அந்த இரண்டு எழுத்துடனும் சேரும் உ-காரம் விஷ்ணு. அதுவே அவ்யக்தம் என்பதால் குருவின் என்ன லக்ஷணம் தெரிவிக்கப்படுகிறது? விஷ்ணு சப்தம் ஸர்வ வ்யாபகத்தைக் குறிப்பதால் குரு ஸர்வவ்யாபி என்றாகிறது. ஸர்வம், வியாபிப்பது என்பதால், அது த்வைத லோகத்தைக் குறித்த விஷயமாகிறது. கருணையினாலே குருவின் அநுக்ரஹ சக்திலோகம் முழுவதையும் all-embracing ஆக வ்யாபித்திருப்பதை இது (விஷ்ணு சப்தம் அவருக்குப் பொருத்தப்படுவது) hint பண்ணுகிறது.
குரு ஏதோ ஒன்றாக இருக்கிறாரென்றால் சிஷ்யனையும் அந்தப்படியே ஆக்கிவிடுவார் என்று அர்த்தம். ஸித்தி தருவது, பாபத்தைப் போக்குவது ஆகிய கார்யங்களை சிஷ்யன் விஷயமாகச் செய்யும் அவர் சிஷ்யனக்கும் all-embracing அநுக்ரஹ சக்தி, உபதேச சக்தி தந்து தம் மாதிரியே குருவாக்குகிறார் என்று இங்கே நீட்டி அர்த்தம் பண்ணிக் கொள்ளணும்.
அப்புறம் அவ்யக்த ப்ரஹ்மமாக அவரைச் சொன்னதையும் இதேபோல, சிஷ்யனுக்கும் அந்த நிலையைத் தந்து ப்ரஹ்மாநுபூதியில் இருக்கச் செய்கிறவரென்று அர்த்தம் பண்ணிக்கணும்.
WITH PRANAMS
N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536