ஆகாய விமானம் தரையிலே நிற்கும் போது அதில் அமர்ந்திருப்போருக்குத்
தரையில் உள்ள சிறுசிறு பொருள் கூட உரிய அளவில் தென்படுகிறது. ஆனால், அதே
விமானம் மேலே உயர்ந்து பறக்கும் போது பெரிய பொருள்களும் உருவத்தில்
சிறிதாகப் போய் விடுகின்றன. பிரிந்து கிடக்கும் சிற்றாறுகள் ஒன்றாக நமது
பார்வைக்குக் காட்சியளிக்கின்றன. நாட்டில் பிரிவினைக் கோடுகள் எல்லாம்
அழிந்து விடுகின்றன. நாம் மேலே உயர்ந்து செல்லச் செல்ல, கீழே உள்ள
சிறுமைகள், பிரிவினைகள், பேதங்கள் மறைந்து விடுகின்றன. ஆம்! நாம்
உள்ளத்தால் உயர உயர வேற்றுமைகள் மறைகின்றன. ஒருமைப்பாடு நிறைகிறது.
'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்'
மேலும் இப்பொருள் குறித்து அறிய
http://www.mazhalaigal.com/tamil/articles/articles-001/0803mrm_unity.php