, "சூரிய வழிபாடு" ஐந்தாயிரம் ஆண்டுப் பழமை மிக்க இயற்கை வழிபாடு என்பதைத் தெளிவாக அறிய முடியும்.

சிலப்பதிகாரத்தில்...

இயற்கை வழிபாடாம் "சூரிய வழிபாடு" பற்றி நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமும் செப்பும்
"ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
 காவிரி நாடன் திகிரி போல்
 பொற்கோட்டு மேரு வலம் திரிதலான்!"
 என்பது சிலம்பு வரிகள்.
"காவிரி நாடனாம் கரிகால் வளவ"னின் ஆணைச் சக்கரம், பொன்மயமான இமயமலை வரை வலம் வருவது போல, ஞாயிறு (சூரியன்) தோன்றி வலம் வருவதால், அதைப் போற்றி வழிபாடு செய்வோம், என்பது விரிவான விளக்கம்!
இதன் மூலம் கரிகால் வளவன் ஆட்சிப் பரப்பு இமயம் வரை இருந்தது என்ற வரலாற்று உண்மையும் புலப்படும்.
சங்க இலக்கியத்தில் பொங்கல்!

நக்கீரர் படைத்த முருகப் பெருமான் பற்றிய முதல் நுாலான திருமுருகாற்றுப்படையிலும்,
"உலகம் உவப்ப
 வலனேர்பு திரிதரு
 பல்கதிர் ஞாயிறு
 கடல் கண்டாங்கு!
 என்று முருகப் பெருமான் அழகைச் சூரியனோடு ஒப்பிட்டுப் பாடுகின்றார்.

அது என்ன ஏறு தழுவல்?

மேலும் சங்க இலக்கியமான கற்றோர் ஏத்தும் கலித்தொகையில், முல்லைக்கலியில், "ஏறு தழுவல்" என்ற மஞ்சு விரட்டு (ஜல்லிக்கட்டு) நடந்த வரலாறு உண்டு. அது என்ன ஏறு தழுவல்?

பெண் ஒருத்திப் பிறந்தபோதே, அவள் வீட்டில், ஒரு காளைக் கன்றும் வளர்க்கப்படும். அந்தப் பெண் வளர்ந்து, பருவம் வந்தபோது, அந்தக் காளைக் கன்றும் செழிப்பாக வளர்ந்திருக்கும். அந்தக் காளையின் கொம்புகள் சீவப்பெற்றுக் கூர்மையாக இருக்கும். அந்தக் காளையை அடக்கிடும் வீரனுக்கே அந்தப் பெண்ணை மண முடிப்பர். ஆம்! காளை வெல்லும் காளைக்கே கன்னி உரியவள்! இதுவே "ஏறு தழுவல்" (மஞ்சு விரட்டு/ஜல்லிக்கட்டு) என்று முல்லைக்கலி போற்றப் பெறுகின்றது.

இந்திர விழா: பண்டு, பூம்புகாரில் இந்திர விழா மிகவும் சிறப்பாக நிகழ்ந்தது. அதுவே பின்னாளில் பொங்கல் விழாவாக மலர்ந்து, விரிவாக்கம் பெற்றது. மேலும் கற்புக்கரசி கண்ணகி வழி பாடே பின்னாளில் மாரியம்மன் வழிபாடாக மலர்ந்தது. உறையூரைத் தலைநகராகக் கொண்டு கரிகால் வளவன் உறையூரில் பத்தினிக் கோட்டம் அமைத்தான் என்று சிலப்பதிகாரம் செப்பும். அந்தப் பத்தினிக் கோட்டமே பின்னாளில் உறையூர் வெக்காளி அம்மன் கோவிலாகும்.

சமயபுரம் அம்மனுக்குப் பெருமாளின் சீர் வரிசை:

திருவரங்கம் அரங்கநாதப் பெருமானின் சகோதரியே சமயபுரம் மாரியம்மன் ஆவாள். தன் சகோதரிக்கு, திருவரங்கம் அரங்கநாதப் பெருமான் கோவிலிலிருந்து ஆண்டுதோறும் தைப் பொங்கல் நாளில் சீர் வரிசை கொண்டு வந்து, சிறப்பிப்பது தொன்று தொட்டு நிகழும் அற்புத நிகழ்வாகும்.

சூரியனார் கோவில்: சூரியனுக்கென்றே தனியாக உள்ள கோவில் சூரியனார் கோவிலாகும். இந்தத் தலம் கும்பகோணம் அருகே உள்ளது. நவக்கிரகங்களின் நாயகனாகத் திகழும் சூரியன், இந்தத் தலத்தில் சாயாதேவி, உஷா தேவியுடன் சூரிய நாராயணப் பெருமாளாக அருள்பாலித்து வருகிறார்.

பொங்கல் நன்னாளில் சூரியனார் கோவிலில் சூரிய நாராயணப் பெருமாளுக்குச் சிறப்பு வழிபாடுகள் நிகழ்ந்து வருகின்றது. பொங்கல் திருநாளில் மட்டுமல்லாமல், ஆவணி ஞாயிறு, ஆடி மாத கடைசி செவ்வாய், கார்த்திகை சோமவாரம், தை மாத அஷ்டமி திதி தீர்த்தவாரி, மாசி மாத மகா சிவராத்திரி ஆகிய புனித தினங்களிலும் சூரியனார் கோவிலை வழி படின் புண்ணியம் கோடி என்கிறது தலபுராணம்.
ஆதித்தன் சூரியன்

சூரியனுக்குப் பரிதி, ஞாயிறு, பகலவன், கதிரவன், தினகரன், ஆதித்தன், இரவி என வேறு பெயர்களும் உண்டு.
 
இவற்றுள் "ஆதித்யன்" என்ற வடசொல்லே தூய தமிழில் "ஆதித்தன்" என வழங்கப் பெறுகின்றது. சூரிய பகவானைப் பற்றி "ஆதித்ய இருதயம்" என்ற வட-மொழி நூல் உண்டு. இந்த "ஆதித்ய இருதயம்" என்ற நூலைப் படித்துத் தான் இராமன், இராவணனை வென்றான். எனவே, வாழ்வில் வளமும் நலமும், வெற்றியும் குவிய "ஆதித்ய இருதயம்" படிக்கலாம். மேலும் சூரியகாயத்ரி மந்திரத்தை உச்சரித்தாலும் பலன் உண்டு.

சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு வரும் நாளே "மகர சங்கராந்தி" என்ற பொங்கல் திருநாள் ஆகும்.
உலகம் எங்கும் உதய சூரிய வழிபாடு:
"உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
 பல்கதிர் ஞாயிறு கடல் கண்டாங்கு."

என்ற திருமுருகாற்றுப் படையின் அமுதமொழிக்கு ஏற்ப, உலகம் முழுவதுமே உதயசூரியன் வழிபாடு நிகழ்ந்து வருகின்றது. திருவையாற்றை அடுத்த திருக்கண்டியூரில் கண்டீஸ்வரர் கோவிலில், 214 கோடி ஆண்டுக்கு முந்தைய "கல்ப சூரியன்" காட்சி தரு-கின்றார்.

எகிப்தியர், சூரியனை "ஆமன்-ரா" என்றும், கிரேக்கர் "போபஸ் அப்பலோ" என்றும் ஈரானியர் "மித்ரா" என்றும் கூறி வழிபாடு செய்து வருகின்றனர். "கருங்கடல் கரையோரப் பகுதியில், சூரிய வழிபாடு உண்டு" என்று ரஷ்யாவின் தொல்லியல் துறை ஆய்வாளர் கூறியுள்ளனர். பாபிலோனியாவிலும் ரோமாபுரியிலும் சூரிய வழிபாடு உண்டு.
சுமேரியர்கள் "சாமாஷ்" என்ற பெயரில் சூரிய வழிபாடு செய்வர். லண்டன் அருகில் உள்ள "ஸ்டோன் ஹென்க்" என்ற கிராம மக்கள் மாலையில் கிழக்கு முகமாக நின்று சூரிய வழிபாடு செய்வர். சிலி நாட்டு மன்னர் "சூரியன் மைந்தர்" என்றே அழைக்கப்படுகின்றார். மேலும் சீனா, ஜப்பான், மெக்சிகோ, பெரு நாடுகளிலும் சூரிய வழிபாடு உண்டு.

இந்தப் பொங்கல் நாளில் எல்லோரும் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், கரும்பு, மஞ்சள் ஆகியன படைத்து, சூரிய வழிபாடு செய்வோம்! வாழ்வில் நலமும் வளமும் பெறு-வோம்.

புலவர் முத்து வேங்கடேசன், திருமயம்.
 
நன்றி: தினமலர் - http://www.dinamalar.com/Pongalmalar_2008/index.asp#4

Kannan Natarajan

unread,
Jan 20, 2008, 1:11:25 AM1/20/08
to minT...@googlegroups.com
பொங்கல் வாழ்த்து!

பெ.தூரன், சி.சுப்பிரமணியம், ஓ.வி.அழகேசன் முதலானோர் மாநிலக் கல்லுாரியில் பயின்று வந்த காலம், இவர்கள் ஒன்று சேர்ந்து சங்கம் ஒன்றை அமைத்திருந்தனர். ஒரு கூட்டத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்து மடலை போல நாமும் வாழ்த்து மடல் அனுப்பும் பழக்கத்தைத் தோற்றுவித்தால் நலமாக இருக்குமே என்று பெரியசாமித் தூரன் கருத்துத் தெரிவித்தார்.

அவரே பனங்குருத்துக்களை நறுக்கி அவற்றில் வண்ண மைகளில் அழகு செய்து பொங்கல் வாழ்த்துக்களையும் எழுதினர். இந்தப் பொங்கல் வாழ்த்துக்களைத் தமிழ்ப் பெருமக்களாகிய திரு.வி.க., கல்கி கிருஷ்ணமூர்த்தி, கா.நமச்சிவாயர் ஆகியோருக்கு அனுப்பினார். இந்தப் பழக்கம் வரவேற்கத்தக்கது என்று கருதிய திரு.வி.க, தமது நவசக்தி ஏட்டில் தமிழ்மக்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டுமென வேண்டுகோளும் விடுத்தார். இதன் பின்னரே பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் 1928ம் ஆண்டில் தமிழர்களிடையே பரவியது. மகாராஷ்டிரத்தில் இருவர் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது எள்ளும் வெல்லத்தையும் தந்து நல்ல வார்த்தைகளால் ஆசீர்வதியுங்கள் என்று கூறிக் கொள்வர்.

பொங்கல் சிறப்பு

பொங்கல் வைக்க பயன்படும்
 
அரிசியும் பாலும் வளமையை உணர்த்துவதற்காக
கரும்பு வைப்பது மகிழ்ச்சியைக் குறிப்பதற்காக
பொங்கல் பானையில் மஞ்சள் சுற்றுவது இனிவரும் காலம் காத்து வளமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே.
 
