Thamizth Thenee
unread,Jan 14, 2008, 6:46:19 AM1/14/08Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to மின்தமிழ்
2. வேள்வி
உள்ளுக்குள்ளே எழுந்த கேள்வித் தீ,
தீயில் எழுந்த வேள்வித் தீ,என்னை உணர,
என் உள்ளே தொடங்கினேன்-ஒரு உட்ப்ரயாணம்,
அதன் ஆரம்பம் ப்ராணாயாமம்!!
உன்னதமான உணர்வின் உள் சுற்றுலா,
உணர்வுப் ப்ரயாணம்,
உணர உணர, உள்ளுக்குள்ளே ப்ரளயம்,
பூகம்பம், எரி மலை, உணர்வு வெள்ளம்,
உடைத்து வெளியேற இயலாத தடுப்புச் சுவர்,
உடைத்து சீறீப் படமெடுத்த பாம்பு ,
தொடங்கியது ப்ரயாணம் பரவசமாய்,
உள்ளுக்குள்ளே மோதி மோதி ,சீறீச் சீறீ,
படமெடுத்து, விஷம் கக்கி,அமுதம் கக்கி,
மாணிக்கம் கக்கி,
சுருண்டு எழுந்து, அமைதியுற்று , பின் மீண்டும்
சீறீ எழுந்து, அழிந்து, மீண்டும் இணைந்து,
முடிவில் ஒரு ப்ரயோஜனம் ,
மூலாதாரம்-ஸ்வாதிஷ்டானம்-மணிபூரகம்-
அனாஹதம்-விசுத்தி-ஆக்ஞா - பிர்ம ரந்திரம்-
அடைந்து, ஸஹஸ்ராரசக்கரம்-சுற்றி ,
மணிப்ரவாளமாய் மூலாதாரம் எழுந்தும் !!!!!!!!
உள்ளுக்குள்ளே எழுந்த கேள்வித் தீ,
தீயில் எழுந்த வேள்வித் தீ,
என்னைப் புடம் போட்டு எடுத்துப் பார்த்தேன்,
எடுக்க எடுக்க வெறும் சாம்பல்- திரு நீறா ,
எரிந்து போன என்னின் மிச்சமா?
என் உயிரின் எச்சமா?
எரிதழல் அணைந்தால் சாம்பல்தான் மிஞ்சுமா?
மீண்டும் உயிர்த்து என்னில் இணையுமா?
எரிந்ததும் நானே- எரித்ததும் நானே-
சாம்பலாய் உதிர்ந்ததும் நானே எனில்,
உணர்ந்தது என்ன? சூனியமா-
ஞான சூனியமா?- மீண்டும் கேள்வித் தீ,
வேள்வித் தீயில் புடம் போட்டு எடுத்த,
கேள்வித் தீ"! உள்ளுக்குள்ளே எழுந்த
கேள்வித் தீ, -தீயில் எழுந்த வேள்வித் தீ,
அன்புடன்
தமிழ்த்தேனீ