சண்டிகார் : சண்டிகாரில் பிரதமர் மன்மோகன்சிங்கின் வருகையை ஒட்டி செய்யப்
பட்டிருந்த பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டினால், சிறுநீரக நோயாளி ஒருவர் சென்ற
வாகனம் திருப்பி விடப்பட்டது. இதனால், உரிய நேரத்திற்கு சிகிச்சை கிடைக் காமல்
வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
அரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்தவர் வர்மா. சிறுநீரகக் கோளாறால்
அவதிப்பட்டு வந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவருக்கு,
நேற்று சுவாசக் கோளாறு ஏற் பட்டது. இதனால், சண்டிகாரில் உள்ள
பி.ஜி.ஐ.எம்.இ.ஆர்., மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அவரது
குடும்பத்தினர் கொண்டு சென்றனர். இதற்கிடையில், அதே மருத்துவக் கல்லூரியில்
நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங்
வருகை தந்தார். அவரது வருகைக்காக நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. போக்குவரத்தும் மாற்றப்பட்டது. தனியார்
மருத்துவமனையிலிருந்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வர்மாவைக் கொண்டு
சென்ற அவர் குடும்பத்தார், வழியில் பிரதமருக்காக செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு
ஏற்பாட்டினால், பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தது.
மருத்துவக் கல்லூரியை நெருங்கிய வேளையில், வர்மா உயிருக்குப் போராடிக்
கொண்டிருந்தார்.
பிரதமரின் பாதுகாப்புப் படை வாகனங்களால், சாலையில் பிற வாகனங்கள் போக்குவரத்து
நெருக்கடியில் சிக்கியிருந்தன. வர்மாவின் குடும்பத்தார், அந்த நெருக்கடியில்
இருந்து வெளியே வந்து மருத்துவக் கல்லூரியை அடையும் முன் வர்மா பரிதாபமாக
உயிரிழந்தார். இது குறித்து பிரதமர் அலுவலக தகவல் தொடர்பாளர்
கூறுகையில்,"இந்தச் சம்பவம் துரதிருஷ்ட வசமானது. வருத்தம் தரத்தக்கது. நடந்த
சம்பவம் தொடர்பாக முழு விவரம் கேட்கப்பட்டுள்ளது' என, தெரிவித்துள்ளார்.
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5510
~காமேஷ்~
[?] இந்தியாவில் இதெல்லாம் சகஜமப்பூ.