ஆந்திர மாநிலத்தில் பொங்கலன்று பொம்மைகளை கொலுவில் வைத்து மகிழ்கிறார்கள். இந்த கொலுவில் உழவர், உழத்தி, ஏர் முதலிய பொம்மைகள் பிரதான இடம் பெறும்.

உத்தரப்பிரதேசத்தில் பொங்கலன்று வீட்டுக்கு வருவோருக்கு கரும்புத்துண்டுகள் மற்றும் வெற்றிலை பாக்கை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்து ஆசீர்வதிப்பர். கர்நாடகா ஆந்திர பகுதிகளில் பொங்கல் திருநாளன்று ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது வெல்லம் கலந்த பருப்பு உருண்டைகளை பல வண்ணங்களில் செய்து ஒரு தட்டில் கரும்பு வெற்றிலையுடன் வைத்து தங்களுக்குள் பரிமாறிக்கொள்வர்.

இலங்கையில் பொங்கல்!

இலங்கையில் வாழ்பவர்கள் மார்கழி மாதம் வீட்டு வாசலில் கோலம் இடும்போது மாட்டு சாணத்தினால் ஆன சாணப் பிள்ளையார் பிடித்து வைக்கின்றனர். இந்த பிள்ளையாரை தினமும் சேர்த்து வைத்திருந்து தைப்பிறந்ததும் பொங்கலுக்கு மறுநாள் பிள்ளையார் பொங்கல் கொண்டாடுகின்றனர்.

ஆர்.மகாதேவன்.

Narayanan Kannan

unread,
Jan 20, 2008, 4:24:54 AM1/20/08
to minT...@googlegroups.com
2008/1/20 Kannan Natarajan <thar...@gmail.com>:

> ஆதிசங்கரர், இந்து மதத்தை வழிபாட்டு நோக்கில் சைவம், வைணவம், சாக்தம், சவுரம்,
> கவுமாரம், காணாபத்யம் என ஆறு வகையாக அமைத்து, அதற்குச் "சண்மதம்" என்றும் பெயர்
> கொடுத்தார்.
> சைவம் - சிவ வழிபாடு.
> வைணவம்- திருமால் வழிபாடு.
> சாக்தம் - சக்தி வழிபாடு
> சவுரம் - சூரிய வழிபாடு.
> கவுமாரம்- முருகன் வழிபாடு.
> காணாபத்யம் - கணபதி வழிபாடு.

அவர் அப்படியெல்லாம் அமைக்கவில்லை. அவர் ஒரு நம்பூதிரி பிராமணர். வைதீக
பிராமணர். பரம்பொருள் நாராயணன் என்பதை உணர்ந்த வைஷ்ணவர். அவர் தன் அத்வைத
கோட்பாட்டை மேற்கோள்களுடன் காட்ட அறுவகை சமயங்களை ஆமோதித்தார். சைவத்தில்
கபாலிகம், பாசுபதம் போன்ற பிரிவுகளைச் சாடினார். சிவனை ருத்ரனின் அம்சமாக
வேதம் சொல்வதால் ஏற்றுக் கொண்டார்.

வேடிக்கை என்னவெனில் அவருக்குப் பட்டையடித்து, அவருக்குப் பின்
பிராமணர்களிடம் "சைவம்" என்பது ஒரு பிரிவாகவே போய்விட்டது. எந்த வைதீக
பிராமணனுக்கும் நாரணனே பரம் பொருள். எனவேதான் இக்குழப்பத்திலும் சங்கர
மடத்தில் 'நாரண ஸ்மிருதி" என்று கையெழுத்துப் போடும் பழக்கம் மட்டும்
மாறவில்லை. (சிவ வழிபாடு ஏற்றுக்கொள்ளத்தக்க வைதீக மார்க்கம் என்பதே
சங்கரரின் பரிந்துரை)

வைணவம் காலம், காலமாக இருப்பது! சங்கரருக்கும், இராமானுஜருக்கும் முன்னாலேயே!

எப்படி வைஷ்ணவம் என்பதை இராமானுஜர் என்பவர் உருவாக்கினார் என்று சொல்வது
பிழையோ அதுபோல் சங்கரர் ஆறுமதங்களை உருவாக்கினார் (அமைத்தார்) என்பதும்
பிழையே!

மணிமேகலையில் 'சமயக் கணக்கர் தந்திறங்கேட்ட காதையில்'

"காதல் கொண்டு கடல்வண்ணன் புராண
மோதினான் நாரணன் காப்பென் றுரைத்தனன்"

என்று கூறுகிறார் கூலவாணிகன் சாத்தனார்.

பரிபாடல் முழுவதும் நாரண துதியே!

சங்கத்தைத் தோண்டினால் உள்ளே இருப்பது நாரணனே :-)

கண்ணன்

Tthamizth Tthenee

unread,
Jan 20, 2008, 4:53:45 AM1/20/08
to minT...@googlegroups.com
ஆதி சங்கரர் நாராயணனை நோக்கித் தவமிருந்தார்
அந்தக் காட்டிலே வேடுவத் தொழில் புரிந்துவந்த ஒரு வேடுவன்  ஆதி சங்கரரிடம் வந்து
அய்யா தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்
என்று வினவினான்..?
அதற்கு ஆதி சங்கரர் நான் இறைவன் நாராயணனைக் காண தவம் செய்து கொண்டிருக்கிறேன்  என்றார்
உடனே  அந்த வேடுவன் இப்படி கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தால் எப்படி அவனைக் காண முடியும்
இந்தக் காட்டில் எனக்குத் தெரியாமல் ஒரு மூலை முடுக்கு கூட கிடையாது என்னிடம் சொல்லுங்கள் நான் கண்டுபிடித்து தருகிறேன் என்று சொல்ல ,ஆதி சங்கரரும் அந்த வேடுவனிடம் அவனுக்குப் புறிவதற்காக
 நாராயணன்  சிங்க முகத்துடனும் மனித உடலுடனும் கூடிய
ஒரு அம்சம் என்றார் ,உடனே அந்த வேடுவன் இந்தக் காட்டில் எனக்குத் தெரியாத மிருகமே கிடையாது
இன்று மாலைக்குள் உங்களுக்கு நான் அந்த நாராயணனைக் கண்டு பிடித்து தருகிறேன்  ,அப்படி,என்னால் இன்று மாலைக்குள்
 கண்டுபிடிக்க முடியவில்லையெனில்,
என் உயிரைத் தியாகம் செய்துவிடுகிறேன் என்று சத்தியப் ப்ரமாணம் செய்துவிட்டு,சிங்கமுகமும் மனித உடலும் கூடிய நாராயணனை மனதிலே ஏற்றிக்கொண்டு தேடத்துவங்கினான், அன்று மாலை சூரிய அஸ்தமனம் நெருங்கிக் கொண்டிருந்தது, தேடித்தேடி சலித்துப் போன
வேடுவன் மனம் உடைந்து ஒரு மரத்தில் ஒரு கயிறு மாட்டி ப்ராணத் த்யாகம் செய்ய முற்பட்டான்
 
அப்போது ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டது, வேடுவன் திரும்பிப் பார்த்தான், ஆதிசங்கரர் சொன்ன அதே சிங்கம் மனித உடலுடன் நின்றுகொண்டிருந்தது, நாரயணன் நரசிம்மமாக நின்று கொண்டிருந்தான்,அதுதானே பார்த்தேன் என் கண்ணில் அகப்படாத மிருகமும் இக்காட்டில் உண்டோ என்று மிக  சந்தோஷமாக அந்தக் கயிற்றை அதன் கழுத்திலே கட்டி, வேடுவன் இழுத்துக் கொண்டுபோய்
ஆதிசங்கரர் எதிரிலே நிறுத்திவிட்டு கண்டுபிடித்துவிட்டேன்
நீங்கள் சொன்ன மிருகத்தை என்றான் வேடுவன்
 
ஆதிசங்கரர் கண்ணுக்கு அந்தக் கயிறு அந்தரத்தில் இருந்தது
தெரிந்தது ,ஆனால் நாராயணன் தெரியவில்லை
ஆதி சங்கரர் ஆண்டவா நாராயணா  இந்த வேடுவனுக்கு காட்சி அளித்துவிட்டு எனக்கு காட்சி தரமாட்டேன் என்கிறாயே என்று உருக்கமாக கேட்க ,நாராயணன்
ஆதிசங்கரருக்கு காலடியில் காட்சி தருவதாக சொல்லிவிட்டு மறைந்தான் என்பர்,
ஆதலினால் இன்றும் ஆதிசங்கரர் வழி வந்தவர்களும்
தினமும் நாராயணா,நாராயணா,நாராயணா என்று சொல்லி
நித்திய வழிப்பாடுகளை செய்கின்றனர்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

Narayanan Kannan

unread,
Jan 20, 2008, 5:20:39 AM1/20/08
to minT...@googlegroups.com
தேனீயாரே:

இக்கதைகள் ஒருபுறம் இருக்கட்டும். ஆதிசங்கரர் இந்தியாவின் மிகச்சிறந்த
தத்துவ ஞானி. மிகப்பெரிய பண்டிதர். இந்திராகாந்தியிடம் உங்களைக் கவர்ந்த
மனிதர் யார்? என்று கேட்டபோது ஆதிசங்கரைச் சுட்டுகிறார். அவர் சநாதானி
அல்ல, உலகமறியும். கூறக்காரணம் சங்கரரின் அசைக்கமுடியாத தர்க்கம்
(logic). இந்தத் தர்க்கவாதிதான் அவர் காலத்தில் புல் போல் மண்டிக்கிடந்த
மதங்களைக் களையறுத்து ஆறு மார்க்கங்களைக் காட்டுகிறார். அவை
வேதத்திற்குப் புறம்பானவை அல்ல என்று நிரூபிக்கிறார்.

அடிப்படையில் சங்கரர், இராமானுஜர், மாத்வர் ஆக மூன்று பெரும்
தத்துவாதிகளும் நாரணன் பரம் என்பதை ஏற்றுக் கொண்ட பின்தான் தங்கள்
வாதங்களையே முன்வைக்கின்றனர். விஷ்ணுவை வழிபடுபவனை வைஷ்ணவன் என்று
சொல்வது வழக்கம்.

