ஆனால் வரலாற்றுத்திரிபுகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் மூலம் அதைச்செய்ய நினைப்பது மிக ஆபத்தான போக்கு. கிறிஸ்து மனிதனாக வந்த இறைகுமாரன் என்ற உறுதியான நம்பிக்கை இவர்களுக்கு இருக்கும்பட்சத்தில் அந்த ஒரேவரியை சொல்லியே இவர்கள் தங்கள் மதத்தை பரப்பலாமே?
//
அப்படிப்பட்ட செயமோகன் மதமாற்ற சட்டத்தை எதிர்த்துப் பேசினாலோ
அல்லது வரலாற்றுத் திரிப்புக்களை எதிர்த்தாலோ, ஏனோ பலருக்கு
இனிப்பாக இருக்கிறது. இதனையே தமிழ்ச் சிந்தனையாளர்களோ,
அல்லது திராவிட அரசியலோ எதிர்த்தால் பலருக்குக் கசக்கிறது.
வைணவமே வைதீகத்தின் சாரம் என்ற எண்ணத்தினை இங்கே அண்மையில் கண்டு வியப்புற்றேன். ஆகவே தமிழ் வைணவம் என்பதன்பால் இருந்த மதிப்பையும் வைணவ நண்பர்கள் தமிழர்களிடம்
இருந்து அகற்றி விடவே முயல்வதாகத் தெரிகிறது. ஆகவே
தமிழ்ச் சைவம் என்பது வைதீக(+வைணவ), சமண. புத்த, கிறித்துவ,
நாத்திக மற்றும் இன்ன பிற சமயங்களால்/கொள்கைகளால் நாசமாக்க்கப் படுகிறது.
திருக்குறளுக்குக்கும் சிவஞானபோதத்திற்கும் அடிப்படை தாமசு கொண்டு வந்த கிறித்துவ மூட்டை
என்று தேவகலா & கும்பனி சொல்வதும், தமிழ் பக்தி இலக்கியங்களை
இகழ்ந்துவிட்டு, சைவத்தை இகழ்ந்துவிட்டு, இந்தக் கும்பனிகளை
எதிர்ப்பது போல செயமோகன் போன்ற வைதீகக் கூலிப்படையினர்
ஆடும் ஆட்டத்திற்கும் எந்த வேறுபாட்டையும் நம்மால் காணவியலவில்லை.
தமிழர், தமிழ்நாட்டு நெறிகள் ஏனோ இப்படியான குரங்குகளின்
கைப்பூமாலையாய் ஆகிப் போகின்றன என்று எனக்கு ஆழ்ந்த கவலை உண்டு.
அன்புடன்
நாக.இளங்கோவன்
இக்கட்டுரை தமிழ் இலக்கியம் பற்றிய தொன்மை பேசும் புத்தகங்களை
மின்னாக்கம் செய்து பரப்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. மின்தமிழ்
செய்யும் பணியின் அவசியத்தை வலியுறுத்துவதாகவே படுகிறது.
கண்டவர் கைப்பொம்மையாகும் தமிழக வரலாறின் அவல நிலைக்குக் காரணம்
ஆதாரபூர்வமான நல்ல நூட்களுடன் தமிழனுக்கு பரிட்சயம் இல்லாமல் இருப்பதுவே.
மேலும் தமிழ் இலக்கிய ஆய்வு என்பது இன்னும் அகில உலகத் தரத்திற்கு வராமல்
வெறும் உள்வட்ட முதுகு சொறிதலாக இருப்பதும் முக்கிய காரணம். என்று தமிழ்
ஆய்வுக்களம் அரசியல் சித்தாங்களின் பிடியிலிருந்து மீள்கிறதோ அன்றுதான்
அதற்கு விடிவு காலம்.
ஆங்கில காலனித்துவ பிரித்துக் கொல்லும் சதி மனது மிக ஆழமாக தமிழ் மண்ணில்
ஊறிப்போய்விட்டதும் ஒரு காரணம்.
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே! நம்மில்.
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!"
இதுதான் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. வெட்கம்!
கண்ணன்
On 8/21/08, Jataayu <jata...@gmail.com> wrote:
ஜோசப் கேம்பல் போன்ற உளவியல் தத்துவ நிபுணர்கள் இயேசு பிரானுக்கு
இந்தியப்பரிட்சயம் இருந்ததாந்தான் "அன்பு" எனும் கொள்கையை பாலை நிலத்தில்
பாய்ச்சுகிறார் என்றும், கிறிஸ்தவம் 'வைணவ நெறிகளையும், புத்த அகிம்சை
நெறிகளையும்' உள் வாங்கிக் கொண்டு வளர்ந்தது என்று சொல்லும் போது நம்
மண்ணின் மீது பற்று இருக்க வேண்டிய தமிழ்ப் பாதிரிகள் இப்படி எல்லாப்
புகழும் 'தாமசுக்கே' என்று ஒரு அரபு நாட்டுக்காரனுக்கு
தமிழ்ப்பாரம்பரியம் முழுவதையும் தாரை வார்ப்பதை காலத்தின் கோலம்
என்றுதானே சொல்ல வேண்டியுள்ளது.
