இன்று (02/08/2010) இரவு 7.00 மணியளவில் காசாங்காடு அருள்மிகு முனீஸ்வரர் ஆலயத்தில் 11 அடி உயரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு மின்னடியார் மற்றும் 7 அடி உயரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு நொண்டி முனியன் சாமி சிலைகளின் கண்திறப்பும், சுடுமண்ணால் செய்த அருள்மிகு முனீஸ்வரர் சாமி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு முனீஸ்வரர் ஆலயத்தில் நிலைநிறுத்தப்பட்டு கண்திறப்பு மற்றும் சிறப்புவழிபாடும் செய்யப்பட உள்ளது. அது சமயம் பக்தகோடிகளும் மெய்யன்பர்களும் தவறாது கலந்துகொண்டு முனீஸ்வரர் அருளைப் பெற்றுய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம்,
ஆலய பொதுநிர்வாகக்குழு மற்றும் கிராமவாசிகள்
தகவல் உதவி: திரு. சுகுமாரன் அருணாசலம், துபாய்
--
8/02/2010 05:46:00 PM அன்று
காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது