அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர்களுக்கு,நான் நேற்று அனுப்பிய ஒரு மெயிலுக்கு பெறகு,எந்த மெயிலும் எனக்கு குழுமத்தில் இருந்து வரலில்லை.எனது ஐடி,குழுமத்தில் இருந்து நீக்கபபட்டு விட்டதா?
அறிந்த ச்கோதரர்கள் இன்ஷா அல்லாஹ் எனக்கு அறிவிக்கவும்...
நான் அவ்வாறே உணர்கிறேன்.....
இறை பொருத்தம் நாடி,எனது சகோதரிகளின் மீதான,காவிகளின் இது போன்றதொரு தரமற்ற நடவடிக்கைகளை,அவர்கள்(நம் குலப் பெண்கள்) விளங்கி கொள்ள வேண்டுமே,என்ற ஆதங்கத்தில் தான் அதை அனுப்பி வைத்தேன்....
அது அனைவரையும் சென்று சேர்ந்து,அதன் மூலம் ஒருவர் பயன் அடைந்தாலும்,அது எனக்கு போதுமானது.
எனதுள்ளத்தை அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
அது தவிர,சுய விளம்பரத்துக்காகவோ,அல்லது இயக்க சார்பில் அவர்களது கொடியை தூக்கி பிடிக்கும் எண்ணத்திலோ,இதை ஒரு போதும் செய்யவில்லை....நான் எந்த இயக்கத்தை சார்ந்தவனும் அல்ல.அதை படிப்பவர்களுக்கு அது விளங்கும்..
அதை விளக்கவே.முதலில்,அது ஒரு forward mail என்பதை தெரிவித்து,அது தவறெனில் மன்னிக்கவும் எனவும்,தெரிவித்து இருந்தேன்....
நான் ஏதோ குழப்பம் செய்ய முயன்றவனைப் போல குழுமத்தில் இருந்து வெளியேற்றப் பட்டு இருப்பது,எனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது.
சரி,அதற்காக,என்னை குழுமத்தை விட்டு நீக்கி இருக்கவேண்டாம்.குழும விவாதங்களில் பங்கு கொள்ள கூடாது என்றாவது சொல்லி இருக்கலாமே.
மார்க்கம் சம்பந்தமாக,நிறைய விஷயம் அறிந்த சகோதரர்கள்,விவாதிக்கிறார்கள்.அதை ஒரு பார்வையாளனாகவாவது இருந்து விளங்கிக் கொள்ளும்,கடைசி வாய்ப்பை நிர்வாகி நல்கி இருக்கலாம்....
ஹைர்...
இக்குழுமத்தில் இணைந்த பின்னே,நான் குர் ஆன்,ஹதீஸ்களை,ஆராய துவங்கினேன்.இதிலிருந்தே,பல கேள்விகளுக்கு,விடை அறிந்தேன்..
அதற்கு தனிப்பட்ட முறையில் நிர்வாகி அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன்,,,
திரும்ப என்னை இணைத்துக் கொள்ளுங்கள்,என கேட்க எனது தன்மானம் என்னை தடுக்கிறது...
இத்தனை நாளும்,நான் இந்த குழுமத்தில் ஒரு உறுப்பினராக,இருந்து,மார்க்கம் சம்பந்தமாக பல விஷயங்களை அறிய உதவிய,குழும நிர்வாகி சகோ ஜி.என் அவர்களுக்கும்,எனது ஏனைய சகோதரர்களுக்கும் நன்றி தெரிவித்தவனாக,
எனது பேச்சு நிர்வாகி அவர்களையும்,அல்லது மற்ற சகோதரர்களில் யாரையும் எந்த சூழ்நிலையிலும் புண்படுத்தி இருந்தால்,அல்லாஹ்வுக்காக என்னை மன்னியுங்கள்,என மன்னிப்பு கோரியவனாக.
மார்க்கத்தை அறிய அல்லாஹ் எனக்கு அருளிய ஒரு வாய்ப்பை இழந்து கைசேதப் பட்டவனாக,அனைவருக்கும் வல்ல அல்லாஹ் தெளிவான மார்க்க ஞானத்தையும்,அதன் படி ஒழுக,நிறைவான அறிவையும் தர எண்ணி துஆ செய்தவனாக.....
இக்குழுமத்தில் இருந்து விடை பெறுகிறேன்.....
அஸ்ஸலாமு அலைக்கும்................
மார்க்கத்தை விளங்கிகொள்ள மேலும் சிறப்பான வாய்ப்புகளை அல்லாஹ் எனக்கு நல்க,சகோதரர்கள் எனக்காக துஆ செய்யவும்...