கவனிக்க, தமிழனின் ஐந்திணைக் கோட்பாட்டில் பாலைத்தெய்வமாக கதிரவன் அல்லது
கொற்றவை வருகிறார்கள். அங்கு அன்பு பேசும் தெய்வங்களை வைக்கவில்லை.
'மாறுகால், மாறுகை' வாங்கும் தெய்வங்களை வைக்கின்றனர். அப்படி இருக்கும்
போது கொடும்பாலையில் ஓர் சோலையாக இயேசு அன்பு பற்றிப் பேசுகிறார். அது
நிலப்பண்புடன் பொருந்தாத ஒன்று. இதற்கு மாறாக மத மாற்றத்திற்காக கொலையும்
செய்யலாம் எனும் முகம்மதியக் கோட்பாடு அந்நிலப்பண்புடன் ஒத்துப் போகிறது.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது ஜோசப் கேம்பல் சொல்வது
பொருத்தமாகவே உள்ளது. ஏசு பிறப்பிற்கு பல நூற்றாண்டு முன்பே புத்தன்
பிறந்து அன்பு எனும் தத்துவம் இந்தியாவெங்கும் பரவிவிடுகிறது. ஆசோகச்
சக்கிரவர்த்தி புத்தனின் போதனைகளை அன்றைய நாகரீக உலகிற்கு முறையாக
அனுப்புகிறான். அது நிச்சயம் ஜெருசலேம், ரோம், ஏதென்ஸ் போயிருக்கும்
என்பது கேம்பலின் வாதம். இதை நிரூபிக்கத் தேவையான ஆதாரம் பௌத்த
அழகியலில், புத்தரின் திருமுடி அலங்காரத்தில் உள்ளது. அந்தச் சுருட்டை
முடி அலங்காரம் கிரேக்க சிற்ப நுட்பம். கிரேக்க நாடு செல்லும் வழியிலுள்ள
பாக்டீரியா எனும் நகரில் பல புத்த அகழ்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
நான் பயின்ற அமெரிக்கன் கல்லூரி இப்போது திருச்சபைக்கும் கல்லூரி
நிற்வாகத்திற்குமான ஒரு பலப்பரிட்சையில் மாட்டிக் கொண்டு முழிக்கிறது.
திருச்சபைத் தலைவர்கள் இறைத்தூது பற்றிய சேதிகள் மட்டும் பேசாமல்
மிகப்பெரிய அரசியலில் ஈடுபட்டு, அதிகார வேட்கையில் இருப்பதாக எங்கள்
கிறிஸ்தவக் கல்லூரிப் பெரியவர்கள் எழுதுகிறார்கள். இது குறித்த ஒரு
கடிதம் இங்கே:
http://saveamericancollege.blogspot.com/2008/08/letter-from-former-principal-of-st.html
ஏசுவைக் காட்டிக்கொடுத்த தாமசுவை முதன்மைப் படுத்தி 'எந்நன்றி
செய்தார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு' என்று
பேசும் வள்ளுவனுக்கு ஆசிரியனாகக் காட்டுவது எவ்வளவு பேதமை? வள்ளுவனின்
குறளும் எம்மதமும் சம்மதம் என்பது போல் பொதுப்படையாகப் பேசுவதால்
எல்லோரும் அதற்கு சொந்தம் கொண்டாடி, கடைசியில் ஆணிவேரையே கழட்டி
வள்ளுவத்தை அரேபியாவிற்குக் கொண்டு செல்லும் முயற்சியை எப்படி, வள்ளுவரை
முதன்மைப்படுத்தி வளர்ந்த கழக அரசு ஆதரிக்கிறது என்பது புரியாத புதிர்!
இந்த ஆபத்து தமிழ் சமயங்களுக்கு நிகழ்ந்துவிடும் எனும் அபாயமறிந்தே,
ஆழ்வார்கள் "மறந்தும் புறம் தொழா" கற்பு நெறியை சமயப் பண்பாக வைத்தனர்.
அப்படியொரு கட்டுப்பாடு இருந்தால்தான் மரபு பாதுகாக்கப்படும் என்று அது
சுட்டுகிறது. முல்லைத்திணையின் அடிப்படைப் பண்பே கற்புதான். இதற்கு
நேர்மாறானாது தாமஸ் வாழ்ந்த காலத்து அரேபிய கலாச்சாரம். அவர் காலத்தில்
ஏன்? முகம்மது வாழ்ந்த காலத்திலேயே பெண்களைக் கடத்திப் போய் 'வைத்துக்
கொள்வதும்", ஒரே வயிற்றில் பிறந்த சகோதரிகளுடன் புணர்வதும்
இருந்திருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்க வந்ததுவே குரான் என்றும்,
அதிலும் பல சமரசங்கள் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்றும்
பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படியான ஒரு கலாச்சாரப்
பின்னணியில் வரும் ஒருவர் தமிழ் பண்பாட்டை நமக்களித்தார் என்று
சொல்வதையும், அதை நம்மவர் கேட்டு கைதட்டுவதற்கும் காரணம், நம்மவரிடையே
உறையேற்றப்பட்டுள்ள விஷக்கருத்துக்கள்.