கண்ணன்

2008/1/20 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Kannan Natarajan

unread,
Jan 21, 2008, 5:59:17 AM1/21/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
தொல்காப்பியம், திருக்குறள் என்ற நூல்களை முதன்மையாகக் கொண்டு, இடையில் சேர்ந்த வடமொழி, வேத, இதிகாச,உபநிடதக் கருத்துக்களையும், ஓரொரு கால் இட்டும்,தொட்டும்,மதித்தும்,மறுத்தும் திருமுறைகள் தோன்றின. திருமுறைகளைக் கடைந்தெடுத்து, ஊரில் பேசிவந்த பாடியகார்கள் என்ற நிலையில் நீலகண்ட சிவசாரியார், ஆதிசங்கரர், இராமானுஜர், மத்துவர், சாயனர் என்ற வடமொழி அறிஞர்கள் கூறிய கலைச்சொற்களையும் கலந்து எதிர்ப்புரைகளோடு, தமிழாக வடிக்கப்பெற்றதே "சைவசித்தாந்தமா"கும். சைவசித்தாந்தத்திற்கு எந்த நிலையிலும் மேற்கோளாகக் காட்டுவது தமிழ் நூல்களே. பிற கோட்பாடுகள், வடமொழியை நம்பி வாழ்வன.
 
தாய்மொழி தமிழாகயிருந்தும், சங்கரர் ஒரு தமிழ் நூலையும் மேற்கோள் காட்டவில்லை! இராமானுஜரும், தமிழில் திளைத்திருந்தும்,வடமொழிப் புலமையிலேயே வேதத்தொடர்களுக்கு விளக்கம் கூறினார்."வேதம் என்றால் பேதம் என்றதோடு,வேதாகமங்கள் சூதாகச் சொன்னவை," என்று வள்ளலார் பாடினார்.
 
ஆயிரம் முயன்றாலும்,வடசொற்களைத் தமிழ் நலம் கருதி தவிர்க்க முயன்றால், சமயக் கருத்துக்கள் நொண்டும்! உயிர் என்ற சொல்லை விட்டுவிட்டு, ஆன்மா அகற்றமுடியாததாகி விட்டதே! இப்படியெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது!
 
"மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம்
 போல் அறிவோம் என்று பொக்கங்களே பேசும்!" -  திருவெம்பாவை

Narayanan Kannan

unread,
Jan 21, 2008, 7:56:40 AM1/21/08
to minT...@googlegroups.com
2008/1/21 Kannan Natarajan <thar...@gmail.com>:

> தாய்மொழி தமிழாகயிருந்தும், சங்கரர் ஒரு தமிழ் நூலையும் மேற்கோள் >காட்டவில்ல

சங்கரர் மலையாளி. அவருக்குத் தமிழ்ப் புலமை எவ்வளவு இருந்தது என்று
தெரியவில்லை. மேலும் அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு "pan indian movement"
கொண்டுவர வேண்டிய தேவை இருந்தது. அவர் அப்படியொரு மாற்றத்தைக்
கொண்டுவரவில்லையெனில் வேதாந்தம் இந்தியாவில் மறுமலர்ச்சி கண்டிருக்காது.

இதை இப்படி ஒப்பிட்டுப் பாருங்கள். தமிழ் மருத்துவம் என்பதில் உங்களுக்கு
நம்பிக்கை இல்லை. தமிழராய் இருந்தும் ஆங்கிலம் கற்று ஆங்கில மருத்தும்
கற்று, இந்தியாவை விட்டு வெளிநாட்டில் பிரபலமான மருத்துவராக உள்ளீர்கள்.
ஆங்கில அடிவருடத்துவம் இந்தியாவிற்கு நன்மையே செய்திருக்கிறது என்றும்
இங்கு சொல்லியுள்ளீர்கள். இவ்வளவு உயர்விற்கும் ஆங்கிலம் துணை
போயிருக்கிறது. ஏனெனில் நீங்கள் வாழும் காலத்தில் ஆங்கிலம் உலக மொழியாகி
அதில் பெரிய database இருக்கிறது என்பதே காரணம். சங்கரர் வாழ்ந்த
காலத்தில் இந்தியாவின் அனைத்துச் செல்வங்களும் சமிஸ்கிருதத்தில்
இருந்தது. அதுவே கல்விமான்களின் மொழியாக இருந்தது. கல்விமான்களின்
எண்ணப்போக்கை மாற்றிவிட்டால் சமூகத்தின் எண்ணப்போக்கை மாற்றிவிடலாம்.
இன்றைய தமிழ் மருத்துவத்தின் வளர்ச்சிக் குறைவிற்கு கல்விமான்களின்
ஆதரவின்மையே காரணம். அவர்களை convince செய்யும் வல்லமை
தமிழ்மருத்துவருக்கோ, தமிழ்ப்பண்டிதர்களுக்கோ இல்லை. இதே உளவியலைக்
கருத்தில் கொண்டால் ஏன் சங்கரர் மலையாளத்தில் அல்லது தமிழில் தன் வாதத்தை
வைக்காது சமிஸ்கிருதத்தில் வைத்தார் என்பது புரியும். நாளை ஆங்கிலத்தில்
தமிழ் மருத்துவம் பற்றிப் புத்தகங்களும் ஆய்வுகளும் வந்தால் கல்விமான்கள்
அதை நம்புவர்.


> இராமானுஜரும், தமிழில் திளைத்திருந்தும்,வடமொழிப் புலமையிலேயே
> வேதத்தொடர்களுக்கு விளக்கம் கூறினார்.


இராமானுசர் காலத்திலேயும் நிலமை அப்படியேதான் இருந்தது. சங்கருக்கு சவால்
கொடுக்க வேண்டுமெனில் அவர் தமிழில் சொல்லிப் பயனில்லை. இந்தியப்
பொதுமொழியான சமிஸ்கிருதத்தில்தான் சொல்ல வேண்டியிருந்திருக்கும். நீங்கள்
மேற்கோள் காட்டும் வள்ளலாரே மும்மொழித்திட்டத்தை முன்வைக்கிறார். தமிழ்,
சமிஸ்கிருதம், ஆங்கிலம் என்பவையே அம்மொழிகள்.

மேலும் இராமானுஜர் வளர்த்தெடுத்த ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆழ்வார்களின்
பாசுரங்களைக் குறை காண்பவர்களைத் தன் தாயின் கற்பில் குறை காண்பவனை
ஒக்கும் என்று சொல்லிப்போயினர். தேசிகர் தமிழ்ப் பிரபந்தங்களை முன்வைத்து
பல சமிஸ்கிருத நூல்கள் இயற்றியுள்ளார். இவர்கள் முயற்சியால் இந்திய
அளவில் தமிழ் மறைகள் "திராவிட உபநிஷத்து" என்ற நிலை பெற்றது.


>"வேதம் என்றால் பேதம்
> என்றதோடு,வேதாகமங்கள் சூதாகச் சொன்னவை," என்று வள்ளலார் பாடினார்.
>


வள்ளலார் பதிப்பித்த முதல் நூல் அத்வைத நூலாகும். வள்ளலார் தனது
கொள்கைகளை, சன்மார்க்க நெறியை மெல்ல, மெல்ல காலப்போக்கில்
வளர்த்தெடுத்தார். ஈழத்தவர்களைப் பொறுத்தவரை வள்ளலார் ஒரு அத்வைதியே!


> ஆயிரம் முயன்றாலும்,வடசொற்களைத் தமிழ் நலம் கருதி தவிர்க்க முயன்றால், சமயக்
> கருத்துக்கள் நொண்டும்! உயிர் என்ற சொல்லை விட்டுவிட்டு, ஆன்மா
> அகற்றமுடியாததாகி விட்டதே! இப்படியெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது!
>

தென்னிந்திய சைவ சித்தாந்த பிதாமகர்கள் எல்லோருக்கும் சமிஸ்கிருதம்
அத்துபடி. அருணகியின் பாடல்களைக் கவனியுங்கள். அப்படியொரு
மணிப்பிரவாளத்தை நான் எங்கும் கண்டதில்லை. மேலும், பெயருக்கேற்றபடி
தென்னிந்திய சைவ சித்தாந்தம் ஒரு regional development மட்டுமே. அதுவொரு
Pan Indian Movement அல்ல. எனவே அவர்களுக்கு வேதத்தை மேற்கோள் காட்ட
வேண்டிய அவசியமில்லை. இது வேளாளர் சமூகம் மேன்மையுற்ற சோழர்கள் காலத்தில்
வீரியம் கொண்ட ஒரு போக்கு. இது தமிழ்நாடுவிட்டுத் தாண்டவில்லை (ஈழம்
தமிழ் மண் என்ற நோக்கில்). இப்படி இருந்தாலும் இன்றளவும் சைவசித்தாந்த
வேளாள மடங்கள் சமிஸ்கிருதத்தை உயர்வாகவே வைத்துள்ளன. சைவத்தின்
திருக்கோயிலான சிதம்பரத்தில் இன்றளவும் கோயில் மொழியாகவில்லை. ஆனால்
அரங்கன் எவ்விழாவும் இல்லாமல் சில மாதங்கள் திருவாய்மொழி கேட்பது ஒன்றே
ஆனந்தம் என்று திருவரங்கத்தில் உள்ளான். கோயிலில் சமிஸ்கிருதத்தில்தான்
பூஜை இருக்க வேண்டும் என்று வாதாடுவது சைவ மடங்களே.

> "மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம்
> போல் அறிவோம் என்று பொக்கங்களே பேசும்!" - திருவெம்பாவை
>

இது அவரவர் நோக்கு. சிவனில் பிரம்மத்தைக் காண்பவர்க்கு அவன் அப்படியே
காட்சி தருகின்றான். அது அவன் இயல்பு. மகாத்மா காந்தி பிரபலப்படுத்தி
புகழ் பெற்ற வைஷ்ணவ ஜனதோ பாடலை இயற்றிய நரசிம்ம மேத்தாவிற்கு சிவன்
ஆசையுடன் வைஷ்ணவ வழியைக் காட்டுகிறான்.

ஆழ்வார்கள் எந்த வேதமும் கற்காமல் தமிழில் வேதத்தை உருவாக்கினர்.
எனவேதான் அதனை 'அருளிச் செயல்' என்கிறோம்.

வேதத்தின் முன்செல்க; மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன்செல்க; குணங்கடந்த
போதக்கடல் எங்கள் தென்குருகூர்ப்புனிதன் கவியோர்
பாதத்தின் முன் செல்லுமே? தொல்லை மூலப்பரஞ்சுடரே!

கம்பன் என்ன சொல்கிறான்? அரங்கன் உலா வருகிறான். அவனைப் பின் தொடர்ந்து
வேதம் வருகிறது. ஆனால் அரங்கனோ தமிழைப் பின்தொடர்ந்து வருகிறான்.
சடகோபனின் திருவாய்மொழியின் ஒரு பாதம் (ஒரு சொற்றொடர்) முன் சென்றாலும்
தொல்லை மூலப் பரஞ்சுடர் அதன் வழி செல்கிறது என்கிறான்.

இதைப் இன்றளவும் பின்பற்றுவது வைணவ மார்க்கமே. சைவக் கோயில்களில் தேவாரம்
மண்டபத்தில் பாடப்பட வேண்டிய ஒரு மொழி. கர்பகிரஹத்தில் அல்ல.

