- கவிஞர் இனியன் பாடிய திருத்தசாங்கம், பாடல் 1.
எழுத்துருவை எழுதுரு என வினைத்தொகையாய் எழுதுகிற ஃபாண்ட் என்றும் பாவிக்கலாம்.
யூனிகோட் என்னும் ஒருங்கு குறியீட்டைத் தமிழில் உள்ள ஒரே இணைய எழுத்துரு ஆக்கப்
பல்வேறு முயற்சிகள் எடுத்தோரில் அடியேனும் ஒருவன். என் புரப்போஸலில் இருந்த சட்டகத்தில் (Code Chart)
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மொழிகளைப் பேச்சுமொழியாக இருந்து
கல்விமொழி ஆக்கிய பெருமைக்குத் தமிழர் அங்கே பரப்பிய கிரந்த எழுத்துமுறை
யூனிகோடில் பயன்படுகிறது. தமிழ்-கிரந்தம் இரண்டையும் இணைத்து அழகான ஒரு எழுத்து முறையை
அக்ஷரமுகம் வினோத்ராஜன் தந்துள்ளார். அதில் செங்குத்தாக அடுக்கிய சம்யுக்தாக்ஷரம் இருக்காது.
கிரந்தம் கற்கவும், பயன்கொள்ளவும், முனைவர் வினோத் ராஜனின் முறை சிறப்பானது.
தென்கிழக்கு ஆசிய பாஷைகளுக்குத் தாய்லிபி ஆகிய கிரந்தத்தை, சமணர்கள் பிராமியைக் கொணர்ந்து,
வட்டெழுத்து ஆக்கிய வளர்ச்சியை விட்டுவிட்டு, பல்லவர்களின் கிரந்தத்தை தமிழகம்
முழுவதும் ராஜராஜசோழன் அமலுக்குக் கொணர்ந்தான். தமிழ் எழுத்து வளர்ச்சியின்
முக்கியக் காலகட்டம் ஸ்ரீ ராஜராஜ சோழதேவர் எனலாம். இப்பொழுது நாம் பயன்படுத்தும் தமிழ்
எழுத்துகள் எல்லாம் கிரந்த வடிவினவை தாம். வட்டெழுத்து அல்ல. இதற்கு அடுத்த கட்டமாக,
பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட சென்னைப் பல்கலைப் பேரகராதி.
மு. ராகவையங்கார், ச. வையாபுரிப்பிள்ளை, ... போன்ற பெரும்பேராசிரியன்மார்
செய்தது. அதில்தான் தமிழ் அட்சரமாலையில் என்னென்ன எழுத்துகள் தற்காலத்
தேவைக்கு வேண்டும் எனத் தீர்மானம் ஆகியது. தமிழ் மொழியின் வார்த்தைகளுக்கு
18 தமிழ் மெய் எழுத்துகளும் (தொல்காப்பியம், நன்னூல்), பிற அயன்மொழி (இந்தியா, அறபி, ஆங்கிலம், ...)
வார்த்தைகளை எழுதத் தேவையான எழுத்துகள் என 5 வடவெழுத்துகளையும் தமிழ் லெக்ஸிகானில்
நிச்சயம் செய்தனர். இதைத்தான் ஒருங்கு குறியீட்டில் (யூனிகோட்) தந்துள்ளனர். ஆக, தற்காலத் தமிழ்
23 மெய் அட்சரங்களால் இயங்குகிறது.
இதனை எழுதச்செய்து, திருத்தி யூனிகோட் குழுவினரை ஏற்றச் செய்தேன்,
யூனிகோட் டெக் கமிட்டியின் சென்னை விஜயம்,
மின்குழுக்களில் முதலாக யூனிகோட் வளர்ச்சிக்கு உதவின குழு என்பதில்
சந்தவசந்தத்திற்குப் பெரும்பங்கு உண்டு. அப்போது கனடாக் கவிஞர் பேரா.
அனந்த் அவர்கள் வாழ்த்திய வெண்பா இது:
பாரதம் நூலெழுதும் பங்கேற்றார் பண்டையொரு
வாரணம்; சந்த வசந்தக் கவிஞர்கள்தம்
பாரதம்செல் பாதை படைக்கக் கணேசனே
காரணமாய் நின்றார் களித்து!
இப்படி மாறும்போது தானியங்கியாய் வந்த வெண்பாக்களில் பொடிச்செல்லம்
பற்றிய இலந்தைக் கவிதை கிட்டியது (2007). நேற்று அனுப்பிவைத்தது நினைவிருக்கலாம்.
----------------------------------------------------
சிகாகோ தமிழ்ச் சங்கம் தான் அமெரிக்காவில் ஏற்பட்ட முதல் தமிழ்ச் சங்கம். அதன்பின் டாக்டர் ப. குமரேசன்,... போன்றோர்
தொடங்கிய
நியூ யார்க் தமிழ்ச் சங்கம். பின்னர் ஹ்யூஸ்டன் பாரதி கலைமன்றம், ....
சிக்காகோ தமிழ்ச் சங்கத்திற்கு விஞ்ஞானி சந்திரா
(அவர் பெயரால் சந்திரா
எக்ஸ்-ரே லேப் நாசா விண்ணில் செலுத்தியது. 2016-ல் நம் பால்வீதியின்
நடுவிலே 12 கரும்புழைகளைக் கண்டுபிடித்தது.
ஆயிரம் கரும்புழைகள் இருக்கலாமாம்.
There could be as many as 1000 Black holes at the center of our Milky
Way, so says astronomers who study images from Chandra.)
சந்திரா பலமுறை சிகாகோ தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளுக்கு
வந்திருக்கிறாராம். இதனை எனக்கு சிக்காகோ தமிழ்ச்சங்கம் நடத்தின பாராட்டு விழாவில்
அழ. இராம்மோகன், பேரா. இ. அண்ணாமலை குறிப்பிட்டனர். அவர்கள் தந்த பட்டயம் இணைக்கிறேன். 2019-ல் நிகழ்ந்த 10-ம் உலகத்
தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிலும் பங்கேற்றேன். முதல்நாள் Plenary session-ல் பேசும் வாய்ப்பமைந்தது. கணித்தமிழ் வளர்ச்சிக்கு
ஆற்றின உழைப்பைப் பாராட்டி சிகாகோ தமிழ்ச் சங்கத்தார் அளித்த பட்டையம்.
----------------------------------
நான் B. E. (Hons) பயின்ற கிண்டி பொறியியற் கல்லூரி, பேரா. வா. செ. குழந்தைசாமி விருது,
ரூ 1 லட்சம் அளித்துப் பாராட்டியது. அதனை பேரூர் சைவ மடத்திற்கு, வண்ணச்சரபத்தின்
அச்சாகாத 53,000 திருப்புகழ்ப் பாடல்களை அச்சிடும் பணியில் ஒரு பங்காக இருக்கட்டும்
என நன்கொடை அளித்துவிட்டேன்.
அண்ணா பல்கலை விழாவில், திரு. உதயசந்திரன், ஐஏஎஸ் (இப்போதைய தலைமைச் செயலர்)
கவிஞர் குலோத்துங்கன் (வா. செ. குழந்தைசாமி) நூல்கள்:
Prof. VCK's lectures,
NG