"இந்தியா என் வீடு. இந்தியர்கள் யாவரும் என் உடன் பிறந்தவர்கள்." எனும் ஒற்றுமை உணர்வை வளர்க்க இந்த இல்லம் துணை நிற்கும்.
எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்திய மக்கள் நாம் எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் விலை எல்லோரும் ஓர் நிறை
எல்லோரும் இந்நாட்டு மன்னர் நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்
என பாரதியார் எழுதி வைத்தது நாமெல்லோரும் படித்துப் பயன் பெறவே என்பதை மனதில் கொள்வோம். அன்புடன் நட்புணரவை வளர்க்கும் வண்ணம் கருத்துப் பரிமாற்றம் செய்து அனைவரிடையேயும் சகோதர பாசத்தை வளர்ப்போம். "பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு" எனும் மஹாகவியின் வாக்கு விளங்கும் வண்ணம் செயல்புரிவோம்!