நிலமை இப்படி இருக்கும் போது தமிழை யார் தூக்கிப் பிடித்திருக்கிறார்கள்
என்று தமிழறிந்தோர் உணர்வர். வைணவத்தைப் பொறுத்தவரை சமிஸ்கிருதம் தமிழின்
எதிரியல்ல. சைவர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள். சிவ தாண்டவத்தில்
உடுக்கின் ஒரு தட்டில் தமிழும், மற்றொரு தட்டில் சமிஸ்கிருதமும்
பிறந்ததாகச் சொல்கிறார்கள்.

கண்ணன்

பிகு: நம் குழந்தைகள் இப்போது பஜ கோவிந்தம் சொல்வதில்லை. டுவிங்கிள்,
டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நாம் குற்று
உயிரும் குலை உயிருமாக உள்ள சமிஸ்கிருதத்தை விடாமல் சாடி வருகிறோம். இதன்
உளவியல்தான் எனக்கு புரியவே இல்லை!!

Kannan Natarajan

unread,
Jan 21, 2008, 5:22:34 PM1/21/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
>சங்கரர் மலையாளி. அவருக்குத் தமிழ்ப் புலமை எவ்வளவு இருந்தது என்று
>தெரியவில்லை.
 
சங்கரரை கி.மு முதல் 8ஆம் நூற்றாண்டு வரை அலைக்கிறார்கள்! (http://en.wikipedia.org/wiki/Adi_Shankara#Dates)
மலையாளம் தோன்றியதே 10ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே! (http://en.wikipedia.org/wiki/Malayalam_language).
இவர் காலத்தில், சங்கரர், ஆரியாம்பாள், சிவகுரு என்ற பெயர்கள் தமிழில் இருந்திருக்குமா என்று வடமொழியில் தோய்ந்த தமிழறிஞர்களே ஐயப்படுகிறார்கள்! (தெ.பொ.மீ)
 
வடமொழி, இந்தியப் பொதுமொழியாக இருந்திருந்தால், பெரியபுராணத்தில் "அசைவில் சீர் செழுந்தமிழ் வழக்கே,அயல் வழக்கின் துறை வெல்ல"என்றும், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வடமொழியை வைவதையும் விடவில்லை.
 
>தமிழ் மருத்துவம் என்பதில் உங்களுக்கு
>நம்பிக்கை இல்லை.
 
தமிழ் மருத்துவத்தின் மீது எனக்கு வெறுப்பில்லை. பலன் தருவதைப் பற்றித் தான் கவலை, பலன் தராத,மெய்ப்பிக்க முடியாத ஆயிரம் பேரிடம் சோதித்து அளவீடு செய்த அட்டவணையில்லாத ஒன்றுக்குத் - "தமிழ்" என்ற அடைமொழி வேறா! ஓலை மருத்துவம், பாமர மருத்துவம்,மெய்யறியாச் சித்தரின் மருத்துவம்,ஞான மருத்துவம் என்று வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம்.இனிமேலாவது, நல்லாய்வுத் தொடங்கட்டும் (1920ல் இருந்து தொடங்லிய குரல், இனியும் தொடரட்டும்.)
 
>இராமானுஜர் வளர்த்தெடுத்த ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆழ்வார்களின்
>பாசுரங்களைக் குறை காண்பவர்களைத் தன் தாயின் கற்பில் குறை காண்பவனை
>ஒக்கும் என்று சொல்லிப்போயினர்.
 
வேத விளக்கத்தில், ஒரு வரியைக் கூட, ஆழ்வார்களின் பாசுரப் பசும்பொன் தொடர்களைக் காட்டக்கூடாதா?
வடமொழி, இந்தியாவில் முதல் மொழியாக இருப்பதாகச் சொல்லப்படுவதற்குத், தமிழில் மேற்கோள் இல்லை. மாறாக, "மொனமொன","கணகண," என தவளைகள் சத்தமிடுவதுப் போல ஒலிக்கும் மொழிகளை, வடபுறத்தில் இருந்து வந்த சமணர், பெளத்தர், வைதீகர் பேசியதாக தேவராத்தில் குறிப்பு உண்டு! "முரட்டு பாஷைகள்" என்று பாஷியக்காரர்கள் எழுதியது தாங்கள் அறிந்ததே!
 
>ஈழத்தவர்களைப் பொறுத்தவரை வள்ளலார் ஒரு அத்வைதியே!
 
இருப்பதை எதிர்ப்பதும், நாவால் அலர்த் தூற்றுவதும் ஈழப்புலவர்க்கு இயல்பாய் இருந்தது. தீட்சதர்கள், வள்ளலாரின் பணிவைப் பாராட்டியது, நாவலரின் புலமைக்கு முனிவை ஏற்படுத்தியது.
 
 
>வேதத்தின் முன்செல்க; மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
>கோதற்ற ஞானக் கொழுந்தின் முன்செல்க; குணங்கடந்த
>போதக்கடல் எங்கள் தென்குருகூர்ப்புனிதன் கவியோர்
>பாதத்தின் முன் செல்லுமே? தொல்லை மூலப்பரஞ்சுடரே!
 
வேதத்தின் முன்னே அரங்கன் சென்றாலும், வேண்டுவது தமிழே என்று அம்பலவன் கேட்டாலும், வேத வேலிக்குள் தான் இருவரையும் அடைத்து வைத்து காவலில் நிற்பவர்கள் அடிக்கடி, "தமிழ் வாழ்க" என்கிறார்கள். இன்றும் கூட, வடமொழிக்கு ஐயாயிரம் ஆண்டு என்றும், தமிழுக்கு ஆயிரத்தைக் குறைக்கலாமா என்றும் நினைக்கிறார்கள்! நாற்பது இருப்பதனால், இப்போதைக்கு தோற்பதற்கு, காலம் தள்ளிப்போகிறது!
 
"விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கட்
 கரணன் உரைஎனும் ஆரணமொழியோ
 ஆதிசீர பரவும் வாதவூர் அண்ணல்
 மலர்வாய் பிறந்த வாசகத் தேனோ
 யாதோ சிறந்தது என்குவீர் ஆயின்
 வேதம் ஓதின் விழி நீர் பெருக்கி
 நெஞ்சம்நெக் குருகி நிற்பவர்க் காண்கிலேம்
 திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின்
 கருங்கல் மனமும் கரைந்துருகக் கண்கள்
 தொடுமணல் கேணியில் கரந்து நீர் பாய
 மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
 அன்பர் ஆகுநர் அன்றி
 மன்பதை உலகில் மற்றையர் இலரே."  - சிவப்பிரகாச சுவாமி

Kannan Natarajan

unread,
Jan 22, 2008, 4:56:59 PM1/22/08
to minT...@googlegroups.com
வண்ணமயமாக நடந்த நகரத்தார் பொங்கல் வழிபாடு
நகரத்தாரின் பாரம்பரிய திருவிழாவான செவ்வாய் பொங்கல் வழிபாடு வண்ணமயமாக நேற்று(22/01/08) நடந்தது.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் பிரசித்தி பெற்ற கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில், ஆண்டு தோறும் தை பொங்கலை அடுத்த செவ்வாயன்று நகரத்தார் சமூகத்தினர் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.
விழாவில் கலந்து கொள்ள,
  • அமெரிக்கா,
  • பர்மா,
  • ஆஸ்திரேலியா,
  • மலேசியா,
  • சிங்கப்பூர்,
  • இலங்கை,
  • கனடா

போன்ற பல்வேறு நாடுகளில் வசிக்கும் நகரத்தார் குடும்பத்துடன் வந்திருந்தனர். கண்ணாத்தாள் கோவில் வளாகம் களை கட்டியிருந்தது. வண்ணமயமாக காட்சியளித்தது.கோவில் திடலில் நீண்ட வரிசையில் முறைப்படுத்தி ஒதுக்கப்பட்ட இடத்தில் 866 பாரம்பரிய குடும்பத்தினரின் பானைகள் வைக்கப்பட்டன. மாலை 4.30 க்கு ஒரே நேரத்தில் அனைத்து அடுப்புகளும் பற்ற வைக்கப்பட்டன. பொங்கிய பொங்கல் பானையை அனைவரும் கோவில் வளாகத்திற்குள் வரிசையாக வைத்து வழிபாடு நடத்தினர். மற்றொரு புறம் வேறு சமூகத்தினர் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த நகரத்தார் குடும்பத்தினரிடையே வரன் தேடும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இரவு நடந்த பூஜை திருவிழாவிலும் நகரத்தார் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
 
நன்றி: தினமலர் - www.dinamalar.com

Kannan Natarajan

unread,
Jan 23, 2008, 5:02:45 PM1/23/08
to minT...@googlegroups.com
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு: அரசு அறிவிப்பு
 
தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டப் பேரவையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் பர்னாலா உரையுடன் புதன்கிழமை (23/01/08) தொடங்கியது. ஆளுநர் உரையில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் உரையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

மறைமலை அடிகள் தலைமையில், 500-க்கும் மேற்பட்ட தமிழ் பெருமக்கள் 1921-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி, தமிழர்களுக்கென "தனி ஆண்டு" தேவை எனக் கருதி திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றைப் பின்பற்றுவதென்றும், "தமிழ் ஆண்டு" எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு.31 என்றும் முடிவெடுத்தார்கள்.

அதைக் கருத்தில் கொண்டு, 1971-ம் ஆண்டு தமிழக அரசு நாட்குறிப்பிலும், 1972-ம் ஆண்டு முதல் தமிழக அரசிதழிலும் நடைமுறைப்படுத்த முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்தார்.

திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால், தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

நன்றி: தினமணி - http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080123122658&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist =

Kannan Natarajan

unread,
Jan 23, 2008, 5:07:38 PM1/23/08
to minT...@googlegroups.com
தமிழ்ப் புத்தாண்டு தை: அரசு விடுமுறை ரத்தாகுமா?
 
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதால் ஏப்ரலில் அரசு விடுமுறை ரத்தாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 2008-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாள்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு நவம்பர் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டன. அதில் ஏப்ரல் 13-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தின அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏப்ரல் 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகும். எனவே இந்த ஆண்டைப் பொருத்தவரை அரசு விடுமுறைப் பிரச்னை இல்லை. இந்நிலையில் ஆளுநர் உரை அறிவிப்பின்படி, தை முதல் நாள் இனி தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படும் என்பதால், 2009-ம் ஆண்டு முதல் ஏப்ரலில் தமிழ்ப் புத்தாண்டு தின அரசு விடுமுறை ரத்தாகும் எனத் தெரிகிறது.
 