ஜெயமோகன் கேட்கிறார்,
//ஆக்டா தோமா தான் தாமஸ் பற்றிய ஒரே ஆதாரம். அதில் தாமஸ் மிஸ்தாய்
நாட்டின் மன்னனின் மனைவி டெரிஷியாவையும் மகன் வாசனையும் மதம் மாற்றினார்.
மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். எப்போது இந்தக்கதை தாமஸ்
பிராமணனால் கொல்லப்பட்டார் என்று மாறியது? ஏன்? இன்று எல்லா இடத்திலும்
குடுமி வைத்த ஸ்மார்த்த பிராமணன் பிரார்த்தனை செய்யும் தாமஸை
பின்னாலிருந்து குத்திக்கொல்லும் சித்திரமாக வரைந்து
வைக்கப்பட்டுள்ளது!//
காரணம் மிக எளிது. ஏனெனில் இவர்கள்தான் இந்திய சாஸ்திரங்களின்
மெய்க்காப்பாளர்களாக காலம், காலமாக இருந்துள்ளனர். இவர்கள் இந்த மரபைப்
பேணவேண்டும் என்பதற்காகவே சங்கம் தொட்டு பாண்டிய மன்னர்கள் 'சதுர்வேதி
மங்களங்களை' உருவாக்கி இவர்களுக்கு தானம் வழங்கியுள்ளனர். இவர்களைக்
கொலைகாரர்களாகக் காட்டுவதன் மூலம் இந்திய மண்ணின் அடிவேரை அசைத்துவிடலாம்
என்பது புதிய எழுச்சியின் நம்பிக்கை.
இந்தியாவிற்குள் வந்த வெள்ளையர் முதன் முதலில் செய்தது, இந்திய மரபுச்
செல்வங்கள் எந்த மொழியில் இருக்கின்றனோ அந்த மொழியைச் செல்லாக்காசாக
மற்றிவிடுவது என்பது. ஆங்கிலக் கல்வியின் மேலாண்மையினால் அவர்கள் எண்ணம்
அநேகமாக நிறைவேறிவிட்டது. சில கட்டுக்குடுமிகள்தான் சமிஸ்கிருதம்
படித்துவருகின்றன இப்போது.
அடுத்து, இந்தியச் செம்மொழிகளுக்குள் பேதமையை வளர்த்து இரண்டு
மொழிகளையும் அழித்துவிடுவது என்பது. இதுவும் நிறைவேறி வருகிறது. மொழிவெறி
வந்ததே தவிர மொழி வளம் பெறவில்லை.
கடைசி மட்டை அடி, இந்த தாமஸ் கதையாடல். இதுவும் இங்கு விலைபோகும்!
ஏனெனில் தமிழனக்கே உள்ள ஒரு தாழ்வு மனப்பான்மையினால்தான் தமிழ்ப்
பாதிரிகள் நம் மரபை ஏலம் விடத்துணிகின்றனர். அந்தக் காலத்தில் ராணி
எலிசபெத்தின் Nighthood. இன்று ஹில்லேரி கிளிண்டனுடன் ஒரு ஒயின்
பார்ட்டி! அவ்வளவுதான் நம்மவர் எதிர்பார்ப்பது! நாய்களுக்குப் பிறகு வாலை
ஆட்டி வணங்குவதில் தமிழனுக்கு நிகர் தமிழனே!
நான் ஐரோப்பியக் குடிமகன். அவர்களுடன் நெருங்கிப்பழகியவன். கிறிஸ்தவ
தேசத்தவர் இந்தியாவை வணங்கி வழிபடுகின்றனர். உலகின் இதயம் இந்தியா
என்கின்றனர். ஆனால் நம்மவரோ, நம் கலாச்சாரமே வெள்ளையர் தந்தது (தாமஸ்
எந்த நிறம் என்று தெரியாவிடிலும், இது வெள்ளையர் உடன் போகும் திட்டம்
என்று தெரிகிறது) என்று சொல்லி வள்ளுவனை முதல் பலியாக்குகிறோம்!
நமக்குள் உள்ள பிரிவினைகள் நமது உண்மை காணலை
மழங்கடிக்கும்...."மெய்ப்பொருள் காண்பதறிவு" என்பது அரசு இலச்சினையாக
இருந்தாலும்!!
கண்ணன்
On Aug 21, 7:09 pm, "Elangovan N" <nelan...@gmail.com> wrote:
// தமிழ் பக்தி இலக்கியங்களை இகழ்ந்துவிட்டு, சைவத்தை இகழ்ந்துவிட்டு,
இந்தக் கும்பனிகளை
எதிர்ப்பது போல செயமோகன் போன்ற வைதீகக் கூலிப்படையினர் ஆடும்
ஆட்டத்திற்கும் எந்த வேறுபாட்டையும் நம்மால் காணவியலவில்லை. //
இளங்கோவன் ஐயா, கூல் டௌன் !