தமிழ்த்தேனீ ஐயா அவர்களுக்கு நமஸ்காரம். தாங்கள் இன்னும் என்னை ஞாபகம் வைத்துக்கொண்டு என்னை இப்போது விசாரித்தது என் பாக்யம். இதற்கிடையில் பல மாற்றங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளது. நான் இப்போது ஹைதராபாத்தில் வந்து வீடு வாங்கி நிரந்தரமாகக் குடியேறிவிட்டேன். இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் வினவுவீர்கள்? என் மகள் சௌ. புஷ்கலா ஹைதராபாத்தில்தான் திருமணமாகி வந்துள்ளாள். அவரது கணவர் திரு சுஷீல் அவர்களும் இங்கேயே வேலை பார்க்கிறார். அவர்களுக்கு அண்மையில் ஓர் ஆண் மகவு பிறந்தது. என் மகள் கர்ப்பமாயிருக்கும்போதே தில்லியில் நான் இருந்தபோது பிரசவத்துக்கு வந்தபோது உங்களுக்கு எழுதினேனென்று நினைக்கிறேன். அந்த குழந்தை இப்போது நன்கு வளர்ந்துவிட்டதால், என் மகள், மாப்பிள்ளை இருவரும் வேலைக்குப் போவதால் நான் என் மனைவி, மகனுடன் இங்கேயே ஹைதராபாத்துக்கு வந்துவிட்டேன். அவர்களது குழந்தைக்கு, அதாவது என் பேரனுக்கு, ஓர் அரவணைப்பு இப்போது கிடைத்துள்ளது. இதுபோன்ற அயராது உழைக்கும் சூழ்நிலையினால் "வலைப்பக்கம்" இதுவரை ஏதும் எழுத இயலாமல் போய்விட்டது.
அண்மையில் தாங்கள் துபாய் போவதாக ஒரு மடல் கண்டேன். அனேகமாக, இப்போது நீங்கள் துபாயில்தான் இருப்பீர்கள் என எண்ணுகிறேன். அங்கு எல்லோரையும் கேட்டதாகச் சொல்லி, என்னுடைய, என் மனைவியினுடைய ஆசீர்வாதங்களையும் கூறவும். எல்லோரும் நலமாய் இருக்க வேண்டும். இதுதான் எப்போதும் என் பிரார்த்தனை. தாங்கள் எப்படி இருக்கிறீர்கள். சில மாதங்களுக்குமுன் தங்களது ஒரு நூல் வெளியானது என நினைக்கிறேன். உங்கள் எழுத்துவன்மை மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள். நன்றி........முத்து ஐயர்