Kannan Natarajan

unread,
Jan 23, 2008, 5:30:27 PM1/23/08
to minT...@googlegroups.com

சித்திரையில்தான் புத்தாண்டு
 
எஸ். ராமச்சந்திரன்
(கட்டுரையாளர்: தொல்லியல் ஆராய்ச்சியாளர்)

இக்கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

சங்க இலக்கியங்களில் "தைந்நீராடல்" எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.

அவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் - சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் - அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

இந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.

கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும்,தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் (Spring) எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.

கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட "ஏரீஸ்" வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.

இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தெளஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி - சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது "மீன மேஷம் பார்த்தல்'' என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.

இப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா?

கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.

மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். ("நாஞ்சிற்பனைக் கொடியோன்'' - புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.

பலராமனை "புஜங்கம புரஸ்ஸர போகி" எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு குறிப்பிடுகிறது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.

 
பூம்புகாரில் இந்திர விழாவின்போது "சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து'' மூதிற் பெண்டிர் வழிபட்டனர் எனச் சிலப்பதிகாரம், இந்திர விழவூரெடுத்த காதை வரி 64 - 69களில் குறிப்பிடப்படுகிறது.
 
பிற்காலச் சோழராட்சியின்போது தைப் பொங்கல் விழா என்பது தமிழர் திருநாளாகக் கருதப்பட்டதா; தமிழ்ப் புத்தாண்டு என்பது தைப் பொங்கலன்று தொடங்கிற்றா?
 
இவை இரண்டிற்குமே தெளிவான விடை "அல்ல'' என்பதுதான்.

சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.

ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை - 360 பாகைகளை - 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.

சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரியபுராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

சோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர்களை) குறிப்பிடுகையில் "இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்'' என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திருநாட்டுச் சிறப்பு, பா. 10, 12).

தமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை.

பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி - பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன.

பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்.

வரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.

"திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்'' என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 - 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட "ஏரீஸ்" என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்.

இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 - 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் - முதுவேனில், கார் - கூதிர், முன்பனி - பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் - ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.

சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 - 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, "தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்'' என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

இனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் "பிரபவ'' தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை "வியாழ வட்டம்'' எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.

சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், "இனம் புரிந்த", இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.

இந்தியா "தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற'' காலகட்டத்தில், "நேரங் கெட்ட நேரத்தில்'' மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் "தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு'' என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் "சுதந்திர"மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: "சித்திரையில்தான் புத்தாண்டு''.

நன்றி: தினமணி - http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20080123113656&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0&dName=No+Title&Dist =

Kannan Natarajan

unread,
Jan 30, 2008, 4:04:59 PM1/30/08
to minT...@googlegroups.com
கி.மு., கி.பி., போலவே தி.மு., தி.பி., : முதல்வர் கருணாநிதி விளக்கம்

"கிறிஸ்தவர்கள் கி.மு., கி.பி., என்று காலத்தை நிர்ணயிப்பது போல் இனி திருவள்ளுவர் பிறந்ததற்கு முன், பின் என தமிழர்கள் காலத்தை கணிக்கலாம்.
 
அறுபது ஆண்டுகளால் காலத்தையும், வயதையும் கணிக்க இயலாது. இனி தமிழ்ப்புத்தாண்டு தை மாதம் தான்' என்று முதல்வர் கருணாநிதி விளக்கமளித்தார்.
மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் முத்தமிழ்ப்பேரவையின் 32ம் ஆண்டு இசை விழா நேற்று(30/01/08) நடந்தது. விழாவைத் துவக்கி வைத்து, விருதுகளை வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியதாவது:இன்று வழங்கப்பட்ட விருதுகளில் ராஜரத்னா விருது முறையாக வழங்கப்படும் விருது. இது பாரத ரத்னா விருதல்ல. திருவாடுதுறை ராஜரத்தினம் மிகச் சிறந்த வித்வான். அவரது மறைவின் போது நடந்த கூட்டத்தில் அப்போதைய மத்திய நிதியமைச்சர் சி.சுப்ரமணியத்திடம் நான் ஒரு கோரிக்கை வைத்தேன்.பாரத ரத்னா விருது போல இசைக்கு தனி மரியாதை ஏற்படுத்தி தருகின்ற ராஜரத்தினம் பிள்ளை பெயரிலான விருதை நாதஸ்வரத்தில் சிறந்தவர்களுக்கு வழங்க வேண்டும்' என்று தெரிவித்தேன். "இது உடனடியாக நிறைவேறுகிற காரியமல்ல' என்று சி.எஸ்., தெரிவித்துவிட்டார். ஆனால், முத்தமிழ் பேரவை இந்த விருதை தொடர்ந்து வழங்கி வருகிறது.வாழ்த்திப் பேசிய சாரதா நம்பி ஆருரான் ஒன்றைப் பேச மறந்து விட்டார். அது தை மாதம் தமிழ்ப்புத்தாண்டு என்ற அறிவிப்பு. "தை மாதம் தான் தமிழப்புத்தாண்டு" என்று கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்னர் சுவாமி வேதாச்சலம் என்பவர், அதாவது மறைமலை அடிகளாக பெயரை மாற்றிக் கொண்ட, அவரது பாட்டனார் தான், அறிஞர்களைக் கொண்டு அறிவித்தவர். அதனையும் அவர் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவரது நினைவாக 1967ல் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த போது சைதை மேம்பாலத்துக்கு மறைமலை அடிகள் பாலம் என்று பெயரிட்டேன்.
 
பிரபவ, விபவ எனும் அந்த அறுபது ஆண்டுகளால் காலத்தை கணக்கிட முடியாது. அந்தக்கால சராசரி வயது 25, 30, 40 என்று தான் இருக்கும். இப்போது நானே 84 வயதில் இருக்கிறேன்.
 
60 ஆண்டுகள் கணக்குபடி எனக்கு வயது இரண்டு தானா?
 
சரியான ஆண்டுக் கணக்கை கணக்கிட இயலாது. இது படித்தவர்கள், கற்றுத் தேர்ந்தவர்கள், ஆராயக் கூடியவர்கள் (மயிலாப்பூர்) வாழும் பகுதி. வடமொழி வெறுப்பு அல்ல.கிறிஸ்தவர்கள் கி.மு., கி.பி., என்று கணக்கிடுவதைப் போல நாம் திருவள்ளுவர் பிறந்ததற்கு முன்பு, பின்பு என்று கணக்கிட வேண்டும், இவ்வாறு கருணாநிதி பேசினார்.
 
விழாவில்
  • இயல் செல்வம் விருது இயக்குனர் பாரதிராஜாவுக்கும்,
  • ராஜரத்னா விருது சிக்கல் உமாபதிக்கும்,
  • இசை செல்வம் விருது ஆர்.மாணிக்க விநாயகத்துக்கும்,
  • நாட்டிய செல்வம் விருது சித்ரா விஸ்வேஸ்வரனுக்கும்,
  • வயலின் செல்வம் விருது குடந்தை தேவிபிரசாத்துக்கும்,
  • தவில் செல்வம் விருது ரெட்டியூர் செல்வத்துக்கும் வழங்கப்பட்டன.
சாரதா நம்பி ஆரூரான் வாழ்த்திப் பேசினார். இயக்குனர் பாரதிராஜா, மாணிக்க விநாயகம் ஏற்புரை நிகழ்த்தினர். பேரவை செயலர் அமிர்தம், துணை செயலர் வழுவூர் ரவி, பரணி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Narayanan Kannan

unread,
Jan 30, 2008, 7:09:42 PM1/30/08
to minT...@googlegroups.com
2008/1/11 Kannan Natarajan <thar...@gmail.com>:
> தை மாத முதல் நாளை தமிழ் புத்தாண்டாக விரைவில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
>

கலைஞர் சரித்திரத்தில் தங்கிவிட பல முயற்சிகள் எடுத்துள்ளார். இது அவரின்
சமீபத்திய முயற்சி. பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் ஒரு சம்பிரதாயத்தை
மாற்றி புதிய சம்பிரதாயத்தை உருவாக்க முயல்கிறார். Conventions என்பவை
எப்படி உருவாகின்றன, எப்படி காலத்தை வென்று நிலைக்கின்றன என்பதே ஒரு
ஆய்வு பொருள்.

வள்ளுவ சகாப்தத்தை உருவாக்குகிறார் கலைஞர். வள்ளுவனுக்கொரு சகாப்தம்
இருப்பது சிறப்புத்தான். ஆனால் வள்ளுவர் எப்போது பிறந்தார் என்பதே
பிரச்சனைக்குரிய ஆய்வு பொருள். வையாபுரிப்பிள்ளை வள்ளுவரை கி.பி
என்கிறார். ஆனால் கலைஞர் ஏசுவை தி.பி என்கிறார். காலம்தான் இதற்கெல்லாம்
பதில் சொல்ல வேண்டும். மக்களாட்சி முறையுள்ள சமகால சூழலில்
சம்பிரதாயங்களை நிருவது மிகக்கடினம் (அறிவியற்துறை மட்டுமே தனக்கென சில
சம்பிரதாயங்களை வைத்துள்ளது, அதுவும் மாறக்கூடியது என்ற புரிதலுடன்).
இவர் செய்வது அனைத்தையும் அழித்துத் திருத்துவதற்கென்று ஒரு பெண்ணைப்
படைத்திருக்கிறான் இறைவன். காலம் என்ன சொல்லப் போகிறது என்று பார்ப்போம்.

<<பிரபவ, விபவ எனும் அந்த அறுபது ஆண்டுகளால் காலத்தை கணக்கிட முடியாது.
அந்தக்கால சராசரி வயது 25, 30, 40 என்று தான் இருக்கும். இப்போது நானே
84 வயதில் இருக்கிறேன்.

60 ஆண்டுகள் கணக்குபடி எனக்கு வயது இரண்டு தானா?
>>

இப்படியெல்லாம் பேசுவதில் இவர் சமர்த்தர். இவருக்கு முன்னால் 120 வயது
வாழ்ந்த பெரியவர்களெல்லாம் உண்டு தமிழகத்தில். அவர்கள் வயதை யாரும்
பிழையாகக் கணக்கிட்டதில்லை.

காலம் என்பது நேர்கோடு என்று ஆங்கில வழிப்பட்டு சொல்கிறார் கலைஞர். தனது
"Brief History of Time" எனும் நூலில் பிரபல ஆங்கில விஞ்ஞானி Professor
Stephen Hawking காலம் நேர்கோடு அல்ல என்று சொல்லிவிடுகிறார். காலம்
என்பது சார்புடைக் கருத்து. அது நேர்கோடாக இருக்க சாத்தியமில்லை என்று
உணர்ந்தே கிழக்கு சம்பிரதாயங்களில் காலத்தை சுழல் வடிவில் அமைத்தனர். சீன
சம்பிரதாயத்திலும், கொரிய, ஜப்பானிய சம்பிரதாயங்களிலும் அது நேர்கோடு
அல்ல. சீன ராசி மண்டலம் சுற்றிச் சுற்றிதான் வருகிறது. முயல் ராசியைச்
சேர்ந்த ஒருவர் 10 வயதாகவும் இருக்கலாம், 80 வயதானவராகவும் இருக்கலாம்.
சமயோஜிதமாகப் புரிந்து கொள்ள வேண்டும். சேர்மன் மாவோ மாற்றாத ஒரு
வழக்கத்தை கலைஞர் மாற்ற முயல்கிறார். பகுத்தறிவு எனும் போர்வையில்!

கண்ணன்

இரவா

unread,
Jan 30, 2008, 8:35:23 PM1/30/08
to minT...@googlegroups.com
விளங்கிறது! தமிழன் என்னும் போர்வைக்குள் ....................!,

நன்றாக விளங்குகிறது!

இவர் செய்வது அனைத்தையும் அழித்துத் திருத்துவதற்கென்று ஒரு பெண்ணைப்
படைத்திருக்கிறான் இறைவன்.

ஓ .... ! அந்தப் பெண் செய்தது எல்லாம் ஆண்டவன் செய்தது, போலவா?


--
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

Narayanan Kannan

unread,
Jan 30, 2008, 8:48:52 PM1/30/08
to minT...@googlegroups.com
கலைஞர் போலவே வார்த்தை விளையாட்டு :-)
மீண்டும் என் உள்ளிடுகையைப் பார்க்க!!


2008/1/31 இரவா <vasude...@gmail.com>:

வேந்தன் அரசு

unread,
Jan 30, 2008, 9:49:47 PM1/30/08
to minT...@googlegroups.com
>வள்ளுவர் எப்போது பிறந்தார் என்பதே
பிரச்சனைக்குரிய ஆய்வு பொருள்
 
கிறுத்து பிறப்பும் காலமும் ஆய்வுக்கு உரியதுதான்
 
வள்ளுவர் என்றைக்கு பிறந்தாலும் அந்த ஆண்டு கணக்கை வளுளுவர் பெயரால் சொல்லலாமே. அந்த பேரை விட சிறந்த பேர் தமிழில் உண்டா?
 
கி.பி 2008 ஐ வள்ளுவர் ஆண்டு தொடக்கமாக 1 எனவும் வைக்கலாம்
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

Narayanan Kannan

unread,
Jan 31, 2008, 12:17:40 AM1/31/08
to minT...@googlegroups.com
2008/1/31 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

>> கிறுத்து பிறப்பும் காலமும் ஆய்வுக்கு உரியதுதான்
>

உண்மை. இது பற்றி நான் முன்பே சொல்லியுள்ளேன்.


> வள்ளுவர் என்றைக்கு பிறந்தாலும் அந்த ஆண்டு கணக்கை வளுளுவர் பெயரால் சொல்லலாமே.
> அந்த பேரை விட சிறந்த பேர் தமிழில் உண்டா?
>
> கி.பி 2008 ஐ வள்ளுவர் ஆண்டு தொடக்கமாக 1 எனவும் வைக்கலாம்
>

நிச்சயமாகச் செய்யலாம்.

ஒரு முறைமையை உருவாக்க எதை வேண்டுமானாலும் அளவு கோலாகக் கொள்ளலாம்.

ஆனால் என் கேள்வி முறைமைகள் எப்படி உருவாகின்றன, எப்படி நிலைப்படுகின்றன
என்பதுதான்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின்

என்று சொன்ன வள்ளுவன், முதலில் தன் பெயரில் ஒரு சகாப்தம் உருவாக
வேண்டுமென்று எண்ணியிருப்பானா? ;-)

தமிழக வரலாற்றை நோக்கின் வள்ளுவனை ஒற்று மொத்தமாக எல்லா சமயங்களும்
ஏற்றுக் கொண்டுள்ளன. அவன் சான்றாண்மையை போற்றிப் புகழ்ந்தே உள்ளன. அப்படி
இருப்பினும் வள்ளுவ சகாப்தமென்று ஒன்று ஏன் உருவாகவில்லை. அவனொரு
ஒளிச்சுடராய் இருந்த போதும்?

மிகப்பெரிய பேரரசர்கள் இருந்திருந்திருக்கிறார்கள். ஏன் இராஜராஜ சோழன்
தன் பெயரில் ஒரு சகாப்தத்தை உருவாக்கவில்லை.? அவன் மெய்கீர்த்திக்கு
என்றும் ஆசை உடையவனே! நல்ல பல சான்றோர்களைப் பெற்ற தமிழ் மண்ணில்
வருடங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்டல் கடினமான காரியமா? ஏன் இப்போதுள்ள
முறைமையை ஏற்றுக் கொண்டிருந்தனர்? அவர்களது தமிழ் உணர்வு இப்போது
நம்மிடம் இருந்ததைவிடக் குறைவா?

கடைசியாக, இந்தியா ஆங்கில (கிரிஸ்தவ) சகாப்தத்தை முழுமையாக ஏற்றுக்
கொண்டு விட்டது. அளவு முறைமையில் மெட்ரிக் முறையை ஏற்றுக் கொண்டுவிட்டது.
இப்போது நாம் உருவாக்கும் முறைமை காலப்போக்கிற்கு ஒத்துவருகிறதா? இல்லை
இதுவொரு அரசியல் பொழுது போக்கா? இது போன்ற கேள்விகளை இவ்விழை
தூண்டிவிடுகிறது.

கண்ணன்

Kannan Natarajan

unread,
Feb 1, 2008, 1:32:45 AM2/1/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
மெல்ல மெல்ல மரபுகளை உடைத்தெறிய வேண்டும் என்பது சிலரது போக்கு. நமது மரபுகள் அறிவியல் ஆழத்தில் அகப்படாமல், கற்பனைச் சகதியிலும், கதைக் கூளங்களிலும் சிக்கிச் சீர்குலைந்து விட்டன. "நானுரைக்கும் வார்த்தை எல்லாம்,நாயகன் தன் வார்த்தை" என்று கூறியதால்,"நான் உரைப்பது தான் வார்த்தை" என்று புரட்சியாளர்கள் மாற்றுகிறார்கள்! "செங்கோலுக்கு முன்னால் சங்கீதமா!" என்று சொல்வதெற்கெல்லாம் பரிசு, இது போலும்!
 
ஏழு நாள்கள், ஏழு கிரகங்கள்,12 இராசிகள், இவை எல்லாம் கூடக் கதை கலந்த கற்பனைகள்.  முதலில், பத்து மாதங்களே இருந்தன; ஐந்து நாட்களே இருந்தன. தகப்பன் பெயரையே மகனும்,பெயரனும் வைத்துக்கொள்ளும் அரசர்கள் இருந்தனர், புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் வேறு. "செவ்வாய் நமக்கு வெறுவாயாகவும்,சிலருக்கு மங்கல வாரமாகவும்," கருதப்படுகிறது. பகலைப் பத்து மணி நேரமாகவும், இரவை பன்னிரண்டு மணி நேரமாகவும்,பிரித்த பழைய நாடுகள் உண்டு,பிறகு கணக்கை சரிக்கட்ட பகலோடு இரண்டு மணி நேரம் சேர்த்து, பன்னிரெண்டாக்கினார்கள்.சூரியன் பூமியைச் சுற்றுவதாக, "ஞாயிறு போற்றுதும்" என்றனர்! 
அப்பாடி! சேற்றில் கைவைத்தால், நண்டுகளும் நத்தைகளுமே மிஞ்சும் போலத் தெரிகிறது!  அதனால் தான்,"குப்பைகளைக் கொட்டி எறித்திடுவேம்"  என்று பாரதியாருக்கும் கோபம் வந்தது!
 
"இன்று புதிதாய்ப் பிறந்தோம்!"
 
புதியது எதையும் "பழகிப் பாருங்கள்" என்று அங்கவை, சங்கவையின் தந்தையார் சொன்னது நினைவிற்கு வருகிறது!
 
அதெற்கென்ன,"அம்மையார்"  எட்டாவது நாளை வாரத்தில் சேர்த்துவிட்டால் போகிறது. மறைமலையைப் போல பரங்கிமலையைச் சான்றுக் காட்டிவிடலாம்!

Kannan Natarajan

unread,
Feb 11, 2008, 5:02:03 PM2/11/08
to minT...@googlegroups.com

தைத்திங்கள் முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது தமிழன் மானமும் தமிழின் உரிமையும் தங்குவதாகும்.

முதலமைச்சர் கலைஞரின் இனமான உரை
 
சங்கத்தமிழ்ப் பேரவையின் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 9-2-2008 நடைபெற்ற விழாவில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டதாவது:
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னார் - மார்கழி உச்சியில் மலர்ந்தது பொங்கல் என்று. மார்கழி உச்சியில் மலர்ந்தது பொங்கல் என்ற அந்தக் கவிதை வரியின் தாத்பர்யமே, மார்கழியில் உச்சியில் வருவது தை முதல் நாள் - அதிலே மலர்வது பொங்கல் நாள். அந்தப் பொங்கல் நாள் தான் தமிழ் ஆண்டின் முதல் நாள் என்பது
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மாத்திரமல்ல - அவரைத் தொடர்ந்து பல புலவர்களும் அதே கருத்தை எடுத்துரைத்திருக்கிறார்கள். அந்தக் கருத்து சரிதான் என்று ஏற்றுக்கொள்ள நானும் நம்முடைய பேராசிரியர் அவர்களும் அமைச்சர்களும் கூடிப்பேசி, அமைச்சரவையிலே முடிவெடுத்து, எடுத்த முடிவு சரிதானா அல்லவா என்பதை எங்களை வாழ்த்துவதின் மூலம் இந்த நாட்டு மக்களுக்கு தெரிவியுங்கள் என்று கேட்டுக் கொள்ளத்தான் இங்கே அமர்ந்திருக்கின்ற அறிஞர் பெருமக்களை, புலவர் பெருமக்களையெல்லாம் அழைத்தோம். அவர்கள் எங்களுக்கு அந்த அங்கீகாரத்தைத் தந்திருக்கிறார்கள். இனி நம்முடைய வேலை, ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வரும் போது புதுப்பானை வைத்தோம் என்பதோடு நிறுத்தாமல், பொங்கலை இப்போது கொண்டாடுகின்ற தீபாவளியைப் போலவே நாம் கொண்டாட வேண்டும். தீபாவளியிலே என்னென்ன காரியங்கள் நடைபெறுகிறதோ அந்தக் காரியங்கள் எல்லாம் - பொங்கல் திருநாளில் தமிழர்களுடைய இல்லங்களிலே நடைபெற வேண்டும். திருவிளக்குகள் ஏற்றப்பட வேண்டும். புதுக்கோலங்கள் போடப்பட வேண்டும். புத்தாடைகள் புனையப்பட வேண்டும். புனலாட வேண்டும். அப்படிப்பட்ட மகிழ்ச்சிகரமான நாளாக பொங்கலைக் கொண்டாடி, இது தமிழர்களுடைய புத்தாண்டு நாள் என்றும் மகிழ்ந்திட வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
 

நமக்கு இதற்கு முன்பிருந்த ஆண்டுகளால் - நான் முதலிலே சொன்னதைப் போல, ஏன் நம்மைக் கவரமுடிய வில்லை. அது கணக்கிலே வரவில்லை. கணக்குக்கு ஒத்து வரவில்லை. என்னென்ன ஆண்டுகள் வட மொழிகளாக நமக்கு இருந்தன. பேராசிரியர் சொன்னார் - சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி என்ற பெயர்களைச் சொன்னார். ஓரளவிற்கு அவற்றைப் பார்க்கும்போது ஒன்றிரண்டு வடமொழிச் சொல்லாக இருந்தாலும் கூட பொதுவாக மேலெழுந்த வாரியாக தமிழ்ச் சொற்களாகவே நமக்குத் தென்படுகின்றன. அது நம்முடைய அடிப்பீடத்தை அசைக்கக் கூடிய அளவிற்கு வல்லமை பெற்றதாக இருக்காது என்ற நம்பிக்கையலே தான் அடிப்பீடத்தையே அடிக்கக் கூடிய அளவிற்கு ஆண்டுக் கணக்கு இருப்பதைப் பார்க்கிறோம். கணக்கு என்று எடுத்துக் கொண்டால் கூட என்னைப் பார்த்து உனக்கு என்ன வயது என்று கேட்டால், இப்போது 84 என்கிறேன். பேராசிரியரைக் கேட்டால் 85 என்கிறார். எந்த வருடம் பிறந்தீர்கள் என்று என்னைக் கோட்டால், நான் இந்தத் தொடர் ஆண்டைச் சொல்ல முடியாது. தொடர் ஆண்டைச் சொல்லாமல் சமஸ்கிருத ஆண்டைத்தான் சொல்ல வேண்டுமென்றால், என்னைப் பொறுத்த வரையில் நான் ரக்தாட்சி ஆண்டு பிறந்தேன் என்று சொல்ல வேண்டும். ரக்தாட்சி ஆண்டிலிருந்து கணக்கிட்டால், ரக்தாட்சி, குரோதன, அட்சய என்ற இந்த மூன்று ஆண்டுகள் போக, பிரபவ, விபவ, சுக்கில என்று ஆரம்பிக்கிற வடமொழி ஆண்டுகளைக் கணக்கிட்டால் இப்போதுள்ள ஆண்டு 30 ஆவது ஆண்டாக அல்லது 31 வது ஆண்டாக இருக்கும். நான் நம்முடைய பழைய வருஷக் கணக்குப்படி என்னுடைய வயது 30 அல்லது 31 என்றுதான் சொல்ல வேண்டும். வயது கணக்கு தவறும். வயது கணக்கு தடுமாறும். எனவேதான் தொடர்கணக்காக இருக்க வேண்டுமென்றுதான் திருவள்ளுவர் ஆண்டு தொடர் ஆண்டாகவும், திருவள்ளுவர் ஆண்டின் தை முதல் நாள் அந்த ஆண்டின் தொடக்க நாளாகவும் இருக்க வேண்டும். தமிழ்ப் பெயரில் இருக்க வேண்டுமென்று இன்றைக்கு அமைத்திருக்கிறோம். இல்லாவிட்டால் நமக்கென்று வரையறுத்துக் கொடுக்கப்பட்ட ஆண்டுகள் வடமொழியில் அறுபதாண்டுகள். அதுவும் சாதாரணமாக வந்த ஆண்டுகள் அல்ல. நாரதருக்கு திடீரென்று ஒரு ஆசை ஏற்பட்டு மகாவிஷ்ணுவைப் பார்த்து பெண் உருவெடுத்து நான் உனக்குக் குழந்தைகளைப் பெறவேண்டுமென்று கேட்டு, விஷ்ணுவும் நாரதர் வேண்டுகோளைப் புறக்கணிக்க விரும்பாமல், நாரதர், நாரதியாகி விஷ்ணு அவளுடைய கணவராகி இருவருக்கும் பிறந்த குழந்தைகள் அறுபது. அந்த அறுபது குழந்தைகளும்தான் அறுபது ஆண்டுகள். அந்த ஆண்டுகள்தான் பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோ பத்தி, ஆங்கிரச, சிறீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்கிரம, விஷூ, சித்ரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, ஸர்வஜித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துர்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுப கிருது, சோபகிருது, குரோதி, விசுவாவசு, பராபவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராக்க்ஷஸ, நள, பிங்கள, காளயுக்தி, சித் தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, தந்துபி, ருக்ரோத்காரி, ரக் தாக்ஷி, குரோதன, அக்ஷய என்று இப்படி அறுபதாண்டுகள் சொல்லும் போது வாயிலே நுழைவதில்லை. சொன்ன பிறகு காதிலும் நுழைவதில்லை. கருத்திலும் பதிவதில்லை. கருத்திலே பதிகின்ற ஒன்று இவைகள் எல்லாம் புராணக்கணக்கு. உண்மையான வயதுக்கணக்கைக் காட்டக் கூடியவைகள் அல்ல; வருடங்கள் அல்ல. அதனால் தான் தொடர் ஆண்டுக் கணக்கு வேண்டுமென்று யோசித்தோம். அந்தத் தொடர் ஆண்டுக் கணக்கு, திருவள்ளுவர் ஆண்டுக்கணக்கு என்று தொடங்கினால்தான் தை முதல் நாள் அந்த ஆண்டின் முதல் நாள் என்று குறிக்கப்பட்டால்தான் சரியான கணக்கும் கிடைக்கும், தமிழனுடைய மானமும் தங்கும். தமிழ் மொழியின் உரிமையும் காப் பாற்றப்படும்.


இதைப் பார்த்து சில பேருக்கு எரிச்சல் ஏற்படலாம். அந்த எரிச்சலுக்காக நாம் கவலைப்படத் தேவையில்லை. அங்கே எரிய எரிய இங்கே ஒளி கிடைக்கும். எங்கேயாவது எரிந்தால்தான் அந்த எரிச்சல் நம்முடைய வீட்டிற்கு ஒளியாக இருக்கும் என்பதைப் போல், அந்த ஒளியையும் நாம் பெறுவோம். நம்முடைய வீடு, நம்முடைய ஊர், நம்முடைய நாடு அனைத்திலும் தமிழ் மணம் கமழ வேண்டும். அந்தத் தமிழ் மணம் கமழ்வதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் என்றென்றும் உதவக்கூடிய, பயன்படக் கூடிய நிகழ்ச்சிகள் ஆகும்.


இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

நன்றி: விடுதலை - http://viduthalai.com/20080210/news02.html

Kannan Natarajan

unread,
Feb 11, 2008, 5:46:42 PM2/11/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
இத்தொடரில்,கரும்பு,இஞ்சி மஞ்சளின் பழமையைப் பற்றி ஆராய்ந்தோம். இத்தருணத்தில், ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் மாநகருக்கு அருகில் உள்ள யாண்டினாவில்,(http://www.buderimginger.com/gingerfactory) உலகத்தின் மிகப் பெரிய இஞ்சித் தொழிற்சாலை அமைந்துள்ளது. என்னதான் பல நவீன சர்க்கரை ஆலைகள் இருப்பின், கரும்பிற்கோ அல்லது மஞ்சளுக்கோ தனிப்பட்ட முறையில் அலைகள் இருக்கிறதா? குழும அன்பர்கள் தெரிவிப்பின் நலம்.
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்
2008/1/16 Kannan Natarajan <thar...@gmail.com>:
வணக்கம்,
 
கரும்பு என்பது சங்க காலத்திலேயே பயன்கொண்ட அரிய சொல்லாகத் திகழ்கிறது! "கரு" என்பது அரிய, விரும்பத்தக்க என்ற பொருளுடையதாக இருக்கலாம்! அயற்சொல் மருவிய வடிவெனக் கருதலாமா?(யவனர் போல)
 
வடமொழியில் "இக் ஷு" என்று அழைக்கப்படுகிறது,அதை,தமிழில் இக்கு என்பர். அயல்மொழிகளில்,கரும்புக்கு என்ன பெயர் என்று காணவேண்டும். இந்தியாவின் வடபுலமோ,தென்கிழக்கு ஆசிய நாடோ,அதியமானின் முன்னோர் சென்ற அல்லது அறிந்த நாடாகயிருக்க வேண்டும். கி.மு 326ல் அலெக்சாண்டர் இந்தியாவின் வடமாநிலத்தில்;இந்த இனிப்பு முங்கிலைக் கண்டனராம்!( http://www.siu.edu/~ebl/leaflets/sugar.htm )
 
கரும்பின் நிறம்  இளஞ்செம்மை நிறமாதலால்,கரிய நிறத்தை காரணமாகச் சொல்ல முடியவில்லை.
 
இஞ்சி - சீனவில் "ஜியாங்"(Jiang) எனத் தோன்றி,ஆங்கிலத்தில் Zingiber என ஆயிற்று. சுக்கு - உலர்ந்தது என்று பொருள்.(http://en.wikipedia.org/wiki/Ginger)
 
மஞ்சளும் - தென்னாசியப் பயிர் தான். மங்கல் நிறமே மஞ்சள்,மங்கலம் என்று ஆகியிருக்க வேண்டும்.தெலுங்கில், "பசுப்பு" என்று பெயர்.பழம்பெரும் நடிகை கண்ணாம்பாவை - "பசுப்பு"லேடி என்று அழைத்தார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். ( http://en.wikipedia.org/wiki/Turmeric)
 
ஆராய,ஆராய ஆழங்காண முடியவில்லை!

Narayanan Kannan

unread,
Feb 11, 2008, 8:01:03 PM2/11/08
to minT...@googlegroups.com
பொங்கலை தீபாவளி போல் கொண்டாட வேண்டுமென்பதில் கருத்து வேறுபாடு இருக்க நியாயமில்லை. பள்ளிப் பருவத்திலெல்லாம், பொங்கலுக்கு மட்டுமே நாங்கள் வாழ்த்து அட்டை அனுப்புவோம். மேலும், தீபாவளியன்று தர்ப்பணம் செய்து கர்மக்கடன் கழிப்பதற்குப்பதில் 'ஞாயிறு போற்றுதும்' என்று ஒளி வழிபாடு செய்வது எவ்வளவோ மேல்.

2008/2/12 Kannan Natarajan <thar...@gmail.com>:

கேட்டால் 85 என்கிறார். எந்த வருடம் பிறந்தீர்கள் என்று என்னைக் கோட்டால், நான் இந்தத் தொடர் ஆண்டைச் சொல்ல முடியாது. தொடர் ஆண்டைச் சொல்லாமல் சமஸ்கிருத ஆண்டைத்தான் சொல்ல வேண்டுமென்றால், என்னைப் பொறுத்த வரையில் நான் ரக்தாட்சி ஆண்டு பிறந்தேன் என்று சொல்ல வேண்டும். ரக்தாட்சி ஆண்டிலிருந்து கணக்கிட்டால், ரக்தாட்சி, குரோதன, அட்சய என்ற இந்த மூன்று ஆண்டுகள் போக, பிரபவ, விபவ, சுக்கில என்று ஆரம்பிக்கிற வடமொழி ஆண்டுகளைக் கணக்கிட்டால் இப்போதுள்ள ஆண்டு 30 ஆவது ஆண்டாக அல்லது 31 வது ஆண்டாக இருக்கும்.

>>அந்த ஆண்டுகள்தான் பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோ பத்தி, ஆங்கிரச, சிறீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்கிரம, விஷூ, சித்ரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, ஸர்வஜித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துர்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுப கிருது, சோபகிருது, குரோதி, விசுவாவசு, பராபவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராக்க்ஷஸ, நள, பிங்கள, காளயுக்தி, சித் தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, தந்துபி, ருக்ரோத்காரி, ரக் தாக்ஷி, குரோதன, அக்ஷய என்று இப்படி அறுபதாண்டுகள் சொல்லும் போது வாயிலே நுழைவதில்லை. >>
 
கலைஞருக்கு வடமொழி அறிவு என்னைவிட அதிகமாகவே உள்ளது :-) 60 வருடம் எனக்குத் தெரியாது ;-)
இத்தனை பெயரையும் அவர் மேடையில் சொல்லியிருக்கிறார் என்றால், அவரை 'சமிஸ்கிருத பண்டிதர்' என்று யாராவது சொல்லிவிடப் போகிறார்கள். வடமொழி சொன்னாலே தீட்டு என்று பலர் கருதும் உலகமிது ;-0
 
>>நாரதருக்கு திடீரென்று ஒரு ஆசை ஏற்பட்டு மகாவிஷ்ணுவைப் பார்த்து பெண் உருவெடுத்து நான் உனக்குக் குழந்தைகளைப் பெறவேண்டுமென்று கேட்டு, விஷ்ணுவும் நாரதர் வேண்டுகோளைப் புறக்கணிக்க விரும்பாமல், நாரதர், நாரதியாகி விஷ்ணு அவளுடைய கணவராகி இருவருக்கும் பிறந்த குழந்தைகள் அறுபது. அந்த அறுபது குழந்தைகளும்தான் அறுபது ஆண்டுகள். >>
 
கலைஞருக்கு பௌராணிகர் போல் பல கதைகளும் தெரிகின்றன. இப்படியொரு கதை இருப்பதை இப்போதுதான் கேட்கிறேன்.
 
கண்டோபநிஷத்தில் 'relativity theory' சொல்லும் ஒரு கதையுண்டு. அதில் விஷ்ணு மாயை என்றால் என்னவென்று அறிந்து கொள்ள வேண்டி, நாரதர் கேட்க, அவரைப் பெண்ணாக்கி, சம்சாரியாக்கி அவதிப்பட வைப்பதாக அக்கதை போகும். அதைத்தான் இப்படி மாற்றிச் சொல்கிறாரா? கலைஞர்?
 
யாமறியோம் பராபரமே!
 
எப்படியாயினும் இரண்டு கருத்துக்கள் உள்வாங்கிக் கொள்ளத்தக்கன:
 
1. நேர் கோட்டில் ஆண்டுக் கணக்கு அமைவதில் நடைமுறைச் சௌகர்யமுண்டு. இதை ஆங்கில ஆண்டுக்கணக்கு நமக்குச் செய்து வருகிறது. ஜப்பானில் இரண்டு வருஷக் கணக்குகள் உண்டு. ஆங்கில ஆண்டு, ஜப்பானிய ஆண்டு. அதுபோல் இங்கும் இருக்கலாம். தவறில்லை.
 
2. பொங்கல், தீபாவளிக்கு ஈடாகலாம். தீபாவளிச் செலவுகளை, ஆடம்பரத்தைக் குறைத்து (தலை தீபாவளி என்று எவ்வளவு செலவு?) பொங்கலை எளிமையாய், இயற்கையுடன் இயைந்து செய்யலாம். இதையும் சொல்லியிருக்கலாம் கலைஞர் [தீபாவளியிலே என்னென்ன காரியங்கள் நடைபெறுகிறதோ அந்தக் காரியங்கள் எல்லாம் - பொங்கல் திருநாளில் தமிழர்களுடைய இல்லங்களிலே நடைபெற வேண்டும். ]
 
கண்ணன்

ஆமாச்சு

unread,
Feb 11, 2008, 10:53:29 PM2/11/08
to மின்தமிழ்
On Feb 12, 6:01 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> 1. நேர் கோட்டில் ஆண்டுக் கணக்கு அமைவதில் நடைமுறைச் சௌகர்யமுண்டு. இதை ஆங்கில
> ஆண்டுக்கணக்கு நமக்குச் செய்து வருகிறது. ஜப்பானில் இரண்டு வருஷக் கணக்குகள்
> உண்டு. ஆங்கில ஆண்டு, ஜப்பானிய ஆண்டு. அதுபோல் இங்கும் இருக்கலாம். தவறில்லை.
>

நேர் கோடுன்னா?

> 2. பொங்கல், தீபாவளிக்கு ஈடாகலாம். தீபாவளிச் செலவுகளை, ஆடம்பரத்தைக் குறைத்து
> (தலை தீபாவளி என்று எவ்வளவு செலவு?) பொங்கலை எளிமையாய், இயற்கையுடன் இயைந்து
> செய்யலாம். இதையும் சொல்லியிருக்கலாம் கலைஞர் [தீபாவளியிலே என்னென்ன காரியங்கள்
> நடைபெறுகிறதோ அந்தக் காரியங்கள் எல்லாம் - பொங்கல் திருநாளில் தமிழர்களுடைய
> இல்லங்களிலே நடைபெற வேண்டும். ]
>

எல்லாம் நடந்துக்கிட்டு தானே இருக்கு. அவர் வீட்டுல அப்படி இருக்கலாமோ
என்னவோ! ஒவ்வொரு பண்டிகையும் ஒரு விதமாச்சே! பொங்கலை தீபாவளியா மாத்த
முடியாதே! அப்பறம் பொங்கல் தீபாவளியாகிடும்! நாலு நாள் விமரிசையாக்
கொண்டாடப் படுவது பொங்கல்.. அதை தீபாவளி மாதிரி ஒத்த நாள் கொண்டாடணும்னா!
என்னால முடியாதுப்பா! ரெண்டு மணி நேர பட்டாசு படோபடம் கலைஞரை இப்படி
பேதலிக்கச் செய்திருக்க வேண்டாம்! நாலு நாள் நாம கொண்டாடுவோம்! சும்மா
நச்சுன்னு! வழக்கம் போல ;-)

அன்புடன்
ஆமாச்சு

ஆமாச்சு

unread,
Feb 11, 2008, 11:00:24 PM2/11/08
to மின்தமிழ்
> தமிழ் மருத்துவத்தின் மீது எனக்கு வெறுப்பில்லை. பலன் தருவதைப் பற்றித் தான்
> கவலை, பலன் தராத,மெய்ப்பிக்க முடியாத ஆயிரம் பேரிடம் சோதித்து அளவீடு செய்த
> அட்டவணையில்லாத ஒன்றுக்குத் - "தமிழ்" என்ற அடைமொழி வேறா! ஓலை மருத்துவம், பாமர
> மருத்துவம்,மெய்யறியாச் சித்தரின் மருத்துவம்,ஞான மருத்துவம் என்று>
> வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம்.இனிமேலாவது, நல்லாய்வுத் தொடங்கட்டும் (1920ல்
> இருந்து தொடங்லிய குரல், இனியும் தொடரட்டும்.)

பொதுவாக நோயற்ற வாழ்வுக்கு வழி சொல்கின்றன நமது நூல்கள்! நோய் வந்தால்
தானே வைத்தியம்! இந்த நோக்கில் அணுகிப் பாருங்கள் விடைக் கிடைக்கும்.

nanthan

unread,
Feb 12, 2008, 4:23:01 AM2/12/08
to minT...@googlegroups.com, Narayanan Kannan
அன்பர்களே
தீபாவளியைப் போல் பொங்கல் தொடர்பில் ஈழ்த்து அனுபவம் சொல்கிறேன்.
யாழ்ப்பாணத்தில் பொங்கலுக்குத் தான் வெடி கொழுத்துவோம்.
(இப்போ தினம் தினம் வெடிதான்)

பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக இருக்கும்.
தீபாவளிக்கு, புத்தாடை, களியாட்டம், உறவினரை சென்று பார்த்தல் என்று
இருக்கும். பக்திபூர்வமாக கொண்டாடுபவர்களும், ஆடு வெட்டி கொண்டாடுபவர்களும் உண்டு.

யாழ்ப்பாணத்தில் எனக்குத் தெரிய பொங்கல் தான் மிகப்பெரிய பண்டிகை.

அன்புடன்
நந்தன்
சிட்னி
1. நேர் கோட்டில் ஆண்டுக் கணக்கு அமைவதில் நடைமுறைச் சௌகர்யமுண்டு. இதை ஆங்கில
ஆண்டுக்கணக்கு நமக்குச் செய்து வருகிறது. ஜப்பானில் இரண்டு வருஷக் கணக்குகள்
உண்டு. ஆங்கில ஆண்டு, ஜப்பானிய ஆண்டு. அதுபோல் இங்கும் இருக்கலாம். தவறில்லை.

2. பொங்கல், தீபாவளிக்கு ஈடாகலாம். தீபாவளிச் செலவுகளை, ஆடம்பரத்தைக் குறைத்து
(தலை தீபாவளி என்று எவ்வளவு செலவு?) பொங்கலை எளிமையாய், இயற்கையுடன் இயைந்து
செய்யலாம். இதையும் சொல்லியிருக்கலாம் கலைஞர் [தீபாவளியிலே என்னென்ன காரியங்கள்
நடைபெறுகிறதோ அந்தக் காரியங்கள் எல்லாம் - பொங்கல் திருநாளில் தமிழர்களுடைய
இல்லங்களிலே நடைபெற வேண்டும். ]

கண்ணன்



Reply all
Reply to author
Forward
0 new messages